Wednesday, September 10, 2014

குறுந்தொகை-102



தலைவி கூற்று
(தலைவன் பிரிந்து நெடுங்காலம் நீட்டித்தானாக அதனை உணர்ந்து அவனது பிரிவைத் தலைவி ஆற்றாளெனத் தோழி கூறியதையறிந்து அத்தலைவி ‘அவரை நினைந்து நினைந்து காமநோய் மிக்கு வருந்துகின்றேன்; அவர் தம் சொற்படி இன்னும் வந்திலர்’ என்று கூறியது.)

நெய்தல் திணி - பாடலாசிரியர் ஔவையார்

இனி பாடல்-
 
உள்ளி னுள்ளம் வேமே யுள்ளா
   
திருப்பினெம் மளவைத் தன்றே வருத்தி்
   
வான்றோய் வற்றே காமம்
   
சான்றோ ரல்லர்யா மரீஇ யோரே.

                    -ஔவையார்

உரை-

தலைவனை நினைந்தால் என் உள்ளம் வேவா நிற்கும்.நினைக்காமல் இருப்பது என்பது எனது ஆற்றலின் அளவிற்கு உட்பட்டதன்று.காம நோயால் என்னை வருந்தச் செய்வது, வானத்தைத் தோய்வது போன்ற பெருக்கத்தையுடையது
எம்மால் மருவப்பட்ட தலைவன் சால்புடையார் அல்லர்.


     (கருத்து) தலைவர் தம் சொற்படி மீண்டு வாராமையின் ஆற்றேனா யினேன்.

No comments: