Wednesday, December 5, 2012

தமிழுக்கு அமுதென்று பெயர் - 5




இன்றைய பதிவில் காளமேகப் புலவரின் மற்றொரு சிலேடைப் பாட்டைப் பார்க்கலாம்.

பாம்பையும், வழைப்பழத்தையும் சிலேடையாகக் கையாண்டப் பாடல்..

நஞ்சிருக்கும் தோலுரிக்கும் நாதர்முடி மேலிருக்கும்
வெஞ்சினத்தில் பற்பட்டால் மீளாது - விஞ்சுமலர்த்
தேம்பாயும் சோலைத் திருமலைரா யன்வரையில்
பாம்பாகும் வாழைப் பழம்

 பாம்பைப் பொறுத்தவரை நஞ்சு இருக்கிறது.
தோல் இருக்கிறது. காலத்திற்குக் காலம் தன்தோலை உரிக்கும் வழக்கம்
இருக்கிறது. சிவனின் முடியிலே அமர்ந்திருக்கிறது கோபத்திலே அதன்
பற்கள் பட்டுவிட்டால் யாரும் உயிர் தப்பமுடியாது.

அதேபோல, வாழைப்பழம்,
நஞ்சிருக்கும் (நன்கு கனிந்து நைந்து இருக்கும். )எ
அதற்கு வெளித் தோல் இருக்கிறது. உண்பதென்றால் அந்தத் தோலை உரிக்கவேண்டும்.
சிவனின் முடிக்கு அபிஷேகம் செய்யப்படும் பழங்களில்
ஒன்றாக இருக்கிறது. (-வெஞ்சினத்தில் -
 துணைஉணவாக இருக்கும்போது என்று பொருள்படும்).
துணையுணவாக உட்கொள்ளும்போது நமது பற்கள் பட்டுவிட்டால் மீளாது,
வயிற்றினுள்ளே சென்றுவிடும். ஆகவே வாழைப்பழமு; பாம்புக்கு நிகராகின்றது
என்பது பாடலின் கருத்தாகின்றது.

அடுத்த பதிவில் மற்றொரு பாடலுடன் சந்திப்போம்.


No comments: