Sunday, March 15, 2015

திரைப்படங்களுக்கான வரிவிலக்கு..



முன்பெல்லாம் ஒரு திரைப்படத்திர்கு வரிவிலக்கு அரசு அளிக்கிறது என்றால்...அப்படத்திற்கான திரையரங்கு நுழைவுக் கட்டிணம் குறையும்.அதிக மக்கள் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் விலக்கு அளிக்கப்பட்டது.
ஆனால்..இப்போதெல்லாம்..வரிவிலக்கு அளிக்க, படத்தின் தலைப்பு தமிழில் இருக்க வேண்டும், ஆங்கிலத்தில் வசனங்கள் இருக்கக் கூடாது..இப்படி..இன்னும் பிற விதிகள் அவ்வப்போது அரசாளும் கட்சிக்கு ஏற்ப மாற்றியமைக்கப்படுகிறது.குறிப்பாக ஆளும் கட்சிக்கு, எதிர்க் கட்சியைச் சார்ந்தவர் திரைப்படம் எனில் வரிவிலக்கு கிடைப்பதில் சற்று சிரமம் ஏற்படுகிறது.

லட்சக்கணக்கில், (கோடி?) படமெடுப்பவர்களுக்கு இப்போது அளிக்கப்படும் விலக்கு போய்ச் சேருகிறது.இது ஏன்? அநாவசியமாக கதாநாயகனுக்கும்'..படப்பிடிக்கும் (வெளிநாட்டில் தேவையில்லாமல் காதல் காட்சிகள், கனவுக் காட்சிகள் படப்பிடிப்பு) செலவு செய்பவர்களுக்கு,..பொது மக்கள் வரிப்பணத்தை வரிவிலக்கு என்ற பெயரில் ஏன் கொடுக்க வேண்டும்.

வரிவிலக்கு ஒருபடத்திற்கு அளித்தால், அரசின் நோக்கம் அப்படத்தை அதிக மக்கள் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் இருக்க வேண்டும்.மக்களுக்குக் குறைந்தக் கட்டணத்தில் அப்படம் காண்பிக்கப்பட வேண்டும்.ஆனால் இன்று அப்படி ஒரு நடைமுறை இல்லை.அது ஏன்...

பல லட்சம் மக்கள் உழைத்துக் கொடுக்கும் வரிப்பணம், சினிமாவைத் தொழிலாகக் கொண்டுள்ள ஒரு சில தயாரிப்பாளர்களுக்குப் போய் ஏன் சேர வேண்டும்.

சம்பந்தப்பட்டவர்கள் இதற்கான நடவடிக்கையை எடுப்பார்கள் என எதிப்பார்ப்போம். 

No comments: