Wednesday, September 3, 2014

குறுந்தொகை - 95



தலைவன் கூற்று
(தனது வேறுபாடு கண்டு வினாவிய பாங்கனுக்கு(தோழனுக்கு), “ஒரு குறமகளிடம் கொண்ட காமத்தால் என்னிடம் மாற்றம் உண்டாயிற்று” என்று தலைவன் கூறியது.)

குறிஞ்சி திணை- பாடலாசிரியர் கபிலர்

இனி பாடல்-
   
மால்வரை யிழிதருந் தூவெள்ளருவி
   
கன்முகைத் ததும்பும் பன்மலர்ச் சாரற்
   
சிறுகுடிக் குறவன் பெருந்தோட் குறுமகள்
   
நீரோ ரன்ன சாயல்

தீயோ ரன்னவென் னுரனவித் தன்றே.

                           கபிலர்

உரை_

பெரிய மலையினிடத்து வீழும் அருவி பாறைகளின் வெடிப்புகளில் ஒலிக்கும், பல மலரையுடைய சாரலில் உள்ள சிற்றூரிலுள்ள குறவனுடைய பெரிய தோளையுடைய சிறிய மகளினது நீரைப் போன்ற மென்மை, தீயையொத்த என் வலியைக் கெடச் செய்தது.
  .


 .(கருத்து) நான் ஒரு மலைவாணர் மகளைக் காமுற்றேன்.

No comments: