Sunday, December 25, 2011

கீப் யுவர் மொபைல்ஸ் இன்---------- -- மோட்...





கவர்னர் மாளிகையில் பிரதமரை சந்தித்து 16 பக்கங்கள் அடங்கிய கோரிக்கை மனுவை அளித்தார்..அவை..

1) உச்ச நீதி மன்ற ஆணைப்படி முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை 142 அடி உயர்த்துதல்

2)அணையின் பாதுகாப்பு கருதி மத்திய தொழில் பாதுகாப்பு படையை அங்கு நிறுத்த வேண்டும்

3)தேசிய பேரிடர் ஆணைய நிபுணர் குழுவை திரும்பிப் பெற வேண்டும்

4)தேசிய உணவு பாதுகாப்பு சட்ட மசோதாவிலிருந்து தமிழக அரசுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.

5) தமிழகத்திற்கு வழங்கப் படும் உணவு தானியங்கள் அதே போன்று வழங்க உறுதி செய்ய வேண்டும்,மண்ணெண்ணெய் அதே அளவு வழங்க வேண்டும்

6)தமிழக மீனவர் மீது நடத்தப் படும் தாக்குதலை தேசிய பிரச்னையாக எடுத்துக் கொள்ள வேண்டும்

7) தமிழக அரசின் கடன் சுமை லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.மேற்கு வங்க அரசுக்கு மத்திய அரசு உதவி செய்துள்ளது போல நிதி உதவியை தமிழக அரசுக்கும் வழங்க வேண்டும்

8)மத்திய தொகுப்பில் இருந்து 1000 மெகா வாட் மின்சாரம் வழங்க வேண்டும்

ஆமாம்...இதற்கு மன் மோஹன் சிங்கின் பதில் என்ன...

பிளீஸ்..கீப் யுவர் மொபைல் இன் மன் மோகன் சிங் மோட்.....  இதற்கு உங்களுக்கு அர்த்தம் தெரிந்தால்... பிரதமரின் பதில் என்ன என்பதும் தெரிந்திருக்கும்..

டிஸ்கி-..பிரதமர் அலுவலகத்தில் மனுக்களாக வரும் காகிதங்கள் எடைக்கு எடை பழைய பேப்பர் வாங்குபவர் யாருக்கெனும் போடப்படுகிறதா..அதன் வருமானம் என்ன...இதைத் தெரிந்து கொள்ள யாரேனும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் முயல்வார்களா?