Friday, February 1, 2013

வாய் விட்டு சிரிங்க..



1)தலைவர் என்னை சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கச் சொல்றார்
ஏன்
அப்போதான் என் தொகுதியிலே..இடைத்தேர்தல் வருமாம்..தலைவர் பலத்தைக் காட்டமுடியுமாம்

2)ஆனாலும் அந்த நீதிபதிக்கு பக்தி அதிகம்..குற்றவாளிக் கூண்டில் நிற்கிற அர்ச்சகர் கிட்ட தன்னோட பெயர்,கோத்ரம் எல்லாம் சொல்லி வழக்கை ஆரம்பிக்கறதுக்கு முன்னாலே தன் பெயருக்கு அர்ச்சனை செய்யச் சொல்றார்.

3)தமிழுக்கு துரோகம் செய்யறாங்கன்னு தலைவர் யாரைச் சொல்றார்
அசின்..திரிஷா..வைத்தான்..அவங்க ஹிந்தி படத்தில நடிக்கப் போறாங்களாம்..அதனாலத்தான்

4)அந்த அமைச்சருக்கு திடீர்னு ஏன் நெஞ்சுவலி வந்துது
அவரோட செக்யூரிட்டிக்கு வந்த போலீஸைப் பார்த்ததும்..தன்னைக் கைது பண்ண வந்திருக்காங்கன்னு தப்பா நினைச்சுட்டாங்களாம்

5)நேற்று புதுசா வந்திருக்கிற அந்த படத்தோட டிக்கெட் கிடைச்சும் நீங்க ஏன் போகலை
அதுக்குள்ள எனக்கு வேற ஒரு கஷ்டம் வந்துடுத்து

6)அந்த பல் டாக்டர்கிட்ட மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம்
அவர்தான் நம்ம சொத்தைப் பத்தி விசாரிக்காம சொத்தையைப் பற்றி விசாரிக்கிறாராம்

7) தலைவருக்கு மருத்துவர்கள் என்ன திடீர்னு அட்வைஸ் பண்றாங்க..
தலைவர் மௌனமாய் அழறேன்னு அறிக்கைவிட்டதாலே..அப்படி உணர்ச்சிகளை அடக்கக்கூடாது..உடலுக்கு கெடுதல்..வாய் விட்டு அழுதுடுங்கன்னு அட்வைஸ் பண்றாங்க


1 comment:

மாதேவி said...

பல் டொக்டர் :))

"வாய்விட்டு அழுங்க" ஹா...ஹா