Monday, October 7, 2013

மிஷ்கினும்...ராஜாவும்..

               

ஓநாயும்..ஆட்டுக்குட்டியும்..

இந்த படத்தைப் பற்றி விமரிசிக்க என்ன இருக்கிறது.

தமிழ்ப் படங்களின் தரம் மாஸ் ஹீரோக்களால் மாறாமலேயே இருக்கிறதே என வருந்தும் ரசிகர்களுக்கு ஆறுதலாக பல லோ பட்ஜெட் படங்கள் மிகவும் தரத்துடன் வந்துக் கொண்டிருக்கும் வேளையில்..

'முகமூடி' போடாமல் வந்திருக்கிறது மிஷ்கினின் படம்...

இப்படத்தைப் பற்றி என்னத்த சொல்ல..?

மிஷ்கின் சார்..உங்களுக்கு தமிழ்ப்பட ரசிகர்கள் சார்பில்..ஒரு பெரிய சல்யூட்...

உலகத் தரத்தில் ஒரு படம்..

ஆரம்பக் காட்சியிலே இருந்தே..நாற்காலியில் ரசிகனைக் கட்டிப் போட்டு விட்டு...கடைசியில் தான் அவிழ்த்து விடுகிறீர்கள்..

படத்தில், ஹீரோ என்று சொல்லிக் கொள்ளும் அளவில் யாரும் இல்லை, கதாநாயகி இல்லை, டூயட் இல்லை...இது தமிழ்ப்படமா? வியக்கவைக்கிரது.

ஆனால்...இவர்கள் யாரும் தேவையில்லை..

நல்ல கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு, இசை, யதார்த்தம் ..இவை இருந்தால் போதும்..அது வெற்றிப்பட ஃபார்முலா..என உணரவைத்து விட்டீர்கள்.

அதே சமயம் சில லாஜிக் மீறல்களும் உண்டு, சில காம்பரமைஸ்களும் உண்டு.

ஆனால் எல்லவற்ரையும் மறக்க வைத்து விடுகிறது படம்.

அட..அட..அட..இப்படி ஒரு படம் பார்த்து எவ்வளவு நாளாச்சு.

அட்டகாசம் மிஸ்கின்...

அதே சமயம் இளையராஜா...

என்ன சொல்ல... ஒரே வார்த்தை...

ராஜா ராஜா தான்.. (இது போதும் என எண்ணுகிறேன்). படத்தின் வெற்றியில் கணிசமான பங்கு ராஜாவிற்கு.

மிஷ்கின்...ரொம்பவே வுல்ஃப் வேடத்திற்கு பொருந்துகிறார்.இரட்டைநாடியாயும் இருப்பதால்.

ஸ்ரீ யும் பாத்திரம் உணர்ந்து அசத்தியுள்ளார்.

திருட்டி டிவிடி யில் பார்க்காமல், மக்கள் அனைவரும் தியேட்டரில் சென்று பார்த்தால்..படம் இமாலய வெற்றி அடையும்.

மக்கள் செய்வார்களா?


4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ராஜா ராஜா தான்... ரசனைக்கு வாழ்த்துக்கள்...

வல்லிசிம்ஹன் said...

நல்லதொரு விமர்சனம். நன்றி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி தனபாலன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வல்லிசிம்ஹன்