Friday, December 16, 2011

கமல்ஹாசனும்..கல்யாண மண்டபமும்..




கமல் பற்றிய தகவல்கள் நிரம்பிய புத்தகத்தை தொகுத்துள்ளார் மணா.புத்தகத்தின் பெயர் கமல் நம் காலத்து நாயகன்.கமலின் வெளிவராத புகைப்படங்கள்.அவருக்கு நெருக்கமானவர்களின் பேட்டிகள் நிறைந்துள்ளன.

கமலின் அண்ணன் சந்திரஹாசன் பல அரிய தகவல்களை இதில் தந்துள்ளார்.

கமல் மீது அவரின் தந்தைக்கு மிகவும் நம்பிக்கை..ஆகவே பன்னிரெண்டாம் வயதில் அவரது படிப்பை நிறுத்திவிட்டார் தந்தை.அவன் நடிகனாக வந்து உலகத்திற்கேத் தெரியணும் என்பாராம் அவர்.மூன்றாம் பிறைக்கு தேசியவிருது கிடைச்சு இருக்குன்னு அவரோட அப்பாவிற்கு தந்தி அடித்தார்களாம்..அதற்கு அவரிடமிருந்து வந்த பதில்..'வென் ஆஸ்கார்' என்பதாம்.

நடிப்பு..நடிப்பு..இதுதான் அவருக்கு மூச்சு..அமெரிக்காவிற்கு விடுமுறைக்குப் போகிறேன் என்று போனாலும்..அங்கு போய் வந்த பிறகு..'நடிப்புக்காக ஒரு கோர்ஸ் அட்டெண்ட் பண்ணினேன், சினிமா பட்ஜெட் பண்றதுன்னு ஒரு கோர்ஸ் போனேன்..மேக்கப் ஸ்பெஷலிஸ்டைப் பார்த்தேன்..' என்பாராம் .

ரிவார்டு வருதான்னு பார்த்து அவர் எதையும் செய்யறதில்லே..ரிவார்டை எதிர்பார்த்து செய்திருந்தா, பல கல்யாண மண்டபங்கள் வந்திருக்கும்..கல்யாண மண்டபம் இல்லாத ஒரே நடிகர் கமல் தான்னு கிண்டலுக்குச் சொல்வாங்க.சினிமாதான் அவருக்கு வாழ்க்கை.

இவர் சாதனைப் பண்ணாத வருஷமே இருக்கப் போறதில்லை.ஏதாவது பண்ணிட்டே இருப்பார்.

இப்படி பல அரிய தகவல்களை சந்திரஹாசன் தந்துள்ளார்.


2 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.

ஹேமா said...

திறமையான ஒரு நடிகராய் எனக்கும் கமலை நிறையவே பிடிக்கும்.பழைய படங்களைக்கூடத் தேடிப்பார்ப்பேன்.போனவாரம்கூட நீலமலர்கள் பார்த்தேன் !