Wednesday, June 8, 2011

இன்டெர்னெட் காதல்





ராங் காலால் அவனது

ராணி ஆனாள்

மின்னஞ்சலால்

மிகுதியாய் போதை ஊட்டினாள்

எஸ்எம்எஸ் மூலம்

எழுச்சியூட்டினாள்

சாட் மூலம்

சாமரம் வீசினாள்

மணம் தீர்மானம் ஆனது

முகபுத்தகம் மூலம்

புகைப்படம் ஏமாற்றியது

புத்தகத்தில் - நேரில்

பார்த்த வேளையில்

பாகாய் உருகினான் -அவளோ

தன் கற்பனை நாயகன் கனவு

தடாலென வீழ்ந்ததை உணர்ந்தாள்

மணமுடிந்ததும்

மணமுறிவுதான் என

யார் அறிவார்



6 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

:)))

இது ஒரு மாயத் தோற்றம்.

முனைவர் இரா.குணசீலன் said...

:)))

இது ஒரு காட்சிப் பிழை.

முனைவர் இரா.குணசீலன் said...

"அவன் கனவில் அவள் வருவாள் அவனை பார்த்து சிரிப்பால் ..அவள் கனவில் யார் வருவார் ? யாரை பார்த்து சிரிப்பால் " - கண்ணதாசன் ..:)

சிநேகிதன் அக்பர் said...

எல்லோருமே காதல் கோட்டை அஜீத் குமார், தேவயானி மாதிரி இருப்பாங்களா :)

ஹேமா said...

இன்றைய கண்கட்டிக் காதலை அழகாகச் சொல்லியிருக்கிறிர்கள் ஐயா !

ரிஷபன் said...

நிஜத்திற்கும் நிழலுக்கும் நடக்கும் யுத்தமா!