Monday, May 18, 2009

தி.மு.க., 12 தொகுதிகளில் தோற்றது ஏன்?

சென்ற தேர்தலில் 40 க்கு 40ம் வென்ற தி.மு.க., கூட்டணி இத் தேர்தலில் 28 தொகுதிகளில் மட்டுமே வென்று 12 தொகுதிகளில் தோல்வி அடைந்தது ஏன்?

இது குறித்து கலைஞரிடம் நிருபர்கள் கேட்டதற்கு அவர் அளித்த பதில்

கடந்த தேர்தலில் 40க்கு 40 கைப்பற்றி வெற்றி பெற்றீர்கள். ஆனால் இந்த தேர்தலில் 12 தொகுதிகள் குறைந்துவிட்டதற்கு என்ன காரணம்?

ஒருவேளை மீண்டும் நாங்கள் 40க்கு 40-ஐயும் கைப்பற்றி இருந்தால் வாக்குப்பதிவு எந்திரத்தையே மாற்றி விட்டார்கள், முறைகேடுகள் நடந்தது உண்மை என்று ஆகிவிடுமோ என்று கருதியோ என்னவோ நல்லவேளையாக எதிர்க் கட்சிகளுக்கும் 12 தொகுதிகளை மக்கள் கொடுத்துவிட்டார்களோ என்னவோ''

கலைஞர்க்கு பதில் அளிக்க சொல்லியா தர வேண்டும்.

பிரபாகரன் மரண வதந்தி குறித்து கேட்டபோது..அதற்கு பதிலளிக்க மறுத்து விட்டாராம்.

2 comments:

அன்பு said...

//கலைஞர்க்கு பதில் அளிக்க சொல்லியா தர வேண்டும்//

அதில் அவர் வித்தகர் ஆச்சே

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி புலிகேசி