Tuesday, November 22, 2011

அன்னா ஹசாரேயும்..குடிமகன்களும்..




நம்மை ஒருவர் மதிக்கிறார் என்று தெரிந்தால் அவர்களிடம் மேலும் மேலும் பேசி மதிப்பை இழப்பவர்கள் நம் மக்கள்.இது அனைவருக்கும் பொருந்தும்.

அப்படி ஒரு நிலைக்கு இவர் வந்துள்ளாரோ..? என்று தோன்றுகிறது.

மது அருந்துபவர்கள் அனைவரையும் தெரு விளக்கு கம்பத்தில் கட்டி வைத்து சாட்டையால் அடிக்க வேண்டும்..என்றுள்ளார் அன்னா ..இரண்டாம் மஹாத்மா என சிலரால் அழைக்கப்படுபவர்..

அவரது கிராமத்தில் குடிகாரர்களை இப்படித்தான் தண்டித்து திருத்தியதாகக் கூறியுள்ளார்.இது தவறிழைக்கும் குழந்தைகளை பெற்றோர் அடித்துத் திருத்துவது போலத்தான் என்றுள்ளார். இன்று அம்மா..அப்பாக்கள் கூட குழந்தைகளை அடிக்கக் கூடாது என்பதை இவர் அறியவில்லையா?

இன்று அரசுக்கு வருமானம் வரும் துறையாக உள்ளது மது. அதைசரியென்று சொல்லவில்லை.மது அருந்துவது நல்ல பழக்கம் இல்லைதான்.உடலுக்கு தீங்கு விளைவிப்பதுதான்.அதற்கு குடிமகன்களை குறை சொல்லி என்ன பயன்.

தொழிற்சாலைகளையும்..கடைகளையும் திறந்துவிட்ட அரசைக் கண்டிக்கட்டும்..அதற்கான போராட்டமும் நடத்தட்டும்.அதை விடுத்து நுகர்வோரை ஏன் குறை சொல்ல வேண்டும்.

அரசாங்கத்திற்கு பெருமளவில் வருவாய் ஈட்டித் தரும் இதை எந்த ஒரு அரசும் தடைசெய்யாது..அப்படி அரசு ஒரு முடிவெடுக்குமேயாயின் குடிமகன்கள் ஏன் குடிக்கப் போகிறார்கள்.ஆனால் பொன் முட்டையிடும் வாத்தை இழப்பவர் இருப்பார்களா??

வேண்டாத விஷயங்களில் அன்னா தலையிடுவாராயின்..அவரது ஊழல் ஒழிப்பு போராட்டத்திற்கான ஆதரவையும் அவர் கொஞ்சம்..கொஞ்சமாக இழக்க நேரும்.

1 comment:

Sivamjothi said...

What ever Anna says it will reach people. He is not telling anything wrong..

Since most of the people are addicted to alcohol,he may loose their support.