Wednesday, November 19, 2014

குறுந்தொகை-160



தலைவி கூற்று
(பொருளீட்ட சென்ற தலைவன் நீட்டித்தானாக, ஆற்றாமையை யடைந்த தலைவியை நோக்கித் தோழி, “அவர் நின்னை மணந்து கொள்வர்; நீ ஆற்றியிருப்பாயாக” என, “அவர் வரவேண்டிய பருவத்து வந்தாரிலர்; இனி மணப்பது யாங்ஙனம்?” என்று கூறியது)

குறிஞ்சித் திணை- பாடலாசிரியர் மதுரை மருதன் இளநாகன்.

இனி பாடல்-
 
நெப்பி னன்ன செந்தலை யன்றில்
 
இறவி னன்ன கொடுவாய்ப் பெடையோடு
 
தடவி னோங்குசினைக் கட்சியிற் பிரிந்தோர்
 
கையற நரலு நள்ளென் யாமத்துப்

பெருந்தண் வாடையும் வாரார்
 
இஃதோ தோழிநங் காதலர் வரைவே.

                           -மதுரை மருதன் இளநாகன்.

   உரை-

தோழி - நெருப்பைப்போன்று சிவந்த தலையையுடைய ஆண் அன்றில், இறாமீனை ஒத்த வளைந்த அலகையுடைய பெண் அன்றிலோடு தடா மரத்தினது உயர்ந்த கிளையின் கண்ணுள்ள கூட்டினிடத்தேயிருந்து ஒலிக்கின்ற செறிந்த இடையிரவையுடைய பெரிய தண்மையையுடைய வாடைக் காற்று வீசும் உதிர்க்காலத்திலும் தலைவர் வரவில்லை.தலைவர் மணந்த் கொள்வேன் என்பது இதுதானா?



    (கருத்து) தலைவர் இன்னும் வந்திலர்; மணப்பார் எனக் கருதுதல் எங்ஙனம்?

 

No comments: