Wednesday, December 9, 2015

கணையாழி கடைசிப் பக்கங்கள் _ சுஜாதா


தில்லி மிருகக்காட்சிசாலையிலிருந்து இரண்டு சிங்கங்கள் தப்பித்துச் சென்றன

சில மாதங்கள் கழித்து யமுனை நதிக்கரையில் அவை மீண்டும் சந்தித்துக்கொண்டன.ஒரு சிங்கம் மிக ஒல்லியாக ஒடிந்து புல்லிலும், கல்லிலும் தடுக்கிக்கொண்டிருந்தது.
மற்றது புஷ்டியாக இருந்தது.அது, "நண்பா, ஏன் இப்படி இளைத்து விட்டாய்" என்று கேட்டது.

"என்ன செய்வது! எனக்குச் சாமர்த்தியம் போதவில்லை.பகலெல்லாம் பதுங்கி இரவெல்லாம் அலைந்தேன்.ஆகாரம் ஏதும் அகப்படவில்லை.வேட்டையாடும் சாமர்த்தியம் எனக்கு மறந்துவிட்டது.நீ மட்டும் எப்படி இவ்வளவு புஷ்டியாக இருக்கிறாய்?" என்றது

"பைத்தியமே! ரொம்ப சிம்பிள்.செகரடேரியட் போய் இரவோடு இரவாக ஃபைல்களுக்குப் பின் ஒளிந்து கொண்டேன்.அவ்வப்போது ஒரு அண்டர் செக்ரட்டரி , ஒரு டெபுடி செக்ரட்டரி என்று அந்தப் பக்கம் செல்பவர்களை இழுத்துச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.ஒருவரும் கவனிக்கவில்லை"

"பின் ஏன் அந்த சுகத்தை விட்டு வந்துவிட்டாய்?"

"கடைசியில் ஒரு தப்புப் பண்ணிவிட்டேன்.டீ கொண்டுவரும் பையன் ஒருவனை ஒருநாள் சாப்பிட்டுவிட்டேன். உடனே கண்டுபிடித்துவிட்டார்கள்"

No comments: