Saturday, October 22, 2011

வாய் விட்டு சிரிங்க..




1)நம் முன்னோர்கள் சொன்ன கருத்தெல்லாம் ஆணித்தரமாய் இருக்கும்..
 ஆமாம்..அதனாலேதானே அவங்க எல்லாம் எழுத்தாணியாலே எழுதினாங்க.

2)'கம்பல்சரி' ன்னா என்ன
 உச்ச நீதி மன்றம் சமச்சீர் கல்வியை கம்பெல் பண்ணியதாலே தானே முதல்வர் 'சரி'ன்னார்.அதுதான் கம்பல்சரிங்கறது

3)அண்ணாசாலையிலே ஒரு கார் மணிக்கு 150கிலோ மீட்டர் வேகத்திலே போனால் 15 நிமிடங்களில் எவ்வளவு தூரம் போகும்
  100 மீட்டர்
  உனக்குக் கணக்கே தெரியலையே
 உங்களுக்குத்தான் அண்ணாசலை டிராஃபிக் பற்றி தெரியலை

4)தலைவர் பெயர்ல நில அபகரிப்பு வழக்கு பொய்யானாதுங்கறாங்களே..ஏன்?
 செவ்வாய் கிரகத்திலே இருக்கிற நிலத்தை அபகரிச்சதா வழக்குப் போட்டிருக்காங்களே

5)தலைவர் வரிகளை உயர்த்துவது தெரியாம உயர்த்துவார்னு எப்படி சொல்ற
 அரசியலுக்கு வரதுக்கு முன்னால பேருந்துக்கள்ல தெரியாம நைசா பிக் பாக்கெட் அடிச்சுக்கிட்டுத்தானே இருந்தார்

6)தலைவர் பாஸ் பாஸ்ன்னு கத்திக்கிட்டு இருக்காரே எண்..
அவருக்கு பெயில் இல்லைன்னு கோர்ட்ல சொல்லிட்டாங்களாம்


2 comments:

SURYAJEEVA said...

நல்ல வேளை நிலாவுல நிலம் வாங்கினதா கேஸ் போடல, போட்டிருந்த உங்களுக்கு ஒரு ஜோக் தேறியிருக்காது..

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி suryajeeva