Friday, October 5, 2012

ஆனாலும் பா.ம.க.,விற்கு ரொம்பத் தாங்க.....


கடலூர் மாவட்டத்தில் கிராமம், ஊராட்சி, நகரம், ஒன்றியம் வாரியாக பாமக கட்சிக் கொடிக் கம்பங்களை ஏற்றி வைத்துச் செல்லும் வழியில் நெய்வேலி வந்த அன்புமணி ராமதாஸ் நிருபர்களுக்கு அளித்தப் பேட்டி:

அடுத்து நடைபெறவுள்ள நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் பாமக இனி தனித்துப் போட்டியிடும் என நெய்வேலியில் வெள்ளிக்கிழமை முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

தமிழகத்தில் இன்று மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதற்குக் காரணம், தமிழகத்தை முன்னர் ஆண்ட கட்சியும், தற்போது ஆளுகிற கட்சியும்தான். இதில் கருணாநிதியின் பங்கு மிக அதிகம்.

÷காவிரி நீர்ப் பிரச்னைக்காக அன்றாடம் அறிக்கை மேல் அறிக்கை விட்டுக் கொண்டிருப்பதால் பிரச்னைக்குத் தீர்வு ஏற்படாது.

÷காவிரி நீரைப் பெற்றுத் தருவதில் இரு கட்சிகளும் மெத்தனமாகவே செயல்படுகின்றன. அதற்கு தீர்வு காணும் வழியை ஆய்வுசெய்து அதற்கான வேலைகளில் இறங்க வேண்டும்.

÷பாமக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு. மேலும் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருபவர் ராமதாஸ் மட்டுமே.

÷எனவே திமுக, அதிமுக போன்ற திராவிடக் கட்சிகளைப் புறந்தள்ளிவிட்டு தற்போது இளைஞர்கள் பாமகவில் தங்களை இணைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்றார் அன்புமணி ராமதாஸ்.


No comments: