Friday, May 2, 2008

வாய் விட்டு சிரிங்க.. நகைச்சுவை

1. திருமணம் ஆனப்பிறகு நம்ம காவ்யாவுக்கு கர்வம் ரொம்ப அதிகமாயிடுச்சு
ஏன்?
அவ கணவன் அருமையா சமைக்கிறானாம்.

2.காலை எட்டிலிருந்து ஒன்பது வரை என் மனைவிக்கு செய்திகள் கேட்டாகணும்
டி.வி.லியா
எங்க வீட்டு வேலைக்காரி சொல்ற செய்திகளைத்தான்

3.காதலன்(காதலியிடம்)மழை பெய்யணும்ங்கிறதுக்காக என்னை கல்யாணம்
பண்ணிக்க சொல்றியே...ஏன்?
காதலி- கழுதைக்கு திருமணமானா மழை வரும்னு சொல்லுவாங்களே!

4.மெகா தொடர் இயக்குநரை காதலிச்சியே..என்ன ஆச்சு?
எப்ப திருமணம்னா தொடர் முடியட்டும்னு சொல்றார்.

5.என் காதலர் M.L.A., ஆனதும் என்னையும் அவர் தொகுதியா நினைச்சுட்டார்
என்ன சொல்றே
என்னையும் சுத்தமா மறந்துட்டார்.
6.செவிக்குணவில்லாத போது வயிற்றுக்கு கொடுத்தால் போதும்னு சொல்றாங்களே
..செவிக்கு என்ன மாதிரி உணவு கொடுக்கணும் டாக்டர்

7.உன் பாட்டியை ஆம்புலன்சிலே தூக்கிக்கிட்டு எங்கே போறே?
பாட்டிக்கு உடம்பு சரியில்லைன்னு ...லீவு கேட்டா அதிகாரி நம்பமாட்டேன்னு சொல்றார்.
அதான்.

No comments: