Sunday, February 14, 2016

தி.மு.க.,. காங்கிரஸ் கூட்டணி


இது சரியா...தவறா என பழைய நிகழ்ச்சிகளையெல்லாம் சுட்டிக் காட்டி சில ஊடகங்களும், முகநூல் நண்பர்களும், டுவிட்டர் செய்திகளும் வந்தவண்ணம் இருக்கின்றன.
இவர்கள் அனைவரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.
எதிரிக்கு..எதிரி நண்பன் என்பார்கள்.
இப்போது அனைத்துக் கட்சிகளும் முதல் எதிரியாய் நினைப்பது அதிமுக வைத்தான்.அந்த எதிரியை வீழ்த்த கட்சிகள் அவரவர்க்கேற்ப வியூகங்களை வகுத்து வருகின்றன.திமுக ...காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் நிலைப்பாடை எடுத்துள்ளது.
வீம்புக்காவது, நான் தனித்து நிற்பேன்...வெல்லுவேன் என்பதெல்லாம் , காகிதத்தில் வெல்லம் என எழுதி, அது இனிப்பாய் இருக்கிறதா...என நக்குவதைப் போலத்தான்.
திமுக ஆதரவாளனான எனக்கும் ...திமுகவின் இந்த நிலைப்பாடு மனவலியைத்தான் கொடுக்கிறது.
ஆனால்...மீண்டும் ஆட்சியைக் கைப்பிடிக்க வேண்டுமானால், இப்படிப்பட்ட முடிவுகள் தவிர்க்க முடியாது.
அரசியல் கட்சி என்ற நிலைப்பாடு ஒன்றை எண்ணினால் கலைஞரின் இந்த முடிவு சரியானதாகத்தான் தோன்றும்.
(சிபிஎம் காங்கிரஸுடன் கூட்டணி மேற்கு வங்கத்தில் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.இங்கு ஒரு நிலைப்பாடு...அந்த மாநிலத்தில் ஒரு நிலைப்பாடு.ஏன்?
அந்தந்த சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்கப் படுகிறது அரசியல் கட்சிகளால்.திமுகவும் ஒரு அரசியல் கட்சிதானே!)

1 comment:

Peppin said...

திமுக என்ன செய்தாலும் குறை சொல்லவே ஒரு கூட்டம் உண்டு