Wednesday, April 30, 2008

இவரை தெரிந்துக் கொள்ளுங்கள் - காமராஜ்

காமராஜின் அன்னை நோய்வாய்ப் பட்டு படுத்த படுக்கையாய் இருந்தார்.மதுரையில் ஒரு விழாவில் கலந்துக்கொள்ள வந்த காமராஜ்,அன்னையைப் பார்க்க வந்தாராம்.தன் மகனை (இறுதியாக?!)பார்த்த தாய் 'ஒரு வாய் சாப்பிட்டுட்டு
போ'என்றாராம்.தாயின் கண்களில் கண்ணீரைப்பார்த்த தலைவர்..என்ன நினைத்தாரோ 'சரி' என்றபடி அடுக்களைக்குள் நுழைந்து, அவசர அவசர மாக சிறிது சாப்பிட்டு எழுந்தாராம்.பின் தாய் சந்தோஷமாக விடை கொடுத்தாராம்.ஆமாம்..இதில் என்ன செய்தி?என்கிறீர்களா? காமராஜ் தன் தாயைப் பார்ப்பது அதுதான் கடைசி தடவை.
மேலும் அவர் வீட்டில் அவர் சாப்பிட்டு 25 வருஷங்களுக்கு மேலிருக்குமாம்.

No comments: