Thursday, May 29, 2008

வாய் விட்டு சிரியுங்க - 6

1.உங்க பையன் நிறைய மார்க் வாங்கியிருக்கான்..m.b.b.s. try பண்ணலாமே
அவன் கொஞ்சம் குள்ளம்..எம்பாம படிக்க முடியுமா?

2.நம்ம படத்திலே கதாநாயகன் ஒரு டெய்லர்..அதனாலே கதையிலே எங்கே எங்கே தொய்வு
விழுதோ அங்கங்க இழுத்து தைச்சுடுவார்.

3.அப்பா காக்காவிற்கு நாக்கு இருக்கா?
ஏண்டா
அம்ம சமைச்சதைப் போட்டா..சாப்பிட மாட்டேன்னு சொல்லுதே

4.கதை என்னன்னு சொல்லாம ஒரு படம் எடுத்தீங்களே..என்னாச்சு?
படம் ரிலீஸ் ஆகி தியேட்டருக்கு வந்தப்போ மக்களுக்கும் கதை என்னனு தெரியாமப் போச்சு

5.பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டார்- பெண்ணுக்கு பாடத்தெரியுமா? ஒரு பாட்டு பாடச்
சொல்லுங்க..
பெண்- (பாடுகிறாள்)சின்ன வீடா வரட்டுமா?பெரிய வீடா வரட்டுமா?

6.உங்க கணவர் தூங்கும்போதும் கண்ணாடி ஏன் போட்டுக்கிறார்?
அப்பத்தான் கனவுலே வர்றவங்களையெல்லாம் நல்லாப் பார்க்க முடியுதாம்.

No comments: