Saturday, November 26, 2011

அடப்பாவிகளா..இதிலுமா ஊழல்..




மகாராஷ்டிராவில் துலே மாதத்தில் நியாகலாட் என்னும் கிராமத்தில் 600 குடிம்பங்கள் வசித்து வருகின்றன.

அந்த கிராமத்தில் அக்டோபர் 3ஆம் நாள் , திடீரென 60 வெளியூர் மாணவர்கள்..காதில் உயரைச் சொருகி..ஐ பாட்டில் பாட்டைக் கேட்டபடி வந்தனர்.கேட்டால் அந்த கிராமத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் என்றனர்.அதாவது அங்குள்ள பள்ளிக்கு இன்ஸ்பெக்க்ஷன் வருவதால்...கணக்குக் காட்ட வெளி மாணவர்களை வரவழைத்துள்ளனர் என்று தெரிந்தது.

அம்மாநிலத்தில் அக்டோபர் 3,4,5 ஆகிய நாட்களில் பள்ளி இன்ஸ்பெக்க்ஷன் வந்த போது 2600000 மாணவர்கள் வரவில்லை என்று தெரிய வந்தது.ஆனால் அனைத்தும் போகஸ்..ஆம்..அவ்வளவு மாணவர்கள் கிடையவே கிடையாது.தவிர்த்து நூற்றுக் கணக்கான பள்ளிகள் வெறும் ஏட்டில் பெயரில் தான் உள்ளது.பெரும்பாலான பள்ளிகள் மந்திரிகளாலும், எம் எல் ஏ க்களாலும் நடத்தப் படுபவை.

இல்லாத மாணவர்களுக்கு (இருபத்தாறு லட்சம்) மதிய உணவிற்கு 30 கோடியே 42 லட்சம் பணம் பெறப்பட்டதாம்.ஒவ்வொருவருக்கும் 3 கிலோ அரிசி என 11 கோடி பணம் வாங்கப்பட்டது.தவிர்த்து இல்லாத ஆசிரியர்கள் 43775 பேர் இருப்பதாகக் காட்டி அவர்களுக்கான சம்பளமாக 60 கோடியே 66 லட்சத்து 90000 வாங்கப்பட்டது.

படிக்கப் படிக்க ரத்தம் கொதிக்கிறது.

இவ்வூழல் குறித்து முழுதும் படிக்க வேண்டுமா நவம்பர் 27 தேதியிட்ட தி வீக் ஆங்கிலப் பத்திரிகை வாங்கிப் படியுங்கள்.அப்பத்திரிகை இந்த ஊழலுக்குக் கொடுத்த தலைப்பு..

"bogus schools help politicians swindle thosands of crores"