Thursday, January 13, 2011

தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி இறுதியானது..

பல நாட்களாக..குறிப்பாக டி.ஆர்.பாலு, கலைஞர் சார்பில் சோனியாவை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து விட்டு..தமிழக காங்கிரஸார் சிலர் தி.மு.க., பற்றியும், கூட்டணி பற்றியும் கேவலமாக விமரிசித்து வருவதையும் ..ஒரு மாணவன் ஆசிரியரிடம் புகார் செய்வது போல புகார் செய்ய, சோனியாவும் குறிப்பிட்டவர்களுக்கு சமிக்ஞைகள் அனுப்பியிப்பார் போலத் தெரிகிறது.ஆகவே தான் சில நாட்களாக அவர் வாயைத் திறக்கக் காணோம்.

இந்நிலையில்.. சட்டசபை நிகழ்ச்சி ஒன்று காங்கிரஸுடன் கூட்டணி நிச்சயம் என்பதை புலப்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ., பீட்டர் அல்போன்ஸ், சென்னை மருத்துவ மனைக்கு 'ராஜிவ் காந்தி' பெயரை வைக்க வேண்டும் என்றதுமே கலைஞர் உடனடியாக சம்மதித்து விட்டார்,

இந்த நிகழ்ச்சி, காங்கிரஸ் இடையே..குறிப்பாக சோனியாவிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்..கூட்டணி இதனால் உறுதியாகிவிட்டது எனலாம்.

சிலர், சில விஷயத்தை தவிர்க்க வேண்டுமென்று, கண்ணைத் திறந்துக் கொண்டே பள்ளத்தில் விழுவேன் என்னும் போது..மற்ற ஆதரவாளர்கள் செயலிழக்கத்தான் வேண்டியுள்ளது.