Tuesday, October 15, 2013

தமிழ் சினிமா நூற்றாண்டு விழா..கலைஞர் தலைமையில்..



சமீபத்தில் இந்திய சினிமா நூற்றாண்டுவிழா..தமிழக அரசுடன் இணைந்து கொண்டாடப்பட்டது.

ஆனால். இதில், பல பிரபலங்கள் கௌரவிக்கப் படவில்லை..என்று பரவலாக குற்றச்சாட்டுகள் உள்ளன.தவிர்த்து, நடிகர்,நடிகைகள் கௌரவிக்கப்பட்டது போல, மற்ற திரைக்குப் பின் இயங்கும் கலைஞர்கள் கௌரவிக்கப்படவில்லை.

குறிப்பாக, கலைஞரை கௌரவிக்காதது பெரும் தவறென்றே தோன்றுகிறது.

அரசியலைத் தவிர்த்துப் பார்த்தாலும்...1947 முதல், அறுபத்தி ஆறு ஆண்டுகளாக, தமிழ் சினிமாவில் ஒன்றிணைந்தவர் கலைஞர்.கிட்டத்தட்ட 75 படங்களில், கதை,வசனகர்த்தாவாகவோ, படலாசிரியராகவோ,தயாரி[ப்பாளராகவோ...கலைஞர் செயல்பட்டிருக்கிறார்.வாழும் வரலாறான அவரை விடுத்து ஒரு தமிழ் சினிமா விழாவா?

தி.மு.க., கட்சியைச் சார்ந்தவராய் இல்லாதாரும்...கலைஞரின், திரையுலக சேவையை மனதாரப் பாராட்டுவர்.

அப்படிப்பட்டவர்கள் துயரப்பட வேண்டாம்...

தமிழின் முதல் சினிமா, "கீசகவதம்" 1916ஆண்டுதான் வெளியானது.அதை வைத்துப் பார்த்தால், 2016 ஆம் ஆண்டு, தமிழ் சினிமாவின் நூற்றாண்டு.

அவ்விழா, கலைஞர் தலைமையில் கண்டிப்பாக நடைபெறும்.

விருப்பு, வெறுப்பு இன்று அவ்விழாவில், உண்மையில் கௌரவிக்கப் பட வேண்டிய அனைத்து கலைஞர்களும் கௌரவிக்கப்படுவர்.

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லபடியாக நடக்கட்டும்...!

goma said...

உண்மைதான் கலை வேறு அரசியல் வேறு என்றிருந்திருக்க வேண்டும்