Friday, December 2, 2011

ஞாபகம் வந்ததே....





தேர்வுக்குப் போகுமுன்

செய்தித்தாள் படிக்கச்

சொன்னார் தந்தை

வேண்டா வெறுப்பாய்

படித்தான்...

வினாத் தாளில்

வேலியே பயிரை

மேய்ந்தது போல..

வாக்கியத்தில் அமை

எனக் கேட்கப்பட

காவல் நிலையத்தில்

புகார் அளிக்க வந்த

பெண்...செய்தி

ஞாபகம் வந்தது


3 comments:

ஹேமா said...

சூப்பர்...வர வரக் குட்டிக்கவிதைக் கவிஞராயிட்டே வாறீங்க ஐயா !

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி ஹேமா

முனைவர் இரா.குணசீலன் said...

நயம்..