Wednesday, September 21, 2011

உண்ணாவிரதக் கலாச்சாரம்..




பொதுவாக நமது குணம் 'ராமன் ஆண்டால் என்ன..ராவணன் ஆண்டால் என்ன' என்பதுதான்.(யார் ராமன்..யார் ராவணன் எனக் கேட்கக் கூடாது)
ஆனால் சமீப காலங்களாக நம்மிடையே ஒரு விழிப்புணர்ச்சி ஏற்பட்டுள்ளது..மகிழ்ச்சியையே தருகிறது.
ஒரு பொதுப்பிரச்னைக்கு..அதன் தீர்வுக்கு..பொதுமக்களே தெருவிற்கு வந்து போராடுவது மகிழ்ச்சி.
மேலும்..அன்னா ஹஜாரே யின் உண்ணாவிரதத்திற்குப் பின்..ஆங்காங்கே பலர் இந்த முறையைக் கைப்பற்ற துணிந்துவிட்டனர்.
ஆனால்..என்ன ஒன்று...இப்படிப்பட்ட கட்சிகள் கலக்காத..பொது மக்கள் போராட்டத்தில்,.ஆளும் கட்சிக்கு எதிரான கட்சியினர் புல்லுருவிகளாக நுழைந்து..பிரச்னைக்கு உண்மையில் தீர்வு காண வேண்டும் என எண்ணாது...பிரச்னையை மேலும் மேலும் வளர்த்து..குளிர் காய்வது சற்று வருத்தத்தையே ஏற்படுத்தியுள்ளது.
லேப்டாப்...மாணவர்களுக்கு இலவசமாகக் கொடுப்பது சரியா..தவறா என்ற கேள்விக்குப் போகப்போவதில்லை..ஆனால் முதுநிலை மாணவர்கள், தங்களுக்கும் லேப்டாப் வழங்க வேண்டும் எனக் கேட்பது அவர்கள் உரிமை.அதை முறைப்படி கேட்டிருந்தால் பிரச்னையில்லை.ஆனால் அதற்கு சாலை மறியல்..கைது என்றெல்லாம் வரும்போது..இப்படிப்பட்ட பிரச்னைகள் நாட்டில் வளர்ந்துக் கொண்டே இருக்கிறதே என மனம் கவலையடைகிறதே.
நிதானமாக ஓடும் ஆறு..தான் போகும் பாதை எங்கும் அடுத்தவர்க்கு உயோகமாய் இருக்கும் விதத்தில் பசுமையை அள்ளித் தெளித்து தொடர்ந்து ஓடுவது போல..நாம் செயல்பட வேண்டும்.நம் செயல்பாட்டால்..நம் காரியமும் ஆக வேண்டும்..பிறரும் பயனடைய வேண்டும்..அப்படி பயனடையாய் விட்டாலும்..அவர்கள் அன்றாட வாழ்விற்கு தொந்தரவு இருக்கக் கூடாது.
இதை மனதில் கொண்டு நற் காரியங்களுக்காக போராட்டம் இருக்குமேயாயின்..அனைத்து மக்கள் ஆதரவும் கண்டிப்பாய் இருக்கும்.ஆணவத்தால்,அகங்காரத்தால்,காழ்ப்புணர்ச்சியால் சாதிக்கமுடியா காரியங்களை அன்பு சாதிக்கும்..அஹிம்சை முறை சாதிக்கும்.
பிரச்னைகள் நாம் உருவாக்குவது தான்.பிரச்னைகளின் தீர்வும் நம்மிடம்தான்.


2 comments:

aotspr said...

பிரச்னை என்பது வந்தால் தான் முடிவு கிடைக்கும்.

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Kannan