Friday, November 25, 2011

மழையும்..மனிதனும்..




மழை

பெய்து கொண்டிருக்கிறது

ரசித்துக் கொண்டிருக்கிறேன்

நொறுக்குத் தீனியுடன்..

பாழாய்ப்போன மழை

வெளியே செல்ல இயலவில்லை

என்கின்றேன்..

தொலைபேசியில் அழைப்பவனிடம்..

நல்லது செய்யும்

மனிதன் மட்டுமல்ல

மழையும்

சபிக்கப்படும் போல...



3 comments:

SURYAJEEVA said...

கைய கொடுங்க பாஸ்

ஹேமா said...

ஐயா...உங்கள் சிந்தனை ஆழமானது.உண்மையில் திகைக்கிறேன் !

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை.