Friday, November 7, 2014

குறுந்தொகை-148




தலைவி கூற்று
(தலைவன்  வருவதாகக் கூறிச் சென்ற கார்ப் பருவம் வரவும் அவன் வாராமையால் துன்பமுற்ற தலைவியை நோக்கித் தோழி, “இது பருவமன்று; அவர் பொய்யார்” என வற்புறுத்த, தலைவி, “கொன்றைமரங்கள் பூத்தன; இது கார்ப்பருவந்தான்” எனக் கூறியது.)

முல்லை திணை - பாடலாசிரியர் இளங்கீரந்தையார்


இனி பாடல்-

 
செல்வச் சிறாஅர் சீறடிப் பொலிந்த
   
தவளை வாய பொலஞ்செய் கிண்கிணிக்
   
காசி னன்ன போதீன் கொன்றை
   
குருந்தோ டலம்வரும் பெருந்தண் காலையும்

காரன் றென்றி யாயிற்
   
கனவோ மற்றிது வினவுவல் யானே.

                            -இளங்கீரந்தையார்.

     உரை-

செல்வத்தையுடைய சிறு பிள்ளைகளையுடைய சிறிய அடியிங்கண் விளங்கிய தவளையின் வாயைப் போன்ற வாயையுடைய,பொன்னாற் செய்யப்பட்ட கிண்கிணிக் காசைப் போன்ற பேரரும்பை வெளிப்படுத்தும் கொன்றை பருவத்தையும் கார்காலமெனக் கூறுவாய் ஆனால், அப்படிச் சொல்வது கனவா? எனக் கேட்பேன்..நீ சொல்வாயாக!
   

     (கருத்து) தலைவர் இக்கார் காலத்தும் மீண்டும் வந்திலர்.

No comments: