Friday, September 5, 2014

குறுந்தொகை - 97



தலைவி கூற்று
(தலைவன் மணம் புரியாது நெடுநாள் இருப்பதால் வருந்திய தலைவி, “எம்முடைய நட்பினை யாவரும் அறிந்தனர்: இன்னும் தலைவர் மணக்கும் முயற்சியை மேற்கொண் டாரல்லர்” என்று கூறியது.)

நெய்தல் திணை - பாடலாசிரியர் வெண்பூதி

இனி பாடல்-
 
யானே யீண்டை யேனே யென்னலனே
   
ஆனா நோயொடு கான லஃதே
   
துறைவன் றம்மூ ரானே
   
மறையல ராகி மன்றத் தஃதே.

                      -வெண்பூதி

உரை-

நான் இவ்விடத்தில் தனியே இருக்கிறேன்.எனது பெண்மை நலம் என்னை நீங்கி அமையாத வருத்தத்துடன் கடற்கரைச் சோலையினிடத்தது,ஆயின் தலைவன் தனது ஊரில் இருக்கிறான்.எங்களது நட்புப் பற்றிய செய்தியானது பலர் அறிந்து பேசும்படியாக பொதுமன்றத்தில் பரவியுள்ளது.


 
  (கருத்து) என் நலனுண்ட தலைவர் இன்னும் என்னை மணக்க  முயற்சியைச் செய்தாரல்லர்.

 


No comments: