Friday, October 24, 2008

தயாநிதி மாறனை வாழ்த்தினார் கலைஞர்..

24-10-08 அன்று..ஒத்திவைக்கப்பட்ட ..இலங்கை தமிழர்களுக்கான மனித சங்கிலி போராட்டம் நடை பெற்றது..காலையிலிருந்து சற்று வெயில் இருந்த நிலையில்..போராட்டம் மழையிலிருந்து தப்பிவிடும் என எதிர்ப்பார்க்கப்பட்டது..ஆனால்..தொடங்க இருந்த நேரம் மழை கொட்ட ஆரம்பித்தது.திறந்த ஜீப்பில் போராட்டத்தை பார்வையிட எண்ணி இருந்த கலைஞர்..அதனால் காரில் அமர்ந்த வாறே பார்வையிட்டார்.கல்லூரி மாணவிகள் உட்பட பலர் கொட்டும் மழையில் நின்றிருந்தனர்.
சென்னை..அண்ணாசாலை அருகே..போராட்டத்தில் கலந்துக்கொண்டு..நின்றுக்கோண்டிருந்த தயாநிதி மாறனிடம்..கைகுலுக்கி..தன் வாழ்த்துக்களை தெரிவித்தார் கலைஞர்.(அழகிரி இல்லை போலும்).,அதே போல தேனாம்பேட்டையில் நின்றிருந்த ராமதாஸிற்கும்..வாழ்த்துக்களை தெரிவித்தார்.
சமீப காலமாக..கலைஞர் பார்வை தன் மேல் பட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த திரை உலகினர் சிலரையும் பார்க்க முடிந்ததுபோராட்டத்தில்.

2 comments:

நசரேயன் said...

அடுத்த தகவல் மற்றும் ஒளி பரப்பு துறை மந்திரி மாறன் வாழ்க

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வருகைக்கு நன்றி நசரேயன் //