Saturday, April 14, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ்

சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய ஐந்திணை ஐம்பது என்னும் நூலிலே காதலின் தியாகத்தினை ஒரு அழகான பாடல் மூலம் மாறன் பொறையனார் எடுத்துக் காட்டியுள்ளார்


"சுனைவாய்ச் சிறுநீரை எயிதாதென்(று) எண்ணியப்
பிணைமான் இனிதுண்ண வேண்டிக்  கலைமான் தன்
கள்ளத்தின் உச்சும் சுரமென்பார் காதலர்
உள்ளம் படர்ந்த நெறி"

சுனையில் சிறிதளவே நீர் உள்ளது.ஒரு மானே அருந்தும் அளவுள்ளது.ஆண்மான் குடிக்காது விட்டால் பெண்மான் குடிக்காது.எனவே ஆண்மான் சுனைநீரில் குடிப்பது போல வாயை வைத்துப் பாவனை செய்து பெண்மானை குடிக்கச் செய்கிறது.காதலிலே, விட்டுக் கொடுப்புகள்,தியாகங்கள்,அன்புப் பரிமாற்றங்கள் அளவுக்கதிகமாகப் பேணப்படுகின்றன 

No comments: