Tuesday, June 10, 2014

குறுந்தொகை - எட்டாம் பாடல்



விலைமகள் ஒருத்தியிடம் சென்று வந்தவனைக் குறித்து..அவள் இகழ்ச்சியாகக் கூறுகிறாள்..

செய்யுள் ஆசிரியர் - ஆலங்குடி வங்கனார். _(மருதம் திணை)

செய்யுள்_

கழனி மாஅத்து விளைந்து உகு தீம் பழம்

பழன வாளை கதூஉம் ஊரன்

எம் இல் பெருமொழி கூறி, தம் இல்,

கையும் காலும் தூக்கத் தூக்கும்

ஆடிப் பாவை போல,

மேவன செய்யும், தன் புதல்வன் தாய்க்கே.

             - ஆலங்குடி வங்கனார்


செய்யுள் கூற வருவது_

(பரத்தை ஒருவள் தன்னை நாடி வருபவன் வீரம் பற்றி உரைப்பது)

செய்யுள் உரை=

மாம்பழங்கள் விளையும் நிலத்தையும், ஏரியில் வலை மீன்கள் பிடித்து உண்ணும் மக்களையும் கொண்ட ஊரைச் சேர்ந்த அவன், என்னிடம் பிரமாதமாக பேசுவான்,ஆனால், தன் வீட்டி.லோ, தாய் சொல்படி கேட்டு, பொம்மலாட்டத்த்தில், கையையும், காலையும் ஆட்டும் பொம்மையைப் போன்றவன்.

No comments: