Tuesday, November 1, 2011

கிரிமினல்களிடம் பாடம் கற்கும் காவல்துறை




ஏடீஎம் மில் பணம் எடுப்பவரா..நீங்கள்..

அப்படியாயின் இனி ஜாக்கிரதையாக இருங்கள்.

ஏடீஎம் திருட்டு கும்பல் அதிகரித்து விட்டது.

இவர்கள்..சைனாவிலிருந்து ஸ்கிம்மர் என்னும் தகவல்களை திருடும் கருவி வாங்கி ..பலரின் கணக்கிலிருந்து பணத்தைத் திருடிகிறார்கள்.இதுவரை 30 லட்சத்திற்கும் மேல் இத் திருட்டு நடந்துள்ளது.இந்த நவீன ஸ்கிம்மர் கருவிகள் நம் ஏடீஎம் அட்டையிலிருந்து பட்டியை மட்டுமின்றி,பாஸ்வேர்ட் நகல் எடுக்கின்றன.ஆகவே போலீசார் அவ்வப்போது நம் பாஸ்வேர்ட் ஐ மாற்றிக் கொள்ள அறிவுறுத்துகிறார்கள்.மிக அதிகமாக ஏடீஎம் மிலிருந்து பணம் எடுக்க வேண்டாம் என்கிறார்கள்.

புதிய டிஜிட்டல் உலகில் முன்பை விட நமக்கு அதிகம் கவனம் தேவை.

சரி...தலைப்பிற்கு வருவோம்..

ஏடீஎம் மற்றும் கிரெடிட் கார்ட் மோசடி வழக்கில் கைதானவர்களிடம் இருந்து அவர்களின்..தொழில் நுட்பங்களை கற்றுக் கொள்ள காவல் துறை முடிவெடுத்துள்ளதாம்.சமீபத்தில் ஐந்து பேர் கும்பல் ஒன்று ஏடீஎம் மற்றும் கிரெடிட் கார்ட் குளோனிங் செய்து திருடிய வழக்கில் சென்னையில் கைது செய்யப்பட்டது.அந்த கும்பலில் இருந்த உமேஷ் என்ற இளைஞனிடம் விசாரணை செய்ததில்..தாங்கள் எவ்வளவு பின் தங்கியிருக்கிறோம் என்று காவல்துறைக்குத் தெரிய வந்ததாம்.

'வங்கிகள் புதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தால் அடுத்த சில நாட்களிலேயே அவற்றை உடைக்க நாங்கள் புதிய உத்திகளை தயார் செய்து விடுகிறோம்.உண்மையிலேயே வங்கி அதிகாரிகளுக்கு நிலைமையின் தீவிரம் தெரியாது;' என்கிறாராம் உமேஷ்.

தமிழகாவல்துறை தற்போது கிரிமினல்களிடம் கற்றுக்கொள்வது என்பது..காவல்துறையினரின் திறமை குறைந்து வருவதற்கான அடையாளமா?

2 comments:

SURYAJEEVA said...

காவல் துறை தொழில் நுட்ப விஷயத்தில் மிகவும் பின் தங்கி உள்ளது என்பது உண்மை..

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி suryajeeva