Thursday, July 17, 2008

வாய் விட்டு சிரியுங்க - 22

1. டாக்டர் - உங்க மாமியார் புழைக்கறது ரொம்ப கஷ்டம்
மருமகள்- டாக்டர்..அப்படியெல்லாம் சொல்லாதீங்க..கண்டிப்பா பிழைக்கமாட்டார்னு சொல்லுங்க.
உங்களை கடவுள் மாதிரி நினைப்பேன்.

2.தலைவர் ஏன் மீட்டிங்ல பேசறதுக்கு முன்னாலே ஒரு புத்தகத்தை மக்களுக்கு திறந்து காட்டிவிட்டு பேசறார்?
தன் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்னு symbolicஆ சொல்றாராம்

3.எங்க தமிழ் ஆசிரியை நேற்று கவர்ச்சிகரமா இலக்கண பாடம் நடத்தினாங்க
என்ன சொல்ற
இடை,தொடை பற்றி எல்லாம் சொல்லிக்கொடுத்தாங்க

4.நிச்சயதார்த்தம் முடிஞ்சு ரொம்ப நாள் கழிச்சு கல்யாணம் வைச்சுண்டது தப்பாப்போச்சு
ஏன்
கல்யாணத்தோடு வளைகாப்பையும் சேர்த்து வைச்சுடச் சொல்றா என் பொண்ணு

5.மனைவி- காலைலே ஏன் கழுதை மாதிரி கத்திக்கிட்டு கிடக்கறீங்க
கணவன்-பேப்பர்காரனை இன்னும் காணும்

6.என் கணவருக்கு என்னைப்பார்த்தா பயம்..நான் என்ன புலியா இல்ல சிங்கமா?
சேச்சே..அது எல்லாம் சாதுவான மிருகங்கள் ஆச்சே!