Sunday, June 8, 2014

குறுந்தொகை - ஆறாம் பாடல்


தலைவன், பரிசப் பொருளை ஈட்ட தலைவியை பிரிந்து செல்கிறான்.இரவு நேரம்.ஊரே உறங்குகிறது.தோழியும் உறங்குகிறாள். ஆனால்..தலைவனை எண்ணி தலைவி சற்றும் கண் அயராது இருக்கிறாள்.அதை அடுத்த நாள் தோழியிடம் உரைப்பது போல பாடல் அமைந்துள்ளது.. இப்பாடலை எழுதியவர் பதுமனார்.

இனி அச் செய்யுள். (நெய்தல் திணை)
   
நள்ளென் றன்றே யாமஞ் சொல்லவிந்
   
தினிதடங் கினரே மாக்கண் முனிவின்று
   
நனந்தலை யுலகமுந் துஞ்சும்
   
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே.

உரை -

பரிசப் பொருளை ஈட்டும் பொருட்டுத் தலைவன் பிரிந்த இடத்து ஆற்றாளாகிய தலைவி,நள்ளிரவில் உலகம் முழுதும் உறங்க நான் ஒருத்தி மட்டும் உறங்கவில்லை என தோழி உறங்கியதையும் சுட்டிக்காட்டி தோழியிடம் உரைக்கிறாள். 

No comments: