Friday, October 26, 2012

தமிழனுக்கு தண்ணீர் தராதவர் தமிழக கவர்னர் ஆகலாம்...


மத்திய அமைச்சரவையில் இருந்து திராணமுல் காங்கிரஸ் விலகியுள்ள நிலையில் ஏற்கனவே தி.மு.க வினரின் பதவி விலகளாலும் அமைச்சரவையின் சில இலாகாக்கள் காலியாக உள்ளன. இதனால் சில அமைச்சர்கள் கூடுதல் பொறுப்புகளிலும் இருந்துவருகின்றனர்.


இதனை அடுத்து இரண்டு நாட்களில் அமைச்சரவை மாற்றம் பெற உள்ளது, அதில் ராகுல் காந்தி போன்ற புது முகங்களுக்கு முக்கிய பதவிகள் அளிக்கப்படும் என்ற கருத்தும் நிகழ்கிறது.


அமைச்சரவை மாற்றங்கள் நடக்கவிருக்கும் வேலையில் வெளியுறவு துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர் தமிழக ஆளுநராக நியமிக்கப்படலாம் என்று சில வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்நிலையில் வெளியுறவு துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். மேலும் பிரதமர் மன் மோகன் சிங் உடனான லாவோஸ் பயணத்தையும் அவர் ரத்து செய்துள்ளார்.

இதனால் அமைச்சரவையில் இன்னும் சில முக்கிய பதவிகளில் மாற்றம் பெறுவது உறுதியாகியுள்ளது. தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அம்பிகா சோனி, வர்த்தக துறை அமைச்சர் ஆனந்த் சர்மா மற்றும் மனிதவள மேம்பாடு மற்றும் தொலைத்தொடர்பு துறை அமைச்சர் கபில் சிபல் ஆகியோரது பெயர்கள் புதிய பட்டியலில் இடம் பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிஸ்கி- கர்நாடகாவின் முதல்வராயிருந்த போதும் சரி,மத்திய அமைச்சரவையில் இருந்த போதும் சரி...தமிழனின் தவித்த வாய்க்கு தண்ணீர் தராதவர் இவர் என்பது அனைவரும் அறிந்ததே..

No comments: