Saturday, September 20, 2008

தாய்ப்பால் நினைப்பால்

ஆண் பால் பெண் பால்
பலர்பால் , பலவின்பால்
தமிழ்ப்பால் போதித்தாள்
தமிழாசிரியை பள்ளியில்
வீட்டிலோ குழந்தை
விறைத்தது தாய்ப்பால்
நினைப்பால்.


தெய்வம் யார் அவரவர் பாணியில்

...

தெய்வம் இல்லை என்றான்

நாத்திகன்

தெய்வம் கோவிலில் என்றான்

ஆத்திகன்

தெய்வம் தாய்தான் என்றான்

அன்புமகன்

தெய்வம் செய்யும் தொழில் என்றான்

உழைப்பாளி.

No comments: