Tuesday, July 26, 2011

வள்ளுவனும் இன்பத்துப் பாலும் -2

வள்ளுவனும் இன்பத்துப் பாலும் -2
பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் வேண்டுமா?..இப்படித் தொடங்கும் ஒரு பழைய சினிமா பாடல்..
என்ன பார்வை உந்தன் பார்வை..எனை மறந்தேன் அந்த வேளை..என்ற கண்ணதாசன் வரிகளும் பிரசித்தம்.
மங்கையரின் பார்வையே ஆயிரம் கதைகள் சொல்லுமாம்..
ஆனால் வள்ளுவனுக்கு மங்கையரின் பார்வை எப்படியிருக்கிறதாம்..தெரியுமா..?
காதலியின் பார்வை ஒரு படையே தன்னைத் தாகுவது போல இருக்கிறதாம்.

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து (1082)

அவள் வீசிடம் விழிவேலுக்கு எதிராக நான் அவளை நோக்க, அக்கணமே அவள் என்னைத் திரும்பி நோக்கியது தானொருத்தி மட்டும் தாக்குவது போதாதென்று ஒரு சேனையுடன் வந்து என்னைத் தாக்குவது போல இருந்தது..

No comments: