Friday, November 21, 2008

அதி புத்திசாலி..அண்ணாசாமி அரசியலில் நுழைகிறார்...

அண்ணாசாமிக்கு...திடீரென..தான் ஒரு கோடீஸ்வரன் ஆக வேண்டும்..என்று ஆசை ஏற்பட்டது..

அதற்கான வழிமுறைகளை ..யோசித்தார்...

எங்காவது வேலைக்குப் போனால்...காலம் முழுதும் வேலை செய்து...ஓய்வு பெறும்போது..அதிக பட்சம் மொத்தமாக 10 லட்சம் கிடைக்கும்....மேலும்..அதற்கு..உடலுழைப்பும் தேவை..அதனால் அது வேண்டாம்..

சினிமாவில் நடிக்கப்போகலாம்...அதற்கு நடிக்கத்தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை..கதை..வசனம் கூட எழுதலாம்...ஆனால்..சிறிது காலம் கழித்து...ஒரு கட்சி ஆரம்பிக்கலாம்..ஏதாவது தொலைக்காட்சி பங்குகளை..வாங்கிப்போட்டால்..அவர்களுடன் மோதல் ஏற்படும் சமயத்தில்...அவர்களுக்கே அவர்கள் பங்குகளை விற்றால் ..கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும்...ஆகவே கோடீஸ்வரன் ஆக ..இதுவே சிறந்த வழி என தீர்மானித்தார்..

இப்போது..ஒவ்வொரு தயாரிப்பாளர் வீடாக ..நடிக்கவோ..கதை..வசனம் எழுதவோ..சான்ஸ் கேட்டு அலைய தொடங்கி இருக்கிறார்

No comments: