Wednesday, January 30, 2013

தாமதமான நீதி..மறுக்கப்பட்ட நீதியாகும்..(விஸ்வரூபம்)




ஜனவரி 11 ஆம் நாள் வெளியாக வேண்டிய  விஸ்வரூபம் டி.டி.எச். பிரச்னையால் 25 ஆம் நாள் வெளியாகும் என அறிவிக்கப் பட்டது.

இதனிடையே..இஸ்லாமிய சகோதரர்கள் போராட்டம் காரணமாக..படத்தை தமிழக அரசு தமிழகத்தில் தடை செய்தது.இதனால்..மற்ற மாநிலங்களில் வெளியான இப்படம் ஆங்காங்கே ஏற்பட்ட சச்சரவுகளால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறது.

விழுப்புரம் அருகே இப் படத்தின் திருட்டி டிவி டி கிடைத்ததாகவும் புகார் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி..இப்படத்தைப் பார்த்துவிட்டு தடையை நீக்கினாலும்..அவசர அவசரமாக தமிழக அரசு செயல் பட்டு உயர்நீதி மன்ற பெஞ்ச்சிடம் மீண்டும் தடையுத்தரவைப் பெற்றது.கமல் உச்ச நீதிமன்றம் போகப் போவதாகத் தகவல்.அங்கும் உடனடியாக இவ் வழக்கு எடுக்கப்படுமா எனத் தெரியவில்லை.

கமல் இது குறித்து அறிக்கையில்..தன் ஆள்வார்பேட்டை வீட்டை அடமானம் வைத்து இப்படம் எடுத்ததாகவும்...இனி தான் தங்கக் கூட இடமில்லை என்று பொருள் பட பேசினார்.மேலும்..இதே நிலை நீடித்தால்..தான் மதச்சார்பற்ற மாநிலத்திற்கு குடி போகவும் தயார் என்றுள்ளார் வேதனையுடன்.

95 கோடி செலவில் எடுக்கப்பட்ட படத்தின் தலைவிதி இப்போது கேள்விக்குறியாய் உள்ளது.

சாதாரணமாக கமல் அநாவசியமாக அரசியலிலோ..அரசியல் சர்ச்சைகளிலோ ஈடுபடுபவர் இல்லை.அரசியலுக்கு நான் லாயக்கில்லை என்றும் அறிவித்துள்ளார்..

அப்படிப்பட்டவருக்கு...இந் நிலை ஏன்?

இதற்கான காரணம் பல கூறப்பட்டாலும்...உண்மை விரைவில் வெளிவரும்.



No comments: