Tuesday, November 29, 2011

பாக்கியராஜின் பதில்..




இந்த வார பாக்யாவில் பாக்கியராஜ் கேள்வி ஒன்றிற்கு அளித்த பதில்..எனக்குப் பிடித்திருந்தது..அதை பகிர்ந்து கொள்கிறேன்..

கேள்வி- சாத்தானின் சேஷ்டை என்பது..?

பதில்- ஒரு மனிதனை அற்பத் தனமா யோசிக்க வச்சு, கைக்கெட்டியது வாய்க்கெட்டாது செய்யறதுதான் சாத்தானின் மிக முக்கியமான சேஷ்டை.இதில பலரும் ஸ்லிப் ஆகறதுண்டு.

உதாரணத்திற்கு ...ஒரு பிச்சைக்காரன் விலை உயர்ந்த ஒரு வைரத்தை வழியிலே கண்டெடுத்தான்.அதன் மதிப்பு என்ன வென்று தெரியாம அதை தன் கூட இருந்த கழுதையோட காதிலே மாட்டிவிட்டான்.

அதைக் கண்காணிச்ச ஒரு வைர வியாபாரி அவனிடம் சென்று,,"இந்த கல்லை எனக்கு கொடுத்தால் நான் உனக்கு பணம் தருகிறேன்.எவ்வளவு வேண்டும் கேள்" என்றான்.

பிச்சைக்காரன், 'அப்படியானால் ஒரு ரூபாய் தந்துவிட்டு இந்தக் கல்லை வைத்துக் கொள்' என்றான்.

அதற்குள் வைரவியாபாரிக்குள்ள சாத்தான் பூந்துட்டு இன்னும் குறைவா வாங்குன்னு சொல்ல அவர்,'ஒரு ரூபாய் அதிகம்.நான் உனக்கு 50 பைசா தருகிறேன்.இல்லையென்றால் வேண்டாம்' என்று அற்ப புத்தியுடன் சொல்ல,

பிச்சைக்காரன் 'அப்படியானால் பரவாயில்லை! அது இந்த கழுதையின் காதிலேயே இருக்கட்டும்'னு சொல்லிட்டு நடந்தான்.வைர வியாபாரி எப்படியும் அவன் தன்னிடம் அதை 50 காசிற்கு தந்து விடுவான்ற எண்ணத்தோட பின் தொடர்ந்து வந்துகிட்டிருந்தாரு.

அப்ப எதிர்ல வந்த இன்னொரு வியாபாரி கழுதை காதுல வைரத்தைப் பார்த்துட்டு அந்த பிச்சைக்காரனிடம் 1000 ரூபாய் தந்து அந்த வைரத்தை வாங்கிட்டான்.

இதை சற்றும் எதிர்பாராத வைர வியாபாரி அதிர்ச்சியுடன் 'அட..அடி முட்டாளே! கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை வெறும் ஆயிரத்திற்கு கொடுத்துட்டு இவ்வளவு சந்தோசமா செல்கிறாயே! நன்றாக ஏமாந்து விட்டாய்'னு சிரிச்சு கிண்டலடிச்சாரு.

அதைக்கேட்ட பிச்சைக்காரன் பலத்த சிரிப்போடு..'யார் முட்டாள்? எனக்கு அதன் மதிப்புத் தெரியாது..அதனால் அதை இந்த விலைக்கு விற்று விட்டேன்.மேலும் எனக்கு இதுவே மிகப் பெரிய தொகை.எனவே நான் மிகுந்த மகிழ்வுடன் இருக்கிறேன்.அதன் மதிப்பு தெரிந்தும் வெறும் 50 காசிற்காக கோடி ரூபாய் வைரத்தை இழந்து விட்டாயே? இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்"னு நடந்தானாம்...


5 comments:

ஹேமா said...

நிறையப் பேரின் வாழ்வோடு பொருந்தும் இந்தக் கதை.நன்றி நன்றி உங்களுக்கும் பாக்கியராஜ் அவர்களுக்கும் !

துரைடேனியல் said...

Arumaiyana kelviyum pathilum.

துரைடேனியல் said...

Tamilmanam vote 1.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஹேமா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி துரைடேனியல்