Monday, April 16, 2018

ஒய்ஜிபியும் யூஏஏவும் - 17


அத்தியாயம் - 17

யார் தருவார் இந்த அரியாசனம் என்ற நாடகம் மகேந்திரன் எழுத 1979ல் அரங்கேறி 90 முறைகளுக்கு மேல் மேடையேறியது
1980 முதல் நான்குஆண்டுகள் வியட்நாம் வீடு சுந்தரம் எழுதிய நான்கு நாடகங்கள் அரங்கேறின.
1980ல் "அர்த்தமுள்ள மௌனங்கள்" (100 காட்சிகள்)
1981ல் "ரூபாய்க்கு மூணு கொலை" (120 காட்சிகள்)
1982ல்"புலி ஆடு புல்லுக்கட்டு" (110 காட்சிகள்)
1985ல் "லஞ்சாபகேசன்" (100 காட்சிகள்)

1986ல் ஒய்ஜிஎம் எழுதிய "பாவம் பரத்வாஜ்" நாடகம் 80 முறை மேடையேற்றம்
1987ல் மகேந்திரன், வெங்கட் கூட்டணி யின் "பாட்டி அண்ட் தி நாட்டி பாய்ஸ்" நாடகம் அரங்கேறி 100 முறைகளுக்கு மேல் மேடையேறியது

1988ல் வியட்நாம் வீடு சுந்தரம் எழுதிய "ரொம்ப படிச்சுட்டேன் சார்" நாடகம் 100 முறை.

திரில்லர், நகைச்சுவை, சமுதாயச் சீர் கேடுகள் என பலதரப்பட்ட நாடகங்கள் அரங்கேற்றம் ஆயின.மக்கள் யூஏஏ எந்த நாடகத்தை அரங்கேற்றம் செய்தாலும், அவை தரமானதாய் இருக்கும் என அளித்த ஆ தரவால்தான் , இக்குழுவினரின் நாடகங்கள் 100 காட்சிகளை எளிதாக கடந்தன என்றால் மிகையில்லை 

அடுத்து வந்த நாடகம் மாபெரும் வெற்றி நாட்கமாக அமைந்ததுடன், பலரும் பாராட்டும் வகையில் அமைந்தது.

"இது நியாயமா சார்"

நாடகம் பாராட்டும் வகையில் அமைந்தது நியாயமா சார் எனக் கேட்கவில்லை.படத்தின் தலைப்பு இது.அது பற்றி அடுத்த அத்தியாயத்தில் விரிவாக. 

No comments: