Wednesday, September 30, 2009

உலகம் சுற்றும் எம்.ஜி.ஆர்., பட்ட துன்பங்களும்..அ.தி.மு.க.,வும்...


எம்.ஜி.ஆர்.,பிக்சர்ஸ் மூன்று படங்களை எடுத்தனர்..அந்த மூன்றும் முத்துக்கள்.நாடோடி மன்னன்,அடிமைப்பெண்,உலகம் சுற்றும் வாலிபன்.

எம்.ஜி.ஆர்., இரட்டை வேடத்தில் நடித்த இப்படத்தில் மஞ்சுளா,லதா,நாகேஷ் ஆகியோர் நடித்திருந்தனர்.தாய்லாந்து,ஹாங்காங்,ஜப்பான்,சிங்கப்பூர்,மலேஷியா ஆகிய நாடுகளில் படப்பிடிப்பு நடந்தது.இப்படத்தில் பிரமாதமான கதை இல்லையென்பதால்..காட்சிகள் பிரமாண்டமாய் இருக்க வேண்டும் என எம்.ஜி.ஆர்., விரும்பினார்.ஒசாகாவில் நடைப்பெற்ற எக்ஸ்போ 70 கண்காட்சியை முழுவதும் காட்ட விரும்பினார்.ஆனால்..அவரது காரைக்கூட அங்கு அவர்கள் அனுமதிக்கவில்லை அந்த அளவு கூட்டம்.

அவருக்கு அப்போது வயது 53..ஆனாலும்..தோளில் காமெராவை மாட்டிக்கொண்டு அவர் கிளம்பிவிட்டார்.எங்கெங்கு படப்பிடிப்பு நடத்தலாம் என்று அறிந்து வந்து ..அடுத்த நாள் அங்கு படப்பிடிப்பை நடத்தினார்.இதயம் பேசுகிறது மணியன்..அவர் தங்க இடம்..மற்ற ஏற்பாடுகளைக் கவனித்தார்.

'உலகம் அழகுக் கலைகளின் சிகரம்' என்ற பாடல் இருநூறு ஷாட் எடுக்கப்பட்டது.படத்தில் அப்பாட்டு நான்கு நிமிடங்களே வரும்.இப்பாடல் எக்ஸ்போ முழுதும் காட்டியது.

1971ல் இந்திரா காந்தி..தி.மு.க., வை ஒழிக்க நினைத்தார்.ஆனால் தி.மு.க., பெருவாரியான இடங்களைப் பிடித்து ஆட்சி அமைத்திருந்தது.அச்சமயம்..மணியனின் 'இதய வீணை' படபிடிப்புக்கு காஷ்மீர் சென்றிருந்தார் எம்.ஜி.ஆர்.,அங்கிருந்து கலைஞருக்கு தொலைபேசினார்.தனக்கு வர்த்தகத் துறை அமைச்சர் பதவி வேண்டும் எனக் கேட்டார்.இந்திய அரசியல் அமைப்பு சட்டம்..ஒரு நடிகர் நடிக்கும் காலத்து அமைச்சராக முடியாது என்றுள்ளதாக கருணாநிதி கூரினார்.இது விஷயமாக இந்திராவிடம் பேசக்கோரினார் எம்.ஜி.ஆர்., ஆனால் கலைஞர் மறுத்துவிட்டார்.எம்.ஜி.ஆரை நடிப்பை விட்டுவிடச் சொன்னார்.எம்.ஜி.ஆர்., அதற்கு மறுத்தார்.

தகராறு இங்கேதான் ஆரம்பித்தது.இச்சமயத்தில் கலைஞர் தன் மகன் மு.க.முத்துவை நடிப்பிற்கு கொண்டு வந்தார்.

மதுரையில் தி.மு.க., கூட்டம் ஒன்றில்'தி.மு.க., ஊழல் கட்சியா?'என எம்.ஜி.ஆர்., கேட்டதுடன் நில்லாது...கட்சியின் கணக்கைக் கேட்டார்.

பொருளாளரின் வேலை கணக்கு காட்டுவது..கணக்கு கேட்பதில்லை என்றார் கலைஞர்.கலைஞர்..நெடுஞ்செழியனுடன் பேசி..எம்.ஜி.ஆரை..கட்சியை விட்டு நீக்கினார்.

அப்போது கண்ணதாசன்..'அவரைப் பற்றி குறைத்து மதிப்பிடாதீர்கள்..கலாட்டா வரும்' என்றார்.

'நான் சமாளித்துக் கொள்வேன்' என்றார் கலைஞர்.

நேற்று இன்று நாளை படபிடிப்பில் இருந்தவரிடம்..கட்சியை விட்டு நீக்கப்பட்டது சொல்லப்பட்டது.'இப்போதுதான் நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேன்' என்றார் எம்.ஜி.ஆர்.,பின் அப்படத்தில்..'தம்பி நான் பிறந்தேன் காஞ்சியிலே' என்ற பாட்டில்..முதன் முறையாக அ.தி.மு.க., கொடி காட்டப்பட்டது.அப்படம் வெளியான திரையரங்குகள் சூறையாடப்பட்டன.

உலகம் சுற்றும் வாலிபன் பட வெளியீட்டில் அக்கறைக் காட்டினார் எம்.ஜி.ஆர்.,அரசு அவ்வப்போது சிறு சிறு தொந்தரவுகளைக் கொடுக்க ஆரம்பித்தது.சென்சார் பிரச்னையை எழுப்பினார்கள்.திண்டிக்கல் இடைத்தேர்தல் வந்தது.கட்சி ஆரம்பித்து ஆறே மாதம் ஆன நிலையில்..அ,தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெற்றார்.

சென்னை நகராட்சி தி.மு.க., வசம் இருந்தது.உலகம் சுற்றும் வாலிபன் சுவரொட்டிகள் போட முடியாவண்ணம்..வரியை உயர்த்தியது நகராட்சி.எம்.ஜி.ஆர்., எந்த போஸ்டரும் போடவில்லை.இதனிடையே இன்கம்டேக்ஸிலிருந்து தொல்லை கொடுக்கப்பட்டது..எல்லா இன்னல்களையும் மீறி..1973ல் படம் வெளிவந்தது.தேவி பேரடைஸில் வெளிவந்த இப்படம்..மாபெரும் வெற்றி பெற்றது.படம் 28 வாரங்கள் ஓடியது.

இப்படத்தில் வந்த பாடலின் வரிகள்.

வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும்
இப்படை தோற்கின் எப்படை வெல்லும்

கணப்பொழுதில்..(நர்சிமுடைய பதிவல்ல)

கணநேரத்தில்
நிகழ்ந்து விடுகிறது

*** *** ****

நடக்கையில்
கணப்பொழுது தன்
கனத்தை யோசித்தான்
கணப்பொழுது
கனம் நிறைந்ததாயிற்று நினைவு
கணத்தில் தலைசுற்ற
கனவான் விழுந்தான்
கணப்பொழுதில் 108 வர
கனவோ என எண்ணினான்
கணப்பொழுது தாமதித்திருந்தால்
கனத்திருப்பான் உடல்
மருத்துவமனையில்
கணப்பொழுதில் முதலுதவி

*** **** ****
கணப்பொழுது தவறு
எங்காவது
யாருக்காவது நடக்கிறது
என்றான் கிங்கரன்
காலனிடம்

நீங்க போட்ட எட்டு..(சிறுகதை)

தனக்கு இதுபோன்றதொரு நிலைமை வரும் என தர்மலிங்கம்..அந்த நிமிடம் வரை நினைக்கவில்லை.

அந்த ஊரில் இருந்த ஒரு பள்ளியில் எட்டாவது வகுப்பு ஆசிரியர் அவர்.கிட்டத்தட்ட இருபத்தைந்து வருட அனுபவம்.

அவரிடம் படித்த மாணவர்கள் பலர்..இன்று பல துறைகளில் பெரும் புள்ளிகளாக இருக்கின்றனர்.ஆனால் அந்த தர்மலிங்கம் என்ற ஏணியோ எட்டாம் வகுப்பிலேயே நிரந்தரமாக இருக்கிறது.

கண்டிப்புக்குப் பெயர் போனவர் அவர்.அவரைக் கண்டால் அத்தனை மாணவர்களுக்கும் பயம்.அவர் வகுப்பிற்கு படிக்காமலேயோ..வீட்டுப்பாடங்களைச் செய்யாமலோ எந்த மாணவனும் வரமுடியாது.அப்படி வந்தால்..அந்த மாணவனின் அரைக்கைச் சட்டையை சற்றே தூக்கி 'எட்டு' போடுவது போல..ஒரு கிள்ளு..கிள்ளி விடுவார்.உயிரே போய்விடும்.

அந்த மாணவன் வீட்டில் போய் சொன்னாலும்..அவனைப் பெற்றோரும் தங்கள் பிள்ளைக்கு ஆதரவாகப் பேசமாட்டார்கள்.'நீ என்ன தப்பு செஞ்சியோ..வாத்தியார்கிட்டே அடி வாங்கிக் கிட்டு வந்து நிக்கறே..அடியாத மாடு படியாது..நல்லா அடி வாங்கு..' என்று கூறிவிடுவார்கள்.

ம்..அதெல்லாம்..அந்தக்காலம்.

இப்ப..கொஞ்சம் கோபமாக பேசினாலும்..கண்டனத்திற்கு ஆளாக நேரிடும்.

தர்மலிங்கத்திற்கு ..அன்று போதாத காலம் போலிருக்கிறது.அவர் வகுப்பில் படிக்கும் விக்ரம் என்னும் மாணவன்..முதல் நாளன்று கொடுத்திருந்த வீட்டுப் பாடங்களை ஒழுங்காக செய்யவில்லை.

அந்த மாணவனை கொஞ்ச நாட்களாகவே கவனித்துக் கொண்டுதான் வருகிறார்.அவன் நடவடிக்கை சரியில்லை.அவனை இப்போது திருத்த முயற்சிக்கவில்லை என்றால் அவனது எதிர்காலமே கேள்விக் குறி ஆகிவிடும் என அவரது உள்மனம் சொல்ல..அவனுக்கு எட்டு போட்டு விட்டார்.மாணவனும் மயங்கி விழுந்து விட்டான்.

பள்ளியே..அல்லோலகலப்பட்டது.ஒவ்வொருத்தர் ஒவ்வொன்று சொன்னார்கள்.அவனை அருகாமையில் இருந்த மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார்கள்.மாணவனின் பெற்றோருக்கும்..காவல் துறையினருக்கும் விவரம் தெரிவிக்கப்பட்டது.

என்ன செய்வது..என்று அறியாது..தர்மலிங்கம் தானே சரணடையும் நோக்கத்தில் காவல் நிலயத்திற்கு சென்றார்.அங்கு காவல்துறை அதிகாரி இல்லாததால்..இருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்தார்.

சிறிது நேரத்தில் அதிகாரி வர..எழுந்து நின்று தர்மலிங்கம் பள்ளியில் நடந்தவற்றை அவரிடம் கூறினார்.

பொறுமையாக...எல்லாவற்றினையும் கேட்டுக் கொண்டிருந்த அதிகாரி..தன் அரைக்கை சட்டையின் கைகளை சற்றே உயர்த்தி..அந்த கருமை நிற வடுவைக் காண்பித்தார்.

இந்த வடுவைப் பார்த்தீங்களா..இது எனக்கு நீங்க போட்ட எட்டு...என்னைத் தெரிகிறதா உங்களுக்கு..நான்தான் அருணாசலம்..உங்க பழைய மாணவன்.ஒருநாள்..நான்..பக்கத்து பையன் பையிலிருந்து பணத்தைத் திருடிட்டேன்.அதைத் தெரிஞ்சுக்கிட்ட நீங்க கொடுத்த பரிசு 'டேய்..அருணாசலம்..இனிமே நீஒரு தப்பும் செய்யக்கூடாது.ஏதாவது செஞ்சா..அந்த நேரம் இந்த காயம் எப்படி ஏற்பட்டதுங்கற எண்ணம் உனக்கு வரணும்..இந்த காயத்தால ஏற்படப் போகும் வடு..உன்னை ஒரு நேர்மையானவனாக மாற்றும்' என்று சொன்னீங்க...அன்னிக்கு நீங்க எனக்கு இந்த தண்டனை கொடுக்கலைன்னா..நான் இன்னிக்கு இப்படி ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரியாய் மாறியிருப்பேனான்னு தெரியாது.

'நீ...நீ.. நீங்க..அருணாசலமா ..இப்படி..ரொம்ப மகிழ்ச்சி...ரொம்ப ..ரொம்ப..மகிழ்ச்சி' தர்மலிங்கத்தின் கண்களில் கண்ணீர்...ஆனந்தக் கண்ணீர்.

'ஐயா..அன்னிக்கு நான் நடந்துகிட்ட மாதிரி..ஒரு மாணவன் தப்பா நடந்துகிட்டு இருக்கான்..நீங்களும் அன்னிக்கு ..எனக்கு கொடுத்த அதே தண்டனையைக் கொடுத்திருக்கீங்க.அவன் பயத்திலே மயங்கி விழுந்துட்டான்.இது பெரிய தவறா எனக்குத் தெரியலை..உங்க மேல எதாவது புகார் வந்தா..நான் பார்த்துக்கறேன்..நீங்க போங்க...கான்ஸ்டபிள்..சாரை..நம்ம ஜீப்ல கொண்டுபோய் வீட்டில விட்டுட்டு வா' என்றார்.

தர்மலிங்கம்..இரு கைகளையும் கூப்பி விடை பெற்றார்..'இன்று..இந்த ஆசிரியரின் தண்டனையைப்பெற்ற மாணவன் நாளைக்கு நிச்சயம் என்னைப்போல நேர்மையானவனாக வருவான்.ஏனெனில் அந்த மாணவன் என் ரத்தம்' என்று எண்ணியவாறே..வேறு யாரும் பார்க்காதபடி..தன் கண்களைத் துடைத்துக் கொண்டார் அருணாச்சலம்.

(மீள்பதிவு)

Tuesday, September 29, 2009

சிவாஜி ஒரு சகாப்தம் -30 (இறுதிப் பகுதி)

சிவாஜியின் நடிப்பைப் பற்றி சிலர்

சிவாஜியின் நடிப்பா!இது உலகறிந்ததே!!
(கவியரசு கண்ணதாசன்)



சிவாஜியைப் பற்றி
சில வரிகள்
எதை எழுதுவது
எதை விடுவது

இமயமலையின் எந்த
மூலையைப் புகழ்ந்தால்
நியாயமாக இருக்கும்
கடலிலே எந்தப் பகுதி
அழகான பகுதி
சிவாஜி ஒரு இமயமலை

ஒரு பெருங்கடல்
அவரது கண்களின்
கூர்மையைச் சொல்வேனா
அல்லது
அவரது கம்பீரத்
தோற்றத்தைச் சொல்வேனா
ஒன்பது பாவத்தைத்
தொண்ணூறு வகையாக
நடித்துக் காட்டிய
அந்த நடிப்பைச் சொல்வேனா

அவரைப்போல இதுவரை
ஒருவர் பிறந்ததில்லை
இனி பிறப்பார் என்பத்ற்கும்
உறுதி இல்லை!
இது உண்மை
இது உலகறிந்ததே!!

சிவாஜியின் புகழ் நாளும் நாளும் வளரும் காரணம்..அவரிடம் அளவற்ற நடிப்புத் திறமை அடங்கியுள்ளது - ராணி எலிசபெத்

சிவாஜி அவர்கள் உலகிலேயே சிறந்த நடிகர்.பண்பாட்டின் பெட்டகம்..எகிப்து நாட்டின் விருந்தினராக அவர் வந்தி இருப்பது பழைய கலாச்சாரத் தொடர்பை நினைவூட்டுகிறது - எகிப்து அதிபராய் இருந்த நாசர்

சினிமா பார்க்கும் பழக்கமே இல்லாத எனக்கு சிவாஜி கணேசன் நடித்த சம்பூர்ண ராமாயணம் பார்த்தபின் என் உள்ளத்தை சினிமா பார்க்கத் தூண்டியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் - மூதறிஞர் ராஜாஜி

***** ****** **** *****

கடந்த 30 வாரங்களாக சிவாஜியைப் பற்றிய என் பதிவை படிக்க வந்தவர்கள், பின்னூட்டம் இட்டவர்கள் அனைவருக்கும் நன்றி. இச்சமயத்தில் நான் நண்பர் ஜோ அவர்களைப் பற்றி எழுதாவிட்டால் தவறிழைத்தவன் ஆகிவிடுவேன்..தவறாமல் என் பதிவுகளைப் படித்து..தொடர்ந்து பின்னுட்டம் இட்டு எனக்கு ஊக்கம் அளித்தவர் அவர்.அவருக்கு என் நன்றி.
அனைவரும் மீண்டும் ஒருமுறை நன்றி..வணக்கம்.

தமிழக அரசின் திரைப்பட விருதுகள்

தமிழக அரசின் திரைப்பட விருதுகள் சமவிகிதத்திலேயே உள்ளது.இது கலைஞரை திருப்தி படுத்தவே என சில பதிவுகளில் படித்தேன்.

சிவாஜி படம் 2008க்கான சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.இப்படத்தில் ரஜினி நடித்துள்ளார் என்பதற்காக சிறந்த படமாக தேர்ந்தெடுத்துள்ளதாகவோ,ரஜினி சிறந்த நடிகர் விருது அவரை திருப்தி படுத்தவோ அல்ல.,என்றே தோன்றுகிறது.

அப்படத்தில் ரஜினி எம்.ஜி.ஆர்., சிவாஜி என்றெல்லாம் வருவதால்..கலைஞரின் நண்பர்களான சிவாஜியையும்..எம்.ஜி.ஆரையும்..கௌரவப்படுத்தவே அவ்விருது ரஜினிக்கு கொடுக்கப்படுகிறது.இதனால் அவர்கள் ரசிகர்கள் மகிழ்வார்கள்.ஒரே கல்லில் மூன்று மாங்காய்கள்.

சிறப்புப் பரிசு பெரியார் படத்திற்கும்..சிறப்பு நடிகர் சத்யராஜிற்கு வழங்கியதன் மூலம்..பெரியாரின் தொண்டர்களையும்..வீரமணியையும் திருப்தியடைய வைக்கலாம்.

சிறந்த நடிகராக விவேக் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார் என ஆராய தேவையில்லை..அவருக்கு பத்மஸ்ரீ ஏன் கொடுக்கப்பட்டதோ அதே காரணமாய் கூட இருக்கலாம்.

2009க்கான சிறந்த படம் தசாவதாரம்..கமல் சிறந்த நடிகர்..கமல் ரசிகளை திருப்தி அடைய வைத்தாயிற்று.சூரியா சிறப்பு பரிசு கொடுத்ததன் மூலம் அவர் ரசிகர்கள் வாயை மூடலாம்.

2008 பாடலாசிரியர் வைரமுத்து..2009 வாலி ..இதுவும் பேலன்ஸ் செய்தாயிற்று.

உளியின் ஓசைக்கு 3 விருதுகள்.சிறந்த உரையாடல்(கலைஞர்)நடன ஆசிரியர் (சிவசங்கர்)நகைச்சுவை நடிகை(சரளா)..இது கலைஞரை திருப்தி படுத்தியிருக்குமா தெரியவில்லை.ஒரு வேளை இப்படம் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப் படாதது கலைஞருக்கு வருத்தத்தை அளிக்கக்கூடும்..

பொம்மலாட்டம் படத்திற்காக உண்மையில் பாரதிராஜாவிற்கு இயக்குநர் விருதும்..சிறந்த திரைக்கதைக்கான விருதும்..அப்படத்தின் எடிட்டிங்கிற்கான விருதும் அளிக்கப்பட்டிருக்க வேண்டும்.சமீப காலமாக பாரதிராஜாவின் தமிழர் என்ற போக்கு மேலிடத்திற்கு பிடிக்காமல் போயிருக்கலாம்.

ஆமாம்..விஜய் க்கு ஏதும் விருது கிடையாதா? அப்படி கொடுத்திருந்தால் கலைஞருக்கு அதிருப்தி ஏற்படுத்தி இருக்கும் என தேர்வுக் குழுவினர் எண்ணியிருக்கலாம்.விஜய் சமாச்சாரம் ராகுல் பார்த்துக் கொள்வார் என்றிருக்கும்.

Monday, September 28, 2009

வாய் விட்டு சிரியுங்க..

ஆமை ன்னு ஒரு படத்திலே..நடிச்சீங்களே..என்னவாச்சு
தயாரிப்பாளரோட இல்லாமை,இயக்குநரோட இயலாமை,கதாநாயகனோட தள்ளாமை எல்லாம் சேர்ந்து படத்தை வராமையாக்கி விட்டது.

2)உயர் அதிகாரி-(அதிகாரியிடம்)ஏன்யா? உங்கிட்டே வேலை செய்யறவன் எதையாவது சாப்பிட்டுக்கிட்டே இருக்கான்.பார்க்க அருவருப்பா இருக்கு..கொஞ்சம் சொல்லிவைக்கக் கூடாது
அதிகாரி-நாளையிலிருந்து என் மேசையைப் பூட்டிவைக்கிறேன் சார்

3)டாக்டர்- சிஸ்டெர் பத்தாம் நம்பர் நோயாளிக்கு டிரிப்ஸ் ஏத்தினியா
நர்ஸ்-பத்து நிமிஷம் முன்னாலதான் ஏற்றினேன்
டாக்டர்- இனிமேல் வேண்டாம்..நோயாளி செத்து ஒரு மணி நேரம் ஆச்சு

4)என் மனைவி அறிவாளி..அவளைக் கேட்டுதான் எல்லாம் செய்வேன்..அவளைக் கேட்காமல் ஒரு காரியம் செய்து விட்டு அவதிப் பட்டுக் கொண்டிருக்கிறேன்
அது என்ன காரியம்
அவளைக் கேட்காமல் அவளைக் கல்யாணம் செய்துகிட்டதுதான்.

5)வீடு கட்ட கடன் வாங்கி இரண்டு வருஷம் ஆயிற்று..வீடு கட்டி முடிச்சாச்சா?
ஓ..இன்னும் அஸ்திவாரம் ஒன்றுதான் பாக்கி

6) அந்த டாக்டர் முன்னால சினிமா டைரக்டராய் இருந்தார்னு எப்படி சொல்ற
நோயாளி கிட்ட..எக்ஸ்ரே நாலு ரீல் எடுத்துடுங்கன்னு சொன்னார்.

Sunday, September 27, 2009

கலைஞர் என்னும் கலைஞன் - 1


தமிழ்த்திரையில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பவர்கள் ஒரு சிலரே!

அவர்களில் கலைஞரும் ஒருவர்.கிட்டத்தட்ட 70 படங்களில் அவர் பணியாற்றியிருக்கிறார்.கதை,திரைக்கதை,வசனம் இருபது படங்களுக்கு எழுதி இருக்கிறார்.கதை,திரைக்கதை இரு படங்களுக்கு எழுதி இருக்கிறார். திரைக்கதை,வசனம் முப்பத்தி மூன்று படங்களுக்கு எழுதி இருக்கிறார்.நான்கு படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார்.பதினெட்டு படங்களில் பாடல் எழுதியுள்ளார்.

எனக்குத் தெரிந்த அளவில்..அப்படங்கள் பற்றி எழுத உள்ளேன்.இது ஒரு திரைக்கலஞன் பற்றிய பதிவு.அதனால்..அரசியல் சம்பந்தப்பட்ட பின்னூட்டங்களை தவிர்க்கவும்..அப்படியே வந்தாலும்..மன்னிக்கவும்..அவை பிரசுரிக்கப் படமாட்டாது.1924ல் பிறந்த கலைஞர் வசனத்தில் வந்த முதல் படம் 1947ல்..அதாவது அவரின் 23ஆம் வயதில் வந்த படம் ராஜகுமாரி.1948ல் அபிமன்யூ படம்.

பதிவில்..சில படங்கள் விட்டுப் போயிருக்கலாம்.. பிழைகள் சில இருக்கலாம்..அவற்றை சுட்டிக்காட்டினால்..பதிவு திருத்தப்படும்.

ராஜகுமாரி ஜூபிடெர் பிக்சர்ஸ் எடுத்தபடம்..எம்.ஜி.ஆர்., நடித்துள்ளார்.

1948ல் வந்த அபிமன்யூவில் அவர் பெயர் டைடில் கார்டில் போடவில்லை..என்பது கலைஞருக்கு வருத்தம் ஏற்படுத்திய நிகழ்ச்சி.

1950ல் மருத நாட்டு இளவரசி..எம்.ஜி.ஆர்., ஜானகி நடித்தது..

1950ல் வந்த இன்னொரு படம் மந்திரிகுமாரி..இப்படத்தில்..'என் எருமைக் கன்னுக்குட்டி'என்ற பாடலும் எழுதி..பாடலாசிரியர் ஆனார் கருணாநிதி

1951ல் தேவகி..கலைஞரின் அருமையான வசனங்கள்..எம்.ஜி.ஆர்., பத்மினி நடித்த படம் இப்படத்தில் டி.எம்.சௌந்தரராஜன் பிச்சைக்காரனாக சிறு வேடத்தில் நடித்திருப்பார்.
இப்படத்தில் வரும் ஒரு வசனம்
பெரியம்மா குத்துவிளக்கு
சின்னம்மா எலெக்டிரிக் விளக்கு
இப்படத்திற்கு ஜி.ராமநாதன் இசை அமைத்துள்ளார்

1951 மணமகள் இப்படத் தயாரிப்பாளர் என்.எஸ்.கிருஷ்ணன் ஆவார்.திரைக்கதை கலைஞர்.எஸ்.வி.சகஸ்ரநாமம்,என்.எஸ்.கே.,லலிதா,பத்மினி ஆகியோர் நடித்துள்ளனர்.

இனி அடுத்த பதிவில்..

தமிழ் சினிமா சென்ற ஆண்டும்..இந்த ஆண்டும்..

தமிழ்த் திரையுலகில் இன்று பல இளம் இயக்குநர்களும்..நடிகர்களும் வந்து கலக்கிக் கொண்டிருக்க்கிறார்கள்.ஆனால் வெளிவரும் பட வெற்றிகள் கவலையை தருவதாகவே உள்ளது.

சென்ற ஆண்டு வெளிவந்த படங்கள் 84..ஆனால் அவற்றில் ஏழு படங்களே வணிக அளவில் வெற்றி பெற்றுள்ளன.அதாவது கிட்டத்தட்ட 8 சதவிகிதம் வெற்றி.மிகவும் எதிப்பார்க்கப்பட்ட குசேலன்,பீமா,குருவி.ஏகன்,சத்யம் என மெகா பட்ஜெட் படங்கள் தோல்வியடைந்தன.ஆனால் புதியவர்களின் சுப்ரமணியபுரம்,அஞ்சாதே,சரோஜா ஆகிய மினிமம் பட்ஜெட் படங்கள் வெற்றி பெற்றன.

குசேலர் தோல்வியால்..தொடர்ந்து பத்து படங்களுக்கு பூஜை போட்ட கார்ப்பரேட் நிறுவனம் நிலை இன்று கவலையைத் தருவதாகவே உள்ளது.

இன்று நல்ல கதை,சிறந்த திரைக்கதை,யதார்த்தம் நிறைந்த படங்களே வெற்றி பெற்று வருகின்றன.

இந்த ஆண்டு முதல் ஆறு மாதங்களில் வந்த 51 படங்களில் ஒன்பது படங்கள் மட்டுமே லாபத்தைப் பெற்று தந்திருக்கின்றன.

வில்லு,தோரணை,மரியாதை ஆகிய ஸ்டார் வேல்யூ படங்கள் தோல்வியடைந்துள்ளன.

ஆனால்..வெண்ணிலா கபடிக் குழு,யாவரும் நலம்,பசங்க ஆகிய படங்கள் பாக்ஸ் ஆஃபீஸில் தேறின.இவற்றில் யாவரும் நலம்..மாதவன் நடித்தபடம்.தமிழ்..ஹிந்தி இரண்டிலும் எடுக்கப்பட்ட படம்.

மாயாண்டி குடும்பத்தார்..பி,சி சென்டரில் ஓரளவு வெற்றி பெற்றது எனலாம்.நாடோடிகள் பரவாயில்லை.

வழக்கமான ஃபார்முலா படங்கள் படிக்காதவன்,சிவா மனசில சக்தி,மாசிலாமணி ஆகியவை வெற்றிக்கு சன் டீ.வி.,யின் விளம்பரம் காரணமாய் சொல்லலாம்.அயன் படம் மட்டுமே பிளாக் பஸ்டர்.

இனியாவது படம் வெற்றியடைய ..நல்ல கதையமைப்பு முக்கியம் என்று பட அதிபர்களும்..இயக்குநர்களும் உணர்வார்களாக.

Saturday, September 26, 2009

சிவாஜி ஒரு சகாப்தம் - 29

சிவாஜி நாடக மன்ற நாடகங்கள்
நாக நந்தி
பகல் நிலா
ஜஹாங்கீர்
தேன்கூடு
நீதியின் நிழல்
களம் கண்ட கவிஞன்
வேங்கையின் மைந்தன்
வியட்நாம் வீடு
தங்கப்பதக்கம்

நடிகர் திலகம் பெற்ற விருதுகள்
1962-கலைமாமணி
1966-பத்மஸ்ரீ
1984-பத்மபூஷன்
1986-டாக்டர் பட்டம்
1989-தமிழ்நாடு அரசின் எம்.ஜி.ஆர்.,விருது
1993-ஆதித்தனார் முத்தமிழ் பேரவை சார்பில் 'ஆதித்தனார்' தங்கப் பதக்கம்
1994-தென்னிந்திய நடிகர் சங்கம் 'கலைச்செல்வம்' விருது
1995-ஃபிரான்ஸ் நாட்டின் மிகப் பெரிய செவாலியே விருது
1997-தாதா சாகேப் பால்கே விருது.
இதற்குப் பின் சிவாஜியின் வீடு இருக்கும் சாலை செவாலியே சிவாஜி கணேசன் சாலை என்று பெயர் மாற்றப்பட்டது.

நீண்ட நாட்கள் ஓடிய படங்கள்
பராசக்தி-42வாரங்கள்
வசந்த மாளிகை-41 வாரங்கள்
பாகப்பிரிவினை-31வாரங்கள்
தர்த்தி(ஹிந்தி)-38 வாரங்கள்
சம்பூர்ண ராமாயணம்-25 வாரங்கள்
இரும்புத்திரை,வீரபாண்டிய கட்டபொம்மன்,பாவ மன்னிப்பு,பாச மலர்,திருவிளையாடல்,தியாகம்,சந்திப்பு,படிக்காதவன்,முதல் மரியாதை,தேவர் மகன்,ஆகியவை 25 வாரம் ஓடின.நீதிபதி..141நாட்கள் ஓடின.தவிர 78 படங்கள் நூறு நாட்கள் ஓடின.

இப்படிப்பட்ட வெற்றியை எந்த நடிகரும் கொடுத்ததில்லை,கொடுக்கப் போவதுமில்லை.

சிவாஜி நடித்த சிறந்த கதாபாத்திரங்கள்..இந்த பதிவைப் படிக்கவும்..

அடுத்த பதிவோடு இத் தொடர் பதிவு முடிவு பெறும்.

Friday, September 25, 2009

இசங்கள்

செக்யூலரிசம்
சோஷலிசம்
அண்ணாயிசத்தைவிட குழப்பம்
எழவு எதை எடுத்தாலும்
பார்ப்பனியம்
மதவாதி - என
இல்லாததும்
பொல்லாததுமாய்
நல்லிணக்கம் மறந்து
நரம்பின்றி பேசும் சமுதாயமே
சொல்பவன் மனிதன்
செய்பவன் மனிதன்
என்று வரும் நாளில்
எடுத்துவிடுங்கள் இந்த
இசங்களை

மனதில் நிற்கும் ஒரு வரி வசனங்கள்..

நாம் எவ்வளவோ படங்களைப் பார்க்கிறோம்.பக்கம் பக்கமாய் வசனம் பேசிய படங்கள், வசனம் குறைவாக உள்ள படங்கள்,இருட்டிலேயே காட்சிகள் வரும் படங்கள் இப்படி.

ஆனாலும் சில ஒரு வரிகள் தமிழ்ப் படங்களில் நம் நினைவை விட்டு அகலாமல் இருக்கின்றன.உதாரணத்திற்கு சில..

மகாதேவி படத்தில் பி.எஸ்.வீரப்பாவின்..மணந்தால் மகாதேவி இல்லையேல் மரணதேவி

வஞ்சிக் கோட்டை வாலிபனில் பி.எஸ்.வீரப்பாவின் சபாஷ் சரியான போட்டி

முதல்மரியாதையில்..வீராசாமியின்..எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்

பாசமலரில்..கை வீசம்மா கைவீசு கிளைமாக்ஸ்

சத்யராஜின் காக்கிசட்டை தகடு..தகடு ..பின்..என்னோட கேரக்டரையே புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்களே

கில்லியில் பிரகாஷ்ராஜின்..'செல்லம்'

கல்யாணபரிசு தங்கவேலுவின்..அட..உண்மையை சொல்ல விட மாட்டேங்கறானே

பாட்ஷா ரஜினியின்..நான் ஒரு தரம் சொன்னா நூறு தரம் சொன்ன மாதிரி

விவேக்கின்..நீங்க வெறும் தாசா..இல்ல லார்டு லபக் தாசா

வடிவேலுவின்..இவன் ரொம்ப நல்லவன்டா..எவ்வளவு அடிச்சாலும் தாங்கறான்

சரோஜா சாமான் நிகாலோ -சென்னை28 வசனம்

நான் படத்தில் என்னத்த செஞ்சு..என்னத்தை பண்ணி..பின் அதே நடிகரின் வரும் ஆனா வராது காமெடி

வடிவேலுவின் டிரேட் மார்க்..ஆவ்வ்வ்வ்வ்வ் மற்றும் கிளம்பிட்டாங்கய்யா..கிளம்பிட்டாங்க

ஜனகராஜின்..என் தங்கச்சியை நாய் கடிச்சிடுச்சி..மற்றும்..எம் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா

இதுபோல உங்களுக்கு ஞாபகம் வருவதையும் பின்னூட்டத்தில் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

Thursday, September 24, 2009

தமிழ் சினிமாதான் நம்பர் ஒன்

தேசிய விருது பெற்ற காஞ்சிவரம் பட இயக்குநர் ஒரு பேட்டியில் கூறியுள்ளதாவது.


இன்று இந்தியாவில் தமிழ் சினிமாக்கள்தான் நம்பர் ஒன் என்றார்.,காதல்,வெயில்,சுப்பிரமணியபுரம்,பருத்தி வீரன் போன்ற படங்களை மலையாள இயக்குநர்களால் தர முடிவதில்லை.மலையாளத்தில் மோசமான படங்களே வருகின்றன.அங்குள்ள இயக்குநர்களால் கலாசாரங்களை சரியாக பதிவு செய்ய முடியாது..சில மோசமான படங்களைக் காப்பியடித்து..அதைவிட மோசமாக எடுக்கிறார்கள். பட்ஜெட்டில் மட்டுமே ஹிந்தி படங்கள் மிஞ்சலாம்.நான் சந்திக்கும் ஒவ்வொரு படைப்பாளியும் தமிழ் சினிமா பற்றி பெருமையாக பேசுகிறார்கள் என்றார்.

ஆஸ்கர் விருது பற்றிக் கேட்டபோது ஆஸ்கர் விருதுக்கு தேர்ந்தெடுக்கும் போது பல பேரங்கள் நடக்கின்றன.சத்யஜித்தின் எந்த படத்தையும் இவர்கள் அனுப்பவில்லை..எனினும் அவரைப் பற்றி புரிந்துக் கொண்டு வாழ்நாள் சாதனையாளர் விருதை அவர்கள் கொடுத்தார்கள்.கமர்ஷியல் படங்களை மட்டுமே ஆஸ்கருக்கு அனுப்புகிறார்கள்.அப்படங்கள் முதல் சுற்றிலேயே வெளியேறிவிடுகின்றன என்றும் கூறினார்.

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (25-9-09)

(சொன்னதும்..சொல்ல மறந்ததும்)

1)1967க்குப் பிறகு மாறி மாறி திராவிட கட்சிகள் பணத்தை வாரி இறைத்தே தேர்தலில் வெற்றி பெற்று வருகின்றன..
(ஈரோட்டில் அதுகூட என்னால் முடியாமல் போயிற்று)

2)எதிர்ப்பார்த்த அளவிற்கு தமிழக காங்கிரஸில் இளைஞர்கள் சேராதது குறித்து ராகுல் காந்தி வருத்தம்
(இதற்கே 3நாட்கள் விசிட்டிற்கு 1 கோடி செலவாயிற்றே என வருந்துகிறார் வரி செலுத்துமொரு காமன் மேன்)

3)நானும் திரைத்துறையில் இருப்பவன்தான்..இவர் கதைக்கு யார் 50 லட்சம் கொடுக்கிறார்கள்..விஜய்காந்த் ஒரு பேட்டியில்
(எனக்கே அவ்வளவு கொடுப்பதில்லை)

4)திருநாவுக்கரசர் காங்கிரசில் சேரலாம் - செய்தி
(இன்னொரு கோஷ்டி உருவாகிறது என்கிறார் ஒரு காங்கிரஸ்காரர்)
(சினிமா நட்சத்திரங்கள் கட்சியில் சேரலாம் என்றதும் ஒரு படத்தில் நடித்த தானும் நட்சத்திரம்தான் என்கிறார்)

5)சரத்குமார் நடித்த ஜக்குபாய் படத்தின் ஆடியோ கேசட்டை கலைஞர் வெளியிடுகிறார்.
(ஆட்டைக் கடிச்சு..மாட்டைக் கடிச்சு தன் கிட்டே வந்துதான் சேரணும் என்கிறாரோ கலைஞர்)

6) முரசொலி அறக்கட்டளையின் அண்ணா விருது கலைஞருக்கு கொடுக்கப்படுகிறது
(எனக்கு அண்ணா பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்கியபோதே..தானும் இப்படி ஒரு விருது வாங்குவார் எனத் தெரியும் என்கிறார் ஸ்டாலின்)

7)சென்னை பாக்ஸ் ஆஃபீஸில் உன்னைப்போல் ஒருவனுக்கு முதல் இடம்.கந்தசாமி நான்காம் இடத்திற்கு சென்றது
(காமன்மேன் சேவலை அடித்துவிட்டார்)

8)கொசுறு
வில்லு இருந்தும் வேட்டைக்காரனால் குருவியை சுடமுடியவில்லையே
அதற்காகத்தான் சுறா தயாராகுது

நாங்களும் எழுதுவோம்ல ...

சந்நியாசிகளின்
சரணாலயம்
காவல் நிலையம் !!!!

வேதம் ஓதும் வேதியர்
ஹோமம் வளர்க்கின்றனர்
நற்குணங்களை அதில் இட.,

பிராணிவதைத் தடுப்பு
தலைவனாய்
கசாப்பு காதர்.

சாமியாரைச் சுற்றி
தாய்க்குலங்கள்
குழந்தைப்பேறு வேண்டி!!!

தமிழ் செம்மொழி
பெருமைப்படுகிறான்
தமிழன் ஆங்கிலத்தில்.

இயற்கையை போற்றுவோம்
போதனை செய்தனர்
விறகு வெட்டி கள்.

'திரு'வோடு வாழ்கிறான்
திருவோடு ஏந்தியதால்
தமிழ்க்கவி அவன்.

Wednesday, September 23, 2009

வாய் விட்டு சிரியுங்க..

1. நம்ம அடுத்த படத்தில ஹீரோவிற்கு திருடன் வேஷம்
கதை என்ன
அதைத்தான் எந்த மொழியிலே இருந்து திருடலாம்னு யோசித்துக் கிட்டு இருக்கோம்.

2.டாக்டர் நோயாளிக்கு வலது கண்ணுக்கு பதிலா..இடது கண்ணுல ஆபரேஷன் பண்ணிட்டீங்க
அதனால் என்ன..வலது கண்ணுல தையல் பிரிச்சுடறேன்

3.அவர் படத்திலே இரட்டை வசனங்கள்னு விளம்பரப் படுத்தறாங்களே ஏன்.,
எல்லா வசனமும்..இரட்டை அர்த்த வசனங்களாம்

4.அதோ போறாரே..அவர் பின் அழகை ரசிப்பவர்
அப்படியா
ஆமாம்..கையில் கிடைக்கிற ஒரு குண்டூசியைக்கூட விடமாட்டார்

5.பாடகி பல்லவி திருமணம் முடிந்து பல வருஷம் பாடாம இருந்தவர்..இப்போ திரும்ப பாட வந்துட்டார்
இப்ப எப்படி பாடறாங்க
பழைய பல்லவியைத்தான்

6.உங்க வீட்டுக்கு வந்தா உங்க வீட்டு நாய் விடாம குரைக்குது
பயப்படாதே! குரைக்கிற நாய் கடிக்காது
அது எனக்குத் தெரியும்..உன் நாய்க்கு தெரியாதே!

காமன்மேன் என்பவன் யார்..


உன்னைப்போல் ஒருவன் ..வந்தாலும் வந்தது.வழக்கம் போல அதிக எண்ணிக்கையில் இணையத்தில் விமரிசனங்களும் வந்து விட்டது.

கமல் தாடி,உடை,பூணூல்,செருப்பு,சாண்ட்விச் என அனைத்துப் பற்றியும் எழுதியாய் விட்டது.

கமல் ரசிகர்கள் விமரிசனம்,கமல் மேல் (குறிப்பாக சாதியிடம்) காழ்ப்புணர்ச்சி கொண்டவர் விமரிசனம்,நடுநிலை விமரிசனம் என..அடடா..எவ்வளவு ரகங்கள் .

பிரமிட் சாய்மீராவே பரவாயில்லை என்று ஆகிவிட்டது.

சரி தலைப்புக்கு வருவோம்..

நம்மில் பலருக்கு காமன்மேன் என்றால்..

கார்ட்டூன்களில் வரும் உருவம் போல் இருக்க வேண்டும்..ஆர்.கே.லக்ஷ்மண் கார்ட்டூனில் வரும் பொதுஜனம் போல் இருக்க வேண்டும்..அதை விடுத்து பேண்ட்,ஷர்ட் போட்டுக் கொண்டு...கொஞ்சமாவது ஒத்துப்போக வெண்டாம்.

நமக்குத் தெரிந்த காமன்மேன்..காய்கறி விலையைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்...விலைவாசி உயர்வு பற்றி பேச வேண்டும்..குண்டுவெடிப்புக் குறித்து..நாலு பேருடன்..விவாதிக்க வேண்டும்..நாடு கெட்டுப் போயிற்று என அங்கலாய்க்க வெண்டும்..

அதைவிடுத்து கட்டடத்தின் மொட்டை மாடியில் நிற்கிறாராம்..தீவிரவாதிகளை விடுவிக்க சொல்கிறாராம்..அவர்களுக்கு தண்டனை கொடுக்கிறாராம்...இதையெல்லாம் காமன்மேன் செய்தான் என்பதை எந்த **யனும் ஒப்புக்கொள்ளமாட்டான்..இது கமலுக்கு ஏன் தெரியாமல் போயிற்று.

ஹிந்தி படங்களில் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்களை தீவிரவாதிகள் என்றால்.. ஒப்புக் கொள்வோம்..மலையாளப் படத்தில் சொன்னால் ஒப்புக் கொள்வோம்.அந்தந்த மாநிலத்தவர் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள்.

ஆனால்..தமிழன்..தன்னைத் தவிர மற்றவர்களை மதிப்பான்..ஆகவேதான் கச்சையைக் கட்டிக் கொண்டு கிளம்பிவிட்டான்.

கடைசியாக கமலுக்கு ஒரு வார்த்தை...

நீங்கள் ஏன் சார்..பரிட்சார்த்த முயற்சிகள் செய்து..அன்பே சிவம், உன்னைப் போல் ஒருவன் போன்ற படங்களை எடுக்க வேண்டும்.

எங்களைப் பொறுத்தவரை..கதாநாயகன் சோனியாய் இருந்தாலும்..வில்லனுடன் இரண்டு சண்டை, ஒரு குத்துப்பாட்டு, அம்மா அப்பா சென்டிமென்ட் இப்படி படம் கொடுத்தால் போதும்.

எங்கள் கலைத்தாகத்தை மற்ற மலையாளம், வங்காளப் படங்களைப் பார்த்து தீர்த்துக் கொள்கிறோம்.ஆனால்..அவ்வப்போது..தமிழில் ஏன் வித்தியாசமாக முயற்சி செய்வதில்லை என அங்கலாய்ப்போம்.அதை உண்மை என்று எண்ணாதீர்கள்.

இப்பதிவை படித்து விட்டு..என்னைக் காய்ச்ச நினைப்பவர்கள்..எனது இந்த பதிவையும் படித்து விட்டு வாருங்கள்.

Tuesday, September 22, 2009

சிவாஜி ஒரு சகாப்தம் - 28

கௌரவ நடிகராக சிவாஜி நடித்த படங்கள்
மர்மவீரன்
தாயைப் போல பிள்ளை..நூலைப் போல சேலை
குழந்தைகள் கண்ட குடியரசு
தாயே உனக்காக
சினிமா பைத்தியம்
நட்சத்திரம்
உருவங்கள் மாறலாம்

1960ஆம் ஆண்டு..கெய்ரோவில் நடைபெற்ற ஆஃப்ரிக்க..ஆசிய திரைப்பட விழாவில் 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்திற்கு சிறந்த நடிகர் விருது.

தேசிய விருது பெற்ற படங்கள்

அந்த நாள் (1954)
எதிர்பாராதது (1954)
மங்கையர் திலகம் (1955)
தங்கப்பதுமை (1958)
அன்னையின் ஆணை(1958)
வீரபாண்டிய கட்டபொம்மன் (1959)
பாகப்பிரிவினை(1959)
தெய்வப்பிறவி(1960)
கப்பலோட்டிய தமிழன் (1961)
பாவ மான்னிப்பு (1961)
பாசமலர் (1961)
கர்ணன் (1963)
கை கொடுத்த தெய்வம் (1964)
பழனி (1964)
திருவிளையாடல் (1965)
தில்லானா மொகனாம்பாள்(1968)
ராமன் எத்தனை ராமனடி(1970)
முதல் மரியாதை (1985)

தமிழ்நாடு அரசு விருது பெற்ற படங்கள்

உயர்ந்த மனிதன் (1968)
தில்லானா மோகனாம்பாள் (1968)
தெய்வ மகன் (1969)
விடட்நாம் வீடு(1970)
தேவர் மகன் (1992)

சினிமா எக்ஸ்பிரஸ் விருது

1981 - சிறந்த நடிகர் - கீழ்வானம் சிவக்கும்
1983-சிறந்த நடிகர்-வெள்ளை ரோஜா,மிருதங்க சக்ரவர்த்தி
1985-சிறந்த படம்-முதல் மரியாதை
1992-தேவர் மகன்- சிறந்த படம்

ஃபில்ம் ஃபேர் விருது
சிறந்த படம் திருவிளையாடல் (1965)
சிறந்த படம்- லட்சுமி கல்யாணம் (1968)
சிறந்த படம்-எங்கிருந்தோ வந்தாள்(1970)
சிறந்த படம்- பாபு (1971)
சிறந்த படம்-பட்டிக்காடா..பட்டிணமா(1972)
சிறந்த நடிகர்-ஞானஒளி
சிறந்த படம்- பாரத விலாஸ்(1973)
சிறந்த நடிகர்-கௌரவம்
சிறந்த நடிகர்-முதல் மரியாதை (1985)

வரிவிலக்கு பெற்ற படங்கள்
வீரபாண்டிய கட்டபொம்மன்
கப்பலோட்டிய தமிழன்
அவன் ஒரு சரித்திரம்

மிதி விவரங்கள் அடுத்த பதிவில்

உன்னைப்போல ஒருவன்..படத்திற்கு தேசிய விருது..

உன்னைப் போல் ஒருவன்...அதாவது..ஏழைக்கு அவன் ஏழை..சராசரி மனிதனுக்கு அவன் சராசரி..பணக்காரனுக்கு அவன் பணக்காரன் என்றாகிறது.

ஆனால்..படத்தின் கதை யாரைக் குறிக்கிறது..

அந்த நாட்களில் சேரிகள் என்று மேல்தட்டினரால் கூறப்பட்ட..ஏழைகள் வாழும் பகுதி மக்கள் பற்றிய கதை. இந்த நாட்களில் ..பெயரை ஆங்கிலத்தில் ஸ்லம் ஏரியா என மாற்றினாலும்..அவர்களின் நிலையில் மாற்றமில்லை.

சரி..தலைப்பிற்கு வருவோம்..

1965ம் ஆண்டே..ஒரு ஸ்லம் டாக் மில்லியனர் கதையைச் சொன்னவர் ஜெயகாந்தன்..ஆம்..ஜயகாந்தனின் படம் உன்னைப்போல் ஒருவன் ..படம் முழுதும்..ஏழைகளின் அவல நிலையை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியவர் அவர்.

இப்படத்திற்கு..மாநில அளவில்..சிறந்த படத்திற்கான தேசிய விருது (மூன்றாம் பரிசு) கிடைத்தது.

கமலின் உன்னைப்போல் ஒருவன்..வடக்கே இருந்து வந்தவன் என்பதால்..விருதுக்கு சேர்த்துக் கொள்ளப்படாது.

Monday, September 21, 2009

இனிப்புபுப்னிஇ

மலரைச் சுற்றி
மது சுவைக்க வண்டுகள்
சீனியை சுமந்து
சிற்றெறும்புகளின் அணிவகுப்பு
ஈக்களின் படையெடுப்பு
ஈர வெல்லக் காகிதத்தில்
அவனைக் காப்பாற்ற
அளவில்லா மருத்துவர்கள்

வாய் விட்டு சிரியுங்க..

1.அதோ போறாரே..அவருடைய பையன் பிஞ்சிலேயே பழுத்துட்டான்
என்ன சொல்றீங்க
சின்ன வயசிலேயே சாமியார் ஆயிட்டான்

2.நாயுடன் வரும் ஒருவர்- சில சமயம் மனுஷனைவிட நாய்களுக்கு புத்தி அதிகமாயிருக்கு
நண்பர்- உங்க நாயைப் பார்த்ததுமே தெரியுது.

3.உங்க நெஞ்சு எரிச்சலுக்கு மருந்து கொடுத்தேனே...இப்ப எப்படியிருக்கு? சரியாயிடுச்சா?
அதுக்கு உங்க ஃபீசை பார்த்ததும்..வயிற்றெரிச்சலா மாறிடிச்சு

4.(குற்றவாளி கூண்டில் நிற்பவரிடம்) சத்தியமா சொல்றேன்னு சொல்லுங்க..
ஆரம்பத்திலேயே பொய் சொல்லச் சொல்றீங்களே

5.அரசியல்வாதி- மக்களுக்கு நல்லது செய்யறதுன்னு தீர்மானிச்சுட்டேன்
தொண்டர்-தலைவா...அரசியல்லே இருந்து விலகப்போறீங்களா?

6.நேற்று எங்க வீட்ல கெஸ்ட் கூட்டம்..பெண்டு நிமிர்ந்துப்போச்சு
யார் உனக்கா?
என் ஹஸ்பெண்டுக்கு

Sunday, September 20, 2009

என்னைக் கவர்ந்த பதிவர்...




இணையதளத்தில்..என்னைக் கவர்ந்த பதிவர்களில் முதல் சில இடங்களில் இருப்பவர் கோவையைச் சேர்ந்த வாத்தியார் என அனைவராலும் அழைக்கப்படும் SP.VR.சுப்பையா ஆகும்.

இவர் வலைப்பூ..வகுப்பறை..

ஒவ்வொருவரும்...எனக்கு நூறு ஃபாலோயர்ஸ்..இருநூறு ஃபாலோயர்ஸ் என்றெல்லாம் பதிவிடுகையில்..அமைதியாக 806 பின்தொடர்பவர்களுடன் .வருகை புருந்தோர் ஐந்து லட்சம் பேர்களுடன் இவர் வகுப்பறை அமைதியாய் நடந்துக் கொண்டிருக்கிறது.

எனக்கு..ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை என்பதால்..இவர் வலைப்பூ பக்கம் போகாமலேயே இருந்தேன்.தற்செயலாய் ஒருமுறை நுழைந்த போதுதான்..அதில் கொட்டிக் கிடக்கும் மாணிக்கங்களைப் பார்த்தேன்.எவ்வளவு சின்ன..சின்ன..நீதிக் கதைகள்..கவிதைகள்..சிறுகதைகள்..கேலிச் சித்திரங்கள்..நகைச்ச்வை துணுக்குகள்..

ஜாதகம்..என்ற பன்னிரெண்டு கட்டங்களை வைத்துக் கொண்டு..எவ்வளவு சாதனைகள்..ஆங்காங்கே ஆங்கிலப் புலமையையும் காட்டி.. அமர்க்களமே இல்லாமல்..

சுப்பையா சார்..ஹேட்ஸ் ஆஃப்

இவரது சிறுகதை நூல்கள் இரண்டு வந்துள்ளது.செட்டி நாட்டு மண் வாசனைக் கதைகள்..பகுதி ஒன்று,பகுதி இரண்டு.முதல் பகுதி 20 கதைகள்.இரண்டாம் பகுதி 20 கதைகள்.இதைத் தவிர நவம்பர் முதல் வாரத்தில்..ஜோதிட நூல்கள் வருகின்றன.நாலு பாகங்கள்..

ஆம்..இதுதான் இவர் தொழிலா...

இல்லை..

செயற்கை இழைகளை சந்தைப் படுத்தும் முகவர் தொழில்(Textile marketing)...எழுத்து இவருக்கு கை வந்த கலையாய் இருப்பதால்..அதை 'சிக்' என பிடித்துக் கொண்டார்.

சூரியனுக்கு..டார்ச் அடிக்கிறேன்..என்றாலும்..ஒரு முக்கிய விஷயத்தை இங்கே கூறியே ஆக வேண்டும்..

இதுவரை இவர் இட்டுள்ள பதிவுகள் 379..அதற்கு வந்துள்ள கமெண்ட்ஸ் 14653...அடேங்கப்பா....

வாத்தியார் ..விரைவில் வகுப்பறை மாணவர்கள் 1000த்தை கடக்க வாழ்த்துகிறேன்.

Saturday, September 19, 2009

இந்த நாள் எந்த நாள்

பிப்ரவரி 14, காதலர் தினம்

‌பி‌ப்ரவ‌ரி 28, உலக அ‌றி‌விய‌ல் ‌தின‌ம்


மார்ச் 2, உலக புத்தக தினம்

மார்ச் 8, உலக மகளிர் தினம்

மார்ச் 22, உலக தண்ணீர் தினம்


ஏப்ரல் 1, முட்டாள்கள் தினம்

ஏப்ரல் 7, உலக சுகாதார தினம்

ஏப்ரல் 22, உலக பூமி தினம்

ஏப்ரல் 25, உலக இறைச்சல் விழிப்புணர்வு தினம்


மே 1, உழைப்பாளர் தினம்

மே 8, உலக விலங்குகள் பாதுகாப்பு தினம்

மே 11, உலக அ‌ன்னைய‌ர் ‌தின‌ம்

மே 15, உலக குடும்பங்கள் தினம்

மே 18, உலக அருங்காட்சியக தினம்

மே 31, உலக புகையிலை எதிர்ப்பு தினம்

ஜுன் 5, உலக சுற்றுச்சூழல் தினம்

ஜுன் 12, உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்





ஜுலை 1, உலக நகைச்சுவை தினம்

ஜுலை 11, உலக மக்கள் தொகை தினம்


ஆகஸ்ட் 5, உலக நட்பு தினம்

ஆகஸ்ட் 12, உலக இளைஞர் தினம்


செப்டம்பர் 21, உலக அமைதி தினம்

செப்டம்பர் 26, உலக சுற்றுலா தினம்

அக்டோபர் 1, உலக முதியோர் தினம்

அக்டோபர் 5, உலக ஆசிரியர் தினம்

அக்டோபர் 10, உலக மனவளர்ச்சி குன்றியோருக்கான தினம்

அக்டோபர் 16, உலக உணவு தினம்


நவம்பர் 11, உலக நினைவூட்டல் தினம்

நவம்பர் 16, உலக பொறுமை தினம்

நவம்பர் 20, உலக குழந்தைகள் தினம்

நவம்பர் 21, உலக தொலைக்காட்சி தினம்


டிசம்பர் 1, உலக எய்ட்ஸ் தினம்

டிசம்பர் 3, உலக உடல் ஊனமுற்றோர் தினம்

டிசம்பர் 10, உலக உரிமைகள் தினம்

Friday, September 18, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (18-9-09)

இந்த வாரம் சினிமா சுண்டல்

உன்னைப்போல் ஒருவன்..ரெட் ஒன் கேமிராவில் படமாக்கப்பட்டது.இயக்குநர் சக்ரிக்கு முதல் படம்.கமலின் மகள் ஸ்ருதி இசை அமைக்கும் முதல் படம்.இரா.முருகன் வசனம் எழுதியுள்ள முதல் படம்.மனுஷ்யபுத்திரன் திரைப்படத்திற்கான பாடல் எழுதிய முதல் படம்.மொத்தத்தில் முதல்தர படம்.

2.'இதனை இதனால் இவன் முடிக்கும்..' என்பதை நன்கு அறிந்துள்ளவர் கமல்.அவரது ஆஸ்தான சுஜாதா இல்லாத நிலையில்..கணிணி அறிவும்..ஐ.டி.பற்றி அறிந்தவருமான ஒருவர்தான் இப்படத்திற்கு திறம்பட வசனம் எழுத முடியும் என்பாதால்..சரியாக இரா.முருகனைத் தேர்ந்தெடுத்துள்ளார்..

3.கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் முதல் படம் ஆதவன். நாயகி நயன்தாரா

4.அமிதாப் பச்சனின் தந்தையாக அபிஷேக் பச்சன் நடிக்கிறார்.இயக்குநர் பால்கியின் இரண்டாவது படத்தில்.படத்தின் பெயர் பா (அப்பா).அபிஷேக்கின் மகனுக்கு ஒரு புது நோய்.இந்த நோய் உள்ளவர்கள்
முகத்தில் வயதுக்கு மீறிய முதிர்ச்சி தெரியுமாம்.இப்படிப்பட்ட கதை அம்சம் கொண்ட படத்தில்..தந்தையை விட வயது முதிர்ந்த தோற்றத்தில் மகனாக அமிதாப் நடிக்கிறார்.(curious case of Benjamin button படத்தில் குழந்தை முதிய தோற்றத்தில் பிறக்கும்..வளர வளர இளமை ஆகும்..இந்த படத்தில் இப்படி) என்ன மாதிரி யோசிக்கிறாங்கடா அப்பா.

5.நடிகர் திலீப்குமாருக்கு பாரதரத்னா விருது வழங்க வேண்டும் என பாலிவுட் ஒரே குரலாக சப்தம் எழுப்பி வருகிறதாம்.இதற்காக ஸ்பெஷல் இணையதளமும் தொடங்கப் பட்டுள்ளதாம்.உலகில் ஒரே திலீப்குமார் என்ற வசனங்கள் வலம் வரத் தொடங்கிவிட்டனவாம்.பாவம் நடிகர்திலகம்..தமிழனாக பிறந்து..தமிழனாகவே இறந்த அப்பாவி.

6.ஒரு ஜோக்

நானே கதை வசனம் இயக்கம்,எடிட்டிங்,இசை,தயாரிப்பு,நடிப்பு எல்லாப் பொறுப்பையும் எடுத்துக் கொண்டு ஒரு படம் எடுக்கலாம்னு இருக்கிறேன்.
அப்படியே..ஒரு தியேட்டர் விற்பனைக்கு வருது..அதை வாங்கிட்டீங்கன்னா..நீங்களே அப்படத்தை வெளியிடலாம்.

உன்னைப் போல் ஒருவன்..விமரிசனம்




உன்னைப்போல ஒருவன்..தமிழ்த்திரை உலகில் இருப்பதற்கு பெருமிதம் அடைகிறோம்.

சிவாஜி ஒரு சகாப்தம் _ 27

1988ல் வந்த படங்கள்
என் தமிழ் என் மக்கள்
புதிய வானம்

1987ல் எம்.ஜி.ஆர்., மறைவு,

காங்கிரஸிலிருந்து சிவாஜி விலகல், புதுகட்சி தொடக்கம் என தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்ததால் 1988 முதல் படங்களைக் குறைத்துக் கொண்டார்.

என் தமிழ்..என் மக்கள் சிவாஜி ஃபிலிம்ஸ் தயாரிப்பு.சிவாஜி, வடிவுக்கரசி நடிக்க சந்தான பாரதி இயக்கம்.கங்கை அமரன் இசை


புதியவானம்..எம்.ஜி.ஆர்.,படங்களையே எடுத்து வந்த சத்யா மூவிஸ் படம்.ஆர்.வி.உதயகுமார் இயக்கம்.இது 100 நாள் படம்.இது சிவாஜியின் 275 ஆவது படம்.சிவாஜியுடன் சத்யராஜ்,ரூபினி, கௌதமி நடிக்க ஹம்சலேகா இசையமைத்தார்


1991 - ஞானப்பறவை..மனோரமா ஜோடி.வியட்நாம் வீடு சுந்தரம் கதை, வசனம், இயக்கம்.எம் எஸ் விஸ்வநாதன் இசை


1992 ல் வந்த படங்கள்
நாங்கள்
சின்ன மருமகள்
முதல் குரல்
தேவர் மகன்.

நாங்கள் - சிவாஜியுடன் பிரபு, ஜீவிதா,ஸ்ரீவித்யா நடிக்க ஹசன் இயக்கினார்.இளையராஜா இசை

சின்ன மருமகள் - கே ஆர் தயாரிப்பு.பிரசாந்த் குமார் இயக்கம்.சிவாஜியுடன் சிவா, மோகினி நடித்திருந்தனர்.

முதல் குரல்- வி சி குகநாதன் இயக்கம்.சிவாஜி, கனகா நடிக்க சந்திர போஸ் இசை

கமலுடன் நீண்ட காலம் கழித்து சிவாஜி இணைந்த படம் தேவர்மகன்.வெள்ளிவிழா படம்.பரதன் இயக்கம்.ரேவதி, கௌதமி ஆகியோரும் நடித்திருந்தனர்.1992 தீபாவளி வெளீயீடான இப்படம் 200 நாட்கள் ஓடியது.தெலுங்கில் க்ஷேத்ரிய புத்ரூடு என மொழிமாற்றம் செய்யப்பட்டது.நடிகர் திலகத்திற்கு ஸ்பெஷல் ஜூரி  தேசிய விருது வழங்கப்பட்டது

1993 - பாரம்பரியம்...மனோபாலா இயக்கம். சிவாஜியுடன் சரோஜா தெவி,நிரோஷா நடித்தனர்.இளையராஜா இசை

1995- பசும்பொன்...பாரதிராஜாவுடன் மீண்டும் இணைந்த படம்.சிவாஜி, சிவகுமார்,பிரபு, சரண்யா ஆகியோர் நடிக்க வித்யாசாகர் இசை

1997 ல் படங்கள்
ஒரு யாத்ரா மொழி (மலையாளம்) - மோகன்லாலுடன் இணைந்த படம்.
பிரியதர்ஷன் கதை.பிரதாப் போத்தன் இயக்கம்.இசை இளையராஜா.வெற்றி படம்

ஒன்ஸ்மோர் - விஜயுடன் இணைந்த படம்.சிவாஜி,சரோஜாதேவி நடித்த இருவர் உள்ளம் காட்சிகளின் தொடர்ச்சியாக ஒரு கிளைக்கதையைக் கொண்ட படம்.100 நாள் படம்..எஸ் ஏ சந்திர சேகர் இயக்கம்.தேவா இசை

1998- என் ஆசை  ராசாவே- ஃபேஸ்மேக்கர் பொருத்தப்பட்ட நிலையில்..தான் ஏற்காத கரகாட்டக்கார பாத்திரம் என்பதால் நடித்த படம்.கஸ்தூரிராஜா இயக்கம்.தேவா இசை



1999-மன்னவரு சின்னவரு

சிவாஜி, கே ஆர் விஜயா,சௌந்தர்யா, அர்ஜுன் நடித்திருந்தனர்.பி என் ராக் குமார் இயக்கம்.கீதாபிரியன் இசை.கலைப்புலி இன்டெர்னேஷனல் தயாரிப்பு

படையப்பா..ரஜினியுடன் நடித்த படம்..கேஎஸ்.ரவிகுமார் இயக்கம்..வெள்ளிவிழா படம். ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா,லட்சுமி என நட்சத்திர பட்டாளமே இருந்தது.வசூலில் சாதனை.உலகம் முழுதும் ஒரே நாளில் வெளியான முதல் படம்.தெலுங்கில் நரசிம்மா எம மொழி மாற்றம் செய்யப்பட்டு 49 அரங்குகளில் 50 நாட்களுக்கு மேல் ஓடியது.ஏ ஆர் ரஹ்மான் இசை.

பூ பறிக்க வருகிறோம் - வெங்கடேஷ் இயக்கத்தில்..திரையுலக காமெரா சிவாஜியின் நடிப்பை கடைசியாய் வாங்கிக் கொண்ட படம்.மாளவிகா உடன் நடித்தார்.வித்யாசாகர் இசை

கௌரவ நடிகராக சிவாஜி நடித்த படங்கள்
மர்மவீரன்
தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை
குழந்தைகள் கண்ட குடியரசு
தாயே உனக்காக
சினிமா பைத்தியம்
நட்சத்திரம்
உருவங்கள் மாறலாம்

1999க்கு பிறகு அவர் படங்கள் வரவில்லை என்றாலும்...அவர் படங்கள் எல்லாம் சாகா வரம் பெற்றவை.நடிப்புக் கல்லூரிகளில்..பயிலுபவர்கள் பார்க்க வேண்டியவை.

அடுத்து இரு பதிவுகளில் சிவாஜி பெற்ற விருதுகள்..விருது பெற்ற படங்கள் ஆகியவை வெளிவரும்

Thursday, September 17, 2009

பெரியாரின் பெருந்தன்மை

கல்கி அவர்களின் மகள் ஆனந்திக்கு திருமணம் நிச்சயமாகி...கல்கி திருமண அழைப்பிதழை எடுத்துக் கொண்டு பெரியாரை அழைக்கப் போனார்.பெரியாரும் தனக்கு அன்று எதுவும் வேலை இல்லை என்றும்,கண்டிப்பாக வருவதாகவும் கூறினார்.திருமணம் கல்கி தோட்டத்தில் நடந்தது.காலையில் பெரியார் வரவில்லை.
ஒரு வேளை..பெரியாருக்கு..அவசர வேலை ஏதாவது வந்திருக்கும் என கல்கி எண்ணினார்.
மதியம் 12மணி வாக்கில்..கல்கியின் வீட்டிற்கு ஒரு வேனில் பெரியார் வந்தார்.
திருமணம் நடந்த இடத்திற்கு அருகில்..கல்கியின் இல்லம் இருந்தது.அவரது இல்லத்தில் அப்போது கலைவாணர்,சின்ன அண்ணாமலை..மற்றும் சில எழுத்தாளர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.
பெரியாரைப் பார்த்த அவர்கள் உடனே..ஓடோடி..கல்கியை அழைத்து வந்தனர்.
கல்கி..ஆனந்தியையும்..புது மாப்பிள்ளையையும் பெரியார் காலில் விழுந்து ஆசி பெறச் சொன்னார்.பெரியார் உடனே...கொஞ்சம் விபூதி..குங்குமம் கொண்டுவரச்சொல்லி அவர்கள் நெற்றியில் இட்டார்.
பின்..கல்கி..அவரிடம்..'ஐயா..காலையில் உங்களை எதிர்ப்பார்த்தேன்...ஏதாவது வேலை வந்துவிட்டதா' என்றார்.
அதற்கு பெரியார் 'எந்த வேலையும் இல்லை..திருமணத்திற்கு பல உறவினர்கள்,நண்பர்கள் வந்திருப்பார்கள்.அவர்கள் எதிரே,திருமணத்திற்கு கறுப்பு சட்டையுடன் நான் வருவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள்.அதனால் தான் வரவில்லை'என்றார்.
அடுத்த கல்கி இதழில்..பெரியார் மணமக்களுக்கு விபூதி,குங்குமம் இடுவதை புகைப்படத்துடன் வெளியிட ஆசிரியர் குழுவினர் முயல..கல்கி அவர்களைக் கூப்பிட்டு..கண்டித்ததுடன் 'பெரியார் விபூதி இட்டது..அவர் நம்பிக்கையால் அல்ல...அவர் தன் கொள்கைகளை விட்டுக்கொடுத்ததாக அர்த்தம் இல்லை.நமது நம்பிக்கைகளை அவர் மதித்தார் அவ்வளவுதான்.இது அவர் பெருந்தன்மையைக் காட்டுகிறது'என்று சொல்லி அந்த புகைப்படங்களைக் கிழித்தார்.
இது கல்கியின் பெருந்தன்மை.
(டி.வி.நிகழ்ச்சி ஒன்றில் தென்கச்சி சுவாமினாதன் கூறியது)

வாய் விட்டு சிரியுங்க

1.எங்க வீட்லே எனக்கு ஷூகர்னு தெரிஞ்சதும் என்னை தெய்வத்துக்கு சமமா நினைக்க ஆரம்பிச்ச்ட்டாங்க
அப்படியா?
ஆமாம் ..எந்த இனிப்புப் பொருளையும் என் கண்ணுலேதான் காட்டறாங்க..அவங்க சாப்பிடறாங்க

2.அந்த படத்தயாரிப்பாளர் நீ கவிஞனே இல்லைன்னு என்னை அவமானப்படுத்திட்டார்
அப்படி என்னாச்ச்
நான் எழுதின கவிதையிலே ஒரு ஆங்கில வார்த்தைக் கூட இல்லையாம்...

3.வாஸ்து சாஸ்திரப்படி என் கணவர் பின்னால இருக்கிற ஜன்னலை முன்னாலே
வைக்க சொல்றார்
செஞ்சுட வேண்டியதுதானே
அவர் சொல்றது என் ஜாக்கெட்ல இருக்கிற ஜன்னலை.

4.ஆச்சர்யமா இருக்கே..உங்களுக்கு எப்படி இவ்வளவு சீக்கிரம் குணமாச்சு
அது ஒண்ணுமில்ல டாக்டர்..நீங்க கொடுத்த மருந்து எதையும் நான் சாப்பிடலை.

5.நீங்க காபி,டீ எல்லாம் சாப்பிடக்கூடாது
வேறு என்ன சாப்பிடலாம்
எந்த எண்ணையும் கூடாது

6.படத்தோட கதை அங்கங்க தொய்யுதே
அது தொய்யாம சாஞ்சு பிடிக்க வேணும்னா கதாநாயகியா சாயாசிங்க போட்டுடலாம்.

Wednesday, September 16, 2009

அ..முதல் ஃ வரை...தொடர் பதிவு

1. A - available/single? Not available & not single - கல்யாணமாலை மோகனுக்கு என்னிடம் வேலை இல்லை

2B-.Best friend - இதைப்படித்துக் கொண்டிருக்கும் நீங்கள் என்று சொல்ல விருப்பம்

3.C- Cake or Pie- பையில் பேக் செய்து கொடுக்கப்படும் கேக் :-)))

4.D - Drink of Choice - H2 O

5.E- Essential item you Use every day- Blade

6.F-favorate color- நிற பேதம் இல்லை

7.G-gummy bears or worms - அப்படியென்றால்?

8.Home Town - திருவையாறு (தஞ்சை)

9.I-Indulgence -பயணம்

10.J- january/february -இரண்டுமே இல்லை..இரண்டிலும் வரி இருப்பதால்

11.K-Kids and their Names- ஒரே மகள்..அவள் பெயர் சித்திரத்தில் உண்டு..ஓவியத்தில் இல்லை

12.L-Life is incomplete with out- any achivement

13.Marriage Date- ஆசிரியர் தினம்

14.N - Number of sibilings- 6(2+4)

15.O-Orange or Apples- மருத்துவரை தூரத்தே துரத்துவது

16.P- Phobias/fears- அச்சம் என்பது மடமையடா

17.Q-Quote for today - சமையல் மோசமானால் ஒரு நாள் நஷ்டம்
அறுவடை மோசமானால் ஓராண்டு நஷ்டம்
கல்வி மோசமானால் வாழ்நாள் முழுதும் நஷ்டம்

18.R-Reason to Smile- நல்ல பதிவகளை படிக்கவே ..நம்ம கடையிலே கூட்டம் வராது..இதையெல்லாம் யார் வந்து படிக்கப் போறாங்க என்ற எண்ணம்

19.S-Season-பேருந்து என்றால்..மாத சீசன்தான்.புகைவண்டி எனில் குவார்டெர்லி சீசன் சீப். :-))))

20.T-Tag4 People- வால்பையன், குடுகுடுப்பை, வெங்கட், மணிகண்டன்

21.U-Unknown fact about me- Unknown

22.V-Vegetable you won't Like- (உங்களுக்கு பிடிக்காதது எனக்கு எப்படி தெரியும்? :-))) ) காலிஃப்ளவர்

23.W-worst Habit - தன்னையே கொல்லும் ...

24.X- Xrays you had - Blue ray சரி ,அது என்ன X ray அப்படி ஏதாவது வந்திருக்கா?

25.Y-Your favorate Food- சைவ உணவு எதுவாயினும் ஓகே

26.Z-Zodiac sign- கும்பம்

அன்புக்குரியவர்கள் - என்பும் உடையர் பிறர்க்கு

ஆசைக்குரியவர்- அவதிப்படுவர்

இலவசமாய் கிடைப்பது - கலைஞரிடம் இருக்கிறது அப்பட்டியல்

ஈதலில் சிறந்தது- கல்வி கற்பித்தல்

உலகத்தில் பயப்படுவது- பிரபல பதிவர்கள் கண்டு (என்று என்னை திட்டப்போகிறார்களோ என்று)

ஊமை கண்ட கனவு - சொல்லத்தெரிவதில்லை

எப்போதும் உடன் இருப்பது- நிழல்

ஏன் இந்த பதிவு-ஸ்டார்ஜனும்,கோவியும் இழுத்து விட்டதால்

ஐஸ்வர்யத்தில் சிறந்தது- செவிச்செல்வம்

ஒரு ரகசியம்- கிட்ட வாங்க சொல்றேன்

ஓசையில் பிடித்தது- முரசின் ஒலி

ஔ வை மொழி ஒன்று- வரப்புயர

அஃறிணையில் பிடித்தது- ஃ

சிரிப்போம்...சிரிக்க வைப்போம்...

வாழ்க்கை என்பது ஒரு அற்புதம்..அதை இன்பகரமாக வாழ்ந்து காட்ட வேண்டியது..அவரவர் திறமை..ஏன்..அதை அவரவர் கடமை என்று கூட சொல்வேன்..அதற்கு..இன்றியமையா தேவைகள் பல இருந்தாலும்...குறிப்பாக நகைச்சுவை உணர்ச்சி முக்கியம்..

பல முக்கியச் செய்திகள்..நகைச்சுவையோடு கலந்து கொடுத்தால் தான்..நாம் எதிர்பார்த்தபடி..எதிர்ப்பார்த்த நபர்களை சென்று அடையும்.

ஆகவேதான்..திரைப்படங்களிலும்..கலைவாணர் அவர்களின் நகைச்சுவை..சில சீரிய..கருத்துக்களுடன் இருக்கும்.நகைச்சுவையாக சொல்லும்போது..முதலில் சிரித்தாலும்..பின்னர் அதில் பொதிந்திருக்கும் செய்தியை உணர்வோம்.

சிலர்...என்னதான் சிரிப்பான செய்தியைக் கேள்விப்பட்டாலும்...சிரிக்காமல்..எதையோ பறிகொடுத்தது போல் ..முகத்தை..சீரியஸ் ஆக வைத்திருப்பார்கள்.

நம்மை சிரிக்க வைத்த காமெடியன்கள் பலர் வாழ்க்கை..சோகமயமானது.உதாரணத்திற்கு..நடிகர் சந்திரபாபுவை சொல்லலாம்..அவர்கள் தங்கள் சோகத்தை மறந்து..தண்ணீருக்குள் மீன் அழுதால்..அதன் கண்ணீரை யார் அறிவார்..என்பதற்கேற்ப..அவர் தனிப்பட்ட சோகத்தை மறைத்து நம்மை மகிழ வைத்தார்.

பணத்தை பெரியதாக நினைப்பவர்கள்...சிரிப்பை மறந்தவர்கள்..

எந்திர மயமான வாழ்வில்..காலையில் கடற்கரையில்..நின்று ..உடல் நலனுக்காக..வலுக்கட்டாயமாக..சிரிக்க வேண்டியிருக்கிறது இன்று.. சிரிப்பு..அரு மருந்து என்பதால்..

சிரிப்பு...மனிதனுக்கு மட்டுமே..ஆண்டவன் கொடுத்த வரப்பிரசாதம்

சிரிப்போம்..வாய் விட்டு சிரிப்போம்...

வன்மத்தை விட்டு...எதிரியையும் சிரிக்க வைப்போம்..

சாதிக்க முடியாத விஷயங்களையும்..முக மலர்ச்சியுடன், எதிர் கொண்டால்..சாதிக்கமுடியும்..

Tuesday, September 15, 2009

ஆயுதம் - திரைவிமரிசனம்

சமீபத்தில் ஆயுதம் என்னும் மலையாளப் படம் பார்க்க நேர்ந்தது.

சுரேஷ் கோபி நடித்த படம்.

இப்படத்தில்..வெளியம் என்னும் கிராமத்து கடற்கரை ஓரம் குண்டு வெடிப்பு நடக்கிறது.மகேந்திர வர்மா என்னும் காவல் அதிகாரி..அன்வர் என்பவனை கைது செய்கிறார்.அவனுக்கு திருமணம் நடக்க இருக்கிறது..அது முடிந்து அவன் துபாயில் வேலைக்கு சேர உள்ளான்.ஆனால்..அன்வர் அப்பாவி.

முதலமைச்சர் , ரிஷி என்னும் I.P.S., D.I.G., யை இவ்வழக்குப் பற்றி விசாரிக்க நியமிக்கிறார்.

அன்வர் அலைபேசியில் வந்திருக்கும் அழைப்புகளை வைத்தே அன்வரை கைது செய்ததாய் வர்மா சொல்கிறார்.ஆனாலும் அப்பாவிகளை இம்சிப்பதே இவர் வழக்கம்.

ஆனால்..உண்மையில் நடந்தது..அந்த கிராமத்து கடலோரம்..சிறு துறைமுகம் வருவதாக இருக்கிறது.ஆனால்..முதல்வரோ..கிராமத்து மக்களை விரட்டியடித்துவிட்டு..துறைமுகம் வராது என சூளூரைக்கிறார். அதனால்தான் அக்கிராமத்து மக்களை விரட்டி அடிக்க ஒரு பெரும்புள்ளியால் இப்படி குண்டு வெடிப்புகள் என கண்டுபிடிக்கப் படுகிறது.

அன்வர் பாத்திரத்தில் பாலா நடித்துள்ளார்.முதல்வராக திலகன்.

வழக்கமாக பல படங்களில் காவல் அதிகாரியாக நடித்துவிட்ட சுரேஷ் கோபி இதிலும் ரிஷியாக நடித்துள்ளார்.இயக்கம் நிஷாத்

இப்படத்திலும்..திரைப்படங்களில் வழக்கம்போல வருவது போல..அன்வர் என்ற பெயரால்..அவர் கைது செய்யப்படுகிறார்.பட விமரிசனம் உண்மைத்தமிழன் போல எழுத ஆசை.ஆனால்..இப்படத்தின் கதையை அரை பக்கத்தில் எழுதி விடலாம்.

இப்படத்தைப் பார்த்ததும்..அண்மையில் நியூஜெர்ஸி விமான நிலயத்தில் குடியேற்ற பிரிவு அதிகாரிகளால்..சாருக்கான்..(அவரது இந்த பெயரால்) இரண்டு மணிகளுக்கு மேல் இம்சிக்கப்பட்டது ஞாபகம் வந்தது.

Monday, September 14, 2009

தமிழர் தலைவர் அண்ணா....



பல குடித்தனங்கள் நிறைந்த வீட்டில் படிப்பதற்கேற்ற சூழ்நிலை இல்லாத நிலையில் அண்ணா படித்தார்.கல்லூரியில் இன்டர் வகுப்பு முடிந்து..வறுமை காரணமாக படிப்பை நிறுத்த முடிவு செய்தார்.

அப்போது... பச்சையப்பன் கல்லூரி முதல்வர், அண்ணாவை அழைத்து..'முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள நீ படிப்பை தொடர வேண்டும்' என்று கூறி..அவரை பி.ஏ.,(Hons) சேரச் சொன்னார்.அந்த மூன்றாண்டுக்கான முழு புத்தகச் செலவையும் அவரே ஏற்றார்.

படிக்கும் போதே ராணி அம்மையாரை, சம்பிரதாயப்படி மணந்தார்.பின்னரே சுமமரியாதை இயக்கத் தளபதி ஆனார் எனலாம்.

படிப்பு முடிந்ததும், காஞ்சீபுரம் நகராட்சியில் எழுத்தர் வேலை.பின் ஆசிரியர் வேலை..என சில காலம் இருந்தார்.

எப்படியேனும்..அண்ணாவை தன்னிடம் சேர்த்துக் கொள்ள நினைத்த பெரியார்..'விடுதலை'யில் பணியாற்றக் கூப்பிட்டார்.விடுதலையில் அண்ணா,பரதன்,வீரன்,சௌமியன் என்ற புனைப்பெயர்களில் கட்டுரைகள் எழுதினார்.அவை பல இளைஞர்களை அவரிடம் வசீகரித்தன.

சந்திரமோகன்,நீதிதேவன் மயக்கம்,சந்திரோதயம்,ஓர் இரவு,காதல் ஜோதி,வேலைக்காரி போன்ற பல நாடகங்களை எழுதி நடித்தார்.

இடையில் எம்.ஏ.,படித்தார்.ஒரு இயக்கத்தை சேர்ந்தவர் மேக்கப் போட்டு நடிப்பதைக் கண்டதும்தான்..கலைஞர்கள் பற்றி..மக்களிடையே ஏற்பட்டிருந்த எண்ணங்கள் மாறின எனலாம்.

1949 ஜூன்...முக்கிய மாதம்..பெரியார் மணியம்மையை மணக்க..அண்ணா போன்றோர்..வெளியே வந்து..புதிய கழகம் ஆரம்பிப்பது என தீர்மானித்தனர்.

17-9-49 அன்று திராவிட முன்னேற்ற கழகம் விதைக்கப்பட்டது.

நாம் திராவிட கழகத்துடன் மோதுவதோ..சாடுவதோ கூடாது.இரண்டு கழகங்களும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள் என்றார் அண்ணா.

அண்ணாவின்..அரசியல் முக்கியத்துவம்..அவரது எழுத்துலகத்தை முடக்கி விட்டது எனலாம்.அவரது பேச்சும்...எழுத்தும் தான் தமிழ் நெஞ்சங்களில் அவருக்கு நீங்கா இடத்தை அமைத்துக் கொடுத்தது.

அண்ணாவின் 'ஓர் இரவு' நாடகத்தைப் பார்த்த கல்கி அவரை 'தமிழ் நாடக உலகின் பெர்னாட்ஷா' என்றார்.

எதையும்..தாங்கும் இதயம்..

ஒன்றே குலம் ஒருவனே தேவன்

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு!

ஆகிய வாசகங்கள் அண்ணா தந்த மறக்கமுடியாத வாசகங்கள்.

தேவதையின் கடைக்கண் பார்வையும்..பத்து வரங்களும்..





பழனியிலிருந்து மருத்துவர் சுரேஷ் இந்த தொடர் பதிவில் என்னை கோர்த்துவிட்டிருக்கிறார்.அவருக்கு என் நன்றி..

தேவதை ஒருத்தி பத்து வரம் கொடுத்தால் ..என்ன..என்ன..கேட்பாய் என்பதே..

நான் கேட்ட வரங்கள்.

முதல் வரம் - கேட்டவருக்கெல்லாம் இணையதள பதிவர்கள் விருதுகளை வாரி வழங்குவது போல..நீயும் 10 வரங்கள் என்பது அதிகம்..இனி..யாருக்கும் 3 வரங்களுக்கு மேல் கொடுக்காதே! அந்த மூன்று வரங்களே பல மாற்றங்களை கதைகளில் ஏற்படுத்தி உள்ளன.

இரண்டாம் வரம்- அனைத்து அரசியல்வாதிகளையும் யோக்யர்களாக மாற்றிவிடு

மூன்றாம்வரம் - நாட்டில் எந்த மாணவன் எந்த படிப்பு படித்தாலும்..அதைப் படிக்க முடியவேண்டும்.பொருளாதாரம் அதற்கு தடையாய் இருக்கக் கூடாது.அரசு அனைத்து மாணவர்களையும்..அவர்கள் படிப்பு முடியும் வரை அரசு தத்தெடுக்க வேண்டும்.

நான்காம் வரம்- மதிப்பெண் மூலம் புத்திசாலிகள் தேர்ந்தெடுக்கப் படும் முறை மாற வேண்டும்.

ஐந்தாம்வரம்- சாதி..மத பேதம் ஒழிய வேண்டும்

ஆறாம்வரம்-பாலியல் பலாத்காரம் செய்யும் மனித மிருகங்களுக்கு..உடனுக்குடன் தண்டனை வழங்க வெண்டும்..

ஏழாம்வரம்-நாட்டில் இல்லாமை என்பதே இல்லா நிலை வர வேண்டும்

எட்டாம்வரம்-ஸ்விஸ் வங்கியில் உள்ள 75 லட்சம் கோடி நமது கறுப்பு பணத்தை ..எங்கள் நாட்டுடமை ஆக்கிவிடு

ஒன்பதாம் வரம்- மெகா சிரியல்களுக்கு தடை விதிக்கப் பட வேண்டும்..எவ்வளவு மனிதர்களின் பொன்னான நேரங்களை இந்த உருப்படாத சீரியல்கள் விழுங்கிவிடுகின்றன.

இந்த ஒன்பது வரங்களையும் அந்த தேவதை உடனே கொடுத்து விட்டது..ஆனால் பத்தாவது வரத்தைக் கேட்டதும்..அது என்னால் முடியாது..என்று ஓடி ஒளிந்தது.அந்த பத்தாவது வரம்..

இணையதளத்தில்..அவ்வப்போது ஒருவரை ஒருவர் ஆபாசமாக திட்டி பதிவுகளும்..அதைவிட ஆபாசமாய் வரும் பின்னூட்டங்களும் இனி வராமல் செய்..என்பதுதான்.

Sunday, September 13, 2009

வாய் விட்டு சிரியுங்க

1. டாக்டர் சாப்பிடும் போது..அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு ..அப்புறம்..சாப்பிட்டதை வாய்க்கு கொண்டு வந்து அரைச்சு சாப்பிடறேன்..
இந்த நேரத்தில எப்படி என் க்ளினிக் வந்தீங்க?
கால் நடையாகத்தான்

2.டாக்டர்..எனக்கு டைஃபாய்டா...என் நண்பர் ஒருத்தர் டைஃபாய்ட் வந்துதான் செத்தார்..நானும் அப்படி செத்துடுவேனா?
கவலைப்படாதீங்க..அப்படி ஏதாவது ஆச்சுன்னா..உங்களுக்கு வந்தது மலேரியான்னு சொல்லிடறேன்.

3.அந்த ஃபைனான்ஸ் கம்பனி போலியானதுன்னு எப்படி சொல்ற
பணம் போட்டவங்களுக்கு எல்லாம்..due date ல பணத்தை ஒழுங்கா திருப்பித் தந்துடறாங்களாம்

4.இன்னிக்கு எல்லைப் பிரச்னைக் குறித்து சமாதான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது
எந்தெந்த நாட்டுக்கிடையே
என்னுடைய அம்மாவுக்கும்..மனைவிக்கும் இடையேத்தான்...எல்லை மீறி சண்டை போடுவதில்லை என்று..

5.மாப்பிள்ளை வரதட்சணை வாங்கினார்னு..யாரோ போலீஸ்ல புகார் செஞ்சுட்டாங்க..
அப்புறம் என்ன ஆச்சு?
வரதட்சணை வாங்கற பழக்கம் தனக்கில்லைன்னு ..தன்னோட மூணு மனைவியையும் கொண்டுவந்து சாட்சியா காட்டினாராம்.

6.டாக்டர்- சிஸ்டர்..ஆபரேஷன் முடிஞ்சதும் 'சில்'லுன்னு ஒரு காபி வேணும்
ஏன் டாக்டர்
ஆபரேஷன் பண்ணின உடல்லே இருந்துதான் 'ஆவி'பறக்குமே

Saturday, September 12, 2009

தவறு செய்பவரா நீங்கள்...

மனிதனாய் பிறந்த நாம் தவறுகள் செய்வது சகஜம்.ஆனால் செய்தது தவறு என்று உணர்ந்ததுமே..அதை ஒப்புக்கொள்ள தயாராய் இருக்க வேண்டும்.அதை நாம் செய்கிறோமா?

வளர..வளர ..நம் உடல் அளவிலும்...மனதளவிலும் இறுகி விடுகிறோம்.நமக்கென ஒரு அடையாளம் வேண்டும் என எதிர்ப்பார்க்கிறோம்.அதனால் நம்மால் நேர்மையாக இருக்க முடிவதில்லை.தவறிழைத்து விட்டோம் என்று தெரிந்ததுமே...தவறிழைத்த நபரிடம்...'மன்னித்து விடு..தெரியாமல் நடந்து விட்டது..' என்று பணிந்து சொல்வதில் குறைந்து விட மாட்டோம்.

ஆனால்..நாம் அப்படி செய்வதில்லை...என்ன செய்கிறோம்...நாம் செய்த தவறை நியாயப் படுத்துகிறோம்..

நண்பர்கள்,உடன் வேலை செய்பவர்கள்,நம்மிடம் பணிபுரிபவர்கள்,முன் பின் தெரியாதவர்கள் என பாகுபாடு பார்க்காமல் செய்த தவறை ஒப்புக் கொள்ளுங்கள்.உங்கள் மனம் நிம்மதி அடையும்.நம்மைப் பற்றி நன்மதிப்புக் கூடும்.

சில சமயங்களில்..தவறு என அறியாது..சில வார்த்தைகளாலும், செயல்களாலும்..அடுத்தவரை காயப்படுத்தி விடுகிறோம்..அவர்கள் அதை சுட்டிக்காட்டினாலும் ஒப்புக்கொள்ளமாட்டோம்.

வாழைப்பழத்தோல் வழுக்கி..ஒருவர் கீழே விழுந்தால்...நம் மனதில் உள்ல கயமைத்தனம் நம்மை முதலில் சிரிக்க வைத்து விடுகிறது.பின்னர்தான்..மனித நேயம் விழித்துக்கொண்டு..அவருக்கு உதவி செய்ய விரைய சொல்கிறது.

நான்..ஒரு சமயம்...ஒரு பதிவரின் பதிவுக்கு...நகைச்சுவை என எண்ணி...ஒரு பின்னூட்டம் இட்டேன்.எனக்கு நகைச்சுவையாக இருந்தது...அவருக்கு வேதனையாக இருந்தது..என்பதை..அவர் பின்னுட்ட பதிலில் பார்த்தேன்.உடனே மின் அஞ்சலில்..அவரிடம் வருத்தம் தெரிவித்தேன்..ஆனால்..அவர் இதுநாள் வரை அதை புரிந்துக்கொண்டாரா என தெரியவில்லை.ஆனால்..என் மனம் நிம்மதி அடைந்தது.

ஒன்றை புரிந்துக்கொள்வோம்...செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டால்..நம் மனம் பக்குவப்பட்டுள்ளது என்பதற்கான அடையாளம்.நாம் தோற்றுப்போனதற்கான அடையாளம் இல்லை.

தவறை ஒப்புக்கொள்வதன் மூலம்..எதிரிகளையும் ..நண்பர்கள் ஆக்கிக்கொள்ளலாம்.

(மீள்பதிவு )

Friday, September 11, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்(11-9-09)

அமெரிக்காவில்..வர்ஜீனியா மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு விஜயம் செய்த அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் நேர்காணலில் ஒரு மாணவன்..'உயிருடனோ,அல்லது மறைந்தவர்களோ..யாரிடமாவது விருந்துண்ண வேண்டுமாயின்..யாருடன் அருந்த விருப்பம் என்று கேட்டான்.அதற்கு ஒபாமா..மஹாத்மா காந்தியுடன் என்பதுடன் நில்லாது..அவர் அதிகம் உண்ண மாட்டார்..ஆகவே அது எளிய உணவாகவே இருக்கும் என்றார்.மேலும் காந்தி தனது ஆதர்ஷ தலைவர் என்றும் கூறினார்.

2.)நடிகர் சிவகுமார்..இலக்கிய பேருரை ஆற்றி வரும் சன்மானங்களை சேர்த்து தான் படித்த பள்ளிக்கு வழங்கப் போகிறாராம்.வருடம் முழுதும் இவர் பேசி சேர்த்த 18 லட்சத்தை தன்னுடைய பள்ளிக்கு கொடுத்திருப்பதாக தகவல்.

3).9-9-9 செப்டம்பர் 9ம் நாள்..ஆயிரம் வருடம் கழித்தே மீண்டும் வரும்.சீனர்கள் இதை விமரிசையாக கொண்டாடினார்களாம்.அன்று சீனாவில் மட்டும் 20000 ஜோடிகள் திருமணம் நடந்ததாம்.
உலகில் ஆஸ்திரேலியாவில் காலை 9 மணி 9 மணித்துளிக்கு 9-9-9- அன்று இந்திய வம்சாவளியினர் ஒருவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாம்

4)..சமிபத்தில் 370 வயது நிரம்பிய சென்னையின் இன்றைய பரப்பளவு 174 சதுர கிலோமீட்டர்.மக்கள் தொகை 70 லட்சம்.அதிகம் பேசப்படும் மொழிகள் தமிழ்,தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி,உருது,ஆங்கிலம்.

5)பார்வையற்றோர்க்கு உதவும் வகையில் பேசும் இணையதளங்கள் விரைவில் அறிமுகமாக உள்ளன.இணையதளங்களை அனைவரும் பயன்படுத்தும் வகையிலான ...இந்த திட்டத்திற்கு மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை அனுமதி வழங்கியதும்..இந்தியாவில் உள்ள 5000 அரசு இணையதளங்கள் உட்பட அனைத்தும்..பேசும் இணையதளங்களாக மாறிவிடும்.இத்திட்டம் பார்வையற்றவர்களுக்கு மட்டுமல்லாது..வயதானவர்கள்..மற்றும் கல்வியறிவு அற்ற வர்களுக்கும் பயன்படுமாம்.

6)மாற்றி..மாற்றி தி.மு.க., அ.தி.மு.க., ஆட்சி என தமிழக மக்கள் சலிப்படைந்து விட்டனர்..._ ராகுல் காந்தி பேச்சு..
அவர் சொல்ல மறந்தது..
அதைவிட..தமிழக காங்கிரஸில் உள்ள கோஷ்டி பூசலில் மக்கள் சலிப்பு அதிகம் என்பதை.

7) கொசுறு - ஒரு ஜோக்
டாக்டர்- நான் ஆபரேஷன் பண்ணி பிழைச்சுக்கிட்ட முதல் கேஸ் நீங்க தான்
நோயாளி- (ஆச்சர்யத்துடன்) அப்படியா?
டாக்டர்- இதைக் கேட்கிற உங்களுக்கே இவ்வளவு ஆச்சர்யம்னா..எனக்கு எப்படியிருக்கும்
பிப்ரவரி 14, காதலர் தினம்

‌பி‌ப்ரவ‌ரி 28, உலக அ‌றி‌விய‌ல் ‌தின‌ம்


மார்ச் 2, உலக புத்தக தினம்

மார்ச் 8, உலக மகளிர் தினம்

மார்ச் 22, உலக தண்ணீர் தினம்


ஏப்ரல் 1, முட்டாள்கள் தினம்

ஏப்ரல் 7, உலக சுகாதார தினம்

ஏப்ரல் 22, உலக பூமி தினம்

ஏப்ரல் 25, உலக இறைச்சல் விழிப்புணர்வு தினம்


மே 1, உழைப்பாளர் தினம்

மே 8, உலக விலங்குகள் பாதுகாப்பு தினம்

மே 11, உலக அ‌ன்னைய‌ர் ‌தின‌ம்

மே 15, உலக குடும்பங்கள் தினம்

மே 18, உலக அருங்காட்சியக தினம்

மே 31, உலக புகையிலை எதிர்ப்பு தினம்

ஜுன் 5, உலக சுற்றுச்சூழல் தினம்

ஜுன் 12, உலக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம்





ஜுலை 1, உலக நகைச்சுவை தினம்

ஜுலை 11, உலக மக்கள் தொகை தினம்


ஆகஸ்ட் 5, உலக நட்பு தினம்

ஆகஸ்ட் 12, உலக இளைஞர் தினம்


செப்டம்பர் 21, உலக அமைதி தினம்

செப்டம்பர் 26, உலக சுற்றுலா தினம்

அக்டோபர் 1, உலக முதியோர் தினம்

அக்டோபர் 5, உலக ஆசிரியர் தினம்

அக்டோபர் 10, உலக மனவளர்ச்சி குன்றியோருக்கான தினம்

அக்டோபர் 16, உலக உணவு தினம்


நவம்பர் 11, உலக நினைவூட்டல் தினம்

நவம்பர் 16, உலக பொறுமை தினம்

நவம்பர் 20, உலக குழந்தைகள் தினம்

நவம்பர் 21, உலக தொலைக்காட்சி தினம்


டிசம்பர் 1, உலக எய்ட்ஸ் தினம்

டிசம்பர் 3, உலக உடல் ஊனமுற்றோர் தினம்

டிசம்பர் 10, உலக உரிமைகள் தினம்













1 | 2 >>

உடல் ஆரோக்கியம் அடைய நீங்கள் நினைக்கவேண்டியன -- பாரதியார்

நான் நோயில்லாதவன்... நான் வலிமையுடையவன்.என் உடம்பின் உறுப்புகள்
என் தெய்வ வலிமையைப் பெற்றுக் கொண்டு விட்டன.அவை திறனுடையன...இலாவகமுடையன..
மகாசக்தியின் வீடுகளாயின.

என் உடலில் நோயின் வேகமே கிடையாது.நான் என் நோய்களை வீசி எறிந்துவிட்டேன்.

நானே சுகம்...நானே பலம்..நானே சக்தி..பொய் பலகீனமுடையது...
நான் சத்யம்..
நான் கடவுள்..
நான் ஆற்றல்..
அவ்வாறு இருக்கையில்..நான் எவ்வாறு வலிமையின்றி நோயுற்றவனாக இருக்க முடியும்?
ஆகா..வலிமையும்,நோயின்மையும் ஆகிய ஆற்றலிருப்பதால் எனக்கு விளையும் இன்பத்தை
எப்படி உரைப்பேன்.

நான் எய்தும் ஆனந்தத்தை என்ன சொல்வேன்..
நான் தேவன்....
நான் தேவன்...
நான் தேவன்..

என் தலை..என் விழிகள்...என் நாசி..என் வாய்..என் செவிகள்,என் கழுத்து,மார்பு.
வயிறு,கைகள்,இடை,கால்கள் எல்லாமே ஆரோக்கியமுடையன.எக்காலத்திலும்
நோயுறமாட்டா.

என் மனம் ஆரோக்கியமே வடிவு கொண்டது.
என் மனமும்.இருதயமும் எவ்வித நோய்கிருமிகளாலும் தாக்கப்படாதன.

நானே ஆரோக்கியம்
நானே தேவன்
நான் கடவுள்
அதனால் நான் சாக மாட்டேன்.

தெய்வம் என்றும் என்னுள் வந்து பொழிந்துக்கொண்டிருக்கும்படி என்னை திறந்து
வைத்திருக்கிறேன்.

எப்பொழுதும் கடமைகளைச் செய்வேன்...
பிற உயிர்களின் மேல் காதல் கொள்வேன்
ஆதலால் 'சாதல்' இல்லேன்.

நான் கவலையை விட்டவன்..
கவலையும்,பயமும் நம் பகைவர்கள்
நான் அப்பகைவர்களை வென்றவன்
நான் அமரன்

(எல்லோரும் இப்படியே நினையுங்கள்.இப்படியே தியானம் செய்யுங்கள்.
உங்களுக்குள் புதுவேகம் பிறக்கும். மனமும்,உடலும் சந்தோஷமாகவும்
ஆரோக்கியமாகவும் இருக்கும்..நம்மில் பாரதி தோன்றுவான்.)

Thursday, September 10, 2009

கண்ணதாசனும்...கந்தசாமியும்..

கந்தசாமிக்கு ஆளாளுக்கு விமரிசனம் எழுதியாச்சு.அதைப்பார்த்து தமிழ்சினிமா.காம் ஒரு கருத்தையும் தலையங்கமா வெளியிட்டாச்சு.

ஊரோடு ஒத்து வாழணும்..அதனாலே நாமும் கந்தசாமி பற்றி ஏதாவது எழுதியே ஆகணும்.

கொஞ்சம் யோசனை செய்து பார்த்ததில்..இப்படத்தை இந்தியன்,ஜென்டில் மேன், சிவாஜி என ஒப்பிட்ட விமரிசனக்காரர்கள் கூட ஒன்றை மறந்து விட்டார்கள்..அல்லது..அது பற்றி தெரியாது இருப்பார்கள் என்றே தோன்றுகிறது.இப்படங்களுக்கு முன்னோடி..கண்ணதாசன் நடித்து..அவர் திரைக்கதை,வசனத்தில்,அவர் தயாரிப்பிலே வந்த 'கறுப்பு பணம்' படம்.

இப்படத்தில்..ஊர் பெரிய மனிதர் ஒருவர்.. கறுப்பு பண முதலைகளை கொள்ளையிட்டு..அந்த பணத்தை ஏழைகளுக்கு அளிப்பார்.அந்த பாத்திரத்தில் கண்ணதாசன் நடித்திருந்தார்.இனி அப்படத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல்வரிகள்.

எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் - நாட்டில்
இல்லாமை இல்லாத நிலை வெண்டும்
பல்லான் பொருள் குவிக்கும் தனியுடமை நீங்கி-நாட்டில்
எல்லோர்க்கும் வரவேண்டும் பொது உடமை (எல்லோரும்)



பாலென அழுவோர்க்கு பால் கொடுப்போம்
குடித்திட கூழென கேட்போர்க்கு சோறிடுவோம்
தாயகம் காப்போரின் தாள் பணிவோம் - எதுவும்
தனக்கெனக் கொள்வாரை சிறையெடுப்போம்.

கறுப்பு பணம் படம் எடுத்து தன் வெள்ளை பணத்தை இழந்த வெள்ளந்தி மனிதர் கண்ணதாசன்.

சிவாஜி ஒரு சகாப்தம் - 26

1986ல் வந்த படங்கள்
சாதனை
மருமகள்
ஆனந்தகண்ணீர்
விடுதலை
தாய்க்கு ஒரு தாலாட்டு
லட்சுமி வந்தாச்சு
மண்ணுக்குள் வைரம்

சாதனை..பேராசிரியர் பிரகாசம் தயாரிப்பு,இயக்கம்., இதில் சிவாஜி ஒரு இயக்குநராகவே வருவார்.

சாதனை,மருமகள்,விடுதலை மூன்றும் நூறு நாட்கள் ஓடிய படங்கள்.

மருமகள் படத்தில் கிட்டத்தட்ட 80 சதவிகிதம் நடிகர் திலகம் படுத்துக் கொண்டே நடித்த படம்.

ஆனந்தகண்ணீர்..மீண்டும் ஒரு மேடை நாடகம் படமானது.(இங்கு ஒரு விஷயம் சொல்லியாக வேண்டும்..'புதியதோர் உலகம்' என்று பரத் எழுதிய நாடகம் எனது 'சௌம்யா' நாடகக் குழுவால் மேடை நாடகமாக சென்னை நாடகமேடைகளில் ந்டத்தப்பட்டது.அதுவே ஆனந்தகண்ணீர் என படமானது.)

இனி...

சாதனை-  சிவாஜி, பிரபு, கே ஆர் விஜயா, நளினி நடித்தனர்.பேராசிரியர் பிரகாசம் இயக்கம்.இசை இளையராஜா

மருமகள் - கார்த்திக் ரகுநாத் இயக்கம்.பாலாஜி தயாரிக்க, வசனம் ஆரூர்தாஸ்.சிவாஜி, ரேவதி நடிப்பு.இசை சந்திர போஸ்

ஆனந்தகண்ணீர் - சிவாஜி, லட்சுமி.ஷங்கர் கனேஷ் இசை.கே விஜயன் இயக்கம்

விடுதலை - கே விஜயன் இயக்கம்.ஆரூர்தாஸ் வசனம்.சிவாஜியுடன், ரஜினி காந்த், மாதவி நடித்தனர்.இசை சந்திர போஸ்.குர்பானி ஹிந்திப் பட மறுஆக்கம்

தாய்க்கு ஒரு தாலாட்டு - பாலச்ந்திர மேனன் இயக்கம்.இசை இளையராஜா.சிவாஜியுடன் பத்மினி நடித்திருந்தார்

லட்சுமி வந்தாச்சு - குப்சூரத் என ஹிந்தி படத்தின் மறு ஆக்கம்.ராஜசேகர் இயக்கத்தில், சிவாஜி, பத்மினி, ரேவதி  நடிப்பு.மீனா குழந்தை  நட்ச்சத்திரமாக  நடித்த படம்.ரவீந்திரன் இசை

மண்ணுக்குள் வைரம் - கோவை த்தம்பியின் மதர் லேண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பு..சிவாஜியுடன் சுஜாதா.மனோஜ் குமார் இயக்கம்.தேவேந்திரன் இசை.படம் 75 நாட்கள் ஓடினாலும், சிவாஜி வைத்து தான் ஒரு படம் தயாரித்ததை பெருமையாகச் சொல்வார் கோவைத் தம்பி

1987ல் வந்த படங்கள்
ராஜமரியாதை
குடும்பம் ஒரு கோவில்
முத்துக்கள் மூன்று
வீர பாண்டியன்
விஸ்வனாத நாயக்குடு (தெலுங்கு)
அன்புள்ள அப்பா
ஜல்லிக்கட்டு
கிருஷ்ணன் வந்தான்
தாம்பத்யம்
அக்னிபுத்ருடு (தெலுங்கு)

ராஜமரியாதை -

இதில் தெலுங்கு படங்கள் இரண்டும் நூறு நாட்கள் ஓடின.
மணிவண்ணன் இயக்கிய ஜல்லிக்கட்டு நூறு நாள் படம்.
தேங்காய் சீனிவாசன் எடுத்த படம் கிருஷ்ணன் வந்தான்.
ஜல்லிக்கட்டு நூறாவது நாள் விழா முதலும், கடைசியுமாய் எம்.ஜி.ஆர்., கலந்துக் கொண்ட சிவாஜி விழா.
பாலாஜி தயாரித்த சிவாஜி கடைசி படம் குடும்பம் ஒரு கோவில்
முத்துக்கள் மூன்று..டி.ராஜேந்தர் இசையில் வந்தது.
சத்யராஜ்,பாண்டியராஜ் சிவாஜியுடன் இணைந்த படம் முத்துக்கள் மூன்று
கார்த்திக் சிவாஜியுடன் இணைந்தது ராஜமரியாதை
விஜய்காந்த்,நடிகர் திலகத்துடன் இணைந்த படம் வீரபாண்டியன்.நீண்ட நாட்கள் கழித்து..சிவாஜியை வைத்து ஏவிஎம் எடுத்த படம் அன்புள்ள அப்பா.
நடிகர் திலகத்தை வைத்து அதிகப் படங்களை இயக்கிய திருலோகசந்தர் இயக்கிய கடைசி படம் அன்புள்ள அப்பா.

இனி படங்களின் விவரம்

ராஜ மரியாதை - கார்த்திக் ரகுநாத் இயக்கம்.சிவாஜி, ஜீவிதா நடிக்க திரைக்கதை, வசனம் வியட்நாம் வீடு சுந்தரம்.ஷங்கர் கணேஷ் இசை

குடும்பம் ஒரு கோயில் - ஏ சி திருலோகசந்தர் இயக்கம்.எம் ரங்காராவ் இசை.பாலாஜியின் சுஜாதா சினி ஆர்ட்ஸ் தயாரிப்பு.சிவாஜியுடன் ,லட்சுமி நடித்திருந்தார்

முத்துக்கள் மூன்று - ஏ ஜகன்னாதன் இயக்க்ம்.சிவாஜி, சத்யராஜ், ரஞ்சனி நடிப்பு.இசை டி ராஜேந்தர்

வீர பாண்டியன் _  கார்த்தி ரகுநாத் இயக்கம்.துரை கதை வசனம்.சிவாஜியுடன், விஜய் காந்த், ராதிகா நடிக்க, இசை ஷங்கர் கணேஷ்

விஸ்வநாத நாயக்குடு - (தெலுங்கு) ஜே வி ராகவலு இசை.கிருஷ்ணம் ராஜு நடிக்க உடன் சிவாஜி, கே ஆர் விஜயா, மோகன் பாபு நடித்தனர்.இயக்கம் தாசரி நாராயண ராவ்

அன்புள்ள அப்பா - ஏ சி திருலோகசந்தர் இயக்கம்.ஏ வி எம் தயாரிப்பு.சிவாஜியுடன் நதியா.ஷங்கர் கணேஷ் இசை

ஜல்லிக்கட்டு - மணிவண்ணன் இயக்கம். கதை, வசனம் வியட்நாம் வீடு சுந்தரம்.இசை இளையராஜா.சிவாஜியுடன் சத்யராஜ், ராதா நடித்தனர்

கிருஷ்ணன் வந்தான் - தேங்காய் ஸ்ரீனிவாசன் தயாரிப்பாளர்.கே விஜயன் இயக்கம்.சிவாஜியுடன் கே ஆர் விஜயா.இசை இளையராஜா

தாம்பத்யம் - சிவாஜி அம்பிகா,ராதா நடிக்க மனோஜ்க்யான் இசை யமைக்க கே விஜயன் இயக்கம்

அக்னி புத்ருடு - நாகேஸ்வரராவுடன்  நாகார்ஜுனா, சாரதா மற்றும் நடிகர் திலகம் நடித்தனர்.சக்ரவர்த்தி இசை.கே ராகவேந்திர ராவ் இயக்கம்

நடிகர் திலகம் நடிக்க வந்து 35 ஆண்டுகள் நிறைவு.ஒரே ஆண்டில் பத்து படம்.சாதனையல்லவா?,

1988ல் வந்த படங்கள் அடுத்த பதிவில்

Wednesday, September 9, 2009

தி.மு.க.,பற்றி ராகுல்..

பிரணாப் முகர்ஜி..நாட்டில் வறட்சியுள்ளதால்..அரசும்..அதிகாரிகளும் வீண் செலவுகளைக் குறைக்க வேண்டும்.சுற்றுப்பயணங்களை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் பேசிய அன்றே..காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல் காந்தி..திருவனந்தபுரம் வந்து ..அங்கிருந்து..நாகர்கோவிலுக்கு..ஹெலிகாப்டரில் வந்தார்.மூன்று நாள் தமிழக சுற்றுப்பயணம்.

விவசாயிகளையும் சந்தித்தாராம்..அவரிடம் அவர்கள் காவிரி பிரச்னை குறித்து பேச..கவலையுடன் அதைக் கேட்டுக்கொண்டார்.

மீனவர்களிடையே பேசும்போது..இலங்கை கடற்படையினரால் அவர்கள் துன்பப்படுவதைக் கேட்டுக் கொண்டார்.(கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்துக் கொடுத்தது தனது பாட்டி என்பது அவர் ஞாபகத்தில் இருக்குமா?)

பின்னர் சத்யமூர்த்திபவனில்..காங்கிரஸார் இடையே பேசுகையில்..

உ.பி.யில் பா.ஜ.க., வை வீட்டிற்கு அனுப்பி விட்டோம்.சமஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளை விரைவில் வீட்டிற்கு அனுப்புவோம்.இனி அங்கு பா.ஜ.க., வளரமுடியாது என்றார்.

வருங்காலத்தில் தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க அனைத்து முயற்சிகளையும் செய்யவேண்டும் என்றார்.

தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., என மாறி மாறி ஆட்சி அமைப்பதால் பொதுமக்களுக்கு சலிப்பு எற்படும் என்றார்.

(உள்பொருள்- தி.மு.க., ஆட்சியில் மக்கள் சலிப்படைந்து விட்டனர் என்கிறாரா?)

தி.மு.க., காங்கிரஸ் இடையே ஆன கூட்டணி முறியும் நிலைக்கு வருகிறது என்பதை ராகுலின் பேச்சு கோடிகாட்டுகிறது.

சரி..திரும்ப பதிவின் ஆரம்பத்திற்குப் போவோம்...

ராகுல் வர செய்யப்பட்ட ஏற்பாடுகள், ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது..ராகுலின் ஹெலிகாப்டர்,கார் ஆகியவைக்கான செலவு..இதெல்லாம் பிரணாப் பேச்சுக்கு சம்பந்தம் இல்லாதவை என நம்புவோம்.

வாய் விட்டு சிரியுங்க..

1.மெகா சீரியலோட டைரக்டர் கல்யாணத்திற்கு போனது தப்பாயிடுச்சு
ஏன்?
கல்யாணப் பத்திரிகைல போட்டிருந்த பொண்ணு காயத்ரிக்கு பதிலா சாவித்ரின்னு மணப்பெண்ணை மாத்திட்டார்

2.தயாரிப்பாளர் ஏன் இயக்குநர் மேல கோபமாய் இருக்கார்?
டூயட்டை நியூசிலாந்தில வைச்சுக்கலாம்னு சொல்லி..அங்க போயிட்டு..அங்கயும் கதானாயகி தொப்புளையே பாட்டு முழுதும் காட்டியிருக்காராம்

3.தொண்டர்கள் எறும்புபோல செயல்படணும்னு சொல்ற தலைவர்..பேரணியை நத்தைப் போல செயல்படுங்கள்னு சொல்றாரே
அப்போதுதானே..ஊர்வலம் ஒரு இடத்தைக் கடக்க 8 மணி நேரம் ஆச்சுன்னு பத்திரிகைல செய்தி வரும்.

4.தலைவருக்கு பிறந்த குழந்தை அஞ்சாநெஞ்சனா வருவான்னு எப்படி சொல்ற
குழந்தை அழும்போதே வாள்..வாள் ..என்று அழுதாம்

5.எமன்(சித்திரகுப்தனிடம்)கம்ப்யூட்டரை இயக்கி..இன்று யார் யார் உயிரை எடுக்கணும்னு கிங்கரர்களுக்குஒரு பிரிண்ட் அவுட் போட்டுக்கொடுத்திடு

6.டாக்டர்-இந்த ஊசி கொஞ்சம் வலிக்கும்..பல்லைக் கடிச்சுட்டு பொறுத்துக்கங்க..
நோயாளி-(பொக்கைவாயைக்காட்டி) பல்லை கடிச்சுக்க முடியாதே டாக்டர்.

Tuesday, September 8, 2009

தமிழுக்கு பெருமை சேர்த்த மற்ற மொழியினர்..


நம் தமிழனுக்கு எப்போதுமே ஒரு குணம் உண்டு..

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்று சொல்வோம்.நம்மில் பல திறமைசாலிகள் இருந்தாலும்..வேறு மாநிலக்காரன் திறமைவாய்ந்தவன் என்றால் மனதார பாராட்டுவோம்.

இப்போதும் அப்படி ஒரு நிகழ்ச்சி நடந்துள்ளது.

ஆம்..தமிழை தாய்மொழியாய் கொள்ளாத நடிகர் பிரகாஷ் ராஜ் (துளு தாய்மொழி)..சிறந்த நடிகருக்கான தேசிய விருதை..காஞ்சிவரம் படத்தின் மூலம் பெற்றுள்ளார்.(இப்படத்தில் நடிக்க பிரகாஷ்ராஜ் சம்பளமே வாங்கவில்லையாம்.)படத்தை இயக்கியவர் பிரியதர்ஷன்..ஒரு மலையாளி.கதாநாயகி ஷ்ரேயா ரெட்டி..படத் தயாரிப்பாளர் ஷைலந்தர் சிங்.இவர்கள் முயற்சியில் வந்துள்ள தமிழ் படம் தேசிய அளவில் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.கலைக்கு மொழி முக்கியமில்லை என்பது நிரூபிக்கப் பட்டுள்ளது.

இனி பிரகாஷ்ராஜ் பற்றி..

ஏந்த ஒரு கலைஞனும்..தனக்கென தனிப்பாணியைக் கையாளாவிடின்..நீண்ட நாள் தொழிலில் நிற்கமுடியாது. இதற்கு உதாரணம்..சிவாஜி,எம்.ஜி.ஆர்.,ஜெமினி,ராதா,வீரப்பா,நம்பியார்,கலைவாணர்,தங்கவேலு,நாகேஷ் இப்படிப் பலர் தனித் தனி பாணியைக் கையாண்டதால் நிலைத்த புகழ் பெற்றனர்.

அதுபோல பிரகாஷ் ராஜும்..வில்லன் நடிப்பானாலும் சரி,தந்தை யானாலும் சரி,நகைச்சுவை வேடமானாலும் சரி தனித்து நிற்பவர்.

மங்களூரில் பிறந்த இந்த 44 வயது நடிகர்...பாலசந்தரின் டூயட் படம் மூலம் தமிழ்த்திரைக்கு அறிமுகமானார். 'கல்கி' படம் மூலம் வில்லத்தனம் நிறைந்த நாயகனாக பிரகாசித்தார்.அது போன்ற பாத்திரங்கள் முன்னணி நடிகர்களுக்கு மட்டுமே கிடைக்கக்கூடியது.இவருக்குக் கிடைத்தது இவரது அதிர்ஷ்டமே.

பின்னர்..கில்லி,திருவிளையாடல் ஆரம்பம் போன்ற படங்களில் வில்லனாக தன் திறமையைக் காட்டினார்.

தன்னால்..நகைச்சுவையாக நடிக்க முடியும் என மொழியின் மூலம் நிரூபித்தார்.

பாசமிகு தந்தையாக அபியும் நானும்...இயல்பான நடிப்பு.

தவிர..தரமான படங்களை தயாரிக்க வேண்டும்..என்ற கொள்கை உடையவர்.அவர் தயாரிப்பில் வந்த படங்கள்..மொழி, அபியும் நானும்

இனி இயக்குநர் பிரியதர்ஷன் பற்றி...

மலையாளம்..ஹிந்தி படங்களை இயக்கியவர் இவர்.கமல் நடித்த தேவர் மகன் ஹிந்தி இவர் இயக்கத்தில் வந்ததே..தமிழில்..கோபுர வாசலிலே..லேசா லேசா,..சிநேகிதியே..விருது பெற்றுள்ள காஞ்சிபுரம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
முந்தைய பதிவு

Monday, September 7, 2009

சுவர்களும்...சித்திரம் வரைபவர்களும்...

நாம் நகரத்தில் இருக்கிறோம்...சரளமாக ஆங்கிலம் பேசுகிறோம்.கணிணி இயக்கும் அறிவைப் பெற்றுள்ளோம்.இதனால் எல்லாம் நாம் புத்திசாலி ஆகிவிட முடியுமா?

இந்த விஷயங்கள்..கிராமவாசிகளுக்கு..இன்னும் எட்டவில்லை என்பதால் அவர்கள் முட்டாள்களா? உண்மைமைச் சொன்னால்...அவர்களுக்குத் தெரிந்தது நமக்குத் தெரியாது.

உதாரணத்திற்கு ...காலில் காயம் பட்டுக்கொள்ளாமல்...கலப்பையை ஒரு அடியாவது..நம்மால் ஓட்டமுடியுமா?(கலப்பை என்றால் என்ன என்கிறீர்களா)

அளவுகோல் இல்லாமல்...நாற்றுகளை வரிசையாக நடமுடியுமா?

கையை..வீசி உரத்தை..பரவலாக..அனைத்து பயிருக்கும்..வீசி தெளிக்க முடியுமா?

நாம்..விவசாயம் பற்றி..ஏட்டில் படித்து தெரிந்துக் கொண்டவர்கள்.அவர்கள் நிலத்தில் படித்தார்கள்.ஆகவே அவர்கள் அனுபவம்..நேரடியானது...ஆழமானது.

நாம் பள்ளியில் படித்து..புத்திசாலி என சொல்லிக் கொள்கிறோம் (???!!!!)

ஆனால் அவர்கள் வாழ்க்கையில் கற்றதை வைத்து..புத்திசாலி ஆகி இருக்கிறார்கள்.

தங்கள் வாரிசுகளை மேல்நிலைக்கு கொண்டுவர...நமக்கு நகரத்து கல்வியையும்,வசதியையும் வழங்கிய அவர்கள்..புத்திசாலிகளா..நாம் புத்திசாலிகளா?

அவர்கள் வறுமையில் வாடினாலும் பரவாயில்லை என..மண்ணிலே நெல் முத்து எடுத்து...நம் பசி தீர்க்கும்...அவர்கள் மேலானவர்களா? நாம் மேலானவர்களா?

அவர்களை மதிப்போம்...அவர்கள் வறுமையை விரட்ட அரசு ஆவன செய்யுமா?.

சுவர் இருந்தாலே...சித்திரம் எழுத முடியும்.

(ஒரு செய்தி- சென்ற ஆண்டு மட்டும்...வறுமை காரணமாக தற்கொலை செய்துக்கொண்ட விவசாயிகள் எண்ணிக்கை 1,65,000 க்கு மேல் )

Sunday, September 6, 2009

வாய் விட்டு சிரியுங்க.

1.எங்க வீட்ல எலி உபத்திரவம் அதிகம்..உங்க வீட்லே?
என் மனைவி உபத்திரவம் அதிகம்.

2.தந்தை(மகனிடம்)உங்க டீச்சர் என்னை மக்குன்னு சொன்னாங்களா? எப்போ?
மகன்- நேற்று நீ செஞ்சுக்கொடுத்த ஹோம் ஒர்க்கை பார்த்து 'மக்கு'எப்படி
செஞ்சிருக்குப் பாருன்னாங்க.

3.டாக்டர்..என் கனவுல ஒரே ஃபிகருங்களா வருது..
கொடுத்து வச்சவர் நீங்க
ஐயோ..நான் சொல்ற ஃபிகருங்க எண்கள்..கணக்கு வாத்தியார் நான்

4.உங்க வீட்ல அவர் சமையலா?
அவன்(ovan) சமையல்

5.கார்த்தால என் மாமனார்..காய் நறுக்குவார்,துணி துவைப்பார்,கோலம் போடுவார்
உனக்கு இவ்வளவு உதவி செய்வாரா?
அவர் பையனுக்கு உதவியா இருப்பார்.

6.மனைவி(கணவனிடம்)அழகான மனைவி கணவனுக்கு எதிரி..தெரியுமா?
கணவன்-அப்போ..நீ எனக்கு எதிரி இல்லைன்னு சொல்றியா

Friday, September 4, 2009

எதிலும் 'முதல்வன்' கமல்


(புகைப்படம் ஆதியின் பதிவிலிருந்து சுடப்பட்டது.நன்றி ஆதி.)

தமிழ் திரைப்படத் துறையினர் எப்போதெல்லாம் புதுமைகளுக்கும் விஞ்ஞான முயற்சிகளுக்கும் முட்டுக் கட்டை போடுகிறார்களோ அப்போதெல்லாம் அதை உடைத்தெறிவதில் முதலில் நிற்பவர் உலக நாயகன் கமல்ஹாஸன்தான்.

தொலைக்காட்சியே வேண்டாம் என்று கோஷம் போட்டு ஊர்வலம் போனார்கள் தமிழ் சினிமாக்காரர்கள். அன்று தன்னந்தனி கலைஞனாக நின்று, தொலைக்காட்சி எதிர்கால சினிமாவின் இன்னொரு வடிவம் என்றும், திரைப்பட வளர்ச்சிக்கு அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாமல் கோஷம் போடுவது அறிவீனம் என்றும் ஓங்கிக் குரல் கொடுத்தவர் கமல்.

அவர் சொன்னதுதான் நிஜமானது. இன்று தமிழ் சினிமாவுக்கு பெரும் உறுதுணையாக நிற்பவை தொலைக்காட்சிகள் தான். படத்தில் போட்ட முதலில் பெரும் பகுதியை இன்று தொலைக்காட்சிகள்தான் தருகின்றன, தயாரிப்பாளர்களுக்கு!

அடுத்து விசிடி - டிவிடியை அடியோடு தடை செய்ய வேண்டும் என்றார்கள். அன்றும் கமல்தான் முதல் குரல் எழுப்பியவர்... 'திருட்டு விசிடி வரும் வரை ஏன் காத்திருக்கிறீர்கள்... நீங்களே உங்கள் படத்தை சிடியாகப் போட்டு அதிகாரப்பூர்வமாக விற்று லாபம் சம்பாதித்துக் கொள்ளுங்கள். தியேட்டராக இருந்தாலென்ன, சிடியாக இருந்தாலென்ன.. உங்கள் படத்தைக் காசு கொடுத்துப் பார்த்தால் சரிதானே. இது அதிக சினிமா எடுக்கவும் உதவும்' என்று உறைக்கும் படி கேட்டவரும் இவர்தான்.

அடுத்து டிஜிட்டல் சினிமாவுக்கு எதிர்ப்பு எழுந்தபோது, அதற்கு பதில் தர வெறும் பேச்சோடு நிற்காமல் ஒரு டிஜிட்டல் திரைப்படமே எடுத்து அனைவரது வாயையும் அடைத்தவர் கமல்.

இன்று ஆன்லைன் மீடியாவுக்கே சில தயாரிப்பாளர்களும், சில திரைத்துறை பிஆர்ஓக்களும் தடைவிதிக்க வேண்டும் என கொக்கரித்து வருகிறார்கள்.

இன்றும் கமல் ஒருவர்தான் ஆதரவுக் குரல் எழுப்பியுள்ளார். அதுவும் பேச்சோடு நிற்கவில்லை மனிதர். தனது உன்னைப் போல் ஒருவன் படத்தின் டிரைலரை இந்தியாவில் உள்ள அனைத்து முன்னணி இணைய தளங்களுக்கும் கொடுத்திருக்கிறார்.

எவ்வளவு ஸ்டில்கள் வேண்டுமோ வாங்கிக் கொள்ளுங்கள், எத்தனை பேட்டிகள் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள் என தனது மீடியா மேனேஜர் நிகில் மூலம் தகவலும் அனுப்பி வைத்துள்ளார்.

அடுத்த கட்ட சினிமா வை வளர்த்தெடுக்க 'யு ட்யூப்'பையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என தனது திரைக்கதை பயிற்சிப் பட்டறையில் புரட்சிக் குரல் எழுப்பிய கலைஞனல்லவா... தனது பேச்சை இன்று செயல்வடிவம் பெற வைத்துள்ளார்.

இன்று பெரும்பாலான இணையதளத்தைத் திறந்தால் முதலில் உங்களை வரவேற்பது கமலின் உன்னைப் போல் ஒருவன் முன்னோட்டக் காட்சி அல்லது பேட்டிகளாகத்தான் இருக்கும்.

இதில்கூட ஒரு சிறப்பைப் பாருங்கள்... உன்னைப் போல் ஒருவன் முன்னோட்டக் காட்சியில் ஒரு இடத்தில் போலீஸ் அதிகாரி மோகன்லால், தீவிரவாதியின் படத்தை பேக்ஸில் அனுப்புங்கள் என்று கூறி, அடுத்த கணமே, 'வேண்டாம்... இமெயில் பண்ணுங்கள்!' என்பார். அங்குதான் நிற்கிறார் 'இன்டர்நெட்' கமல் !

கலை செய்யத் தெரிந்திருந்தால் மட்டும் போதாது... அந்தக் கலையை அனைத்துத் தரப்பு மக்களிடமும் சரியாகக் கொண்டு சேர்க்கும் அத்தனை உத்திகளையும் அறிந்திருக்க வேண்டும் என்பது கமலின் அழுத்தமான கருத்து.

கமலின் கருத்துக்கள் ஆரம்பத்தில் யோசிக்க வைக்கும்... வாதங்கள் கிளப்பும்... இறுதியில் அவையே ஜெயிக்கும்... அவரது படங்களைப் போலவே!
இதையும் பார்க்கவும்

(நன்றி தட்ஸ்தமிழ்)

Thursday, September 3, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (4-9-09)

தி.மு.க., அரசை பொறுத்தவரை ஏழைகள் ஓரளவிற்கு சமுதாய அந்தஸ்து பெறுகின்ற வரையில் இலவச திட்டங்கள் என்பது இன்றியமையாதது என்பது அனுபவபூர்வமான உண்மை என்று கலைஞர் கூறியுள்ளார்.

2.ஹாலிவுட் படங்களுக்காக 4000 கோடி ரூபாய் ஒப்பந்தம் போட்டுள்ளார் அனில் அம்பானி.ஹாலிவுட் பிரபல இயக்குநர் ஸ்பீல் பெர்க்குடன் இதற்கான ஒப்பந்தத்தைப் போட்டு..புதிய திரைப்பட கம்பெனியை அமைத்துள்ளார்.ஆண்டுக்கு ஆறு படங்களை இந்த கூட்டு நிறுவனம் வெளியிட இருக்கிறது.

3.நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தால் அவரது படங்களை புறக்கணிப்போம் என கனடாவில் உள்ள படைப்பாளிகள் கழகம் அறிவித்துள்ளது.மேலும் புறக்கணிக்கும் போராட்டத்தில் உலகளாவிய அளவில் இறங்குவோம் என்றும் கூறியுள்ளனர்.

4.விக்கிபீடியா தகவல் தளம் ஆகஸ்ட் 17ல் ஒரு சாதனையை எற்படுத்தியுள்ளது.இந்த தளத்தின் ஆங்கில கட்டுரைகளின் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது.உலகின் 267 மொழிகளில் விக்கிபீடியா உள்ளது.

5.கந்தசாமி வெளியாகி முதல்வார வசூல்..சிவாஜி பட வசூலை விட அதிகம்.இப்படம் முதல் வாரம் 37 கோடிகளை ஈட்டியுள்ளதாம்.சென்னையில் சிவாஜி 16 தியேட்டர்களில் வெளியிடப்பட்டது.கந்தசாமியோ 18 தியேட்டர்களில் வெளியாகியுள்ளது.இத் தகவல்களைச் சொன்னவர் நடிகர் விக்ரம்.

6.கூட்டணி பற்றி விமரிசிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தங்கபாலு அறிவிப்பு.

அப்படியானால் முதலில் இவர் மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்..ஏனெனில் அவர்தான் சமீபத்தில் ஆட்சியில் பங்கு கேட்டபோது..காங்கிரஸ் சாமியார் மடம் நடத்தவில்லை என்றார் என்கிறார் இளங்கோவன்.

7.ஒரு ஜோக்...
ஷாஜகான் மும்தாஜைக் காதலித்த அளவிற்கு நானும் உன்னை காதலிக்கிறேன்
அப்போ எனக்காக தாஜ்மகால் கட்டுவாயா?
அதற்கான இடம் தயார்.நீ சாக வேண்டியதுதான் பாக்கி.

சன் பிக்சர்ஸில் அடுத்தடுத்து மூன்று பிரம்மாண்ட படங்கள்..

கலைஞர் குடும்பத்திற்கும்..மாறன் குடும்பத்தினருக்கும் மனக்கசப்பு எற்பட்டு கலைஞர் டி.வி., தொடங்கப்பட்டு..பெரும்பாலான புது படங்களை கலைஞர் டி.வி., வாங்க..வேறு வழியின்றி..சன் டி.வி., சன் பிக்சர்ஸ் என்ற பிரிவை தொடங்கி..தானே படத் தயாரிப்பிலும்..பட வெளீயீடுகளிலும் ஈடுபட்டது.

இப்போது குடும்ப பிணக்கு தீர்ந்தும்..சன் பிக்சர்ஸ் தொடர்ந்து படத் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது.

நகுல் நடித்த ஒரு குப்பை படத்தை..விளம்பரம்..மேல் .விளம்பரப் படுத்தி அப்படத்தை ஓரளவு வெற்றி படமாகியது.

பின்..சூர்யாவின் அயன் படத்தை ஏ.வி.எம்., மிடமிருந்து பெற்று..சிவாஜி படத்திற்கு இணையான வசூலைப் பெறச்செய்தது..

அடுத்து மாசிலாமணி...ஓரளவு பணம் பண்ணியது.

படம் தோல்வியடைந்தாலும் கவலையில்லை என்ற பாங்கு அவர்களுக்கு.தோல்வியடைந்த படத்தை..திரைக்கு வந்து சில மாதங்களே ஆன..சூப்பர் ஹிட் படம் என ஞாயிறு நம் நேரத்தை அபகரிக்கலாம்..ஒலி/ஒளி பரப்பு விளம்பரம் மூலம் லாபம் ஈட்டலாம்.

இந்நிலையில்..சன் டிவி .பொறுப்பில் மூன்று பிரம்மாண்ட படங்கள்.

ஐங்கரனால் கைவிடப்படும் நிலையில் இருந்த எந்திரன் படத்தைத் தயாரிக்கும் பொறுப்பை எற்ற சன் பிரம்மாண்ட பொருட் செலவில் படத்தை எடுத்து வருகிறது.


தவிர..சமீபத்திய செய்தி ஒன்று..தொடர்ந்து தோல்வி படங்களையேக் கொடுத்து வந்த விஜய்யின் வேட்டைக்காரனை வெளியிடும் பொறுப்பை சன் குழுமம் எற்றுள்ளதாம். அதனால் படம் கண்டிப்பான வெற்றி என விஜய் மகிழ்ச்சியில் உள்ளாராம்.

Wednesday, September 2, 2009

சிவாஜி ஒரு சகாப்தம் - 25

1983ல் வந்த படங்கள்
பெஜவாடா பெப்புலி ( தெலுங்கு)
நீதிபதி
இமைகள்
சந்திப்பு
சுமங்கலி
மிருதங்க சக்கரவர்த்தி
வெள்ளை ரோஜா

பெஜவாடா பெப்புலி, கிருஷ்ணா நடிக்க விஜயநிர்மலா இயக்கம்.இப்படத்தில் சிவாஜி கணேசன், சௌகார் ஜானகி, ராதிகா ஆகியோரும் நடித்துள்ளனர்

நீதிபதி...- சிவாஜியுடன் கே ஆர் விஜயா நடிக்க இயக்கம் ஆர் கிருஷ்ண மூர்த்தி.இசை கங்கை அமரன்

இமைகள்- நீதிபதி இயக்கிய ஆர் கிருஷ்ணமூர்த்தியே இப்படத்தின் இயக்குநரும் ஆவார்.இசையும் கங்கை அமரன்.விஜயாவிற்கு பதில் நாயகி சரிதா

சந்திப்பு  -- சிவாஜி, ஸ்ரீதேவி நடிக்க சிவி ராஜேந்திரன் இயக்கம்.திரிசூலம் படத்திற்குப் பின் அதிக வசூலைப் பெற்ற படம்.

சுமங்கலி - சுஜாதா நாயகி.யோகானந்த் இயக்கம்.விஸ்வநாதன் இசை

மிருதங்க சக்கரவர்த்தி -  கே ஆர் விஜயா நாயகி.இயக்கம் கே ஷங்கர்.இசை எம் எஸ் விஸ்வநாதன்.வாணிஸ்ரீ பாடிய சுகமான ராகங்களே பாடல் ஹிட்

ஏ ஜெகன்னாதன் இயக்கத்தில் சிவாஜி ,அம்பிகா நடிக்க வந்த படம்.இசை இளையராஜா.போஸ்ட் மார்த்தம் என்ற மலையாளப்படத்தின் மறு ஆக்கமாகும்

இவற்றுள் தெலுங்கு படமும்,மிருதங்க சக்கரவர்த்தி, வெள்ளைரோஜா ஆகியவை 100 நாட்கள் ஓடின.வெள்ளை ரோஜா படத்தில் சிவாஜிக்கு இரட்டை வேடங்கள்.ஜோடியோ,டூயட்டோ கிடையாது.(இவை இல்லா முதல் படம் சரஸ்வதி சபதம்)

நீதிபதி,சந்திப்பு ஆகியவை வெள்ளிவிழா படங்கள்.

பாலாஜி தயாரிப்பில்..சிவாஜி தந்த வெள்ளிவிழா படங்கள் மூன்று..தியாகம்,தீர்ப்பு,நீதிபதி

1984ல் வந்த படங்கள்
திருப்பம்
சிரஞ்சீவி
தராசு
வாழ்க்கை
சரித்திர நாயகன்
சிம்ம சொப்பனம்
எழுதாத சட்டங்கள்
இரு மேதைகள்
தாவணி கனவுகள்
வம்ச விளக்கு

இவற்றுள் திருப்பம்,வாழ்க்கை,தாவணி கனவுகள் ஆகியவை 100 நாள் படங்கள்.
சிரஞ்சீவி...முதன் முதலாக கப்பலிலேயே படமாக்கப்பட்ட படம்.18 நாட்களில் எடுக்கப்பட்டது கே.சங்கர் இயக்கம்.
சிவாஜியுடன்..பாக்கியராஜ் இணைந்த படம் தாவணி கனவுகள்.

திருப்பம்-
 சிவாஜியுடன், சுஜாதா, பிரபு நடித்த படம்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி இயக்கம்.கே கங்காதரன் கேஜி ஆர் ஃபில்ம் செர்க்யூட் சார்பில் எடுக்கப்பட்ட படம்.எம் எஸ் விஸ்வநாதன் இசை

சிரஞ்சீவி..கே ஷங்கர் இயக்கம்.சிவாஜி, ஸ்ரீபிரியா.விஸ்வநாத்ன் இசை.

தராசு...ராஜகணபதி இயக்கம்.நாயகி கே ஆர் விஜயா.விஸ்வநாத்ன் இசை

வாழ்க்கை-  அவ்தார் ஹிந்திபடத்தின் மறு ஆக்கம்.சிவாஜி, அம்பிகா நடிக்க இளையராஜா இசை.சி வி ராஜேந்திரன் இயக்கம்.

சரித்திர நாயகன்- சிவாஜி, சாரதா, பிரபு.. டி யோகானந்த் இயக்கம்.விஸ்வநாதன் இசை

சிம்ம சொப்பனம் - கிருஷ்ணன் இயக்கம்.சிவாஜி, விஜயா, பிரபு நடிப்பு.கே வி மகாதேவன் இசை

எழுதாத சட்டங்கள்- கே ஷங்கர் இயக்கம்.சிவாஜி, ஊர்வசி, பிரபு நடிப்பு.இளையராஜா இசை

இருமேதைகள்- முக்தா ஸ்ரீனிவாசன் இயக்கம்.சிவாஜி, சரிதா, பிரபு நடிக்க இளையராஜா இசை

தாவணிக்கனவுகள்...தயாரிப்பு, இயக்கம் கே பாக்கியராஜ்.சிவாஜிக்கு ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பாத்திரம்.பார்த்திபன் ஒரு காட்சியில் மட்டும் நடிகராய் அறிமுகம்.அற்புதமான நடிப்பை சிறு பாத்திரத்திலும் கொண்டுவருவார் திலகம். இளையராஜா இசை

வம்ச விளக்கு- பிரபு, கே ஆர் விஜயாவுடன் சிவாஜி.கங்கை அமரன் இசை. விதாதா என்ற ஹிந்தி படத்தின் மறு ஆக்கம்.ஆர். கிருஷ்ணமூர்த்தி இயக்கம்

நடிக்க வந்து 32 ஆம் ஆண்டில் ஒரே வருடத்தில் பத்து படங்கள்..சிவாஜியின் சாதனை இது எனலாம்



1985ல் வந்தவை
பந்தம்
நாமிருவர்
படிக்காத பண்னையார்
நீதியின் நிழல் (கௌரவ தோற்றம்)
நேர்மை
முதல் மரியாதை
ராஜரிஷி
படிக்காதவன் (கௌரவ தோற்றம்)

பந்தம் நூறு நாள் படம்.முதல் மரியாதை..வெள்ளி விழா படம்.பாரதிராஜா இயக்கம்.
படிக்காதவன் ரஜினியுடன் திலகம்.வெள்ளிவிழா.
மனோகரின்..விஸ்வாமித்திரர் நாடகமே ராஜரிஷி.
33 ஆண்டுகளில் 250 படங்கள்.250 ஆவது படம் நாம் இருவர்.

முதல் மரியாதை..கோவையில் தொடர்ந்து 450 அரங்கு நிறைந்த காட்சிகள் ஒரு சாதனை.

பந்தம் - சிவாஜியுடன் ஜெயஷங்கர் சேர்ந்து நடிக்க ஷங்கர் கணேஷ் இசையில் கே விஜயன் இயக்கிய படம்

நாம் இருவர் -  ஏ வி எம் தயாரிப்பு.சிவாஜியுடன் ஊர்வசி.ஆர் கிருஷ்ணமூர்த்தி இயக்கம்.இசை கங்கை அமரன்

படிக்காத பண்ணையார் -  கே எஸ் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிவாஜி, கே ஆர் விஜயா நடிக்க இளையராஜா இசை,தயாரிப்பும் கோபாலகிருஷ்ணன்

நீதியின் நிழல் _ சிவாஜி புரடக்ஷன்ஸ் தயாரிப்பு. பிரபு ராதா நடிக்க குகநாதன் கதை வசனம்.திரைக்கதை, இயக்கம் பாரதி வாசு.சிவாஜி இதில் கௌரவத்தோற்றம்

நேர்மை - கே ஆர் ஜி தயாரிப்பு.இயக்கம் ஆர் கிருஷ்ணமூர்த்தி.சிவாஜி, சுஜாதா ,பிரபு நடிக்க எம் எஸ் விஸ்வநாதன் இசை.bulundi என்ற ஹிந்தி படத்தின் மறு ஆக்கம்

முதல் மரியாதை- தாயாரிப்பு, இயக்கம் பாரதிராஜா.நடிகர் திலகத்துடன் ராதா, சத்தியராஜ், வடிவுக்கரசி நடித்தனர் இளைய ராஜா இசை.

பூங்காற்று திரும்புமா
வெட்டி வேரு வாசம்
ராசாவே உன்னை நம்பி
நான் தானா அந்த குயில்

ஆகிய பாடல்கள் அனைத்தும் ஹிட்.

பாடலாசிரியர் வைரமுத்துவிற்கு  சிறந்த பாடலாசிரியர் தேசிய விருதும், சிறந்த தமிழ்ப் படத்திற்கான தெசிய விருது பாரதிராஜாவிற்கும் கிடைத்தது

ராஜரிஷி- கே ஷங்கர் இயக்கம்.சிவாஜி, பிரபு, நளினி.இசை இளையராஜா

படிக்காதவன் - சிவாஜியுடன் ரஜினி. ராஜசேகர் இயக்கம்.நாயகி அம்பிகா

குட்டார் என்ற ஹிந்திப் படத்தின் மறு ஆக்கம்


1986 படங்கள் அடுத்த பதிவில்.

நான் படித்த சில அருமையான வரிகள்..

1.உங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்த பயனும் இல்லை.

2.உங்க கோபம்..எல்லோரையும் ..உங்க கிட்டே இருந்து அந்நியப்படுத்தி விடும்.

3.எண்ணங்கள் தான்.. வாழ்க்கை..நம் எண்ணங்கள் தான்..நம் குணத்தை..நம் வாழ்வை தீர்மானிக்கின்றன.

4.தீபத்தின் ஒளியில்..திருக்குறளும் படிக்கலாம்...ஒரு ஊரையும் கொளுத்தலாம்.

5.வளைஞ்ச மூங்கில் பல்லக்கு ஆகும்..வளையா மூங்கில் பாடையாகும்.

6.நமக்கு தேவையில்லாததை வாங்க ஆரம்பிச்சா..நம்ம கிட்டே இருக்கிற தேவையானதை விற்க வேண்டி இருக்கும்

7.வரவுக்கு ஏத்த செலவு இருக்கணுமே தவிர..செலவுக்கு ஏத்த வரவுன்னு அலையக் கூடாது.

8.உங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பாருங்கள்..தேவைகளை தெரிந்துக் கொள்ளுங்கள்..வாய்ப்புகளை கண்டு பிடியுங்கள்..அவற்றை வெற்றியாக்கிடுங்கள்.

9.லட்சியத்தை மறந்துட்டு..மனுஷ உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.

10.எல்லாம் உனக்குத் தெரியும் என்ற இறுமாப்பு வேண்டாம்...ஆனான பட்ட ஔவைக்கே சுட்டப்பழத்தை சொன்னவன் யாதவ சிறுவன்.

இவற்றை எழுதியவர்களுக்கு நன்றி...

Tuesday, September 1, 2009

விக்கிபீடியா..என்ற காமதேனு..

என்சைக்ளோபீடியா..இது உலகின் அனைத்து பொருள்கள் குறித்து தேவையான தகவல்களைத் தொகுத்து தந்துள்ள தகவல் களஞ்சியம்.

அது போல இணையத்தில் அனைத்து தகவல்களையும் அளிக்கும் தளமே விக்கிபீடியா.இத் தளத்தின் ஆங்கிலக் கட்டுரைகலின் எண்ணிக்கை கடந்த மாதம் 17ஆம் தேதியுடன் 30 லட்சத்தைத் தாண்டியுள்ளதாம்.

விக்கிபீடியா வரலாறு..

2000 - நுபெடியா திட்டம் லாரிசாஞ்சர் துணையுடன் தொடங்கப்பட்டது.

2001 - ஜனவரியில் விக்கிபீடியா உருவானது.12..13 தேதிகளில் பதிவு செய்யப்பட்ட டொமைன் பெயர்கள்
wikipedia.com
wikipedia.org

2001 - மார்ச், மே மாதங்களில் பிரஞ்ச்,ஜெர்மனி உட்பட பிறமொழிகளில் தொடங்கப்பட்டன.ஆகஸ்ட் 2001 க்கு பிறகு இத் தளம் குறித்து மக்கள் ஆர்வம் அதிகமாகியது.

2002- பல தொழில் நுட்ப மேம்பாடுகல் புகுத்தப்பட்டது

2003 - தடக்கத்திலேயே கட்டுரைகளின் எண்னிக்கை ஒரு லட்சத்தை தொட்டதாம்

2004-உலகளாவிய தன்மையுடன்..ஓராண்டில் இரு மடங்கு வளர்ச்சி.கட்டுரை எண்ணிக்கை 10லட்சம் தாண்டியது.ஏறத்தாழ 100 மொழிகளில் உருவானது.

2006 - கட்டுரைகள் 15 லட்சத்தை தொட்டன.

2007 - அனைத்து மொழிகளில் உள்ள விக்கிபீடியா தளங்களில் 174 கோடி சொற்கள் இருந்தன.250 மொழிகள் 75 லட்சம் கட்டுரைகள் என தளம் விரிந்தது.ஆங்கிலத்தில் ஒரு நாளைக்கு 1700க்கு மேல் கட்டுரைகள் வரத் தொடங்கின.

2008 - ஏப்ரலில் ஒரு கோடியாவது கட்டுரை வெளியானது.பின் சில மாதங்களில் ஆங்கில விக்கிபீடியா கட்டுரைகள் 25 லட்சம் ஆயின.

2009 - ஆகஸ்ட் 17ம் நாள் காலை 4 மணிக்கு 30,03,379 கட்டுரைகள் என கட்டுரைகள் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியது.

தகவல் தேடி அலைபவர்களுக்கு விக்கிபீடியா ஒரு காமதேனு..அதில் விஷயங்களை கரந்துக் கொண்டே இருக்கலாம்..விக்கிபீடியாவிற்குள் போனால்..உங்களால் எந்த தலைப்பிலும் கட்டுரைகள் எழுத விஷயங்கள் கொட்டிக் கிடக்கின்றன.

உண்மையைச் சொல்வதானால்...உழைக்காமல் சோறு கிடைப்பது போல..மண்டையை பிய்த்துக் கொள்ளாமல்..வேண்டிய விவரங்களை இது தருகிறது.

ஆதாரம் - தினமலர்

இரத்தவெறி பிடித்த சிங்களவர்களால் சிதைக்கப்பட்டிருக்கும் தமிழர்கள்






இலங்கை இராணுவம் ஈழத்தமிழர்களை கொன்று பெண்களையும் இளைஞர்களையும் முழுநிர்வாணமாக்கி புகைப்படங்களை எடுத்திருக்கும் அதிர்ச்சியூட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

இப்படங்கள் எப்போது எடுக்கப்பட்டது எனத் தெரியவில்லை. விமான ஓடுபாதையில் இப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளது.

இது அனுராதபுரம் வான் தாக்குதலாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இறந்த போராளியின் மீது தனது பூட்ஸ் காலை வைத்து இலங்கை இராணுவம் புகைப்படம் எடுத்துள்ளது.

இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தவேண்டாம். ஒரு குழிக்குள்ளாவது போட்டு புதைத்திருக்கலாம். அப்படி செய்யாமல் காக்கா,குருவி கொத்தித்தின்ன அப்படியே போட்டு வைத்திருக்கிறார்கள்.

ஆனால் இறந்த உடலத்தை நிர்வாணமாக்கிப் பார்க்கும் சாக்கடைப் புத்தி உலகிலேயே சிங்கள இனத்திற்கு மட்டும் தான் இருக்கும் என்று ஈழ ஆதரவாளர்கள் கொந்தளிக்கிறார்கள்.