Wednesday, July 16, 2008

வாய் விட்டு சிரியுங்க - 21

தலைவரே..எந்த படக்கடைக்குப்போனாலும் அங்க உங்க படம்தான் இருக்கு
அப்படியா?
ஆமாம்..மத்த தலைவருங்க படம் எல்லாம் உடனே வித்துப்போவுதாம்.

2.அவர் கணக்கிலே புலின்னு எப்படி சொல்ற
அவரது மகன் கடைக்குப் போனாலும்'பை' எடுத்துட்டுப்போன்னு சொல்லமாட்டாராம்..22/7
எடுத்துட்டுப் போன் னுதான் சொல்வாராம்.

3.என்னோட மனைவி சரியான ஏமாளி..ஈஸியா ஏமாத்திடலாம்
அப்படியா
ஆமாம்..நேத்து வைச்ச சாம்பாரை இன்னிக்கு வைச்சதுன்னு சொன்னேன்..நல்லாயிருக்குன்னு
சாப்பிட்டுட்டு போயிட்டா.

4.ஹீரோ..டைரக்டர் இழுத்த இழுப்புக்கெல்லாம் வர்றார்
எப்படி
முன்னாலே ரப்பர் எஸ்டேட்ல வேலை பார்த்தவராம்.

5.(சாப்பிட்டுக்கொண்டே.டி.வி.பார்த்துக்கொண்டிருக்கும் மனைவியிடம் கணவன் அழும் குழந்தையைக்காட்டி)
குழந்தை ஏன் அழறான்?
சாப்பிடும்போது கார்ட்டூன் சானல் பார்க்கணும்னு சொன்னான்..அதனாலே அடிச்சேன்.

6.முன்னெல்லாம் மீந்துப்போன சாதம்,குழம்பு எல்லாம் கொடுப்பியாம்..இப்போ ஒன்னும் கொடுக்கறது இல்லைன்னு
உன்னோட வேலைக்காரி புலம்பறா..
என் மாமியார் ஊர்லே இருந்து வந்திருக்காங்க..அதான்..

2 comments:

வெண்பூ said...

எல்லாமே நன்றாக இருந்தது.. முதல் இரண்டும் ஜூப்பரு..

Kanchana Radhakrishnan said...

வெண்பூ வருகைக்கு நன்றி