Tuesday, December 23, 2008

கிட்டத்தட்ட 500 பேருக்கு ஒரு வாரம் விடுதலை...

ஒருவார காலத்திற்கு கிட்டத்தட்ட 500 பேர் விடுவிக்கப்பட இருக்கிறார்கள்.

திருமங்கலம் இடைத்தேர்தலுக்கும் இவ்விடுதலைக்கும் சம்பந்தம் இல்லை.

இவ்விடுதலையை எதிர்த்து யாரும் உயர் நீதி மன்றத்திற்கோ..உச்ச நீதி மன்றத்திற்கோ..செல்ல மாட்டார்கள் என நம்புகிறேன்.

ஆம்...

சில முக்கிய காரணங்களால்..என்னால் அடுத்த ஒரு வாரத்திற்கு புதிய பதிவுகள் போட இயலாது

அதனால்..என் வலைப்பக்கம் தினமும் வருகை தரும்..கிட்டத்தட்ட 500 பேருக்கு..இவ்வாரம் விடுதலை அளிக்கிறேன்.

மீண்டும் அடுத்த புதன்..அவர்கள் என் வலையில் அடைக்கப்படுவார்கள்.

வேட்பாளர் முன்தொகை அ.தி.மு.க.வில் பெட்டி நிறைகிறது

வரப்போகும் பாராளுமன்ற தேர்தலில் பொட்டியிட விரும்புவோர் 10000 முன்தொகையுடன் விண்ணப்பிக்கும்படி ஜெ..ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.

இதுவரை 600க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருப்பதாக தெரிகிறது.அதாவது இதுவரை ஆன கலெக் ஷன் 60 லட்சத்திற்கும் மேல்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால்..தங்களுக்கு சீட் வேண்டும் என விண்ணப்பித்தவர்கள் 100க்கும் குறைவு.அப்போது மீதி எல்லாம்....

ஜெ போட்டி இட வேண்டும் என்று விண்ணப்பித்து இருந்தவர்கள் தான் மற்றவர்கள்.

ஜெ தில்லிக்கு அனுப்பிவிட்டால்...நாம் முதல்வர் ஆகிவிடலாம் என மற்றவர்கள் கனவு காண்கிறார்களோ??!!

Monday, December 22, 2008

சூடான..இடுகையும்...மூத்த பதிவர் நால்வரும்..

சமீபத்திய மூத்த பதிவரின் பதிவு ஒன்றில்...நால்வருடைய பதிவுகள்..சூடான இடுகையில் வருவது மட்டுறுத்தப் பட்டுள்ளதாக சொல்லி இருந்தார்.அவர்கள்..லக்கிலுக்,டோண்டு,கோவி.கண்ணன்,செந்தழல் ரவி என்றும் மற்றவர்களின் பதிவு மூலம் தெரிகிறது.

இவர்களில் கோவி..சொறி நாய் பற்றி ஒரு பதிவு எழுதி 'இது சூடான இடுகையில் வரும்" என்று கூறியதுடன் நில்லாது..சூடான இடுகையில்..கீழிருந்து..மேல் நோக்கி செல்வதை..இரண்டு,மூன்று ஸ்கிரீன் புகைப்படத்தை பதில் இட்டு காண்பித்தார்.

இவரின் இந்த பதிவு...சுஜாதா, ஒரு முறை..எனது லாண்டெரி கணக்கை எழுதினால் கூட..இன்று படிக்க ஆட்கள் இருக்கிறார்கள் எனக் கூறியதை ஞாபகப்படுத்தியது.

அடுத்து..சிங்கையில் தெரு நாய் என்ற ரவியின் பதிவும் சூடான இடுகையில் வந்தது.

டோண்டு, தன் பங்கிற்கு..பெயரிலிடன் ஆன ஒரு சர்ச்சையே ..தன் இடுகை சூடாவதில்லை என்பதாகக் கூறி இருந்தார்.

இவை எல்லாம் தான் உண்மையான காரணங்களா எனத்தெரியாது.

ஒரு வேளை..மூத்த பதிவர்களான இவர்கள் எது எழுதினாலும், படிக்க வருவோர் எண்ணிக்கை..அதிகமாய் இருப்பதால்,(டோண்டு சில சமயங்களில் தன் பதிவை பார்வையிடுவோர் சில வேளைகளில் 1000 தாண்டியிருக்கிறது என கூறியுள்ளார்) புது பதிவர்களுக்கு வருகை குறைவாய் இருப்பதால்..புதியவர்கள் சூடான இடுகையில் இடம் பிடிக்க முடியவில்லை என்று தமிழ்மணம் இப்படிப்பட்ட முடிவு எடுத்திருக்குமேயாயின்....

தமிழ்மணத்திற்கு ஒரு யோசனை...

சூடான இடுகையை இரு பாகங்களாக ஆக்குங்கள்.ஒரு பாகம் முற்றிலும்..மூத்த பதிவர்களுக்கு..(மூத்த பதிவர்களுக்கான அளவுகோல் ஒன்று இருக்கட்டும்)

இரண்டாம் பாகம் மற்றவர்களுக்கு...

இந்த முடிவை அனைவரும் வரவேற்பர் என எண்ணுகிறேன்.

தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்

இந்த ஆண்டு முதல்..பொங்கல் திருநாளை..தமிழ் புத்தாண்டு தினமாக அரசு அறிவித்ததைத் தொடர்ந்து சாதாரண குடிமகனின் கவலை அதிகமானது.

அவன் கவலை..

ஏப்ரல் 14ம் நாள்..வழக்கம்போல தமிழ் புத்தாண்டு விடுமுறை என்ன ஆகும் என்பதே.,

அரசும்...இந்தநாளை விடுமுறையாக அறிவிக்கா விட்டால்..ஒரு சாரார், அதை ஒரு பிரச்னை ஆக்கிவிடுவார்களே ..என்ன செய்வது என எண்ணும் போது...

ஆபத்பாந்தவனாக..அம்பேத்கர் இருக்கிறார்.

ஏப்ரல் 14 ..அம்பேத்கார் பிறந்த நாள் ..விடுமுறை நாள்.

சாமான்யனின் கவலை தீர்ந்தது,

***** ***** ***** **** ****

சூரியனை மறைத்த கருமேகம் விலகியதால்...இப்போது சூரிய ஒளி பிரகாசமாய் உள்ளது.

திருமங்கலம் தொகுதி வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில்..அழகிரியையும்..அவர் பேச்சையும்..சன் செய்தியில் காட்டினார்கள்.

அதற்கு கொடுக்கப்பட்ட விலை..3 தினகரன் ஊழியர் உயிர்.

***** ***** ****

தூசு தட்டி..வாங்கப்பட்ட..ஒலி/ஒளி பரப்பப்பட்ட விஜய்காந்த் படங்களை சன் என்ன செய்யும்?

அண்ணாசாமிக்கு..இந்த விஷயத்தில் சந்தேகம் நீடிக்கிறதாம்.

**** ****** ***** *****

சொல்வது ஒன்று..செய்வது ஒன்று..

சரத்குமார் கட்சியில் ராதிகாவின் பங்கு இருக்காது என முன்னர் சொல்லப்பட்டது..

ஆனால்..சமீபத்தில் அக்கட்சியின் துணைத்தலைவராக ராதிகா நியமிக்கப்பட்டிருக்கிறார்.

Sunday, December 21, 2008

அனைவருக்கும் நன்றி...

டிசம்பர் 15 முதல் 21 வரை நட்சத்திர பதிவராக 21 பதிவுகள் இட்டுள்ளேன்.,

கூடிய வரை..சில தகவல்களையும் கொடுத்துள்ளதாக நினைக்கிறேன்.

இந்த ஏழு நாட்களும்..கூடிய வரை அரசியல் கலக்காத பதிவுகளே..இட்டு வந்தேன்..

இந்த வாரம் என் வலைப்பக்கம் வந்து இடுகைகளை பார்வையிட்டவர்கள்,படித்தவர்கள்,படித்தபின் பின்னூட்டம் இட்டவர்கள் அனைவருக்கும் நன்றி.என் வலைப்பக்கம் வராதவர்கள்,நேரம் கிடைக்கும் போது..வந்து படித்து..அவர்கள் கருத்தை தெரிவிக்க வேண்டிகிறேன்.

எனக்கு..இந்த சந்தர்ப்பத்தை அளித்த தமிழ்மணத்திற்கு நன்றி.

Saturday, December 20, 2008

தமிழர் தலைவர் அண்ணா....

பல குடித்தனங்கள் நிறைந்த வீட்டில் படிப்பதற்கேற்ற சூழ்நிலை இல்லாத நிலையில் அண்ணா படித்தார்.கல்லூரியில் இன்டர் வகுப்பு முடிந்து..வறுமை காரணமாக படிப்பை நிறுத்த முடிவு செய்தார்.

அப்போது... பச்சையப்பன் கல்லூரி முதல்வர், அண்ணாவை அழைத்து..'முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள நீ படிப்பை தொடர வேண்டும்' என்று கூறி..அவரை பி.ஏ.,(Hons) சேரச் சொன்னார்.அந்த மூன்றாண்டுக்கான முழு புத்தகச் செலவையும் அவரே ஏற்றார்.

படிக்கும் போதே ராணி அம்மையாரை, சம்பிரதாயப்படி மணந்தார்.பின்னரே சுமமரியாதை இயக்கத் தளபதி ஆனார் எனலாம்.

படிப்பு முடிந்ததும், காஞ்சீபுரம் நகராட்சியில் எழுத்தர் வேலை.பின் ஆசிரியர் வேலை..என சில காலம் இருந்தார்.

எப்படியேனும்..அண்ணாவை தன்னிடம் சேர்த்துக் கொள்ள நினைத்த பெரியார்..'விடுதலை'யில் பணியாற்றக் கூப்பிட்டார்.விடுதலையில் அண்ணா,பரதன்,வீரன்,சௌமியன் என்ற புனைப்பெயர்களில் கட்டுரைகள் எழுதினார்.அவை பல இளைஞர்களை அவரிடம் வசீகரித்தன.

சந்திரமோகன்,நீதிதேவன் மயக்கம்,சந்திரோதயம்,ஓர் இரவு,காதல் ஜோதி,வேலைக்காரி போன்ற பல நாடகங்களை எழுதி நடித்தார்.

இடையில் எம்.ஏ.,படித்தார்.ஒரு இயக்கத்தை சேர்ந்தவர் மேக்கப் போட்டு நடிப்பதைக் கண்டதும்தான்..கலைஞர்கள் பற்றி..மக்களிடையே ஏற்பட்டிருந்த எண்ணங்கள் மாறின எனலாம்.

1949 ஜூன்...முக்கிய மாதம்..பெரியார் மணியம்மையை மணக்க..அண்ணா போன்றோர்..வெளியே வந்து..புதிய கழகம் ஆரம்பிப்பது என தீர்மானித்தனர்.

17-9-49 அன்று திராவிட முன்னேற்ற கழகம் விதைக்கப்பட்டது.

நாம் திராவிட கழகத்துடன் மோதுவதோ..சாடுவதோ கூடாது.இரண்டு கழகங்களும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள் என்றார் அண்ணா.

அண்ணாவின்..அரசியல் முக்கியத்துவம்..அவரது எழுத்துலகத்தை முடக்கி விட்டது எனலாம்.அவரது பேச்சும்...எழுத்தும் தான் தமிழ் நெஞ்சங்களில் அவருக்கு நீங்கா இடத்தை அமைத்துக் கொடுத்தது.

அண்ணாவின் 'ஓர் இரவு' நாடகத்தைப் பார்த்த கல்கி அவரை 'தமிழ் நாடக உலகின் பெர்னாட்ஷா' என்றார்.

எதையும்..தாங்கும் இதயம்..

ஒன்றே குலம் ஒருவனே தேவன்

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு!

ஆகிய வாசகங்கள் அண்ணா தந்த மறக்கமுடியாத வாசகங்கள்.

அரக்கியிடம் மாட்டிக் கொண்ட பொதுஜனம்

மிஸ்டர் பொதுஜனம்...தீவிரமாக அலுவலகத்தில் வேலை செய்துக் கொண்டிருந்தார்..அப்போது அவர் அலைபேசி சிணுங்கியது.அழைக்கும் எண்ணைப் பார்த்தார்..புதியதாக இருந்தது...அவர் தன் அலைபேசி எண்ணை முக்கியமான சிலரைத் தவிர வேறு யாருக்கும் தருவதில்லை..ஆனால் இது யாராய் இருக்கும்? 'ஹலோ'என்றார்..அவர் மூதாதையர் பெயருடன் அவர் பெயரையும் இணைத்து சொல்லி..சார் நாங்க..**** பாங்கிலிருந்து பேசறோம்...உங்களுக்கு கிரெடிட் கார்ட் வேணுமா?வாங்கிற பொருளுக்கு வட்டி இல்லாமல் 30 நாட்களில் கட்டலாம்..அவசர தேவைன்னா 3 வட்டிக்கு கேஷ் கிடைக்கும்...என தூண்டில் போட்டது ஒரு சர்க்கரைக் குரல்.

எலிப்பொறியில்..மசால்வடைக்கு ஆசைப்பட்ட எலியானார் அவர்.

ஒரு சுபயோக சுப தினத்தில்..கிரெடிட் கார்ட் உரிமையாளர்கள் லிஸ்டில் சேர்ந்தார்.

பின் சில பொருள்களை..கார்டை தேய்த்து.. தேய்த்து வாங்கினார்.அந்த மாத ஸ்டேட்மென்ட் வந்தபோது தான் தெரிந்தது.பில்லிங் தேதி 15..அவர் பொருள் வாங்கியது 13ம் தேதி..அவருக்கு 2 நாட்கள் தான் வட்டியில்லா சலுகை.மேலும் கடனில் வாங்கிய பொருளுக்கான முழுத்தொகையும் சலுகைக் காலத்தில் கட்டினால் தான் வட்டி கிடையாது.அதில் கொஞ்ச பாக்கி இருந்தாலும்,அல்லது...முந்தைய மாதம் எதேனும் பாக்கி இருந்தாலோ சலுகை கிடையாது.

இப்படியாக..பொதுஜனம்..தேவை..தேவை இல்லாதவை என பொருள்களை வாங்கிவிட்டு...கார்டின் தவணைத்தொகையில் சிறு பகுதியை மாதா மாதம் கட்டி வந்தார்.லிமிட் தாண்டியது அந்த கார்டுக்கு.தவணைப் பணம் கட்ட முடியவில்லை.அவர்கள் போடும் வட்டியும் 40 சதவிகிதம் மேல்.

வேறு ஒரு பாங்கின்..நுனி நாக்கு ஆங்கில குரல் கேட்டு அந்த பாங்க் கார்டு வாங்கினார்..இப்படியாக ஒரு கடன் அடைக்க ஒரு கடன் என 4 கிரெடிட் கார்ட் அவரிடம்..கடனில் தத்தளிக்கிறார்.
மூழ்காமல் வெளியே வர வழி தெரியவில்லை.வங்கிகளோ அவரிடமிருந்து கடன் வசூலிக்க குண்டர்களை அனுப்ப ஆரம்பித்து விட்டனர்.

ஒழுங்காக தான் உண்டு..தன் வேலை உண்டு என இருந்தவரை..தூண்டில் போட்டு இழுக்கும்..வங்கி தொலைபேசி அழைப்புகள் சிக்கலில் மாட்டிவிட்டன..

முதல் அழைப்பு வரும் போதே நிராகரித்து விடுங்கள்...மேலும்..மேலும்..தொந்தரவு கொடுத்தால்..ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இயங்கும் bankingombudsman அமைப்பில் புகார் செய்யுங்கள்.

கிரெடிட் கார்ட் ..முதலில் அழகான பெண் போலத்தான்..தெரியும்...மாட்டிக்கொண்டுவிட்டால்தான்..அரக்கி எனத் தெரியும்

Friday, December 19, 2008

படித்ததும்...கேட்டதும்... (20-12-08)

1.நான் பட்டினி கிடந்தேன்..நான் நோயாளியாக இருந்தேன்..அந்த சமயத்தில்தான் என்னை நீங்கள் அழைத்துக்கொண்டு வந்திருக்கிறீர்கள் என்று கூறும் ஒவ்வொருத்தரின் தேவைகளையும்
பூர்த்தி செய்து,அவர்களுடைய பசியை ஆற்றுவதிலேயே..நான் கடவுளுக்கு சேவை செய்வதாக உணர்கிறேன். - அன்னை தெரசா

2.குழந்தைகள் நாம் சொல்லிக் கற்பது குறைவு,,நாம் செய்வதைப் பார்த்துக் கற்பதுதான் மிகுதி..அதனால் நாம் நல்லவனாக நடந்து வழி காட்ட வேண்டும்.

3.ஜேசுதாஸின் வாழ்நாள் கனவு சமீபத்தில் நிறைவேறி உள்ளது,கிறிஸ்துவராக இருந்தாலும்..குருவாயூரப்பனின் தீவிர பக்தனான அவருக்கு சமீபத்தில்தான் கோயிலுக்குள் செல்ல முறையான அனுமதி அளித்திருக்கிறதாம் ஆலய நிர்வாகம்.

4.இந்தியாவில் அமுல்படுத்தப்பட்ட பசுமை புரட்சிதான் இதுவரை மனிதனால் மேற்கொள்ளப்பட்ட சீரழிவுகளில் மிக மோசமானது.அந்த திட்டம் உடனடியாகப் பலனளிப்பது போல ஒரு தோற்றத்தை உண்டாக்கியிருந்தது.ஆனால் சமீபத்தில் பஞ்சாபில் அதன் மோசமான தொடர் விளைவுகளைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.வருடம் முழுதும் அதிக தண்ணீர் தேவைப்படும் பயிர்களைப் பயிரிடப் பழகி விளை நிலங்களை பாழ் படுத்தி விட்டது இந்தியா...இப்படி வருத்தப்பட்டு இருப்பவர்,,இங்கிலாந்து இளவரசரும்..இயற்கை ஆர்வலருமான சார்லஸ்.

5.சுதந்திரம் கிடைத்த ஆறு மாதங்களில் காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார்.அடிமை இந்தியாவில் அவரை எதிரியாக நினைத்த பிரிட்டிஷார் கூட மதித்துப் பாதுகாத்த அவரை,சுதந்திர இந்தியாவில் நம்மால் பாதுகாக்க இயலவில்லை.

6.இந்திய ஒருமைப்பாடு என்பது ரவா லாடு போல.குஞ்சாலாடு போல..அல்லது மராத்திக்காரன் சொல்லும் பேசின் லாடு போல..பார்க்க உருண்டையாக,அழகாக..இளம் மஞ்சள் நிறமாக,முந்திரிப்பருப்பு,கிஸ்மிஸ் பதித்ததாக கவர்ச்சியாக இருக்கிறது.இது இனிப்பானது என்பதும் நமக்குத் தெரியும்..ஆனால், அழுந்த விரல்களால் தொட்டால் உதிர்ந்துப் போகும் பொல பொலவென்று மாவாக - தீதும்..நன்றும் (நாஞ்சில் நாடன்)

கல்லூரி மாணவர் சங்கங்களில் அரசியல்...

அரசியல்...

இதில் ஈடுபட 18 வயது நிரம்பிய அனைவருக்கும் உரிமை உண்டு.

அதனால் தானோ என்னவோ ..இப்போழுதெல்லாம்..கல்லூரி மாணவர் யூனியன்,இலக்கிய மன்றம் ஆகியவற்றின் நிவாகக்குழு மாணவர்கள்..அரசியல் கட்சிகளை அடிப்படையாகக் கொண்டு தேர்ந்தெடுக்கப் படுகின்றனர்.

இப்படிப்பட்ட பழக்கம்..எப்போது ஏற்பட்டது..

திராவிட கட்சியினர் பேச்சில்..அப்போதைய என்னைப் போன்றோர் மயங்கியதுண்டு.அண்ணாவின் பேச்சும்,நெடுஞ்செழியன் பேச்சும்..பின்னர் கலைஞர் பேச்சும்..எங்களை கட்டிப் போட்டிருக்கின்றன.அவர்கள் பேச்சைக் கேட்டு அதே போல வீட்டில் வந்து பேசிப்பார்த்ததுண்டு.

ஆகவே..இலக்கிய மன்றங்களில் அவர்கள் பேச அழைக்கப்பட்டனர்.காளிமுத்து அவர்கள் கல்லூரியில் படிக்கும் போது அண்ணாவின் பேச்சைக் கேட்டு,மயங்கி தான் தி.மு.க.வில் சேர்ந்தார்.

மாணவர்களிடையே கட்சி புகுந்தது இப்படித்தான்.தி.மு.க.வளர்வதைப் பார்த்து..மற்ற கட்சிகள் விழித்துக்கொண்டு..தங்கள் கிளைகளை திறப்பது போல கல்லூரிகளில் அந்த அந்த கட்சி அணிகள் தோன்ற ஆரம்பித்தன.மாணவர் இடையே..பிளவும்,வன்முறையும்,அராஜகமும் மெல்ல..மெல்ல பரவ ஆரம்பித்தது..கட்சி வேர்கள் ஆழமாக கல்லுரிகளில் ஊடுருவல் ஆயிற்று.

இது தவறு என்று சொல்ல முடியாது..இன்னும் சொல்லப்போனால்..ஆரோக்யமானவை..ஆனால் எதுவரை..

ஒவ்வொரு பிரிவிற்கும்..தேர்தல் முடியும் வரை கட்சி பாகுபாடு..அவர்களிடையே இருக்கலாம்..அதற்குப் பிறகு அவர்கள்..மாணவ சமுதாயத்தினர்..வருங்காலத் தூண்கள்..என்ற எண்ணம் வர வேண்டும்...

இல்லையெனில்...சட்டக்கல்லூரி நிகழ்ச்சிகள் போன்ற நிகழ்ச்சிகள்...கட்சி,ஜாதி என வேறு..வேறு பெயர்களில் கல்லூரிகளுக்குள் இருந்தே தீரும்.

ரஜினியின் பேச்சுக்கு மறுப்பு..

சில நாட்களுக்கு முன்..தன் ரசிகர்களிடையே ரஜினி 'கடமையைச் செய்,,பலனை எதிர்ப்பார்' என சொல்லப்போக..ஒரு சாரார்..அவர் கீதையை இழித்து உரைப்பதாய் ஆர்ப்பாட்டம் செய்ததை நாம் அறிவோம்.

அனால் ரஜினி சொன்னார் போல பலனை எதிர்ப்பார்த்து கடமையைச் செய்தால்..பல நேரங்களில் பலன் ஏதும் கிட்டாமல் போக நேரிடலாம்.

ஒரு உதவியை யாருக்கேனும் செய்தால்..அதற்கான பிரதிபலன் என்ன வென்று எதிர்ப்பார்க்கக்கூடாது.இதையே திருவள்ளுவர் எவ்வாறு சொல்கிறார் என்றால்..

கைமாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என்னாற்றுங் கொல்லோ உலகு

என்கிறார்.

உதவி செய்வோரிடமிருந்து பலனை எதிப்பார்க்காதீர்கள்..நமக்கு உயிர் வாழ உதவி செய்யும் மழை நம்மிடம் இருந்து என்ன பிரதிபலனை எதிப்பார்த்து பெய்கிறது.(சூரியனைக் கூட பொங்கல் அன்று வணங்கும் நாம்..மழையை என்றாவது துதிக்கிறோமா? )

ஒரு தந்தை மகனை படிக்க வைத்து..கற்றோர் நிறைந்த சபையில் முதன்மையானவனாய் ஆக்க வேண்டியது, அவர் கடமை.ஆனால் அதற்கு பிரதிபலனாக பிற்காலத்தில் அவன் சம்பாதித்து கொடுப்பான் என்ற எதிப்பார்ப்பு கூடாது.

ஆனால் அவரது மகன் அவருக்கு செய்யும் உதவி...மீண்டும் சொல்கிறேன்..கடமை அல்ல...உதவி..இவ்வளவு அறிஞனான இவனை பெற இவன் தந்தை என்ன தவம் செய்தானோ என உலகு சொல்ல வேண்டும்.

இக் கருத்தும் வள்ளுவனுடையதே..

ஆகவே..எந்த ஒரு செயலுக்கும் பிரதிபலனை எதிப்பார்க்காதீர்..கடமையை செய்யுங்கள்..எதிர்ப்பார்ப்பு ஏமாற்றத்தை தரக்கூடியது.

Thursday, December 18, 2008

நீண்ட நாட்கள் வாழ....

இன்று மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது.ஆண்களின் சராசரி வயது 64 ஆகவும்..பெண்களின் சராசரி வயது 65 ஆகவும் உள்ளது.

சிலர் சைவ சாப்பாடு சாப்பிட்டால்..நீண்ட நாட்கள் இருக்கலாம் என எண்ணுகின்றனர்.

நீண்ட நாள் வாழ சைவ,அசைவ சாப்பாடுகள் காரணமில்லை.

சுத்த சைவமான ராஜாஜியும் 94 வயது வாழ்ந்தார்...கடைசி வரை பிரியாணியை விரும்பி உண்ட தந்தை பெரியாரும் 94 ஆண்டுகள் இருந்தார்.

நீண்ட நாட்கள் வாழ குடும்ப ஜீன்ஸ் ஒரு காரணம் என்றாலும்...கட்டுப்பாடான வாழ்க்கையும் அவசியம்.

அளவான சாப்பாடு

உடலுக்கு தேவையான உடற்பயிற்சி (தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் நடை அல்லது சைக்கிளிங்)

உப்பு குறைவாக சேர்த்துக் கொள்ளவும்..இரத்த அழுத்தத்தை தவிர்க்கலாம்.

சர்க்கரை குறைவாக சேர்த்துக் கொண்டால்..நீரிழிவு கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.

வெண்மை நிற..அரிசி,சர்க்கரை,உப்பு,மைதா ஆகியவற்றை குறையுங்கள்.

மனதை சந்தோஷமாக வைத்திருங்கள்.கோபத்தை விடுங்கள்.பிறர் மீது குறை காண்பதை தவிருங்கள்.பொறாமைக் குணம் வேண்டாம்.

மனம் களங்கம் இல்லை என்றாலே...மனம் சந்தோஷமாய் இருக்கும்.ஆரோக்ய வாழ்வு வாழலாம்.

நாம் வாழ்க்கையில் இன்பமாயிருக்கிறோமா?துன்பமாய் இருக்கிறோமா? என்பது நம் கைகளில் தான் இருக்கிறது.

இயற்கை நமக்கு எத்தனை இன்பங்களை வாரி வழங்கி இருக்கிறது.

எத்தனைக்கோடி இன்பம் வைத்தாய் இறைவா..என்றான் பாரதி.பாரதி இன்பமாய் நினைத்தவை...எதை எதைத் தெரியுமா?

தண்ணீர்: இதில் குளித்தால் இன்பம்..குடித்தால் இன்பம்.
தீ ; குளிர் காய்ந்தால் இன்பம்..பார்த்தாலே இன்பம் (தீபம்)
மண் ; இதன் விளைவுகளிலே இன்பம்.,இதன் தாங்குதல் இன்பம்.
காற்று ; இதை தீண்டினால் இன்பம்..மூச்சில் கொண்டால் இன்பம்.
ஆகாயம்;கேட்கவே வேண்டாம்..பகலில் சூரியன் இன்பம்..இரவில் நிலவு இன்பம்
நட்சத்திரக் கூட்டம் இன்பம்.
தவிர..உயிர்களிடத்தில் பழகுதல் இன்பம்.
மனிதர் உறவு இன்பம்
அன்பு இன்பம்
உண்ணுதல் இன்பம்
உழைத்தல் இன்பம்
உறங்கல் இன்பம்
கூடுதல் இன்பம்
கற்றல் இன்பம்
கேட்டல் இன்பம்
பாடுதல் இன்பம்
பார்த்தல் இன்பம்
எழுதுதல் இன்பம்

இப்பொழுது சொல்லுங்கள்..ஆண்டவன் (இயற்கை) எத்தனைக் கோடி இன்பங்களை நமக்களித்துள்ளான்


ஆகவே வாழும் போது துக்கத்தை பெருக்கிக் கொள்ளாது...இன்பமாய் வாழ்வோம்.

இறந்த பின் சொர்க்கம் போக வேண்டும் என்னும் எண்ணத்தை விட்டு...வாழும் போது..வாழ்வை..நரகமாய் ஆக்கிக் கொள்ளாது சொர்க்கமாய் ஆக்கிக் கொள்வோம்

மாறன் பிரதர்ஸ் பற்றி அதி புத்திசாலி அண்ணாசாமி...

ஐங்கரன் இன்டர்னேஷனல் லண்டனை தலைமையகமாகக் கொண்டது.இந்தியாவில் வெளியாகும் அனைத்துப் படங்களுக்கும் கிட்டத்தட்ட DVD உரிமை இவர்களே..அப்படிப்பட்ட நிறுவனம்,மற்றோரு அதே தொழிலில் உள்ள நிறுவனத்தோடு சேர்ந்து ரஜினி நடித்து ஷங்கர் இயக்கத்தில் எந்திரன் படத்தை 150 கோடி பட்ஜெட்டில் எடுப்பதாக அறிவித்து..அதற்கான படபிடிப்பும் நடந்து வரும் நிலையில், திடீரென..பட்ஜட்டை குறைக்க சொல்லினர்.

ஷங்கருக்கு..தயாரிப்பாளர் வேறாக இருந்தால்..பட்ஜெட்டை அதிகரிப்பதுதான் வழக்கம்.ஆகவே..அவர் அதற்கு மறுக்கவே..சன் டீவி நெட் ஒர்க்..அப்படம் தயாரிக்கும் பொறுப்பை ஏற்றது.இதெல்லாம் தெரிந்த விஷயங்கள்.இனி...

குசேலர் தோல்வி படம்..ஆனால்..திராபை படமான காதலில் விழுந்தேன்..சன் டீ.வி.விளம்பரத்தால் கணிசமான லாபத்தை அவர்களுக்கு ஈட்டிக் கொடுத்தது.சன் டீவி சரியானபடி விளம்பரப் படுத்தியிருந்தால் குசேலனும் வெற்றிப்பெற்றிருக்கும் என ரஜினியும் உணர்ந்திருப்பார்.

சரி விஷயத்திற்கு வருவோம்..

ஸ்டாலின் மகன் விஜய் நடிக்க குருவி எடுத்தார்

அழகிரி மகன் சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் வெளியிடும் உரிமை பெற்றார்.

இவர்களைவிட நாங்கள் சூப்பர் என்று உணர்த்தவே மாறன் பிரதர்ஸ் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் எந்திரன் படம் எடுக்கிறார்களோ...

தமிழகத்தில்..புயல்..மழை இப்போதுதான் ஓய்ந்தது.

மீண்டும் புயல்,மழை இருக்குமா என..சன் டீவியில் சென்னை வானிலை இயக்குநர் ரமணன் என்ன சொல்கிறார் பார்ப்போம்!!!!

இது எல்லாம் தெரியும் வரை அதிபுத்திசாலி அண்ணாசாமிக்கு கண்கள் பனிக்காதாம்..இதயம் இனிக்காதாம்.

கலைவாணர்..சில செய்திகள்..

முகலாய மன்னர் பாபர்..தன் மகன் ஹுமாயூன் உடல் நலம் குன்றி கிடந்த போது..என் உயிரை எடுத்துக் கொண்டு அவன் உயிரைத் தா என வேண்டியதாக படித்ததுண்டு.

ஆனால்...அதுபோல..அறிஞர் அண்ணா அவர்கள்'விஞ்ஞானம்..அனுமதித்தால்..என் உயிரை எடுத்துக் கொண்டு..இவர் உயிர் பிழைக்க என் உயிரைக் கொடுக்கத் தயார்' என்றாராம்.அவர் உயிர்ப்பிக்க விரும்பியது கலைவாணர் என்.எஸ்.கே.,அவர்களை.

தன்னிடம் இல்லை என வந்தவர்களுக்கு இல்லை என்று கூறாத வள்ளல் என்.எஸ்.கே.,ஏதேனும் சமூக சேவை அமைப்புகள் நன்கொடை கேட்டு வந்தால்..தயங்காமல் பல லட்சம் ரூபாய்கள் உதவி செய்வார்.லட்சம் என்பது..அந்த நாட்களில் பெரிய அளவு பணம்.

அப்போதெல்லாம்..படம் ஓடாது என தயாரிப்பாளர்கள் நினைத்தால்..கலைவாணரை வைத்து,தனி டிராக் எடுத்து படத்தில் சேர்த்து விட்டால்...படம் வெற்றிதான்.

எந்த அரசியல் கட்சியிலும் அவர் அங்கத்தினராய் இருந்ததில்லை.ஆனால்..திராவிட இயக்கம் மீது மா பெரும் பற்று.ஒருசமயம்.சென்னை வானொலியில்..சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றி..பாட
இவரைக் கூப்பிட்ட போது..அப்பாட்டில்..பெரியார் பெயர் இல்லை எனக்கூறி.அதைச் சேர்த்தபின்னரே பாடினார்.

மணமகள் என்று கலைவாணர் தயாரித்த படத்திற்கு கலைஞர் வசனம்.சம்பளம் பற்றி பேசிய கலைவாணர்..ஒரு காகிதத்தில் 0000 போட்டு, இந்த சம்பளம் போதுமா என்றாராம்.கலைவாணர் ஏதோ குறும்பு செய்கிறார் என அறிந்துக் கொண்ட கலைஞர் போதும் என்றார்.உடன் கலைவாணர் 0000 பக்கத்தில்1 என்று எழுதி00001 இதுதான் சம்பளம் என்றார்.அந்த காகிதத்தை வாங்கிக் கொண்ட கலைஞர்..அதை தலைகீழாகக் காட்டி..இது போதும் என்றார் (10000)..கலைவாணரின் குறும்பை..கலைஞர் சரிவர புரிந்துக் கொண்டதால்..அங்கு ஒரே சிரிப்பலை.

சுயமரியாதைக் கட்சியை ஆதரித்த கலைவாணர்..நடுனிலையாகவும் இருந்தார்.எல்லாக் கட்சிகளின் கூட்டங்கள்,மாநாடுகள் ஆகியவற்றில் கலந்துக் கொள்வார்.ஆனாலும் அவருக்கென தனிப்பட்ட கொள்கைகள் இருந்தன.

நான் இப்போ பணக்காரன்...ஆனால்..பிறக்கும் போது ஏழை..அதுபோல இறக்கும் போதும் ஏழையாகத்தான் இறப்பேன் என்ற கலைவாணர்..இறுதி நாட்களில் வறுமையில் வாடினார்.மஞ்சள்காமாலை நோய் தாக்கி..அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டிருந்தவரிடம்...சிகிச்சைக்கான பணம் இல்லை.அவரைப் பார்க்க வந்த எம்.ஜி.ஆர்.,பணக்கட்டுகளை அவர் தலையணைக்கீழ் வைத்தாராம்.உடனே கலைவாணர்..'ராமசந்திரா..இப்படி ஒருவனுக்கே அதிக பணம் கொடுக்கக்கூடாது..கொடுப்பதை பிரித்துக் கொடுத்தால்...இன்னும் சிலருக்கும் உதவலாமே என்றாராம்.

தனக்குத் தேவை இருந்த போதும்...அவரின் மனப்போக்கை பாருங்கள்.

1957 ல் தாராமங்கலத்தில்..அண்ணாத்துரையின் படத் திறப்பு விழாவில் கலைவாணர் கலந்த்க் கொண்டது..அவர் கலந்துக் கொண்ட கடைசி நிகழ்ச்சி.

அதுபோல 1969ல் சென்னையில் கலைவாணர் சிலை திறப்பு விழாவே அண்ணா கலந்துக் கொண்ட கடைசி நிகழ்ச்சி.

Wednesday, December 17, 2008

அரசியல்வாதி வீட்டில் நுழைந்த பாம்பு...(நகைச்சுவை)

நம்ம அரசியல்வாதிகள் வீட்டுக்குள்ள ஒரு பாம்பு புகுந்துடுது.அவரவர் அறிக்கை எப்படி இருக்கும்...

கலைஞர்- இப்படி எல்லாம் நடந்தா நான் பதவியிலிருந்து ராஜிநாமா செய்வேன்னு ஜெயலலிதாவே பாம்பை அனுப்பி இருப்பாரோ என்னவோ...

ஜெயலலிதா-கருணாநிதிக்கு இனி வரும் தேர்தர்ல்ல வெற்றி கிடைக்குமான்னு தேர்தல் பயம் வந்து விட்டது..அதுதான் இப்படி புலம்பறார்.மத்தியில் இவர் சொல்வதை கேட்கும் ஆட்சியும்,மாநிலத்தில் இவரின் மைனாரிட்டி ஆட்சியும் தானே நடக்கிறது.அவர்களிடம் சொல்லி..தமிழ் நாட்டில் பாம்பே இல்லாமல் செய்திருக்கலாம்.ஏன் செய்யவில்லை என்றால்..என்னை ஒழிக்க அவர் பாம்பை நம்பி இருக்கார்.ஆனால்..நான் பாம்பை அனுப்பினேன் என்ற அவர் மீது வழக்கு போடுவேன்.ஜெயகுமார் தலைமையில் பாம்பு பண்ணைமுன் நாளை அ.தி.மு.க.போராட்டம் நடத்தும்.

தங்கபாலு-இந்த பாம்பு என் வீட்டுக்குள் எப்படி வந்தது?சாமியார் மடமா இது? ஆனால் எங்கள் தலைவர் சோனியா பாம்பு பற்றி எந்த முடிவெடுத்தாலும்..கட்டுப்படுவேன்.

இ.கம்யூனிஸ்ட்-வயலில்..தவளைகளை ஒழிக்க வேண்டிய பாம்புகளை நகரத்தில் என் வீட்டில் விட்டு விவசாயிகள் வயிற்றில் அடிப்பதை பொறுக்க மாட்டோம்.மார்க்ஸிஸ்ட் உடன் பேசி தர்ணா தேதி அறிவிக்கப்படும்.

மார்க்சிஸ்ட்-போராட்டம் என்றால்..இரண்டு கம்யூனிஸ்ட்களும் ஒன்று படுவோம்.பாம்பு அவர்கள்..வீட்டில் இருந்தாலும்..எங்கள் விட்டில் இருந்தாலும் தர்ணா ஒன்றுதான்.

ராமதாஸ்-கருணாநிதி அவர்கள்..என் வீட்டில் பாம்பு நுழைந்ததை..முறைப்படி மத்திய அரசிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.தேவையானால்..அனைத்துகட்சி தலைவரையும் அவர் தில்லி அழைத்துச் செல்லலாம்.பா.ம.க.அக்கூட்டத்தில் கலந்துக் கொள்ளும்.

வைகோ-அம்மையார் விரும்பினால்..அந்த பாம்பை நான் பிடித்து..என் வீட்டிற்குள் விட்டுவிடத் தயார்.

விஜய்காந்த்-தமிழ்நாட்டில் 113208 பாம்புகள் இருக்கின்றன.இதில் 42323 நல்ல பாம்பு,21000 மலைப்பாம்பு,12034 சாரைப்பாம்பு,4300கட்டுவிரியன்,8304 தண்ணீர் பாம்பு..மீதி உள்ளவை சில்லரைப் பாம்புகள்.என்னை அழிக்க ஒரு பாம்பை வீட்டிற்குள் விட்டு நான் அழிவேன் என கனவு காண்கிறார்கள்.மொத்த பாம்புகளையும் கோண்டு வந்து விட்டாலும் இந்த விஜய்காந்தை ஒன்றும் செய்ய முடியாது.

பத்திரிகை நிருபர்களுக்கு கலைஞர் பேட்டி;
சரடு நிருபர்; ஜெ தான் பாம்பை உங்கள் வீட்டில் விட்டார் என நீங்கள் சொன்னதால்..உங்கள் மீது வழக்குத் தொடரப் போவதாக ஜெ கூறியுள்ளாரே

கலைஞர்; என்னை ராஜிநாமா செய்யச் சொன்னதால்..கிண்டலுக்கு அப்படிச் சொன்னேன்.வழக்கை சந்திக்க நான் தயார்..அம்மையார் நீதிமன்றம் வரத் தயாரா?

நிருபர்;ராமதாஸ்..மத்திய அரசிடம் அவர் வீட்டு பாம்பு சமாசாரத்தை நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டும் என்கிறாரே

கலைஞர்- இவ்வளவு நேரம்..இது மத்திய அரசுக்கு தெரிந்திருக்கும்.அப்படி இல்லை எனில்..அவர் மகன் ஒரு மத்திய அமைச்சர் ஆயிற்றே..அவரே சொல்லலாமே...

எல்லார் வீட்டிலும் நுழைந்தது ஒரே பாம்பு..இவர்களின் அரசியலைப்பார்த்து..நம்மைவிட இவர்கள் நச்சுத்தன்மை உடையவர்கள் என பயந்து ஓடி ஒளிந்தது.

அந்த கிரகமும்..அதன் மக்களும்.. (சிறுகதை )

(இது ஒரு மீள் பதிவு)

அந்த கிரகத்தில் அரைகுறையாக ஆடை அணிந்திருந்த ஒரு பெண்ணைச்சுற்றி..ஒரு கூட்டம்
வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பது போல ..சேட்டிலைட் மூலம் எடுக்கப் பட்டிருந்த புகைப்படத்துடன்
செய்தி ஒன்று அன்றைய செய்தித் தாள்களில் வந்திருந்தது.
அத்துடன் அந்த கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான சத்தியக்கூறுகள் இருப்பதாகவும்..உயிர்கள்
வாழ்வதாகவும் விஞ்ஞானிகள் கூறி இருந்தனர்.
விண்வெளி ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள்..அடுத்ததாக உயிருள்ளவர்களை அந்த கிரகத்திற்கு அனுப்பி
வைக்க உள்ளதாகவும் தெரிவித்திருந்தனர்.
இவர்களின் இந்த கண்டுபிடிப்புக்கு ஜனாதிபதி,பிரதமர் முதல் குப்பன்..சுப்பன் வரை பாராட்டு
தெரிவித்திருந்தனர்.
சில வல்லரசு நாடுகள் இந்த கண்டுபிடிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் இவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல்..விஞ்ஞானிகள் மேற்கொண்டு ஆராய்ச்சியில்
ஈடுபடலாயினர்.
பத்து விண்வெளி வீரர்களுக்கு கடும் பயிற்சி அளிக்கப்பட்டு...நான்கு பேர் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
அதில் சாதனா சாவ்லா என்று ஒரு பெண்ணும் இருந்தார்.
நாட்டின் பொருளாதார நிலை சரியாய் இல்லாததாலும்..பணவீக்கம் அதிகரித்து வருவதாலும்..
மேற்கொண்டு ஆராய்ச்சிகளுக்கு பண ஒதுக்கீடு செய்வதில் சிக்கல் இருப்பதாக நிதி அமைச்சர்
பட்டினியார்...தெரிவிக்க..அதற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது.
அரசுக்கு ஆதரவு அளித்து வந்த சில கட்சிகள்..ஆதரவை..வாபஸ் வாங்கப்போவதாகவும்..அவர்கள்
தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டுமென்றால்..விண்வெளி ஆராய்ச்சிக்கு தேவையான பணம்
ஒதுக்க வேண்டும் என்றும்..நிதி அமைச்சர் பட்டினியார் பதவி விலக வேண்டும் என்றும் நிபந்தனைகள்
விதித்தனர்.
என்ன செய்வது என்று தெரியாமல்..பிரதமர் தன் தலைப்பாக்குள் கையை விட்டு முடியை பிய்த்துக்
கொண்டார்.கட்சித் தலைவர் மானியா..விண்வெளி ஆராய்ச்சிக்கு...தடை இல்லை என்றும்..
தொடர்ந்து நிதி ஒதுக்கப் பட்டு..திட்டமிட்டப்படி வீரர்கள் அனுப்பப்படுவர் என்றும் கூறி
தற்காலிகமாக ஆட்சியை காப்பாற்றினார்.
நான்கு வீரர்களுடன் விண்கலம் புறப்படும் நாள் வந்தது.விண்வெளி விஞ்ஞானி சங்குண்ணி
மிகவும் பதட்டத்துடன் காணப்பட்டார்.
10..8...7..6..5..4..3..2..1..0..
உஷ் என கலம் புகையைக் கக்கிக்கொண்டு பறந்தது.
**** ***** ***** *****
இரண்டு மாதம் தன் பயணத்தை முடித்துக்கொண்டு..சில புகைப்படங்களை அனுப்பிய வீரர்கள்
திரும்பினர்.
அவர்கள் பின் அளித்த அறிக்கை..

'நாங்கள் போன இடம் பூமி எனப்பட்டது.அதில் மக்கள் வாழ்கிறார்கள்.மூன்று பாகம் கடல்..ஒரு பாகம் நிலம்.
நாங்கள் இறங்கிய இடத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாய்..தியேட்டர் எனப்படும் இடத்தில் கூடுகின்றனர்.
வறுமையில் வாடினாலும்..ஒலி,ஒளி நிகழ்ச்சியான இவற்றுக்கு மக்கள் பணத்தை செலவழிக்க தயங்குவதில்லை.
அரைகுறையாக உடை உடுத்தியுள்ள நடிகைகளை பார்ப்பதிலும்..தனக்குப் பிடித்த நடிகர்களுக்கு பால்..பீர் போன்ற
திரவ பொருள் கொண்டு அபிஷேகம் செய்யவும் இவர்கள் தயங்குவதில்லை.இந்த பகுதிக்கு தமிழ்நாடு என்கிறார்கள்.
அவர்கள் பேசும் மொழி தமிழ்.இதுபோல பல மொழி பேசுபவர்கள் மற்ற இடங்களிலும் இருக்கிறார்களாம்.
தண்ணீருக்கு இவர்கள் மாற்றி...மாற்றி..அடித்துக் கொள்கிறார்கள்.
இப்படி இவர்கள் அறிக்கை நீண்டுக்கொண்டே போகிறது.
அவை அனைத்தும்..செவ்வாய் கிரக பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்தன.
உடன்...நமீதாவின் ஒரு குத்தாட்ட புகைப்படமும் பிரசுரமாகி இருந்தது.

டாக்டர் அம்பேத்கர் ..சில செய்திகள்..

மாபெரும் லட்சியத்தையும்..வெற்றியில் நம்பிக்கையும்..வாழ்க்கையில் ஏற்றுக்கோண்டால்..உயர்ந்த நிலையை எவரும் அடையலாம் - அம்பேத்கர்

நமது தேசியக் கொடியில் நடுவில் காங்கிரஸ் சின்னமான ராட்டைதான் வரவேண்டும் என காந்தியும்..அவர் சீடர்களும் கூறினர்.ஓம் வரவேண்டும் என சாவக்கர் கூற...அம்பேத்கர் சொன்னார்
அசோகரின் தர்மச் சக்கரம் தான் அனைவரும் சமம் என்பதை உணர்த்தும் சரியான சின்னமாக இருக்கும் என்று.அதில் உறுதியாக நின்று அதை நிறைவேற்றினார்.

நாட்டில் மதம்,மொழி,ஜாதி,இனம் என பல இருக்கும் நிலையில்..அனைவரின் உரிமைகளையும் பாதுகாத்து..சட்டங்கள் வடிவமைக்க ஏழு பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.வேலை பளு காரணம் காட்டி..ஒவ்வொருவரும் நழுவிக் கொள்ள..தனி மனிதனாக..அம்பேத்கர் அக்காரியத்தை செய்து முடித்தார்.

மனு சாஸ்திரத்தால் தான் மனிதர்கள் மனிதர்களை சாதிக்காரணங்களால் வெறுக்கும் அவலம் ஏற்படுகிறது.ஆகவே தீண்டாமைக்கு முதல் எதிரி மனுதான் என்று கூறி..மனு சாஸ்திரத்தை தீ வைத்துக் கொளுத்தி..தீண்டாமைக்கு எதிரான யுத்தத்தை துவக்கி வைத்தவர் அம்பேத்கர்.

புத்த மதம்தான் கடவுள் வழிபாட்டைத் துறந்து அறத்தையும்,மனிதனது நல்ல எண்ணங்களையும் முன்னிறுத்துவதாகவும், அம்மதத்தில் ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்றும் எண்ணியவர்,
மேலும் தான் இறக்கும்போது இந்துவாக இறக்க மாட்டேன் என்ற கொள்கையுடன் 10லட்சம் பேரை 1956ல் புத்த மதத்திற்கு மாற்றினார்.

இந்தியாவில்...இல்லை..இல்லை..உலகிலேயே அதிக சிலைகள் உள்ள ஒரே தலைவர் இவர் தான்.

அனைவரும்...ஜாதி,மத, பேதம் பார்க்காமல் அம்பேத்கர் பற்றி படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

வரலாறு எவ்வளவு உண்மைகளை மறைத்து வைத்திருக்கிறது என அறிவீர்கள்.

வாய் விட்டு சிரியுங்க....

1.டாக்டர் ஆபரேஷன் தியேட்டருக்கு ஜோசியரையும் அழைத்து வர்றாரே....ஏன்?
டாக்டர் ஆபரேஷன் செய்யும்போது..ஜோசியர் நோயாளியின் ஜாதகத்தில் மாற்றம் தெரிகிறதான்னு பார்த்துக் கிட்டு இருப்பார்.

2.கட்சி அலுவலகத்தை தலைவர் ஏ.சி. பண்ணச் சொல்லிட்டார்
ஏன்?
அவர் கிட்டே எல்லாருக்கும் குளிர் விட்டுப்போச்சாம்.

3.மருமகள்-(டாக்டரிடம்)டாக்டர் என் மாமியாருக்கு உடம்பு எப்படி இருக்கு?
டாக்டர்-பயப்படறார்போல ஒண்ணுமில்ல
மருமகள்-ஏன் டாக்டர்..எப்பவும் இப்படி நெகடிவ் ஆகவே பேசறீங்க?

4.என் பையன் போற போக்கைப் பார்த்தா கவலையாய் இருக்கு..மதிக்கவே மாட்டேன் என்கிறான்
உங்களையா?
அவன் மனைவியை.

5.போனவாரம்தான் உன் குழந்தைக்கு காதுகுத்தணும்னு லீவு கேட்டீங்க..இப்ப திரும்பவும் காது குத்தணும்னு லீவு கேட்கறீங்களே?
அப்போ..ஒரு காது தான் குத்தினோம்..இப்போ இன்னொரு காது குத்தறோம்.
எனக்கு எப்பவோ காது குத்தியாச்சு.

6.மகன்-(தந்தையிடம்)நீ காதலிச்சுத்தானே கல்யாணம் பண்ணிண்டே...என் காதலை மட்டும் எதிர்க்கிறியே ஏன்?
தந்தை-அதனால்தாண்டா எதிர்க்கிறேன்..

Tuesday, December 16, 2008

நட்பின் சிறப்பு என்பது யாதெனில்....

உயிர் காப்பான் தோழன்..என்பர்.

அது எவ்வளவு தூரம் உண்மை என நான் அறியேன்..ஏனெனில் நான் யார் உயிரையும் காப்பாற்றியதில்லை..என்னையும் யாரும் காப்பாற்றியதில்லை.

ஆனால்..நமக்கு வாழ்வில்..ஏற்படும் நண்பர்கள்தான் எவ்வளவு?

பள்ளி பருவத்தில்...உண்டாகும் இளம் நண்பர்கள்..மன விகாரம் இல்லா வயது.கிடைத்த அனைத்தையும் பகிர்ந்துக் கொள்ளும் வயது.ஒன்றாக சேர்ந்து விளையாடிய வயது.மாமரத்தில் இருந்து விழும் அல்லது திருடும் மாங்காயை..உப்பு ,காரம் தோய்த்து சாப்பிட்ட நட்பு,கமர்கட்டை காக்காய் கடி கடித்து பகிர்ந்துக் கொண்ட வயது.போட்டி படிப்பில் மட்டுமே.இப்படி அந்த கால நட்பு..மனதில் பசுமரத்தாணி போல பதிந்து இன்றும் நினைவில் அவர்கள் பெயர் தங்கியிருக்கும் நட்பு.

அடுத்து..கல்லூரி கால நட்பு.பெற்றோர் கஷ்டப்பட்டு செலவு செய்து படிக்க வைப்பது தெரிந்தும்..பணத்தைப்பற்றி கவலைப்படாமல் இருக்கும் வயது.இக்காலத்தில் ஏற்படும் நட்பு சிலருக்கு வாழ்வில்..சிகரெட்,மது,மாது..போன்ற பழக்கங்களை ஏற்படுத்தி வைக்கிறது..அப்படிப்பட்டவர் நட்பு இவ்வயதில் அதிகம் கிடைக்கிறது.இப்படிப்பட்ட நட்பு..ஆசைக்காக..சில எதிர்ப்பார்ப்புகளோடு அமைந்து விடுகிறது.இப்பருவ நட்பு கம்பி மேல் நடப்பது போல.

அதைத் தாண்டி வந்தால்..அலுவலகத்தில், உடன் வேலை செய்வார் நட்பு.இந்த சமயம்...நிறைய சம்பாதிக்க வேண்டும்,சமுதாயத்தில் ஒரு பெரிய மனிதனாக வரவேண்டும்..அவனைவிட நான் பெரிய ஆளாக வர வேண்டும் என்றெல்லாம் எண்ணக்கூடிய சுயநலம் நிறைந்த நட்பு..

பின் ஓய்வு பெற்றதும்..கிடைக்கும் நட்பு...பழைய வாழ்வை அசை போடும் நண்பர்களுடன்.

இப்படி ஒவ்வொரு பருவத்திலும்..பல வேறுபட்ட நண்பர்கள்..பள்ளி பருவம் முதல்..கடைசி வரை தொடரும் நட்பு..ஒரு சிலருக்கே கிட்டும்.அப்படிப்ப நட்பு அமைந்தால் அதுதான் சிறந்த நட்பு..அப்படிப்பட்டவன் தான் சிறந்த நண்பன்.

ஆனால் எப்பருவத்தில்..எவ்வளவு நாட்கள் தொடரும் நட்பாய் இருந்தாலும்..வீட்டில்..பெற்றோரோ,மனைவியோ கோபப்பட்டால், அதைத் தாங்கும் மனம்..நண்பன் ஒருவன் நம்மை தவறாக புரிந்துக் கொண்டால்..கடுமையாக ஏசி விட்டால்/பேசிவிட்டால் தாங்க மாட்டேன் என்கிறது.

இது தான் நட்பின் சிறப்பு.

கோடீஸ்வர எம்.எல்.ஏ..க்கள்

இந்தியாவின் 5 வட மாநிலங்களில் சமீபத்தில் சட்டசபை தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பல உறுப்பினர்கள் கோடீஸ்வரர்கள்.

தேர்தல் நடந்த ராஜஸ்தான்,மத்திய பிரதேசம்,தில்லி,சத்தீஸ்கர்,மிஜோராம் மாநிலங்களின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 629.தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 40சதவிகிதம் கோடீஸ்வரர்கள்.
சுருங்கச்சொன்னால்..இன்று இவர்களால்தான் அரசியலில் ஈடுபடமுடியும்.

இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என அப்துல் கலாம் இல்லை..யார் சொன்னாலும் சரி...பணம் இல்லையேல் அரசியல் இல்லை..அதே சமயம் விரைவில் பணம் சம்பாத்திக்க அரசியலை விட்டால் வேறு தொழிலும் இல்லை.

இந்த கோடீஸ்வரர்களால்...ஏழை மக்களின் தேவை என்ன என்று எப்படி உணரமுடியும்?

இந்த வேட்பாளர்களில்..3 சதவிகிதம் பேரே..5லட்சத்திற்கும் குறைவான சொத்து உள்ளதாக அறிவித்துள்ளனர்.இது உண்மையா என நாம் அறியோம் பராபரமே!

ஆனால் இப்படி அறிவித்தவர்கள் எவரும் தில்லி தேர்தலில் வெற்றிப் பெறவில்லை.தில்லியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 31 சதவிகிதம் 5 கோடிக்கும் அதிகம் சொத்து உள்ளவர்கள்.பின் தங்கிய மாநிலமான சத்தீஸ்கர் எம்.எல்.ஏ.க்கள் கூட கோடீஸ்வரர்கள்.கடந்த தேர்தலில் நின்ற வேட்பாளர்..இந்த தேர்தலிலும் நிற்கும்போது..சென்ற தேர்தலைவிட 1 கோடி அதிகம் சொத்துக் கணக்கு காட்டியுள்ளார்.

அவருக்கு இது எப்படி வந்தது? எப்படி சம்பாதித்தார்..

சாமான்யன் என்றால்...வருமான வரித்துறை குடைந்தெடுக்கும்..சில ஆயிரங்களுக்கே..

ராஜஸ்தானில்..தன் சொத்தின் மதிப்பு 1லட்சம் தான் என்ற வேட்பாளர் வைத்திருப்பது 27 லட்சம் விலையுள்ள பென்ஸ் கார்.

மக்களாட்சி என்றால் மக்களால்..மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சியில்லை இப்போதெல்லாம்..

கோடீஸ்வரர்களால் கோடீஸ்வரர்களுக்காக நடத்தப்படும் ஆட்சிதான் இந்திய ஜனநாயகம்.

இந்நிலை மாறவேண்டுமானால்...

மக்கள், கட்சிக்காக ஓட்டுப்போடாமல்..போட்டியிடும்..யோக்யமான வேட்பாளரை..அவர் எக்கட்சியாயினும் சரி..தேர்ந்தெடுக்க வேண்டும்..

அதுவரை...இந்தியா ஒரு பெரிய ஜனநாயக நாடு என்பது ஏட்டளவில்தான் இருக்கும்

அசைவமா...சைவமா (கவிதை எனில் கவிதை..உரைநடை எனில் உரைநடை)

உணவு விடுதி ஒன்றில்

நான் வெஜிடேரியன்

என்றான் ஒருவன் - மற்றவனோ

நான்வெஜிடேரியன் என்றான்


நான் வெஜிடேரியன் என்பவன்

நானிலத்திலும் இல்லை - எல்லோரும்

நான்வெஜிடேரியனே

விடுதிக்காரன் மேலும் உரைக்கிறான்

அவணியில் விழுந்ததுமே

அன்னை உதிரத்தால் பால் - பின்

ஆவின் உதிரப்பால்

உதிரத்தை சுவைத்தவன்

உண்மையில் நான்வெஜிடேரியன் தானே


வாய் மூடி மௌனியானான்

நான் வெஜிடேரியன் உரைத்தவன்

ஆச்சர்யத்தில் வாய் பிளந்தான்

நான்வெஜிடேரியன்.

Monday, December 15, 2008

தமிழ் எங்கள் உயிருக்கு நேர்....

தமிழ்..

தமிழன்..

இச்சொற்களைக் கேட்கும்போதே..தேன் வந்து பாயுது காதினிலே..

மறுபிறப்பில் எனக்கு நம்பிக்கையில்லை.அப்படி என்று ஒன்று இருந்தால்,அப்பிறப்பும் தமிழனாகவே பிறக்க ஆசை.வள்ளுவன் முதல் கலைஞர் வரை உலகினுக்கு அளித்த தமிழ் மொழியின் சிறப்பு பற்றி ஒரு சில வார்த்தைகள்.

உலகத்திலேயே இறைவனுக்கு தமிழ் மொழியில் உள்ள சொல் போல் எதிலும் இல்லை."கடவுள்".கட எல்லாவற்றையும் கடந்தவர்.உள்.. எல்லாவற்றின் உள்ளும் உள்ளவர்.எவ்வளவு பெரிய தத்துவத்தை இச்சொல் அடக்கியிருக்கிறது.

தமிழில் "ழ" என்ற அருமையான எழுத்து இருக்கிறது."ழ " வரும் சொல் எல்லாமே இனிமை.பழம்,யாழ்,குழல்,குழந்தை,மழலை-இப்படி...

அடுத்து ..மாதா-பிதா-குரு-தெய்வம் என்று சொல்வார்கள்.அதனைப்பாருங்கள்.

அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம்.தமிழின் முதல் உயிரெழுத்து "அ".அந்த எழுத்திலேயே ஆரம்பமாகியுள்ளன முதல் தெய்வங்கள் அம்மா..அப்பா.

இவர்களுக்கு அடுத்து குரு.அதாவது "அ" விற்க்குஅடுத்த எழுத்து "ஆ"...ஆசிரியர்.தமிழின் இரண்டாம் எழுத்தில் ஆரம்பம்.

இவர்களுக்குப்பின் தெய்வம்.அ,ஆ விற்கு பிறகு மூன்றாவது உயிரெழுத்து "இ"..இறைவன்.

நமக்கு இன்றியமையாத தேவைகள் மூன்று.உணவு,உடை,உறையுள்..

இங்கும் முதல் தேவை உணவு..தமிழின் முதல் எழுத்து..அன்னம்.

அடுத்து மானம் காக்க உடை தமிழின் இரண்டாம் எழுத்து.. ஆடை.

மூன்றாவதாக வசிக்க உறையுள்.தமிழின் மூன்றாம் எழுத்து இருப்பிடம்.

இப்படி பலப்பல பெரிய செய்திகளை தனக்குள் அடக்கிய மொழி தெய்வீகத் தமிழ்.

ஆகவே "தேன்மதுரத் தமிழோசை உலகெல்லாம் பரவும் வகை செய்வோம்".

********** *********** ********

ஒரு உபரிச்செய்தி:- தமிழில் ஒன்று முதல் 899 வரை உள்ள அனைத்து சொற்களுமே "உ" கரத்தில் தான் முடியும்.உதாரணம் - ஒன்று.. கடைசி எழுத்து "று".ற் + உ.

899 கடைசி எழுத்து "து" த் +உ.

இறைவன் இருக்கின்றானா?

ஆண்டவன் என்று ஒருவன் இருக்கின்றானா?

மூடநம்பிக்கை..என்று நாத்திகம் பேசும் பகுத்தறிவாளர்கள் கூட சிலசமயம் ..இறைவன் இருக்கின்றானா என தங்களுக்குள்ளாகவாவது கேட்டுக்கொண்டு இருப்பார்கள்.

தன் வாழ்நாளில் பெரும் பகுதியை நாத்திகனாக கழித்தவர் கவிஞர் கண்ணதாசன்.

இறைவன் இருக்கின்றானா-அவன்
இருந்தால் எங்கே வாழ்கிறான்.
நான் ஆஸ்திகன் ஆனேன்
அவன் அகப்படவில்லை
நான் நாத்திகன் ஆனேன்
அவன் பயப்படவில்லை என்றும்

தெய்வம் என்றால் அது தெய்வம்
வெறும் சிலை என்றால் வெறும் சிலைதான்
உண்டு என்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை

என்றும் பாடல் எழுதியிருக்கிறார்.பின் நாட்களில் அவரே ஆஸ்திகனாக மாறி கடவுள் இருக்கிறார் என்று நம்பியதுடன் ....அர்த்தமுள்ள இந்துமதம் தந்தார்.

இறை நம்பிக்கை இல்லா கலைஞரும் பல சமயங்களில் "என் ஜாதகம் அப்படி" என்று கூறியதுண்டு.

பகுத்தறிவாளரான அறிஞர் அண்ணா கூட "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்றிருக்கிறார்.

பின் அதுவே ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்று சொல்லப்பட்டது.

இதுபற்றி சத்குரு-ஜக்கி வாசுதேவ்விடம்" நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா?"என்று ஒரு முறை கேட்கப்பட்டது.அதற்கு அவர் பதில்

"கடவுள் என்று நீங்கள் எதைக்சொல்கிறீர்கள்?உங்களைச்சுற்றி படைக்கப்பட்டு இருக்கும் இந்த பிரம்மாண்டத்தை உருவாக்கிய சக்தியைத்தானே? அந்த சக்தி எங்கே குடியிருக்கிறது?
எங்கே எல்லாம் படைப்பு நிகழ்கிறதோ ..அங்கல்லாம் தானே...அதோ அந்த மேகத்தில்,மணல் துகளில்,இந்த பூவில்,உங்களில்,என்னில் என்று எங்கும் நீக்கமற கடவுளைத்தவிர வேறு எதை
நீங்கள் காணமுடியும்.?ஒவ்வொரு படைப்பிலும்..அதைப் படைத்தவன் இருக்கின்றான் என்பதை புரிந்துக் கொண்டால்...தினம்..தினம்..கணத்துக்கு கணம்..உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றிலும் கடவுளைக் காணலாம்.." என்றார்.

அது சரி..இந்த பதிவு எழுதும் நீ இறைவன் இருக்கிறான்..என்று சொல்கிறாயா? என்கிறீர்களா?

அதற்கு என் பதில்'நான் எங்கே அப்படிச் சொன்னேன்? ஆனால் இருந்தால் நன்றாயிருக்கும்."

அம்மா என்றால் அம்மாதான்..(.சிறுகதை )

தனக்கு முன்னால் தட்டில் கொண்டுவந்து வைக்கப்பட்ட அந்த ஸ்வீட்டைப் பார்த்தான் பிரபு.அவன் அம்மாவின் முகம் அதில் தெரிந்தது.

அவனுக்கு இந்த ஸ்வீட் பிடிக்கும் என எவ்வளவு நாட்கள் அம்மா அதை செய்து கொடுத்திருக்கிறாள்.அம்மாவுக்கு மட்டுமே செய்ய தெரிந்த இனிப்பு அது.என்னுடைய ஸ்வீட் அம்மாவின் ஸ்வீட் அது என்று ர(ரு)சித்தபடியே சாப்பிட்டுஇருக்கிறான் அவன்.

அதெல்லாம் பழைய கதை.

அவனுக்கு திருமணம் ஆனவுடன் அம்மா அவனுடைய மனைவி மைதிலியிடம் " இதோ பாரும்மா: இனிமேல் அவனை கவனிக்கவேண்டியது உன் பொறுப்பு.ஆனா இந்த ஸ்வீட் சமாசாரத்தை மட்டும் நான் பார்த்துக்கொள்கிறேன்.இதை நான் செய்தால் தான் அவனுக்கு பிடிக்கும்." என்று கூறிவிட்டாள்.

வீட்டுக்கு வீடு வாசற்படி.அவன் விஷயத்திலும் நடந்தது.

ஆம்..மைதிலிக்கும்..அம்மாவிற்கும் ஒத்து வராததால் தனிக்குடுத்தனம் வந்து விட்டான் அவன்.

அப்போது கூட..'அம்மா..அந்த ஸ்வீட் பண்றதை மைதிலிக்கு சொல்லிக்கொடு' என்று அவன் கூற..அம்மா செய்முறையை எழுதி அவளிடம் கொடுத்தாள்.

அதற்குப் பிறகு மைதிலி எவ்வளவோமுறை அதை செய்துக் கொடுத்து விட்டாள்..ஆனாலும் அம்மா செய்வது போல இல்லை..அந்த கைப் பக்குவம் வரவில்லை.இதை மைதிலியிடம் அவனாக சொல்லாவிட்டாலும்,அவளுக்கும் தெரிந்தே இருந்தது.

அதனால் எவ்வப்போது அவனுக்கு அந்த ஸ்வீட் சாப்பிட ஆசையோ அப்பவெல்லாம் அம்மாவைப் பார்க்க கிளம்பி விடுவான்.

***** ***** ****** ***** *****

'என்ன உங்கம்மா பண்ற மாதிரி இல்லையா'-மைதிலி

தலையை மேலும் கீழும் ஆட்டினான்.மைதிலிக்கு பதிலா அல்லது அந்த ஸ்வீட்டை சாப்பிடும் அழகா என அவனுக்கு மட்டுமே தெரியும்.

இது நடந்து ஒரு வாரம் ஓடிவிட்டது.

இன்று அவனது பிறந்த நாள்.அம்மா சாப்பிடக் கூப்பிட்டிருந்தாள்.கண்டிப்பாக அந்த ஸ்வீட் இருக்கும்.மைதிலியுடன் கிளம்பினான் பிரபு.

அவர்கள் வீட்டிற்குள் நுழைந்த போது..அம்மா குளியலறையில் இருந்தாள்.

அவனும்,மைதிலியும் அடுக்களையை நோட்டம்விட்டனர்.அம்மாவின் பழைய டயரி ஒன்று கிடைத்தது.அதை எடுத்து புரட்டுகையில்...பக்கத்தில் அந்த ஸ்வீட் செய்முறை இருந்தது.

அதை படித்த மைதிலி...ஆச்சரியத்துடன் "பார்த்தீங்களா:ஸ்வீட்டில் இந்த பொருட்களையெல்லாம் சேர்க்கணும்னு உங்க அம்மா சொல்லித்தரல்லை.அதனால்தான் உங்க அம்மா செய்வதுபோல வரல்லை'என்றவாறு தேவையான பொருட்கள் எழுதியிருந்த பகுதியை சுட்டிகாட்டி அம்மா மீது குற்றம் சாட்டினாள்.

அதை பார்த்த பிரபுவின் முகத்தில்...கோபம்...வருத்தம்...குழ்ப்பம்...

ஆம்...அம்மா முழுமையாக மைதிலிக்கு சொல்லித்தரவில்லை.ஒருவேளை மைதிலி தன்னிடம் நல்ல பெயர் எடுக்கக்கூடாது என்பதற்காகவா? ...ச்சே...அப்படிபட்டவளா அம்மா என்று எண்ணியவன் வாயிலிருந்து அவனை அறியாமலேயே வார்த்தைகள் வெளியே வந்து விழுந்தன.

நடந்ததை எல்லாம் அடுக்களையின் வாயிலிலிருந்து கேட்டுக்கொண்டிருந்த அம்மா...கண்களில் கண்ணீர் கொப்பளிக்க "பிரபு: என்னை மன்னிச்சுடுடா..நீ தனி குடித்தனம் போனதும் .இந்த ஸ்வீட் சாப்பிடுவதற்காகவே என்னை பார்க்க வர்றே..ஒரு வேளை மைதிலியும் என்னைப்போல செய்ய ஆரம்பித்துவிட்டால் ..நீ வர்றதையும் நிறுத்திவிடுவே...உன்னை பார்க்காமல் என்னால் இருக்கமுடியாதுடா... அதனால்தான் இப்படி கீழ்த்தரமாக நடந்துண்டுட்டேன்..தப்புன்னா மன்னிச்சுடுடா"கூப்பிய கைகளுடன் வார்த்தைகள்...துண்டு துண்டாக குமுறலுடன் வந்தன.

அம்மான்னா அம்மாதான் என்றவாறே நாத்தழுதழுக்க அம்மாவை அணைத்துக்கொண்டான் பிரபு.

Sunday, December 14, 2008

ஊடகங்கள் பொறுப்புணர்ந்து செயல்படட்டும்

.
நான்காவது தூண் என சொல்லப்படுபவை ஊடகங்கள்.

மக்களுக்கு அவை சமுதாயத்தில் நடக்கும் செய்திகளை தெரிவிக்க வேண்டிய, பெரும் பொறுப்பில் உள்ளன.ஆனால்...சமீப காலங்களில் ...அவை வெளியிடும் செய்திகள்...சில அரசியல் கட்சிகளுக்கு ஜால்ரா அடிப்பவையாகவும்,ஜாதி வெறியை தூண்டுபவையாகவும்,அரசு சார்புடையதாகவுமே இருந்து வருகின்றன.

சமீபத்தில் சென்னை சட்டக் கல்லூரியில் நடந்த கலவரத்தை..மீண்டும்...மீண்டும் காட்டி..குறிப்பாக ஒரு பிரிவை சார்ந்த மாணவன் மயங்கி விழுந்தும், அடிபடுவதையும்..வேறோரு பிரிவு மாணவன் கையில் கத்தியுடன் திரிந்ததையும்.. காட்டிக் கொண்டிருந்தனர்.இவை மறைமுகமாக சம்பந்தப்பட்ட பிரிவினரிடையே..வன்முறை எண்ணத்தை தூண்டி விடுவதைப் போலவே இருந்தன.

தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு..ஒவ்வொரு செய்தியையும்...நுணுக்கமாக ஆராய்ந்து..சரியான செய்திகளை மிகைப்படுத்தாமல்..வன்முறை தூண்டிவிடும் செய்திகளை சற்றுக் குறைத்தும்..மக்களிடம் சென்றடைய செய்ய வேண்டியது கடமை.

மும்பைகுண்டு வெடிப்பில்..CNN போன்ற தொலைக்காட்சி நிறுவனங்கள் முழு நேரமும் இடைவிடாது ஒளி/ஒலி பரப்பிக்கொண்டிருந்தார்கள்.அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் ஓட்டு எண்ணிக்கையைக்கூட இப்படி இடைவிடாமல் cover செய்திருக்கமாட்டார்கள்.சம்பந்த பட்ட ....சம்பந்தப்படாதவர்களிடம்...சம்பவ இடத்தில் .இளம் பெண் நிருபர்கள் பேட்டி எடுப்பதை காட்டிக்கொண்டிருந்தார்கள்.

குண்டு வெடிக்கும் சமயம் ..மக்களோடு மக்களாய் காவல்துறையை சேர்ந்த ஒருவர் படுத்துக்கொண்டதை வட்டம் போட்டு காட்டி ..அவர் செய்யக்கூடாததை செய்ததுபோல் மாற்றி மாற்றி காட்டினர்.தவிர..நமது காவல் துறையும் சில நிர்வாக ரகசியங்களை அவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் நிகழ்ச்சிகளும் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது.

நடுநிலை என்ற தன்மையே ஊடகங்களில் காணப்படுவதில்லை.இலங்கை பிரச்சனையை இவை எவ்வளவுதூரம் மக்களிடம் சென்றடைய செய்தன.அவதிப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதால் ஒரு சமயம் இவர்கள் சரியாக செயல் படவில்லையோ என்றே எண்ணத் தோன்றுகிறது..

கடைசியாக -

சினிமாவுக்கு தணிக்கைக்குழு உண்டு.

நாடகங்களுக்கு script க்கு போலீஸ் கமிஷனர் அனுமதி தேவை.

ஆனால் இந்த ஊடகங்களுக்கோ எந்த தணிக்கை முறையும் இல்லை.

இனி கலவரம் நடைபெறும் சமயத்தில் ..நேரிடை நிகழ்ச்சிகள் காட்டப்படக்கூடாது.அப்போது எடுக்கப்பட்ட காட்சிகளை தணிக்கை செய்தபின்னர் காட்டலாம் என்ற சட்டம் இயற்றலாம்.

இல்லை...இப்படிப்பட்ட நிலை நீடித்தால் ..

ஊடகங்களால்... மககளிடையே வன்முறையும் சாதி வேறுபாடுகளும்,அரசியல் காழ்ப்புணர்ச்சிகளும் அதிகரிக்குமே தவிர .. குறையாது.

ஊடகங்கள் அவர்களின் பொறுப்புணர்ந்து செயல்படட்டும்.

நலம் நலம் அறிய ஆவல்

இன்று எனது வலைப்பதிவிற்கு வந்திருக்கும் உங்களுக்கு ..என் அன்பு வணக்கம்.

இணையதளம்...

நம் எண்ணங்கள்,எழுத்துக்கள் எல்லாமே பத்திரிகைகளால் ஏற்கப்பட்டு ..பத்திரிகைகளில் வெளிவருவது என்பது நடக்காத,நடக்க முடியாத செயல்.

ஆனால்..நமக்கென இணையதளத்தில் தனி வலைப்பூ ஆரம்பித்து விட்டால்...

நம் எண்ணங்களை அதில் பதித்திடலாம்.

நாம் எழுதும் தரத்திற்கேற்ப..அவற்றை படிப்பவர்கள் எண்ணிக்கையும் கூடும்.

நான் எழுதுவதை படிக்க இப்போதெல்லாம் 400 முதல் 500 பார்வையாளர்கள் வருகின்றனர்.

இப்பதிவு எழுதும் நேரத்தில் இதுவரை 33122 பேர் வந்துள்ளனர். நான் எழுத ஆரம்பித்த இக்குறுகிய காலத்திலேயே..பலரால் கவனிக்கப்பட்டேன்.

என்னை ஊக்குவித்து..என்னை இவ்வார ஸ்டார் பதிவராக தேர்ந்தெடுத்த தமிழ்மணத்திற்கு நன்றி.

எனக்கு ஆதரவு தரும் சக பதிவர்கள்..என் பதிவிற்கு பின்னூட்டம் இட்டு ..மேன் மேலும் எழுததூண்டிய நண்பர்கள்..வருகை தந்த மற்ற நண்பர்கள் ஆகிய அனைவருக்கும் நன்றி.

இவ்வார என் பதிவுகளை படியுங்கள்...உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள்.

நன்றி...

Saturday, December 13, 2008

வை.கோ.விற்கு ஒரு கடிதம்...

வணக்கம்.

தங்கள் மேடைப் பேச்சில் மயங்குபவர்களில் நானும் ஒருவன்.

தி.மு.க.வின் தானைத்தலைவனாய் இருந்த நீங்கள்...வெளியேற்றப்பட்ட போது கூடமனம் வருந்தியவர்களில் நானும் ஒருவன்.தாய்க்கழகத்திலிருந்து..தங்களது விலக்கம் குறித்து இப்பதிவில்
எதுவும் எழுதப்போவதில்லை.ஏனெனில் தாய்வீட்டில் உள்ள உங்கள் மனதிற்கு எல்லாமே தெரியும் என்பதால்.

அப்படியெனில் இப்பதிவின் நோக்கம்...?

தேவையில்லாமல் POTA வில் கைதாகி இருந்த போது..கலைஞர் பட்ட வேதனையும்..அவர் அப்போது உங்களைப் பார்க்க பட்ட கஷ்டங்களையும்..எல்லோருமே அறிவர். பின்னர் மாறனின் மறைவிற்கு நீங்கள் வந்திருந்த போது..கலைஞரும்,நீங்களும்..மாறனின் இழப்பில் அழுதது...அதை தொலைக்காட்சியில் பார்த்த என்னைப்போன்றோர் ,மீண்டும் தாய்க்கழகத்தில் நீங்கள் இணைய வேண்டும் என்று விரும்பினோம்.

கடந்த சட்டசபை தேர்தலில் அதற்கான காலம் கனிந்து வருவது போல இருந்தது.ஆனால் தொகுதி ஒதுக்கீட்டில்..தங்கள் கட்சிக்கு ஒதுக்கிய தொகுதிகள் போதாது என்று..கடைசி நிமிடம்
நீங்கள் அணி மாறினீர்கள்.

ஆனால் இப்போது நடப்பது என்ன?

தமிழக அரசியல்வாதிகள் கோமாளிகள் என்ற போது கூட ஜெ கண்டனம் தெரிவிக்காதவர்.

அந்த கூட்டணியில் உள்ள நீங்கள்..உங்களுக்கு ஒதுக்கிய தொகுதி எம்.எல்.ஏ., மறைவிற்கு பின் நடக்கும் அத்தொகுதி இடைத் தேர்தலில்..போட்டியிட அ.தி.மு.க.விற்கு விட்டுக்கொடுத்துள்ளதாக செய்திகள் படித்தோம்.(ஒருவேளை அது காலத்தின் கட்டாயமோ!!!)

இந்த விட்டுக்கொடுத்தலை..முன்னரே கலைஞருக்கு செய்திருந்தால் ..மீண்டும் தாய்வீடு வந்த உற்சாகம் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும்.

தன்மானம் காத்த தானைதலைவனாய் இருந்திருப்பீர்கள்.

இப்பவும் ஒன்றும் கெட்டுப்போய் விடவில்லை...

Better Late than Never

என்றும் அன்புடன்

ஒரு தமிழன்

படித்ததும்...கேட்டதும்... 13-12-08

1. உலகிலேயே அதிக எண்ணிக்கையில் டாக்டர்களையும்,நர்ஸ்களையும் உருவாக்கும் நாடு இந்தியா.

2.குற்றங்களும் தவறுகளும் உருவாக..வேலையில்லாததும்,வறுமையும்தான் முதல் காரணமாய் இருக்க முடியும்.நோய் என்ன வென்று கண்டுபிடிச்சாத்தான் சரியான மருந்து கொடுக்க முடியும்.

3.பிறக்கும் போது நான் இந்துவாகப் பிறந்தது என் குற்றமில்லை..ஆனால் இறக்கும் போது ஒருக்காலும் ஒரு இந்துவாக இறக்க மாட்டேன் - அம்பேத்கர்

4.ஒரு உயிரினம் அழியாமல் தடுத்த பெருமை பெட்ரோலியத்திற்கு உண்டு.முன்னர் விளக்கு எரிக்க திமிங்கில எண்ணெய்யை பயன்படுத்தினர்..இதனால் திமிங்கிலம் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது..பெட்ரோலியத்தின் ஒரு அங்கமான மண்ணெண்ணெய் கண்டுபிடிக்க திமிங்கிலங்கள் தப்பின.

5.திருமங்கலத்தில் ம.தி.மு.க.,வின் தொகுதியை அ.தி.மு.க.விற்கு விட்டுக்கொடுத்தார்.வை.கோ., -செய்தி
(இந்த விட்டுக்கொடுப்பு முதல்லேயே இருந்திருந்தால் தி.மு.க. அணியிலேயே இருந்திருக்களாமே தன்மானம் காத்திருக்கலாமே-நாம்)

6.ஆனந்த விகடனில் சமீபத்தில் வந்த லக்கிலுக்கின் கவிதையில் சில வரிகள்

'கள்ளக் கவிதை'

காதல் கழுதை

முன்னே போனா

முட்டுது

பின்னே வந்தா

உதைக்குது.

7.ஆண்டுக்கு 1000 கோடிகளுக்கு மேல் வருமானம் இருந்தாலும்..திருப்பதி கோவில் அரசுக்கு வரிபாக்கி வைத்திருக்கிறது.

8.சமீபத்தில் மறந்த வி.பி.சிங் கிற்கு பாராளுமன்றத்தில் சிலை வைக்க தி.மு.க. முயற்சிகள் மேற்கொள்ளும் - கலைஞர்

Friday, December 12, 2008

ஐஸ்வர்யாராய்க்கே அடுத்த இடம்தான் நமீதாவின் இந்திய சாதனை!

நடிகர் சங்கம் ஒரு விழாவே எடுக்கலாம் பின் வரும் செய்திக்காக! கூகுல் இணையதளத்தில் அதிகம் தேடப்பட்ட நடிகர், நடிகைகள் லிஸ்டில் மூன்றாவது இடத்திலிருக்கிறார் நமீதா.
இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ள ஒரே தென்னிந்திய நடிகை இவர் மட்டும்தான்! இவருக்கு பிறகுதான் இருக்கிறாராம் ஐஸ்வர்யாராயே! கூகுள் சர்ச் என்ஜின் பற்றி இணையதள வாசகர்களுக்கு சொல்லி தெரிய வேண்டியதில்லை. எந்த புகைப்படம் தேவை என்றாலும், இந்த சர்ச் என்ஜினுக்கு போய் தேடி டவுன்லோடு செய்து கொள்ளலாம். அப்படி நமீதாவை தேடியவர்களின் எண்ணிக்கை 2008 ம் வருடத்தில் மட்டும் சுமார் 3 கோடி பேர்களாம். முதலிடத்தில் கேத்ரீனா கைப், இரண்டாமிடத்தில் சல்மான் கான், மூன்றாவது இடத்தில் நமீதா!

“இந்த பெருமைக்கு காரணம் என்னுடைய ரசிகர்கள்தான். அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளும் வாழ்த்துக்களும்” என்கிறார் நமீதா. அப்படியே இந்த மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டிருக்கும் கூகுள் நிறுவனத்திற்கும் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார் நமீ!

நன்றி .தட்ஸ் தமிழ்

முறுக்கு..எத்தனை முறுக்கு..

முறுக்குகளில் கை முறுக்கு தவிர..தேங்குழல்.முள்ளு முறுக்கு ஆகியவையும் முறுக்கு ஜாதியில் சேரும் (இதிலும் ஜாதியா)

நம் வாழ்வில் பல வேளைகளில் நம்முடன் பின்னி பிணைந்து விட்டது இது.

கல்யாணம் போன்ற விஷேசங்களில் சீர் வரிசையில் முறுக்குக்கு முதலிடம் உண்டு.

9 சுற்று முறுக்கு,7 சுற்று முறுக்கு,5 சுற்று முறுக்கு என கை முறுக்கில் மட்டும் பல வகை உண்டு.சுற்றுகள் அதிகமாக..அதிகமாக..முறுக்குகளுக்கு முறுக்கு அதிகமாகிவிடும்.கடையில் வாங்கும் முறுக்கு இரண்டு சுற்று என்பார்கள்..ஆனால்..ஒன்றரை தான் இருக்கும்.

முறுக்குக்கு பந்தா என்றும் பெயர் உண்டு.

மாப்பிள்ளை முறுக்குப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள்.மாப்பிள்ளை மாமனார் வீட்டில் காட்டும் பந்தாவிற்கு அந்த பெயர்.ஆனால் இப்ப எல்லாம் மாப்பிள்ளை முறுக்குப் போய் மணப்பெண் முறுக்கு வந்து விட்டது.

நான் படிக்கும் போது முதல் ராங்க் (நம்புங்க வாங்கியிருக்கேன்) வாங்கும் போது..சக மாணவர்களுடன் முறுக்கிக்கொண்டது உண்டு..அதே சமயம் ராங்க் இறங்கும் போது முதலில் வந்த மாணவன் காட்டும் முறுக்கிற்கு..எவ்வளவு அகம்பாவம் பார் அவனுக்கு என்றதுண்டு.

கலைஞர் கூட..வைகோ..தி.மு.க.விலிருந்து போய் ம.தி.மு.க.,ஆரம்பித்தபின்..தேற்தலில் தி.மு.க.உடன் கூட்டணி வைத்தபோது..வைகோவைப் பார்த்து..ரொம்ப முறுக்கிக்காதே என்றதுண்டு.

வீடுகட்டும் போது முறுக்கு ஸ்டீல் கம்பிகள் பயன்படுத்தப்படும்.

சரி..சரி..இந்த பதிவை படிச்சுட்டு,,ஏன் முறுக்கிக்கிட்டு போறீங்க..


என்ன இவன் கூட இப்படி கேட்கிறானே(ரே ன்னு மரியாதை குடுப்பீங்கன்னு தெரியும்) னு நினைக்கிறீங்களா?

என்ன பண்றது...வாயுள்ள பிள்ளைதானே பிழைச்சுக்கும்.

Thursday, December 11, 2008

அதி புத்திசாலி அண்ணாசாமியும்..ஊழலும்..

கொஞ்ச நாட்களாக மத்திய அரசை திட்டிக்கொண்டிருந்த அண்ணாசாமி திடீரென புகழ ஆரம்பித்து விட்டார்.

மும்பையிலே குண்டு வெடிச்சா தில்லி லே இருக்கிறவங்களுக்கு எப்படி காது கேட்கும்..அதனால் மத்திய அரசை இந்த விஷயத்தில் குறை சொல்லக்கூடாது.இதுவரை இருந்த பிரதமர்களிலேயே மன்மோகன் சிங் தான் பெஸ்ட்..சோனியா மாதிரி ஒரு ஒப்பற்ற தலைவர் 1885ல் காங்கிரஸ் ஆரம்பிச்சதிலிருந்து இப்போதான் கிடைச்சிருக்காங்க.இப்படிப்பட்ட காங்கிரஸ் அரசை தேர்ந்தெடுக்காத மத்திய பிரதேஷ்,சட்டீஸ்கர் மக்கள் கஷ்டப்படப்போகிறார்கள்.இப்படியெல்லாம் பார்த்தவர்களிடையே எல்லாம் பேத்த ஆரம்பித்து விட்டார்.

அதி புத்திசாலியின் நண்பர் ஒருவர்..இது பற்றி அவரிடம் கேட்க..

யாரிடமும் சொல்லக்கூடாது என்று அண்ணாசாமி சொன்ன விஷயம்.

'என் மீது வருவாய்க்கு அதிகமா சொத்து சேர்த்த வழக்கு இருக்கிறது.மத்திய அரசை ஆதரிச்சா வழக்கை வாபஸ் வாங்கிடுவாங்க' என்றார்.

(முலாயம்சிங் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு . உச்ச நீதி மன்றத்தில் இருந்தது..கம்யூனிஸ்ட்கள் மத்திய அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் வாங்கியதால்..காங்கிரஸ் அரசு கவிழாமல் இருக்க முலாயம் தன் கட்சி ஆதரவை அளித்தார்.இப்போது அவர்மீது இருந்த வழக்கு வாபஸ் ஆனது..அதற்கும் நம் அண்ணாசாமியின் முடிவுக்கும்சம்பந்தம் ஏதுமில்லை)

தீர்மானித்து விட்டேன்...இன்று எந்த பதிவும் இடக்கூடாது என்று.

சில சக பதிவர்களும், என் நண்பர்களும்.சொல்கிறார்கள்..

மதுவிற்கு அடிமை ஆவது போல, புகை பிடிப்பதற்கு அடிமை ஆவது போலத்தான்..இந்த பதிவும்.,இதற்கு அடிமை ஆகி விட்டால் கணிணி விட்டு எழுந்திருக்க முடியாது என்று.

அது தவறு..மன உறுதி இருந்தால், எந்த பழக்கத்திலிருந்தும், வேண்டாம் என்னும் போது வெளியே வந்து விடலாம்.

இன்று காலை எழுந்ததும்..என் வீட்டு அம்மாகிட்டே சொல்லிட்டேன்..நான் இன்னிக்கு முழுதும் கணிணி பக்கமே போகப்போவதில்லை.உனக்கு வேண்டுமானால் சமையல் குறிப்பு போட்டுக்கொள் என்று.என்னை அவங்களும் வினோதமாக பார்த்துவிட்டு..அன்றாட வேலைக்கு அடுக்களைக்குள் நுழைஞ்சிட்டாங்க.

உட்கார்ந்து..ஒரு புத்தகத்தை கையில் எடுத்த நான்...ஒரு பக்கம் படித்திருப்பேன்..திடீரென..பதிவுதானே போடமாட்டோம் என்றோம்..நேற்று போட்ட பதிவிற்கு ஏதேனும் பின்னூட்டம் வந்திருக்கிறதா பார்ப்போம்..என..அடுக்களைக்குள் ஒரு பார்வையை வீசி விட்டு கணிணி முன் அமர்ந்து அதை இயக்கி, தமிழ்மணத்திற்கு வந்தேன்.

நாம என்ன கோவியா,பரிசலா,தாமிராவா இல்லை வேலனா ..பின்னூட்டம் வந்து குவிய..எப்பவும் போல நசரேயனும்,குடுகுடுப்பையும் பின்னூட்டம் போட்டிருந்தனர்.

"என்ன ஆச்சு..உங்க தீர்மானம்" உள்ளிருந்து குரல்.

பின்னூட்டம் பார்க்கிறேன்...என்றவன் கை கீ போர்டில் தாளம் போட்டது..

பிறகு...இன்று மட்டும் பதிவு போட்டிடுவோம்...எந்த பழக்கத்தையும் உடனே நிறுத்தக்கூடாது என்று தீர்மானித்தேன்..

காலையிலிருந்து இதே சிந்தனையில் இருந்து விட்டதால் பதிவிட மேட்டர் யோசனை செய்யவில்லை (ஆமாம்..இவர் பதிவிலே எல்லாம் ரொம்ப மேட்டர் இருக்கு...அப்படின்னு ஏன் முணுமுணுக்கிறீங்க)

சரி இதையே ஒரு பதிவா இன்னிக்கு போட்டுடலாம்..நாளைக்கு பார்த்துக்கலாம்..

எனக்கு மன உறுதி அதிகம் ..ஆமாம் சொல்லிட்டேன்.

தனக்குத்தானே என்ன பேசிக்கறீங்க..அடுக்களையிலிருந்து குரல் கேட்கிறது.

Wednesday, December 10, 2008

கோமாளிகள்..'ஜெ' கண்டனம் தெரிவிக்காதது ஏன்?

சமீபத்தில் இலங்கை ராணுவத் தளபதி பொன்சேகா தமிழக அரசியல் தலைவர்கள் கோமாளிகள் என்றும்..புலிகளிடம் பணம் பெறுபவர்கள் என்றும், அதனால் அவர்களை ஆதரிக்கின்றனர் என்றும் கூறியிருந்தார்.

அவர் எந்த தலைவர்களை கூறினார் என்பது வெள்ளிடைமலை.

ஒரு திருமண விழாவில் கலைஞர் இது பற்றி பேசும்போது..பொன்சேகாவின் கோமாளி அறிவிப்பை..தான் உள்பட அனைத்து தலைவர்களும் கண்டித்தோம். நமக்குள் ஆயிரம் இருந்தாலும் தமிழனை விட்டுக்கொடுப்பதில்லை.ஆனால் கண்டித்த தலைவர்களில் ஒரு முக்கிய கட்சி தலைவர் பெயர் இல்லை.அவர் யார்..என்றதும்..பலர் 'ஜெயலலிதா" என்றனர்.

இப்போது தெரிந்து கொள்ளுங்கள் யார் தமிழர்கள் என்று என்ற பொருள் பட பேசினார்.

பிரசாதமும்...கடவுளும்...நானும்..

TBCD ஐயா பிரசாதத்தை கடவுள் நம்பிக்கை இல்லாதவன் சாப்பிடலாமா? என்று பதிவு போட்டிருந்தார்.

எனக்கு இறை நம்பிக்கை இல்லை என்றாலும்..எங்க வீட்டு அம்மாவோட கோவிலுக்குப் போவேன்..வாசல்லயே நின்னுக்கிட்டு அவங்களை உள்ளே போய் கும்பிட்டுட்டு வரச்சொல்வேன்.நீங்க உள்ள வரல்லேனா..அவசர அவசரமா கும்பிட்டுட்டு வரவேண்டியிருக்கும்பாங்க.

அப்போ நான் சொல்லுவேன்..கோவிலுக்குப் போற உன்னைவிட எனக்குத்தான் புண்ணியம்னு.

நீ போனா என்னைப்பத்தியே நினைச்சுக்கிட்டு இருக்கே..ஆனா நான்..நீ இவ்வளவு நேரம் சிவன் கோயிலை முடிச்சிருப்பே,இப்போ அம்மன் சன்னதி வந்திருப்பே,அடுத்து நவகிரகம் மீதின்னு நீ கும்பிடற ஆண்டவனை நினைச்சுக்கிட்டு இருக்கேன்னு.

சரி விஷயத்திற்கு வரேன்..

ஒவ்வொரு கோவில்ல ஒவ்வொரு பிரசாதம் ருசி.

பெருமாள் கோவில் புளியோதரை ருசி..வேற எங்கேயும் பார்க்க முடியாது.

திருப்பதி தேவஸ்தான லட்டுவாயிருந்தாலும் சரி..வெளி கடைகள்ல விற்கும் லட்டுவானாலும் சரி..அதன் டேஸ்டே..வேறு எந்த இடத்து லட்டுலேயும் இல்லை.மடப்பள்ளி சக்கரைபொங்கல் நன்றாயிருக்கும்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் வடை பிரமாதம் (டோண்டு சார்...நான் சொல்றது சரிதானே)

சிவன் கோவில்,முருகன்கோவில்ல ..அதிரசம்.முறுக்கு நல்லாயிருக்கும்.

ஸ்ரீரங்கம் கோவில் தயிர்சாதம்..

அமெரிக்கா பிட்ஸ்பர்க்ல பாலாஜி கோவில் கேண்டீன்ல சாம்பார் சாதம்.மிக்ஸர் ருசி.

வேறு எங்கங்க பிரசாதம் நல்லாயிருக்கும் சொல்லுங்க..ஒரு விஸிட் அடிச்சிடுவோம்.

Tuesday, December 9, 2008

வாய் விட்டு சிரியுங்க..

1.யூனியன் தலைவர்- நம் அலுவலகத்தில் நம் மேல் திணிக்கப்படும் வாலண்டரி ரிடைர்மெண்டை எதிர்க்கும் விதத்தில் நான் முதலில் இந்த ஸ்கீமில் வெளியேறி நிர்வாகத்திற்கு ஒரு பாடம்
கற்பிக்க உள்ளேன்.

2.நான் உங்கிட்டே சொல்லாதேன்னு சொன்ன ரகசியத்தை நீ சுஜாதாகிட்ட சொல்லிட்டதா சொன்னாளே
நான் சுஜாதா கிட்டே சொன்னதை உங்கிட்டேசொல்லாதேன்னு சொன்னேனே சொல்லிட்டாளா
சரி...சரி..நான் அவ கிட்ட உன் கிட்ட சொல்ல மாட்டேன்னு சொல்லி இருக்கேன்..அதனால நான் அவ சொன்னதை உன் கிட்ட சொன்னதை அவகிட்ட சொல்லிடாதே
(படிக்கும் ரங்கமணிகளுக்கு தலை சுற்றுகிறதா)

3.அந்த தமிழ் படம் பார்க்கிறவங்களுக்கெல்லாம் ஒரு சின்ன புத்தகம் தர்றாங்களாமே
அது..அந்த படத்தில வர தமிழ் பாட்டுக்களுக்கு தமிழ் அர்த்தம் போட்டிருக்காங்களாம்.

4.குழந்தை-(சிரசாசனம் செய்யும் தந்தையைப் பார்த்துவிட்டு)அம்மா...அம்மா..சீக்கிரம் வாயேன்..அப்பாவுக்கு தலை இருக்க வேண்டிய இடத்திலே கால் இருக்கு..கால் இருக்க வேண்டிய இடத்திலே தலை இருக்கு.

5.என் பையன் என்னைவிட தைர்யசாலி..என் மனைவி எதைச் சொன்னாலும் எதிர்த்து பேசுவான்.

6.நீ காதலிக்கிற பெண்ணைப்பற்றி என் அபிப்பிராயம் எதுக்கு தம்பி கேட்கிறே?
அந்த பெண்ணைப்பற்றி எனக்கு ஒரு வருஷமாகத்தான் தெரியும்...உங்களுக்கு இருபது வருஷமா தெரியுமே!

முதலில் தமிழ் பின் ஹிந்தி மீண்டும் தமிழ் படம்

சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பத்தேவர் ஒரு வெற்றி தமிழ்ப் பட தயாரிப்பாளர்.புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்.ஐ வைத்து பல படங்களை எடுத்தவர்.முதன் முதலில் மிருகங்களை வைத்து படமெடுத்தவர் இவர்தான்.

அவர் மேஜர் சுந்தரராஜன் நடிக்க..குறைந்த செலவில்..தெய்வச்செயல் என்ற படத்தை எடுத்தார்.யானைகள் நடித்தன.படம் வெற்றிப் பெற்று கணிசமான லாபத்தை ஈட்டிக்கொடுத்தது.

பின் அதே கதையை ஹிந்தியில் 'ஹாதி மேரே சாதி' என்று ராஜேஷ் கன்னா,தனுஜா நடிக்க எடுத்தார்..யானைகளும் உண்டு.மாபெரும் வெற்றி.

மீண்டும் எம்.ஜி.ஆர்.,விஜயா நடிக்க அதே கதையை 'நல்ல நேரம்' என தமிழில் எடுத்தார். பெரும் வெற்றி.

ஒரே கதை..தமிழ்..ஹிந்தி..தமிழ் என வெற்றிப்பெற்றன.

Monday, December 8, 2008

கலைஞர் போற்றிய பார்ப்பனர்கள்

திராவிட இயக்கத்தில் இளமைக் காலந்தொட்டே என்னை ஒப்படைத்துக் கொண்டவன் என்றாலும்; பார்ப்பன சமுதாயத்தில் பண்பார்ந்த மேதைகளை நான் பாராட்டிப் போற்றிடத் தவறியதில்லை.

மகாகவி பாரதி தொடங்கி, மூதறிஞர் ராஜாஜி, வ.வே.சு. அய்யர், தியாகி ஆர்யா என்கிற பாஷ்யம், உ.வே.சா.கல்கி, ஏ.எஸ்.கே. அய்யங்கார், வெ.சாமிநாதசர்மா, ஆசிரியர் சாவி, நரம்பியல் நிபுணர் டாக்டர் ராமமூர்த்தி போன்று நீண்ட பட்டியல் உண்டு. எடுத்துக்காட்டாக ஒன்றிரண்டை விரித்துரைக்க வேண்டுமென்றால், "அக்கிரகாரத்து அதிசய மனிதர்'' என்று "வ.ரா.'' அவர்களைச் சிறப்பித்து எழுத் தோவியம் தீட்டிய அறிஞர் அண்ணாவின் தம்பி என்ற முறையில் "வ.ரா.'' மறைந்த பிறகும், எழுத்துத்துறை பிதாமகன் எனப்படும் "சாவி'' மூலம் அந்தக் குடும்பத்துக்கு சிறப்பு செய்தவனாவேன், நான்!

1990ஆம் ஆண்டு நான் ஆட்சிப் பொறுப்பிலே இருந்த போது, வ.ரா. அவர்களின் துணைவியார் புவனேஸ்வரி அம்மையாரை தலைமைச் செயலகத்திற்கே அழைத்து வரச் செய்து, மாதந்தோறும் அவருக்கு ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என்பதற்கான ஆணையினை அவர்களிடம் ஒப்படைத்தேன். 17.8.1990 அன்று கலைவாணர் அரங்கில் வ.ரா. அவர்களின் நூற்றாண்டு விழாவினை அரசு சார்பில் கொண்டாடினோம்.

திருக்குறள் தந்த அய்யன் வள்ளுவனின் திருவுருவத்தைப் பலரும் பலவிதமாகச் சித்திரித்த நிலையில் ஒரே மாதிரி; அய்யனின் உருவத்தை வரைந்தளிக்க வேண்டுமென்ற பெருந்தமிழறிஞர்களின் கருத்தையேற்று; அனைவரும் ஒப்பும் வகையில் அய்யன் திருவள்ளுவர் உருவத்தை அழகுற தீட்டித் தந்து, அதனை அரசின் வாயிலாகப் பிரசுரிக்கும் வகையையும் வழங்கிய ஓவியப் பெருமகனார் வேணுகோபால் சர்மா அவர்களைப் பெருமைப்படுத்தியதுடன், அவரது குடும்பத்தினர் வாழ்வாதாரத்திற்கும் நிதியை வழங்கிய பெருமை நமது அரசுக்கு உண்டு.

17.2.1985 அன்று நான் எழுதிய "குறளோவியம்'' நூல் வெளியீட்டு விழாவிற்கு வேணுகோபால் சர்மா அவர்களை தேடிப் பிடித்து அழைத்து வரச் செய்து அந்த நூல் எழுதியதன் மூலம் எனக்குக் கிடைத்த தொகையில் ரூபாய் பத்தாயிரத்தை என் சொந்த சார்பில், நிதியாக அல்ல, காணிக்கையாக வழங்குவதாகக் கூறி அளித்தேன். பின்னர் 1989ஆம் ஆண்டு வேணுகோபால் சர்மா நோய்வாய்ப்பட்டுள்ளார் என்று அவருடைய புதல்வர் 24.5.89 அன்று என்னைச் சந்தித்துக் கூறியதும் உடனடியாக பத்தாயிரம் ரூபாய் வழங்கியதுடன், 7.4.1990 அன்று அவருடைய குடும்பத்தாரைத் தலைமைச் செயலக த்திற்கு அழைத்து அரசின் சார்பில் 3 லட்சம் ரூபாய் நிதியினை வழங்கி மகிழ்ந்தேன். என்று கலைஞர் கூறியுள்ளார்

திருவள்ளுவனின் அருமை தெரியாதவனே.....

நீதியை மனிதர்களுக்கு போதிக்கும் இந்நூல்..படிப்பவர்களை மேன்மைப்படுத்தும் தன்மையை உடையது.

133 அதிகாரங்கள், 1330 குறட்பாக்கள்..133 அடி உயரத்தில் குமரி முனையில் நின்றுக்கொண்டு இந்தியாவை கண்காணித்துக் கொண்டிருக்கிறான் வள்ளுவன்.இந்நூல் சங்ககாலத்திற்கு பிந்தைய நூலாக இருந்தாலும்..எந்நாளிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வந்திருக்கிறது.

சென்ற நூற்றாண்டில் இந்நூல் ஒரு இலக்கியமாக திகழ திராவிட இயக்கத்தினர் தான் காரணம்.பின்னரே..இது தமிழகத்தின் முதன்மை நூலானது எனலாம்.

தமிழ்ப்பாட புத்தகங்களில் ஆரம்ப பள்ளி முதல்...உயர் கல்விவரை திருக்குறள் இடம் பெற்றுவருகிறது.தமிழக பேருந்துகளில் குறள் இடம் பெற ஆரம்பித்ததுமே..குறள் பற்றி தெரியாதவர் வாய்களிலும் குறள் ஒலிக்கத் தொடங்கியது எனலாம்.

தமிழில் இருந்து உலக மொழிகளில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட நூலுக்கான பெருமை இதையே சேரும்.

அண்டை மாநிலம்..வள்ளுவன் சிலை வைக்க சம்மதிக்காவிட்டால்..வள்ளுவனுக்கு இழுக்கு இல்லை...இழப்பு இல்லை..

நஷ்டம் அம்மாநிலத்தவர்க்கே...

விட்டுத்த்ள்ளுவோம்..

கலைஞருக்கு ஒரு வேண்டுகோள்...

திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க ஆவண செய்யுங்கள்.

ஒரு தோல்வி படம் ரீமேக்கில் வெற்றிப்படமானது..

நடிகர்,இயக்குநர் விசு விஸ்வசாந்தி என்று ஒரு நாடகக்குழு நடத்திக்கொண்டிருந்தார்.அப்போது அவர் கதை,வசனம் எழுதி ஒய்.ஜி.மகேந்திரன் இயக்கி 'உறவுக்கு கை கொடுப்போம்'என்ற நாடகம் நடத்தப்பட்டது.மாபெரும் வெற்றி பெற்ற இந் நாடகத்தை கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் திரைப்படமாக்க விரும்பினார்.

திரைக்கதையை அவர் பார்த்துக்கொண்டார்.சினிமாவிற்காக மனம் இல்லை என்றாலும் அவர் சொன்ன மாற்றங்களுக்கு விசு ஒப்புக்கொண்டார்.மகேந்திரன் இயக்கத்தில்,கே.எஸ்.ஜி., மேற்பார்வையில் அதே பெயரில் ஜெமினி கணேசன் நடிக்க வெளிவந்தது திரைப்படம்...மாபெரும் தோல்வி.

சில ஆண்டுகள் கழித்து..அதே கதையை விசு திரைக்கதை,வசனம்,இயக்கத்தில் ஏ.வி.எம்.,நிறுவனம் படமாக எடுத்தது.படம் மாபெரும் வெற்றி பெற்றதுடன்..சிறந்த குடும்பக்கதை என்று ஜனாதிபதியின் தங்கப்பதக்கத்தையும் பெற்றுத் தந்தது.

அந்த படம்தான் 'சம்சாரம் அது மின்சாரம்'

Sunday, December 7, 2008

தமிழக அரசியல் தலைவர்கள் கோமாளிகள்

இலங்கை தமிழர் பிரச்னைக்காக பிரதமரை தமிழக அனைத்துக் கட்சி தலைவர்களும் சென்று பார்த்ததைக் கண்டு ஆத்திரமடைந்த இலங்கை போர்ப்படைத்தளபதி பொன்சேகா ..தமிழக அரசியல் தலைவர்களை அரசியல் கோமாளிகள் என விமரிசனம் செய்துள்ளார்.

இலங்கையில் ராஜபக்ஷ அதிபராக இருந்தாலும் போர்ப் படைத்தளபதி பொன்சேகாதான்.

அவர் இப்படி கீழ்த்தரமாக தமிழக தலைவர்களை விமரிசனம் செய்ததற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், முப்படைகளின் தலைவர் என்ற முறையில் ராஜபக்க்ஷவும் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இலங்கை தூதரை இது சம்பந்தமாக இந்திய அரசு வலியுறுத்த வேண்டும், வருத்தம் தெரிவிக்க அவர்கள் தவறினால் இலங்கை தூதரையும்,இதர அதிகாரிகளையும் வெளியேற்றுவோம் என எச்சரிக்க வேண்டும் என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.

20 கோடி டாலர் நோட்டு

உணவு பற்றாக்குறை,விலைவாசி உயர்வு,அரசியலில் குழப்பம் என அதிக பிரச்னைகளைக் கொண்டது அந்த நாடு.

இந்நாட்டில் அனைவரும் லட்சாதிபதிகள் ,கோடீஸ்வரர்கள் தான்.எல்லோரிடமும் லட்சம், கோடி டாலர் நோட்டுக்கள் இருக்கும்.

இங்கு 1 லட்சம் டாலர்,1கோடி டாலர்,10கோடி டாலர் நோட்டுக்களை அரசு அச்சடித்துள்ளது.ஒரு லட்சம் டாலரின் மதிப்பு 45 ரூபாய்.ஒரு ரொட்டி விலை 2 லட்சம் டாலர்.

நாளுக்கு நாள் இந்நாட்டின் டாலர் மதிப்பு குறைந்து வருவதால்..20 கோடி டாலர் நோட்டை வெளியிட அரசு முடிவெடுத்து இருக்கிறதாம்.இந்நாட்டின் 20 கோடி டாலரின் இந்நிய ரூபாய் மதிப்பு 91206 தான்.

அந்த நாடு ஜிம்பாப்வே.

இந்நாட்டு நிதி அமைச்சருக்கு பணவீக்கம் என்றால் என்ன என்று தெரியுமா?

Saturday, December 6, 2008

படம் ஓடவில்லையாயினும் பரவாயில்லை..ஓட்டுங்கள்..-நடிகர்

சமீபத்தில் தமிழ் நடிகர்.. ரித்தீஷ் நடித்த நாயகன் பட 100நாள் விழா நடந்தது.அந்த படம் முடிந்த போது, அதை வாங்கி விநியோகிக்க எந்த விநியோகஸ்தர்களும் முன்வராததால், நடிகரே தன் சொந்த பொறுப்பில் படத்தை வெளியிட்டார்.படம் எதிப்பார்த்ததைவிட சற்று நன்கு ஓடி நடிகருக்கு கணிசமான அளவு லாபத்தை ஈட்டிக்கொடுத்ததாம்.

இப்போது நடிகர் படம் எவ்வளவு நாட்கள் ஓடுமோ அவ்வளவு நிறைய நாட்கள் ஒட வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம்.அதனால் தியேட்டர் உரிமையாளர்களிடம், ஓட்டும் வரை ஓட்டுங்கள்,லாபம் வந்தால் எனக்கு கொடுங்கள்.நஷ்டமானால் சொல்லுங்கள்.நாம் பேசி தீர்த்துக்கொள்ளலாம் என்கிறாராம்.

இந்த சமயத்தில் நடிகர் திலகம் நடித்த தில்லானா மோகனாம்பாள் படம் 100வது நாள் விழா அன்று..படம் வெள்ளி விழா நோக்கி என விளம்பரப் படுத்தப்பட்டது.ஆனால் 125 நாட்கள் ஓடியதுமே ..வசூல் குறைவானதால்..படம் எடுக்கப்பட்டது ஞாபகம் வருகிறது.

ம்..அதெல்லாம் அப்போது..இப்போது..

ஒரு நாளைக்கு ..ஒரு காட்சி என்றே படம் ஓட்டப்படுகிறது..நூறு நாட்களோ..ஆயிரம் நாட்களோ..

படித்ததும்...கேட்டதும்... 6-12-08

1.அமெரிக்காவில் புதிய மாற்றத்தை விரும்பிய மக்கள், கறுப்பு இன ஒபாமாவை அதிபராகத் தேர்ந்தெடுத்துள்ளனர்.அதே போல, ஆந்திராவில் மக்கள் எனக்கு முடி சூட்டுவார்கள்.-சிரஞ்சீவி

2.60லட்ச ரூபாய் செலவில், கும்பகோணம் தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் நினைவு மண்டபத்தை தமிழக அரசு அமைத்துள்ளது.

3.பேரறிஞர் அண்ணா பற்றிய ஆவணப்படத்தை 6 மாதங்கள் உழைத்துச் செதுக்கி இணையத்தின் வீடியோ லைப்ரரியான 'யூ டியூப்'பில் இணைத்துள்ளார் லெனின்.எழைகளின் சிரிப்பில் இறைவனைக் கண்டவர்..இப்போது இணையத்தில் நமக்காக சிரிக்கிறார்.

4.உங்கள் படத்தில் நல்ல அரசியல்வாதி ரோல் இருந்தால் நான் நடிக்கத் தயார் என ஷாருக்கானிடம் சான்ஸ் கேட்டிருக்கிறார் லாலு பிரசாத்.

5.உங்களுக்கு அறிவுத்தாகம் இருந்தால்..மறக்காமல் நாஞ்சில் நாடனின் தீதும் நன்றும் ஆனந்த விகடனில் படியுங்கள்..அருமையான விஷயங்கள்..அழகான நடை.. hats off naadan

6.தன்னுடைய கோட் பாக்கெட்டில் சின்ன அனுமன் படத்தை ஒபாமா வைத்திருப்பது தெரியும்.ஆனால் ஒபாமா தன் அலுவகத்தில் மகாத்மா காந்தியின்படத்தை மாட்டியிருக்கிறார்.

7.தன்மான உணர்ச்சியில் குழந்தைகளை யாரும் வெல்ல முடியாது.உலகமே தலை கீழாக ஆனாலும், குழந்தைகள் ஒருவருக்கும் பணிந்து போவதில்லை.-டாக்டர் மு.வ.

8.எம்.பி.பதவிக்கு போட்டியிட விரும்புவோருக்கு அப்ளிகேஷன் வழங்க ஆரம்பித்திருக்கிறது அ.தி.மு.க.,10000 ருபாயுடன் விண்ணப்பிக்க வேண்டும்.(!!!)(அடி என அழைக்க மனைவியே வராதபோது..குழந்தைக்கு ஆசைப்பட்டால் எப்படி)

Friday, December 5, 2008

பிரனாப் முகர்ஜியும்..இலங்கை பயணமும்..

கலைஞருடன் தில்லி சென்ற அனைத்துகட்சித் தலைவர்களும் இலங்கையில் போர் நிறுத்தம் பற்றி பிரதமரிடம் பேசினர்.வழக்கம் போல விளக்கெண்ணெய் தரத்துடன்..நாத்தழு தழுக்க பிரதமர் அனைத்தையும் கேட்டார்.பின் கலைஞர் கேட்டுக்கொண்டதன் பேரில் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜியை இலங்கை அனுப்ப பிரதமர் ஒப்புக்கொண்டுள்ளார்.இது செய்தி..இலங்கையில்,ப்ரனாப் ,ராஜபக்க்ஷே சந்திப்பு எப்படி என நமது சரடு நிருபர்.

ராஜ- வாங்க பிரனாப்..நாம இப்பத்தானே 15 நாட்களுக்கு முன் இந்தியாவில் சந்தித்தோம்.

பிர-ஆமாம்..ஆனாலும்..கலைஞர் சும்மா இருக்க மாட்டேன் என்கிறார்..அவருக்காகத்தான் பிரதமர் உங்களிடம் என்னை இப்போது அனுப்பியிருக்கிறார்.

ராஜ_மும்பையில் குண்டுவெடிப்பு...(என இழுக்க)

பிர-ஆம்..அப்பாவி மக்கள் 197 பேர் மரணம்..500க்கும் மேற்பட்டோர் காயம்

ராஜ-தீவிரவாதிகள் பாகிஸ்தானில் பயிற்சி..

பிர_ஆமாம்..ஆமாம்..உலநாடுகள் அனைத்தும் கண்டனம் தெரிவித்தூள்ளார்களே..

ராஜ-இன்னொரு நாட்டில் பயிற்சி பெற்றவர்கள் உங்கள் நாட்டில் புகுந்து அப்பாவி மண்ணின் மைந்தர்களை கொன்றிருக்கிறார்களே..

பிர-ஆமாம்..அது போகட்டும்..நான் வந்த வேலை..

ராஜ-தெரியும்..முதலில் வேற்று நாட்டான் உங்கள் நாட்டுக்குள் வந்து..உங்கள் மக்களை கொன்றிருக்கிறான்.அதைப்பற்றி முதலில் கவலைப் படுங்கள்.விடுத்து எங்கள் நாட்டுக்குள் தமிழர்
அழிவது பற்றி..பிறகு பேசலாம்

பிர-நீங்கள் சொல்வதும் சரி..ஆனால் பிரதமரிடம் என்ன சொல்ல..

ராஜ-போர் நிறுத்தம் இல்லை என்று சொல்லுங்கள்

பிர-கலைஞர் கேட்டால்....

ராஜ-40வருட போராட்டம் 14 நாட்களில் முடியுமா? என்று சொல்லிவிடுங்கள்.

பிர-அப்போது நான் வருகிறேன்..நம் சந்திப்பு இவ்வளவு வெற்றி அடையும் என நான் எதிர்பார்க்கவில்லை..

(பிரனாப் விடைபெறுகிறார்0

வாய் விட்டு சிரியுங்க..

1.மெகா சீரியலோட டைரக்டர் கல்யாணத்திற்கு போனது தப்பாயிடுச்சு
ஏன்?
கல்யாணப் பத்திரிகைல போட்டிருந்த பொண்ணு காயத்ரிக்கு பதிலா சாவித்ரின்னு மணப்பெண்ணை மாத்திட்டார்

2.தயாரிப்பாளர் ஏன் இயக்குநர் மேல கோபமாய் இருக்கார்?
டூயட்டை நியூசிலாந்தில வைச்சுக்கலாம்னு சொல்லி..அங்க போயிட்டு..அங்கயும் கதானாயகி தொப்புளையே பாட்டு முழுதும் காட்டியிருக்காராம்

3.தொண்டர்கள் எறும்புபோல செயல்படணும்னு சொல்ற தலைவர்..பேரணியை நத்தைப் போல செயல்படுங்கள்னு சொல்றாரே
அப்போதுதானே..ஊர்வலம் ஒரு இடத்தைக் கடக்க 8 மணி நேரம் ஆச்சுன்னு பத்திரிகைல செய்தி வரும்.

4.தலைவருக்கு பிறந்த குழந்தை அஞ்சாநெஞ்சனா வருவான்னு எப்படி சொல்ற
குழந்தை அழும்போதே வாள்..வாள் ..என்று அழுதாம்

5.எமன்(சித்திரகுப்தனிடம்)கம்ப்யூட்டரை இயக்கி..இன்று யார் யார் உயிரை எடுக்கணும்னு கிங்கரர்களுக்குஒரு பிரிண்ட் அவுட் போட்டுக்கொடுத்திடு

6.டாக்டர்-இந்த ஊசி கொஞ்சம் வலிக்கும்..பல்லைக் கடிச்சுட்டு பொறுத்துக்கங்க..
நோயாளி-(பொக்கைவாயைக்காட்டி) பல்லை கடிச்சுக்க முடியாதே டாக்டர்.

Thursday, December 4, 2008

ஒயிட் காலர் ஊழியர்களே உஷார்

சமீபத்திய ஆய்வின்படி ..ஒயிட் காலர் எனப்படும், முழு நேரமும் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு இதய நோய்க்கான தாக்கம் அதிகம் இருக்கிறது என தெரிய வந்திருக்கிறது.அதிலும் குறிப்பாக ஐ.டி.,துறையினரிடையே இது அதிகம் காணப்படுவதாக தெரியவந்துள்ளது,

நம் ரத்தத்தில் HDL.,LDL.,இரு வகை கொலஸ்ட்ரால் உண்டு.இதில் HDL எந்த தீங்கும் விளைவிக்காது.மேலும் இது LDL கொலாஸ்ட்ரால் அளவைக் குறைப்பதால்..HDLஐ நல்ல கொழுப்பு என்கிறோம்.சாதாரணமாக இந்தியர்கள் ரத்தத்தில் இது குறைவாகவே இருக்கிறது.இது அதிகரிக்க வேண்டுமாயின் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

பொதுவாக நாம் உடற்பயிற்சியில் ஆர்வம் காட்டுவதில்லை.சிலருக்கு நேரமும் இருப்பதில்லை.இதனால் LDL என்னும் கெட்ட கொழுப்பு அதிகரித்து ஹார்ட் அட்டாக்கிற்கு வழி வகுக்கிறது.
உடல் பருமன் ஆகாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.ஆண்களுக்கு 36 முதல் 38 அங்குலங்களும்..பெண்களுக்கு 30 முதல் 32 அங்குலங்களுக்குள்ளும் இடுப்பளவு இருக்க வேண்டும்.

ஆண்டுக்கு ஒருமுறையேனும் ரத்தக்கொழுப்பு,நீரிழிவு பரிசோதனை செய்துக்கொள்ளுங்கள்.தினமும் 6 மணி நேரமாவது தூங்குங்கள்.ஒரு மணி நேரமாயினும் உடற்பயிற்சி செய்யுங்கள்.எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளுங்கள்.

சுவரை வைத்துத்தான் சித்திரம் எழுத வேண்டும்.

வாழ்வில் பணம் சம்பாதிப்பது ஒன்றே குறிக்கோள் இல்லை..ஆரோக்யமான வாழ்வுதான் செல்வம்.

கத்திரிக்காய் முற்றல் என்றால் கோபம் வருவானேன்?

எனக்கு பிடித்த காய் கத்திரிக்காய்..ஆஹா!அதன் மணம்,சுவை என நாளெல்லாம் புகழ்ந்துக் கொண்டே இருக்கலாம்.ஆனால் அழுகல் கத்திரிக்காய் பிடிக்காது.கடையில் காய்கறி வாங்கப்போகும் போது,கடைக்காரரிடம் 'ஐயா..கத்திரிக்காய் நன்றாக இல்லையே!'என்றேன்.

உடனே கடைக்காரர்'என்ன தைர்யம் இருந்தால் இப்படி சொல்வ..பக்கத்துக்கடையில் பீன்ஸ் முத்தலா கிடக்கு..அங்கப் போய் சொல்லிப்பார்'என்றார்.

'ஐயா..எனக்கு பிடித்ததைத் தானே ,நன்றாக இல்லாவிடின் குறை சொல்ல முடியும்..எனக்குப் பிடிக்காத ஒரு காயைப் பற்றி எனக்கு கவலையில்லை'என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்.

உங்களுக்கு பிடித்தது பொதுவில் இருக்கும்போது,அதைப் பற்றிக்கூற உங்களுக்கு உரிமை உண்டு என்பது கடைக்காரருக்கு ஏன் தெரியவில்லை?

Wednesday, December 3, 2008

தமிழா உன் நெற்றி தயாராகட்டும்..

முல்லை பெரியாறுஅணை சம்பந்தமாக நாடாளுமன்ற நிலைக்குழுவினர் சாம்பசிவ ராவ் தலைமையில் அணையை பார்வையிட்டார்கள்.10 நிமிடங்கள் பார்வையிட்டு விட்டு..'அணை பலவீனமாக உள்ளது,உடைந்தால் 5 மாவட்டங்கள் அழிந்துவிடும், ஆகவே புது அணை கட்டவேண்டும் என்ற கருத்தை தெரிவித்துள்ளனர்.

ஆனால், உச்ச நீதி மன்றத்தில் இது தொடர்பான வழக்கில்'அணை பலமாக இருப்பதாக' நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.இத் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் தள்ளுபடி செய்தனர்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏற்று கேரளா ஒத்துழைப்புத் தர வேண்டும்.

10 நிமிடங்களே பார்வையிட்டுவிட்டு அணை பலவீனமாக இருக்கிறது என்ற கருத்தை ஏற்கமுடியாது என்றும்,இக்குழுவின் அறிக்கைக்கு தமிழக அரசு மத்ய அரசிடம் தன் ஆட்சேபத்தை தெரிவிக்கும் என்றும் பொதுப்பணித்துறை அமைச்சரும்,சட்ட அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

சமுதாயத்தில் இந்த பத்து பேர்

பஸ் கண்டக்டர்- நம் அப்பா..அம்மாவிற்கு பிறகு..முன்னேறு..முன்னேறு..என்று நம் முன்னேற்றத்தில் குறியாய் இருப்பவர்.

முடிவெட்டுபவர்-நமக்குள்ள தலைக்கனத்தைக் குறைப்பவர்

பால்காரர்-நாட்டில் தண்ணீர் பஞ்சம் இவருக்கு மட்டும் வரவே வராது

ஆசிரியர்-தூக்கம் வராமல் அவதிப்படுபவர் இன்னலை தவிர்ப்பவர்

அரசியல்வாதி-பொய் வாக்குறுதி கொடுப்பதை சொல்லித் தருபவர்

நண்பன்-தேவைப்பட்ட போது கடன்கொடுப்பவன்

டாக்டர்-நம்மிடம் உள்ள பணத்திற்கேற்ப நம் வியாதியை தீர்ப்பவர்

மகன்/மகள்- பணம் தேவை என்னும் போது நம் சொல்படி நடப்பவர்கள்

வேலைக்காரி-நம் ஏரியா செய்திகளை முந்தித் தரும் தினத்தந்தி

மனைவி- அடடா..நாம ஏதாவது சொல்லப்போக..இன்னிக்கு சாப்பாடு கட் ஆயிடும்...ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Tuesday, December 2, 2008

பாகிஸ்தானில் உள்ள தீவிரமுகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தலாம் : ஒபாமா

வாஷிங்டன் : மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பிருப்பதற்கான ஆதாரம் இருந்தால், அந்நாட்டில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒபாமா தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ஒபாமா, உலகில் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிற்கு, தனது நாட்டைப் பாதுகாத்துக் கொள்ளும் உரிமை உள்ளதாகவும், தீவிரவாதிகள் தாக்குதல் மூலம் இந்தியாவைப் பணிய வைக்க முடியாது என்றும் கூறினார். மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பிருப்பதற்கான ஆதாரம் இருந்தால், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா, குண்டு வீசித்தாக்குதல் நடத்தலாம் என்றும் அவர் கருத்து தெரிவித்தார். இந்தியாவிற்கு நீதி கிடைக்க அமெரிக்கா பாடுபடும் என்று தெரிவித்த ஒபாமா, மும்பை நிலவரம் குறித்து, தான் நடத்திய முதல் கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தியதாகவும் குறிப்பிட்டார். தான், அமெரிக்காவின் அதிபராக, தான் வரும் ஜனவரி 20ஆம் தேதி தான், பதவி ஏற்க இருப்பதால், இதுதொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தற்போது தன்னால் முடிவு எடுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.
நன்றி -குமுதம் செய்திகள்

இந்திய எல்லையில் பாகிஸ்தான் இராணுவம்..

மும்பை தீவிரவாதிகள் பிடியிலிருந்து விடுபட்டு..நொண்டி..நொண்டி பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறது.

பிடிபட்ட பயங்கரவாதி 5000 பேரை கொல்ல திட்டம் வைத்திருந்தோம் என சொல்கிறான்.இப்பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தானில் பயிற்சி அளிக்கப்பட்டது தெரிய வந்திருக்கிறது.மேலும் தாஜ் ஓட்டலில் இருந்த தீவிரவாதிகள் பாகிஸ்தானுக்கு பேசியுள்ளதாகவும் தெரிகிறது.பாகிஸ்தான் விசாரணையில் ஒத்துழைக்க அனுப்புகிறேன் என்று சொல்லிவிட்டு,கடைசியில் அந்த அதிகாரியையும் அனுப்ப இசையவில்லை.

இப்படிப்பட்ட நெருக்கடியான வேலையில், எல்லையில் பாகிஸ்தான் ஒரு லட்சத்திற்கும் மேலான இராணுவத்தினரை குவித்துள்ளதாக தெரிகிறது.ஒவ்வொரு முறையும்,நாம் வெற்றிக்கனியையே இவர்களுடன் போரின்போது சுவைத்து வருகிறோம்.அத் தருணங்களில் பாகிஸ்தான் தந்திரமாக,போர் நிறுத்தம் செய்து பேச்சு வார்த்தைக்கு அழைக்கும்.

பட்டது போதும்.இம்முறை பாகிஸ்தானை ஓட ஓட விரட்டுவோம்.அவர்கள் பிடித்து வைத்திருக்கும் காஷ்மீரப் பகுதியையும் மீட்போம்..என அனைத்து அரசியல் தலைவர்களும் ஒரு மித்த கருத்துடன்,ஒற்றுமையாக செயல் பட வேண்டிய நேரம் இது.

Monday, December 1, 2008

அதி புத்திசாலி அண்ணாசாமியின்10 சந்தேகங்களும் ...சன் டீ.வி.யும்

மாறன் சகோதரர்களுக்கும், கலைஞர் குடும்பத்திற்கும் சமரசம் எழுந்ததை ஒட்டி சன்,கலைஞர் டீவி க்கள் சம்பந்தமாக அண்ணாசமிக்கு சந்தேகம் வந்து..இரவு முழுதும் உறக்கமில்லையாம்.
அவர் சந்தேகங்கள்

1.டாப் டென் படங்களில் இனிமேல் முதலில் வாரணம் ஆயிரம் வருமா..இல்லை தெனாவட்டு வருமா?

2.தசாவதாரம்,குசேலன் படங்களை சன் டீ.வி,யிலும் பார்க்க முடியுமா பின்னாட்களில்

3.தூசிதட்டி சில நாட்களாக போட்டு வரும் விஜய்காந்த்,சரத்குமார் படங்கள் நிலை என்ன ஆகும்.

4.மானாட மயிலாட சன்னில் வருமா? சன் டி.டி.எச்.இல்லாமல் அனைவரும் சன்னின் காமெடி சேவை நிகழ்ச்சியை பார்க்க முடியுமா?

5.கருத்துக்கணிப்பு சன்/தினகரன் இனி நடத்துமா?

6.ஆற்காட்டார் நிலைமை என்ன?

7.ஸ்பெக்ட்ரம் ஊழல் இனி அடைக்கி வாசிக்கப்படுமா?

8.மாறன் நினைவு நாளன்று ,ஒரு வேளை மாறன் கலைஞர் கனவில் வந்து ஏதெனும் கூறியிருப்பாரா?

9.தயாநிதிக்கு வரும் பாராளுமன்ற தேர்தலில் டிக்கட் உண்டா?

10.முக்கியமான சந்தேகம்...சமரசம் என்று சும்மா கிண்டலுக்கு சொன்னேன் என்று திடீரென கடைசியில் கலைஞர் கூறிவிடுவாரா?

மிதக்கும் சென்னை..ஜெ தான் காரணம்..

சமீபத்தில் 4 நாட்களாக பெய்த மழையால்..சென்னை நகரமே வெள்ளத்தில் மூழ்கியது.

அதற்கான காரணம் யார் என சன் டீ.வி.நிபுணர் குழு ஆராய்ந்து, ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.அவ்வறிக்கையில் ஜெ ஆட்சியில் இருந்த காலங்களில்தான் சென்னை குடிநீருக்கு ஆதாரமாக இருந்த ஏரிகள் எல்லாம் ஆக்கிரப்பு செய்யப்பட்டு அங்கு கான்கிரீட் கட்டிடங்கள் முளைத்தன என்றும்,வடிகால்கள் பல அடைக்கப்பட்டு விட்டன என்றும் தெரிந்துள்ளது.மேலும் அம்மையார் ஒருமுறை தனக்கு தண்ணீர் ராசி உள்ளது என்று சொன்னதையும் நிருபர் குழு ஆராய்ந்து,கலைஞர் ஆட்சிக்கு களங்கம் கற்பிக்க வேண்டும் என்றே லாரிகணக்கில் தண்ணீரை வாங்கி கொட்டிவிட்டு ஜெ நீலிக்கண்ணீர் வடிப்பதாக கூறியுள்ளது.

(கலைஞர் குடும்பமும்,சன் டி.வி.சகோதரர்களும் சுமுகமானப்பின் சன் நியூஸ் செய்தியில் இப்படி சொன்னால் ஆச்சர்யப் படத் தேவையில்லை)

Sunday, November 30, 2008

வாய் விட்டு சிரியுங்க..

1.இந்த கம்ப்யூட்டரை அரசாங்க அலுவலகங்களில் வைக்க என்று புதுசா கண்டு பிடிச்சு இருக்காங்க...
அப்படி என்ன இதிலே இருக்கு
முதல்ல அதுக்கென சம்திங்க் தள்ளினாத்தான் மற்ற விவரங்களைச் சொல்லுமாம்.

2.என்னோட அடுத்த படம் இருவர் சம்பந்தப்பட்டது.சண்டை தீர்ற மாதிரி இருக்கும் ஆனா தீராது.இப்படி பல ஆண்டுகளாக நடக்கற கதை.படத்துக்கு பொருத்தமான ஒரு பெயரைச் சொல்லுங்க.
கர்நாடகா என்று வைக்கலாம்.

3.உன்னோட கணவர் இப்ப எல்லாம் உப்பு சப்பில்லா கதையா எழுதறாரே..ஏன்?
அவருக்கு இரத்த அழுத்தம் இருக்கறதாலே..டாக்டர் உப்பு பக்கமே போகக்கூடாதுன்னு சொல்லிட்டார்.

4.கதாசிரியர்-(பத்திரிகை ஆசிரியரிடம்)என்னோட புது கதையைப் பற்றி உங்கள் எண்ணம் என்ன?
ஆசிரியர்-ஏதேதோ கண்டுபிடிக்கிறார்கள்..ஆனால்.ஒரு கதை ஒருத்தர் சொந்த கற்பனையா?காப்பியடித்ததா?என்று கண்டுபிடிக்க எந்தக் கருவியையும் கண்டுபிடிக்கலையே

5.அலுவலகத்தில் உனக்கு மெமோ கொடுத்தார்களா? ஏன்?
தூங்கும்போது நான் குறட்டை விடுகிறேனாம்..அது மற்றவர்கள் தூக்கத்தை கெடுக்குதாம்..அதனால்தான்.

6.பட்டிமன்றத்தில் ஒரு பேச்சாளர்..தான் புத்திசாலி என்பதை இப்படிக் கூறினார்
'முட்டாளாக முயன்று தோற்றவன் நான்'
அடுத்து வந்த எதிரணி பேச்சாளர் ..இதைக்குறிப்பிட்டு பேசும்போது..'ஆம்..அதிமுட்டாளான என் நண்பர் முட்டாளாக முயன்று தோற்றவர்'

Saturday, November 29, 2008

மும்பையில் அமைதி திரும்பியது

மும்பையில்..60 மணி நேர த்திற்கு பின்..அமைதி திரும்பியுள்ளது..தாஜ் ஓட்டல்.ஒபேராய் ஒட்டல் அனைத்தும் மீட்கப்பட்டன.

பயங்கரவாதிகளை பிடிக்க கமாண்டோ படை தில்லியிலிருந்து வந்தது.அவர்களுக்கு ராணுவ வீரர்களும்,கடற்கரை வீரர்களும் உதவினர்.

இத் தாக்குதலால் 183 பேர் பலியாயினர்..9 பயங்கரவாதிகள் கொலை செய்யப்பட்டனர்.20 போலீசார்,மற்றும் 22 வெளிநாட்டவர் இறந்தவர்களில் அடக்கம்.ஒரு பயங்கரவாதி பிடிபட்டான்.

இறந்தவர்களுக்கு அஞ்சலி செய்யும் அதே நேரத்தில்...இறந்தவர் குடும்பங்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிக்கிறோம்..

உயிரை பயணம் வைத்து போராடிய கமாண்டோ வீரர்கள்,ராணுவத்தினர்,கடற்படையினர் ஆகிய அனைவரையும் வாழ்த்தி வணங்குகிறோம்..

இவர்களை அனைத்து இணைய பதிவினரும் தங்களது பதிவில் வாழ்த்த வேண்டுகிறேன்.

Friday, November 28, 2008

தமிழகத்தில் அன்பு எனப்படும் அரசியல்வாதி யார்?

1.இந்த உலகில் எங்கு சென்றாலும் காடு வெட்டியவன் தமிழன்,கழனியாகியவன் தமிழன்,பாடுபட்டவன் தமிழன்,பறிகொடுத்தவனும் தமிழன் என்பதைத்தான் காண்கிறோம்.தென்னாப்பிரிக்கா முதல் தென்னிலங்கை வரை இந்த அநியாயம் இருந்து வருகிறது.

2.நான் இந்திராகாந்தியைப்பார்த்த போது..எனக்கே புரியாத உந்துதலால்..ஏன்,எதற்கு என்றெல்லாம் சிந்திக்காமல்,அவர் பாதம் தொட்டு வணங்கினேன்.'no,no!Nofeet touching please'என்றார் பிரதமர் கனிவோடு...சொன்னவர் ஜெ.

3.ஓ..கிரேட் அண்ணா..அவர் சாதனை வீரர்.அண்ணாவை நீங்கள் இழந்தது துர்பாக்கியமே.அவருக்கு இருந்த சக்தியும்,மதிப்பும் தமிழ்நாட்டில் வேறோரு தலைவருக்கு கிடைக்குமா என்பது சந்தேகமே! இதை சொன்னவர் பால் தாக்கரே, ஆனந்தவிகடன் 1973ல் அவரிடம் எடுத்த பேட்டியில்.

4.முரசொலி மாறனின் மகன்கள் கலாநிதி,தயாநிதி தெரியும்..புகழ்,அன்பு என்ற மகன்களைத் தெரியுமா? கலாநிதிக்கு புகழ் என்றும்,தயாநிதிக்கு அன்பு என்றும் கலைஞர் பெயர் வைத்தார்.

5.பழைய ஜகன்மோகினி படத்தை ரீமேக் செய்யும் எண்ணம் வந்ததுமே..ஜெயமாலினி ரோலில் யாரை நடிக்க வைப்பது என்ற எண்ணம் வந்ததுமே எங்கள் ஞாபகத்தில் வந்தவர் நமிதா என்கிறார் இயக்குநர் விஸ்வநாதன்

6.அமெரிக்காவில் எனக்குத் தெரிந்த நண்பர் வீட்டிற்கு ஒரு முறை சென்றேன்.அவர் தன் 3 வயது பெண்ணைக்காட்டி,இவளுக்கு தமிழே வரவில்லை, இனிமேல் தமிழில்தான் பேச வேண்டும் என்று சொல்லியிருக்கிறோம் என்றார்.அப்போது,அவரின் 1 வயது குழந்தை அழுதது.உடனே குட்டிப்பெண்..அப்பா லிட்டில் பிரதர் ஈஸ் கிரையிங்க் என்றாள்.நண்பர் தமிழில் சொல் என்றதும்,அவள் தட்டுத் தடுமாறி தம்பிக்கு தண்ணீலே கண்ணு என்றாள்.அனைவருக்கும் சிரிப்பு.

குண்டு வெடிப்புகளும்...இஸ்லாமியர்களும்...

கடந்த இரண்டு நாட்களில்..நான்..3 ஹிந்தி படங்கள் பார்த்தேன்..அந்த மூன்று படங்களுமே..மும்பையும்...குண்டுவெடிப்பு சம்பந்தபட்டதுதான்..

1.ஆமிர் - லண்டனிலிருந்து..திருப்பி அனுப்பப்பட்ட..டாக்டர் ஆமிர்..மும்பை ஏர்போர்ட்டில்..வந்ததுமே..அவனையும் அறியாமல்..ஒரு இஸ்லாம்..தீவிரவாத இயக்கத்தின் வலையில் வீழ்கிறான்..அவனது குடும்பத்தை தங்கள் கைவசம்..பிடித்து வைத்திருப்பவர்கள்..அவர்கள் விடுதலை ஆக வேண்டுமானால்..தாங்கள் சொல்படி..ஆமிர் கேட்க வேண்டும் என்கிறார்கள்.பேருந்தில்..தான் கொண்டுவந்து வைத்த பெட்டியில் வெடிகுண்டு இருக்கிறது என அறிந்து...அதை..தடுக்கும்..ஆமிர், அது வெடித்து இறக்கிறான்.

2.வெட்னஸ்டே- நஸ்ருடீன் ஷா,அனுபம் கீர்..நடித்த படம்..மும்பை வெடிகுண்டு..பல்வேறு..கட்டங்களில்..வைத்தவர்களை பழிவாங்கும் கதை..அருமையான..திரைக்கதை அமைப்பு.(இப்படத்தை.நான் பார்த்தது..புதன்கிழமை..படம் பெயர் புதன்கிழமை,மும்பையில் அன்று குண்டுவெடிப்பு)

3.மும்பை..மேரி ஜான்- மும்பை..ரயிலில் குண்டு வெடிப்பு...யார் வாழ்ந்தால் என்ன..யார் செத்தால் என்ன..வாழ்வு தொடர்கிறது..என்னும் கதை..

பொதுவாக பார்த்தால்..தீவிரவாதம்..என்றாலே..இஸ்லாமியர் சம்பந்தபட்டதாய் இருக்கிறது..இதையே..தினமலர்..சில தினங்களுக்குமுன்..தீவிரவாதம்..பற்றி எழுதும் போது..ஒரு இஸ்லாமியர் படத்தை போட்டதற்கு..பத்திரிகை அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்..நடந்தது..

ஆனால்..திரைப்படங்களில்..இவை..சர்வ சாதாரணமாக சொல்லப்படுகிறது.

மொத்தத்தில்..இப்படி குண்டுவெடிப்பில் இறப்பவர்கள்..அனைத்து ஜாதி..அனைத்து மதத்தினரும்தான்..

ஒரு சிலர் ,ஒரு சில இயக்கங்கள் ..செய்யும் செயல்களால்..குறிப்பிட்ட ஜாதி..குறிப்பிட்ட மதம்..ஆகியவை இழிவுபடுத்தப் படுகின்றன..

இவை தவிர்க்கப்பட வேண்டும்..

எல்லா மதத்தினர்..ஜாதியினர்..இடையே..புல்லுருவிகள் உண்டு..அவர்களை கண்டுபிடித்து..அழிக்கப் பட வேண்டுமே அன்றி..நடைபெறும் நிகழ்ச்சிகளுக்காக..ஒட்டு மொத்த சமுகத்தினரை குறை சொல்வதை தவிர்ப்போம்.

Thursday, November 27, 2008

மும்பை..குண்டு வெடிப்பு..மத்திய அரசுக்கு ஒரு அவமானம்..

மும்பையில்..11இடங்களில் நடைப்பெற்றுள்ள..குண்டுவெடிப்பிற்கு..முஜாஹுதீன் இயக்கம்..பொறுப்பேற்றுள்ளது.கப்பலில் வந்த ,தீவிரவாதிகள்..போட் மூலமாக..குஜராத் வழியாக உள் நுழைந்துள்ளதாக தெரிகிறது.

பல மாதங்கள்..திட்டம் ..தீட்டப்பட்டு..இக்குண்டுவெடிப்பு நடந்துள்ளதாக..செய்திகள் தெரிவிக்கின்றன.இதுவரை கிடைத்த தகவலின்படி 125பேர் இறந்ததாகவும்..327 பேருக்கு மேல் காயம் அடைந்துள்ளதாகவும் தெரிகிறது.

நமது உளவுத்துறை என்ன செய்தது...

இப்பொதேல்லாம் இந்தியாவில்..ஏதெனும் ஒரு பகுதியில்..குண்டுவெடிப்புகள் நடந்துக்கொண்டுதான்..இருக்கிறது..

இதற்கு..பொறுப்பேற்று..மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் படீல் பதவி விலகவேண்டும்..

தலைவர்கள்..இறந்தவர்கள் குடும்பத்திற்கும்..காயமடைந்தோர் குடும்பத்திற்கும்..வழக்கம் போல..அனுதாபத்தை தெரிவித்து விட்டு..நஷ்டஈடு..கொடுத்தால் மட்டும் போதாது.இனி வரும் நாட்களிலாவது இதுபோல் நடக்காது..முன்னெச்சறிக்கையுடன் நடக்க வேண்டும்..

அரசியல் கட்சிகள்..ஒருவர் மீது..ஒருவர்..குற்றம் சாட்டாமல்..ஒற்றுமையாய்..இருக்க வேண்டிய நேரம் இது.

உள்நாட்டு தமிழனும்...வெளிநாட்டு தமிழனும்...

தமிழன்..

அவன்..உள்நாட்டு தமிழனானாலும் சரி..வெளிநாட்டு தமிழனானாலும் சரி...இளிச்சவாயன் தான்...

காவிரியில்...நம் தமிழகப்பகுதிக்குள்..வரும் தண்ணீரில்..தர்மபுரி,கிருஷ்ணகிரி..மக்கள் தாகம் தீர்க்க..ஒகேனக்கல் திட்டம் தீட்டப்பட்டது.அதற்கு கர்நாடகம் எதிர்ப்பு..தெரிவித்து வருகிறது..கர்நாடகா சட்டசபை தேர்தல் நடந்த சமயம்...இந்த பிரச்னையை..தள்ளிவைத்தார்..கலைஞர்.தேர்தல் முடிந்து..வந்த புது அரசும் இத் திட்டத்தை எதிர்த்தது.

சமீபத்தில்..இது பற்றி பேசிய..காங்கிரஸ் மூத்த தலைவருள் ஒருவரான..வீரப்ப மோய்லி பேசும்பொது...இந்த விஷயத்தில்..பிரதமர் தலையிடமுடியாது..என்றும்..இது..இரு மாநில பிரச்னை என்றும்..மாநிலங்கள்..தங்களிடையே பேச்சு வார்த்தை நடத்தித்தான்..தீர்த்துக் கொள்ள வேண்டும்..என்று கூறியுள்ளார்.

கேரளா..முல்லைப்பெரியார் ,ஆந்திரா..பாலாற்றில்..அணைகட்டும் திட்டம்..என எல்லாமே தமிழகத்திற்கு எதிராகவே நடந்து வருகின்றன.

உள்நாட்டு பிரச்னையிலேயே..தமிழனின் உரிமைக்கு..பிரதமர் தலையிட முடியாது..என்னும் போது..வெளிநாட்டு..இலங்கை தமிழர்களுக்காக..பிரதமர் தலையிட முடியுமா..

இது...சிங்களர்களும்...இலங்கை தமிழர்களும்..தங்களுக்குள் பேசி தீர்த்துக்கொள்ளவேண்டிய பிரச்னை..என சொன்னாலும் சொல்வார்கள்...

தமிழா...நீ எங்கிருந்தாலும்..ஏமாளிதான்..இளிச்சவாயன்தான்.

Wednesday, November 26, 2008

கலைஞர்..s.vee.சேகர் சந்திப்பு...

அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,வான சேகர்..சில மாதங்களாக..தலைமையால் புறக்கணிக்கப் பட்டு வந்தார்..கட்சியின்..பொதுக்குழு கூட்டத்திற்கும் அவருக்கு அழைப்பு இல்லை.அவரது..மகள் திருமண அழைப்பிதழில்...ஜெ யின்..புகைப்படம்..இல்லாததால்..திருமணத்திற்கு..ஜெ வரவில்லை..அதுமுதல் தலைமையால்..கவனிக்கப்பட்டார்..சேகர்.சமீபத்தில் நடந்த அவர் உறவினர் திருமணத்தில்..கலைஞர் கலந்துக் கொள்ள..அவருடன் சேகர்..புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.பின்..சத்யராஜ் இல்ல திருமணத்தில்..ஸ்டாலினுடன்..இருந்தார்..

அ.தி.மு.க.விலிருந்து..நீக்கப்படுவீர்களா? என்று கேட்டதற்கு..சங்கராச்சாரியார்..தன்னை..அ.தி.மு.க.வில்.சேரச்சொன்னதாகவும்...தான் நீக்கப்பட்டால்..மீண்டும் அவர் சொல்படி..நடப்பேன் என்றவர்..தனக்கு..தன் கட்சியின் கதவுகள் மூடினால்..திறக்க 5 கதவுகள் தயாராயிருக்கின்றன..என்றார்.

இப்போது ..கலைஞர்..சேகர் ..சந்திப்பு நிகழ்ந்து இருப்பது..மரியாதை நிமித்த சந்திப்பு..என சேகர் கூறினாலும்...சங்கராச்சாரியார்..ஒரு சமயம்..தி.மு.க.வில்.சேரச் சொல்லி இருப்பாரோ..என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது..

இந்த சமயத்தில்..காடுவெட்டி குரு மீதானா..வழக்கை..அரசு..வாபஸ் வாங்கி இருப்பதால்...பாண்டிச்சேரி ..நீதிமன்ற வழக்கும் வாபஸ் பெற ஏற்பாடுகள் நடக்குமா தெரியவில்லை.

தமிழ் திரை உலகம் மறந்த..இயக்குநர்..

சாதாரணமாக நாம் இயக்குநர்கள் பற்றி பேசும் போது...ஸ்ரீதர்,பாலசந்தர்,பாரதிராஜா,பாலு மஹேந்திரா,மணிரத்தினம்..என்றெல்லாம்..பேசுவோம்.ஆனால்..நாம் அனைவருமே மறந்து விட்ட..ஒரு இயக்குநர் இருக்கிறார்..குடும்பப் பாங்கான பல வெற்றிப்படங்களைத் தந்தவர்..

ஆம்..அவர்..கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்..

உருவில் குள்ளமானவர்..அவர் படைப்புகளோ..உச்சம்..

தெய்வப்பிறவி..படத்தின் கதை வசனகர்த்தா..

பணமா..பாசமா...இவர் தந்த மா பெரும் வெற்றிப்படம்..ஜெமினி,சரோஜா தேவி,பகவதி,எஸ்.வரலட்சுமி..நடித்தது...இப்படத்தின் தாக்கமே..பாலசந்தரின்..பூவா..தலையா..

கை கொடுத்த தெய்வத்தை ..மறந்து விட முடியுமா? நடிகையர் திலகம்..அப்பாவி பெண்..கோகிலாவாகவே மாறி..நடித்த அவர் நடிப்புலகின் ஒரு மைல்கல்படம்.நடிகர் திலகத்தையே இப்படத்தில்..சாப்பிட்டுவிட்ட நடிப்பு.

அடுத்து..ஆயிரம் ரூபாய்...இப்படத்திலும்..குறத்தியாக வந்து..நடிப்பில் நம்மை அசத்தியவர் சாவித்திரி.

இவரின் என்னதான் முடிவு என்ற படம்..ஜனாதிபதியின்..வெள்ளிப் பதக்கம் பெற்றது..எப்படிப்பட்ட கொடியவனாய் இருந்தாலும்...மனம் திருந்தி...நல்லவன் ஆனால்..அவனை மன்னிக்க வேண்டும்..என்ற கருத்தைக்கொண்ட படம்.பாலையாவின் அசத்தலான நடிப்புஇதில்.

அடுத்து..தெய்வத்தின் தெய்வம்...விதவை..மறுமணத்தை வலியுறுத்திய படம்.

சாரதா..குமுதம்.செல்வம்,கண் கண்ட தெய்வம்,பேசும் தெய்வம்,குலமா குணமா,குறத்தி மகன் என பட்டியல் நீளும்.

கே.ஆர்.விஜயாவை அறிமுகப் படுத்திய கற்பகம்..இதுவும் மாபெரும் வெற்றிப்படம்..இப்படப் பெயராலேயே..இவர் பின்னர் ஸ்டூடியோவும் ஆரம்பித்தார்.

சுஜாதா நடித்த அடுக்குமல்லி...பார்ப்பவர் கண்களில் கண்ணீரை வரவழைக்கும் அற்புதமான படம்

நத்தையில் முத்து...தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ..ஒரு பெண்ணின் கதை..

ஆதி பராசக்தி..என்ற..பக்தி படமும் இவரது வெற்றிப்பட்டியலில் அடங்கும்...

இப்படிப்பட்ட ..ஒரு இயக்குநர்..ஏன்..தமிழ் பட உலகம் மறந்துவிட்டதூ?

Tuesday, November 25, 2008

வாய் விட்டு சிரியுங்க..

1.காதலன்-நான் நேர்மையானவன்..என் அலுவலகத்திலே நான் மட்டும் தான்..லஞ்சம் வாங்காதவன்
காதலி-..நல்லவேளை..இப்பவாது சொன்னீங்களே..பிழைக்கத் தெரியாத உங்களை..கல்யாணம் பண்ணிக்க இருந்தேனே

2.அந்த டாக்டர்..இப்பவெல்லாம் யாருக்கும் ஷாக் டிரீட்மெண்ட் கொடுக்கறதில்லை
ஏன்,..
இப்பவெல்லாம் தான்..எப்பவும் கரண்ட் கட் இருக்கே

3.அந்த ஓட்டல்ல மட்டும்..'ஆம்லெட்' ரொம்ப சீப்பா தர்றாங்களே..எப்படி?
ஓட்டல் முதலாளி..ஒரு அரசியல்வாதியாம்..அவர் கூட்டங்கள்லே பேசறப்ப..அவர் மேல வீசப்படற முட்டைகளை பொறுக்கி எடுத்து வந்துடுவாராம்

4.அவன் கஞ்சன்னு எப்படி சொல்ற..
அவன் பொண்ணு கல்யாணத்திலே..மூகூர்த்தத்தில..ஆசிர்வாதம் பண்ண..கொடுத்த அட்சதையெல்லாம் பொறுக்கி..ரிஷப்ஷன்ல லெமன் ரைஸ் ஆக்கிட்டான்.

5.கணவன்-(மனைவியிடம்) வர்றியா,,ஓட்டல்ல போய் காஃபி சாப்பிட்டு வரலாம்
மனைவி-என்ன அதிசயமாய் இருக்கு இன்னிக்கு..
கணவன்-(நினைவு வந்தவராய்) சாரி...பாமா..நான் ஆஃபீஸ்ல டைபிஸ்ட் கிட்ட பேசற ஞாபகத்தில கேட்டுட்டேன்

6.அரசியல்வாதி-(கூட்டத்தில் பேசும்போது)என்னை வெற்றிபெறச் செய்தால்..இந்த தொகுதியை மேம்படுத்துவேன்..தவறினால்...நீங்கள் என்னை தூக்கிலிடலாம்..
கூட்டத்தில் ஒருவன்- தலைவா...இந்தா கயிறு

சிரிப்போம்...சிரிக்க வைப்போம்...

வாழ்க்கை என்பது ஒரு அற்புதம்..அதை இன்பகரமாக வாழ்ந்து காட்ட வேண்டியது..அவரவர் திறமை..ஏன்..அதை அவரவர் கடமை என்று கூட சொல்வேன்..அதற்கு..இன்றியமையா தேவைகள் பல இருந்தாலும்...குறிப்பாக நகைச்சுவை உணர்ச்சி முக்கியம்..

பல முக்கியச் செய்திகள்..நகைச்சுவையோடு கலந்து கொடுத்தால் தான்..நாம் எதிர்பார்த்தபடி..எதிர்ப்பார்த்த நபர்களை சென்று அடையும்.

ஆகவேதான்..திரைப்படங்களிலும்..கலைவாணர் அவர்களின் நகைச்சுவை..சில சீரிய..கருத்துக்களுடன் இருக்கும்.நகைச்சுவையாக சொல்லும்போது..முதலில் சிரித்தாலும்..பின்னர் அதில் பொதிந்திருக்கும் செய்தியை உணர்வோம்.

சிலர்...என்னதான் சிரிப்பான செய்தியைக் கேள்விப்பட்டாலும்...சிரிக்காமல்..எதையோ பறிகொடுத்தது போல் ..முகத்தை..சீரியஸ் ஆக வைத்திருப்பார்கள்.

நம்மை சிரிக்க வைத்த காமெடியன்கள் பலர் வாழ்க்கை..சோகமயமானது.உதாரணத்திற்கு..நடிகர் சந்திரபாபுவை சொல்லலாம்..அவர்கள் தங்கள் சோகத்தை மறந்து..தண்ணீருக்குள் மீன் அழுதால்..அதன் கண்ணீரை யார் அறிவார்..என்பதற்கேற்ப..அவர் தனிப்பட்ட சோகத்தை மறைத்து நம்மை மகிழ வைத்தார்.

பணத்தை பெரியதாக நினைப்பவர்கள்...சிரிப்பை மறந்தவர்கள்..

எந்திர மயமான வாழ்வில்..காலையில் கடற்கரையில்..நின்று ..உடல் நலனுக்காக..வலுக்கட்டாயமாக..சிரிக்க வேண்டியிருக்கிறது இன்று.. சிரிப்பு..அரு மருந்து என்பதால்..

சிரிப்பு...மனிதனுக்கு மட்டுமே..ஆண்டவன் கொடுத்த வரப்பிரசாதம்

சிரிப்போம்..வாய் விட்டு சிரிப்போம்...

வன்மத்தை விட்டு...எதிரியையும் சிரிக்க வைப்போம்..

சாதிக்க முடியாத விஷயங்களையும்..முக மலர்ச்சியுடன், எதிர் கொண்டால்..சாதிக்கமுடியும்..

Monday, November 24, 2008

ஜாதிகள் இருக்குதடி பாப்பா...

பள்ளியில் ஆரம்ப காலங்களில் நமக்கு சொல்லிக்கொடுத்த பாடல்..

சாதிகள் இல்லையடி பாப்பா - குலம்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்

ஆனால்..அப்பள்ளியில் சேர..ஜாதி சான்றிதழ் வேண்டும்..

சிறு வயதில்..பள்ளி பருவம் முடியும் வரை..மாணவர்கள் மனதில்..சாதி விதைப்பதில்லை.

அவன் கல்லூரியில் கால் வைத்ததுமே..ஜாதி அடிப்படையில்தான்..சேர்க்கப்படுகிறான்..அது வேறு விஷயம்..அதைப் பற்றியதல்ல இப் பதிவு. அவனுக்கு..கல்லூரி தேர்தலில் நிற்பதற்குக் கூட இந்த ஜாதிப்பேய் துணை நிற்கிறது.நான் உயர்ந்த ஜாதி..இவன் தாழ்ந்த ஜாதி..என்ற எண்ணத்தை அவனுக்கு ஏற்படுத்தி விடிகிறது.

அவன் படிப்பு முடித்து வந்ததும்..வேலை தேடும் படலம்..அவனுக்கு ஜாதி வெறி இருக்கிறதோ ..இல்லையோ..அவன் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்..அவன் மனதில்..இந்த விஷத்தை தூவி விடுகிறார்கள்.

இளைஞர்கள் மனதில்..'உனக்கு வேண்டிய திறமை இருக்கிறது..இந்த வேலை..உன் திறமைக்கு கிடைத்த வேலை..'என்ற எண்ணம் ஏற்படவேண்டும்..

அப்படிப்பட்ட..நிலை..வரும்போதுதான்..ஜாதிப்பேய் ..சமூகத்தைவிட்டு ஓடும்...

இன்றைய சூழலில்..காதல் மட்டும் தான் ஜாதி பார்க்காமல் வருகிறது.ஆகவே தான்..கலப்புத் திருமணங்களுக்கு..அரசு ஆதரவு அளிக்கிறது..

கடைசியாக...பெரும்தலைகளே..உங்களுக்கு ஒரு வேண்டுகோள்...

ஜாதி ஏற்றத்தாழ்வுகள்...உங்கள் தலைமுறையுடன் ..ஒழியட்டும்...

தேவையில்லாமல்...நம் சுயநலத்திற்காக..இளைஞர்கள் மத்தியில்..ஜாதி என்னும் நச்சு செடியை வளர்க்காதீர்கள்..

நடந்ததை மறப்போம்...நடப்பதை நினைப்போம்...இதுவே நம் தாரக மந்திரமாய் இருக்கட்டும்..

புதியதோர் உலகம் செய்வோம்....

Sunday, November 23, 2008

மாறன்..நினைவு நாள்...கலைஞர் எழுதாத கவிதை...

மாசறு பொன்னே..வலம்புரி முத்தே..

அருமைக் கண்மணியே..அன்பு மாறனே..

உன்னுடைய மகன்களை

தத்தித் தவழ்ந்த பருவம்

தளிர்நடை போட்ட பருவம் முதல்

என் அரவணைப்பில் வளர்த்து..

சன் டிவி ஆரம்பிக்க உதவி

ஒருவனை மத்திய அமைச்சராக்கி..

என் சிந்தை குளிர்ந்து..

கண்களுக்கு ஆச்சரியக் குறியாய்..

அழகும்..அறிவும்

கலந்த மகன்களாய் ஆக்கினேன்

ஆயின் இன்றோ

தேளாய்..பாம்பாய்..நண்டாய்

கொட்டுகிறார் என்னை..

எதைச்சொல்லி மனதைத் தேற்றிக் கொள்வது

யாரை நினைத்து மனதை மாற்றிக் கொள்வது?

Saturday, November 22, 2008

வண்ணதாசன்..என்னும் கல்யாண்ஜியும்...நானும்..

வடகரை வேலனின்..கதம்பத்தில்..கல்யாண்ஜியின் கவிதைப் பற்றி எழுதி இருந்தார்..

அதைப்படித்ததும்...என் முன்னால்..ஒரு நீர்ச்சுழல்..(எவ்வளவுநாள்தான்..கொசுவத்தி..என்று எழுதுவது?)

கல்யாணசுந்தரமும்..நானும்..ஸ்டேட் வங்கியில் வேலை செய்தவர்கள்..அவரும்..நானும்..ஒன்றாக 3 ஆண்டுகள் வேலை செய்திருக்கிறோம்.அந்த சமயங்களில் அவருடன் இலக்கியம்..கவிதைகள் உள்பட பல விஷயங்களை விவாதம் செய்திருக்கிறேன்.

அவர் படைப்புகள்..பத்திரிகைகளில் வருவதற்கு முன் கைப்பட எழுதியதை..எனக்கு படிக்க கொடுத்து..நான் படித்த பேறு பெற்றவன்..அந்த சமயங்களில்..என் கதைகள் பல கலைமகள் இதழில் வரும்...அதைப்படித்துவிட்டு..இப்படி எழுதியிருந்தால்..இன்னும் நன்றாக இருந்திருக்கும்..என..என் எழுத்துக்களை..பட்டை தீட்டியவர்.அதன் பயன்தான்..நான் எழுதிய 'பாரத ரத்னா' என்ற என் நாடக நூலுக்கு..2005க்கான சிறந்த நூல் என்று..இலக்கிய சிந்தனை பரிசைப் பெற்று தந்தது.

சாகித்ய அகாடமி..பரிசுக்காக..முதல்வரிசையில் உள்ளவர்..விரைவில் கிடைத்து விடும் என எண்ணுகிறேன்.

தமிழக அரசின்..கலைமாமணி விருது பெற்றவர்..

இன்றும்..அவ்வப்போது..திருநெல்வேலியில் உள்ள அவருடன்..தொலைபேசியில் உரையாடுவேன்..எங்கள் நட்பு தொடர்கிறது..

இந்த நிகழ்ச்சிகளை அசை போட உதவிய வேலனுக்கு நன்றி

Friday, November 21, 2008

அதி புத்திசாலி..அண்ணாசாமி அரசியலில் நுழைகிறார்...

அண்ணாசாமிக்கு...திடீரென..தான் ஒரு கோடீஸ்வரன் ஆக வேண்டும்..என்று ஆசை ஏற்பட்டது..

அதற்கான வழிமுறைகளை ..யோசித்தார்...

எங்காவது வேலைக்குப் போனால்...காலம் முழுதும் வேலை செய்து...ஓய்வு பெறும்போது..அதிக பட்சம் மொத்தமாக 10 லட்சம் கிடைக்கும்....மேலும்..அதற்கு..உடலுழைப்பும் தேவை..அதனால் அது வேண்டாம்..

சினிமாவில் நடிக்கப்போகலாம்...அதற்கு நடிக்கத்தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை..கதை..வசனம் கூட எழுதலாம்...ஆனால்..சிறிது காலம் கழித்து...ஒரு கட்சி ஆரம்பிக்கலாம்..ஏதாவது தொலைக்காட்சி பங்குகளை..வாங்கிப்போட்டால்..அவர்களுடன் மோதல் ஏற்படும் சமயத்தில்...அவர்களுக்கே அவர்கள் பங்குகளை விற்றால் ..கோடிக்கணக்கில் பணம் கிடைக்கும்...ஆகவே கோடீஸ்வரன் ஆக ..இதுவே சிறந்த வழி என தீர்மானித்தார்..

இப்போது..ஒவ்வொரு தயாரிப்பாளர் வீடாக ..நடிக்கவோ..கதை..வசனம் எழுதவோ..சான்ஸ் கேட்டு அலைய தொடங்கி இருக்கிறார்

பூனை அல்ல..புலி..

பூனையைப்போல்..இருப்பவர்களை நம்ப முடியாது..என சொலவடை ஒன்று உண்டு...

இது ஏன் வந்தது என்றால்...நாம்..சாதுவாக இருக்கும் ஒருவரை..பூனைக்கு ஒப்பிட்டு சொல்வோம்..ஆனால் அதே பூனை..சீறும்போது..கால்களில் நகங்கள் வெளியே வர..கிழித்து எடுத்து விடும்.

அதே போல புலியைப்பார்த்து பூனை சூடுபோட்டுக்கொண்டதாம்..என்றும் சொல்வர்...இதற்கு..காரணம்..பூனையை துச்சமாக..மதிப்பதைப் பார்த்து...தன்னைப்போலவே உள்ள..பெரிய உருவில் உள்ள புலிக்கு பயப்படுபவர்..தனக்கு பயப்படவில்லை..என பூனை அப்படி நடந்துக்கொண்டிருக்கலாம்..

ஆனால்...உருவு சிறுத்தாலும்...கடுகு சிறியதுதான்...காரம் போகாது...
உருவு கண்டு எள்ளாமை வேண்டும்...

பூனையுடன் ஒருவரை ஒப்பிடும்போது..இவற்றையும் நினைத்துப் பார்க்க வேண்டும்..

உண்மை கசக்கும் என்பதால்..உண்மை..உண்மை அல்லாமல் போகிவிடுமா...

டாஸ்மாக் கடையும்...முனுசாமியும் (அரைப் பக்கக்கதை)

ஏதேச்சையாக அந்த பக்கம் போன..சோமுவின் பார்வை..டாஸ்மாக்..கடையைப் பார்த்தது...

அங்கு நின்றுக் கொண்டு..ஷைட் டிஷ்..சகிதம்...தண்ணீ அடித்துக்கொண்டிருக்கும்...17 வயதுதான் இருக்கும்..அந்த சிறுவனைப் பார்த்தார்..

அது...அவரிடம் டிரைவராக வேலைப் பார்க்கும்...முனுசாமியின் மகனல்லவா?

தன் மகனைப் படிக்க வைக்க வேண்டும்...அவன் நன்கு படித்து..ஏதேனும்..அலுவலகத்தில் நல்ல வேலைக்குப் போக வேண்டும்...தன்னைப்போன்ற வேலை..தன்னுடன் போக வேண்டும்..என்று எப்போதும் தன்னிடம் புலம்பிக்கொண்டிருக்கும்...முனுசாமியின்..மகன்தான் அது..

கோபம் தலைக்கேற..வீடு வந்து சேர்ந்தவர்...போர்டிகோவில்..காரை..துடைத்துக் கொண்டிருந்த ..முனுசாமியைக் கூப்பிட்டார்.

'முனுசாமி..உன் மகனை..இன்று..மந்தவெளி..டாஸ்மாக் கடையில் பார்த்தேன்..தண்ணி அடித்துக்கொண்டிருந்தான்..அவனை கண்டித்து வை' என்றார்..

விஷயம் கேள்விப்பட்ட..முனுசாமிக்கோ வருத்தம் மேலிட்டது..'நான் எவ்வளோ தரம் சொல்லிட்டேன்..எங்க வீடு இருக்கும்..அஷோக்நகர்ல இல்லாத கடையா...அநாவசியமா பணம் செலவு பண்ணி..இதுக்காக மந்தவெளி வரணுமா?நான் இன்னிக்கு கண்டிப்பா கண்டிக்கிறேன்'என்றான்..

வாயடைத்துப் போய் நின்றார் சோமு..

Thursday, November 20, 2008

அதி புத்திசாலி அண்ணாசாமியும்...பதிவர் சந்திப்பும்...

அண்ணாசாமிக்கு சனிக்கிழமை மெரினாவில்..நடைபெறும்..பதிவர் சந்திப்பில் கலந்துக்கொள்ள ஆசை...ஆனால்...அவருக்கு யாரையும் தெரியாது...என்ன செய்யலாம்..என யோசித்தவர் ஒரு அசட்டு தைர்யத்தில் கிளம்பிவிட்டார்..

கலங்கரைவிளக்கம் அருகே..ஒரு மர நிழலில்..பேந்த..பேந்த..பாண்டியராஜன் போல...முழித்துக்கொண்டு..நின்றவரிடம்..வந்த ரோந்து போலீஸ் கான்ஸ்டபிள் கந்தசாமி..'ஏன் இங்க நிக்கறிங்க..நீங்க யார்....யாரைப்பார்க்கணும்' னு அடுக்கடுக்காய் கேள்வி..கேட்க..

சிறுவயது முதலே..போலீஸ் என்றதுமே பேண்ட் ஈரமாகிவிடும்..அண்ணாசாமிக்கு..இப்போதோ..போலீஸ் வந்து..கேள்வி கேட்கவே..பயத்தில்..நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொள்ள..'வெண்பூ..அத்திரி,தாமிரா..அதிஷா..'என்று சொல்ல ஆரம்பிக்க..உடனே..கந்தசாமி...தன் மொபைலில்...இன்ஸ்பெக்டருக்கு தகவல் தந்தார்..அடுத்த ஐந்தாவது நிமிடம்..இருபது
போலீஸ்காரர்கள்..படை சூழ..இன்ஸ்பெக்டர் அங்கு வந்து சேர்ந்தார்.

'ஸார்..இந்த ஆளைப்பார்த்தா சந்தேகமா..இருக்கு...கேட்டா...வெண்பூ..அத்திரின்னு..ஏதேதோ சொல்றான்..எல்லாம்..code words மாதிரி இருக்கு..'என்றார் கந்தசாமி..

ஆஹா..இன்னிக்கு ஒரு அருமையான கேஸ் மாட்டி இருக்கு...லா காலேஜ் பிரச்னையிலே..பெயர் கெட்டு இருக்கும்...நமக்கு..இந்த சமயத்திலே..இவன் மாட்டி இருக்கான்..பக்குவமா டீல் செய்து..பெயர் வாங்கிடணும்னு நினைச்ச..போலீஸ் அதிகாரி..'யாருய்யா..நீ? எங்கிருந்து வர்றே?'என்று அண்ணாசமியை அதட்டினார்.

அண்ணாசமிக்கு உடனே பரிசல்காரர் ஞாபகம் வர.."அது வந்து..ஸார்..பரிசல்.."என இழுத்தார்..

ஓஹோ..பரிசல்ல வந்தியா...கள்ளத்தோணியா..என்று கேட்டபடியே..தன் புத்திசாலித்தனத்தை..கந்தசாமி பாராட்ட வேண்டும்..என்ற எண்ணத்தில்...ஜனகராஜ் பார்வையை..அவர் மீது வீசினார்.

அண்ணாசாமிக்கு..அடுத்து ஞாபகத்தில் வந்தவர்..கேபிள் சங்கர்.. 'அது வந்து..சார்..இந்த கேபிள் சங்கர்...'என இழுத்தார்.கேபிள் என்ற பெயரைக் கேட்டதுமே அதிகாரி...'ஓஹோ..நீ மதுரைக்காரனா..உன்னைப்பார்த்தா அஞ்சா நெஞ்சன் மாதிரி தெரியலையே..'என்றார்.

அண்ணாசாமி..'குட்டிப்பிசாசு..கும்க்கி..' என்றார்..

'சார்..நீங்க குட்டிப்பிசாசாம்..கும்க்கி..எடுத்துடுவாராம்..'என்றார் கந்தசாமி..

அப்படியா...என்ற அதிகாரி..கந்தசாமி கையிலிருந்த லட்டியை..வாங்கி..அண்ணாசாமி..கால்களில் அடிக்க ஆரம்பித்தார்....இரு லாடம் கட்டறேன் என்றபடியே....

அண்ணாசாமிக்கு இப்போது ஞாபகத்தில் வந்தவர்..டோண்டு...உடனே..'சார்..டோன்ட் டூ'என்றார்..

'அடிக்காதேன்னு..அதிகாரம் பண்றியா'என்றவாறு ..மேலும்..நாலு விளாசு..விளாசினார்.

உடன் வந்த..அத்தனை போலீஸ்காரர்களும் ..இந்த நிகழ்ச்சிகளை..வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்தனர்.

பதிவர் சந்திப்புக்கு வந்துக்கொண்டிருந்த லக்கிலுக்கின் லக்கி லுக்..அண்ணாசாமி மீது ..பட..அவர்..அதிகாரியிடம்..பேசி..அண்ணாசாமியைக் காப்பாற்றினார்..

'இதை முன்னமேயே..சொல்லி இருக்கலாம்..இல்ல..'எண்ரார்..நர்சிம் போல இருந்த அந்த போலீஸ் அதிகாரி.

சந்திப்பின் இடத்துக்கு வந்த..அண்ணாசாமிக்கு டாக்டர் புருனோ..முதல் உதவி செய்ய...அடிவாங்கியதால்...அண்ணாசாமியின் கால்கள்...அங்கங்கே..போண்டா போல வீங்கி இருந்ததைப் பார்த்த பாலபாரதிக்கு..போண்டா...இன்னும்..வழங்கப்படவில்லை...என்ற ஞாபகம் வர..அனைவரையும் அழைத்துக் கொண்டு...எதிரே இருந்த டீக்கடைக்கு விரைந்தார்..அப்துல்லா,ரமேஷ் வைத்யா,முரளி கண்ணன்,சந்தோஷ்,ஸ்ரீ..ஆகியோர் முன்னமேயே அங்கு காத்திருந்தனர்..அவர்களுக்காக.

2011ல் முதல்வர் பதவியை பிடிக்க ஜெயலலிதா..விஜய்காந்த் ..போடும் கணக்கு...

முதல்வர் பதவியைப் பிடிக்க..கட்சித் தலைவர்கள்..இப்போதே கணக்கு போட ஆரம்பித்து விட்டனர்...

அ.தி.மு.க.வில் இளைஞர்கள் பாசறைகள் அமைக்கப்படுகின்றன.சுமார் 70000 பாசறைகள் அமைக்கப்பட்டு..அவற்றின் செயலாளர்களுக்கு ஜெ..கடிதம் எழுதி உள்ளார்.கடந்த சட்ட மன்ற தேர்தலில் சுமார் 25 தொகுதிகளில் சுமார்..1000ஓட்டு வித்தியாசத்திலும்...30தொகுதிகளில் ..சுமார்..3000 முதல் 5000 ஓட்டு வித்தியாசத்திலும்...கட்சி வெற்றி வாய்ப்பை இழந்துள்ளது.(1000 முதல்.5000 ஒட்டுகளுக்குள் வெற்றி பெற்ற தொகுதிகளை ஜெ கணக்கில் எடுத்துக்கொள்ள வில்லை போலிருக்கிறது)இந்த பாசறைகள் மூலம்...தொகுதிக்கு 5000புதிய வாக்காளர்கள் கிடைத்தால் போதும்...எளிதாக முதல்வர் ஆகிவிடலாம்...என்பது ஜெ யின் கணக்கு.பாசறை உறுப்பினர்களுக்கு..கணினி,டிரைவிங்,தையல் போன்றவை இலவசமாய் சொல்லிக்கொடுக்கப்படும்

விஜய்காந்தைப் பொறுத்தவரை..அவர் நடத்திய பேரணிக்கு...5 லட்சம் தொண்டர்கள்..வந்ததாகவும்...ஒரு தொண்டன்..100 வாக்குகள் பெற்று தந்தாலும்..5 கோடி வாக்குகள் கிடைத்துவிடும்..பின் தானே முதல்வர் என்று கணக்கு போடுகிறார்.(தமிழக மொத்த வாக்காளர்களே 4.58கோடிதான்)

தி.மு.க., மீண்டும் பா.ம.க.வை இணைத்துக் கொண்டால் போதும்...வெற்றி நிச்சயம்..

பா.ம.க..இன்னும் இது பற்றி பேசவில்லை..

2011 வேண்டாம்...2016ல் பார்த்துக்கொள்ளலாம்..என்கிறார் விஜய்.

ரஜினி ..வழக்கம் போல...எல்லாம் ஆண்டவன் செயல் என்கிறார்..

காங்கிரஸ் ..யார் முதுகில் ஏறும் என்றும் தெரியாது.

Wednesday, November 19, 2008

இலங்கை தமிழர் நிவாரண நிதி-இலங்கை அரசு முடக்கம்

கொழும்பு: இலங்கைத் தமிழர் நிவாரணத்துக்காக வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்பட்ட 7 கோடி ரூபாயை இலங்கை அரசு எடுத்துக்கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இலங்கையில், விடுதலைப்புலிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடும்போர் நடைபெற்று வருகிறது. இதில், லட்சக்கணக்கான தமிழர்கள் தங்களது வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். அவர்களுக்காக பல்வேறு நாடுகளில் இருந்து 7 கோடியே பத்து லட்ச ரூபாய் நிதி திரட்டப்பட்டு அங்கு அனுப்பப்பட்டது. அந்த நிதி, இலங்கை மத்திய வங்கியில், தமிழர் மறுவாழ்வு அமைப்பின் கணக்கில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்தப் பணத்தை இலங்கை அரசு எடுத்துக்கொண்டதாக அந்த வங்கியின் புலனாய்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தமிழகத்தில் இருந்து கப்பலில் அனுப்பப்பட்ட நிவாரண பொருட்கள் கொழும்பு சென்றடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி குமுதம்

எப்படி வாழ வேண்டும்..(அரைபக்கக் கதை)

ஒரு சந்நியாசியிடம்..அவர் சிஷ்யன்..ஒருநாள்..'சுவாமி...நான் எப்படி வாழவேண்டும்..என்பதை..தெரிவித்தால்..நலமாயிருக்கும்..'என்றான்.,

குருவும்..தன் ஆயுட்காலம் முடிவதை..அறிந்து..தன் சிஷ்யன் இனி..தனியாக..விவரங்களை தெரிந்துக்கொள்ளட்டும்..என்று...தூரத்தில் நொண்டிக்கொண்டே வரும் நரியைக்காட்டி..'அதனுடன் செல்..அதற்கு உணவு எப்படி கிடைக்கிறது..என்று பார்..அப்போது..நீ எப்படி வாழவேண்டும் என்று தெரியும்..' என்றார்.,

நரியை தொடர்ந்து வந்த சிஷ்யன்..தூரத்தே ஒரு சிங்கம்..இறந்த மானின் உடலை இழுத்து வருவதை பார்த்து ஒளிந்துக் கொண்டான்.அந்த மான் சிங்கத்தால் வேட்டையாடப்பட்டது.அதை சிறிது தின்றுவிட்டு..மீதத்தை..நரியிடம் போட்டு விட்டு சென்றது..சிங்கம்..

உடனே சிஷ்யனுக்கு ..வாழவேண்டிய வழி தெரிந்தது போல இருந்தது..

அடுத்தநாள் முதல்...சிஷ்யன்..உண்ணாமல்...யாரேனும் தனக்கு..உணவு கொண்டுவந்து தருவார்கள் என காத்திருக்க ஆரம்பித்தான்..

நாட்கள் உருண்டன...

ஆனால்..யாரும் உணவை கொண்டுவந்து தரவில்லை..

அவன் உடல் இளைத்து..தெம்பையெல்லாம் இழந்தான்..குருவைத் தேடி வந்தான்..நடந்த விஷயங்களைக் கூறி.'குருவே..அந்த நரிக்கு கொடுத்தாற்போல்..யாரேனும்..எனக்கு ..உணவு கொண்டுவந்து தருவார்கள் என எண்ணினேன்..ஆனால் யாரும் வரவில்லை.'என புலம்பினான்..

பதிலுக்கு..குரு..'அட..மடையா..நீ என்னிடம்..எப்படி வாழவேண்டும் என்று கேட்டாய்...நானும் சொன்னேன்..ஆனால்..நீ..சிங்கம்..நரியைப் பார்த்து..தப்பாய் புரிந்துக் கொண்டாய்..உண்மையில்..நீ என்ன செய்திருக்க வேண்டும்..சிங்கம் போல வாழ நினைத்திருக்க வேண்டும்..மற்றவர்களுக்கு..உதவியாய்...மற்றவர்களுக்கு..உணவளிக்கக் கூடியவனாய் இருக்க எண்ணியிருக்க வேண்டும்'என்றார்..

அப்போதுதான்..சிஷ்யனுக்கு..எப்படி வாழவேண்டும் என்பதற்கான விடை தெரிந்தது.

Tuesday, November 18, 2008

விவசாயிகளும்...தமிழ் திரைப்படங்களும்...

இப்போதெல்லாம்...விவசாயிகள் பற்றியும்...விவசாயம் குறித்தும்..தமிழ்படங்கள் வருவதில்லை...

அப்படியே ..கிராமத்து படம் என்றாலும்...நாட்டாமையும்...கொடுமை நிறைந்த மிராசுதார்..பண்ணையார் ..ஆகியவர்களையும்..அவர்களது..பணம்..பதவி..திமிர் பற்றியுமே கூறி வருகின்றன.இப்போது நகரத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு...நெற்பயிர் ..எப்படி இருக்கும் என்று கூட தெரியாது..

சென்னையில் ஆரம்பித்து..தெற்கே..செங்கல்பட்டு வரையிலும்...மேற்கே..கிட்டத்தட்ட அரக்கோணம் வரை..விளை நிலங்கள் எல்லாம்...வீடுகளாகவும்..தொழிற்சாலைகளாகவும் மாறிவிட்டன.திருச்சியில்..சமயபுரம் வரை..நகரம் வீங்கி விட்டது.

அந்த நாட்களில்..மக்களைப் பெற்ற மகராசி,தை பிறந்தால் வழி பிறக்கும்..போன்ற படங்கள் ...அவற்றின் பாடல்கள்..விவசாயியின் பெருமைகளை உணர்த்தும்.உதாரணத்துக்கு அப்படிப்பட்ட பாடல்களின் சிலவரிகள்.

நெத்தி வேர்வை சிந்தினோமே...முத்து முத்தாக.._அது
நெல்மணியா காச்சிருக்கு கொத்து..கொத்தாக

இது பிள்ளைக்கனியமுது .....படப்பாடல்.

காடு விளையட்டும் பெண்ணே -நமக்கு
காலம் இருக்குது பின்னே

காடு விளஞ்சென்ன மச்சான்-நமக்கு
கையும் ..காலும் தானே மிச்சம்..

இது..விவசாயிகளின் அவல நிலை குறிக்கும்..தாய்க்கு பின் தாரம் பாடல்...

போட்டது மொளைச்சதடி
கை நிறைய கேட்டது கெடச்சதடி

இது நவராத்திரி பாடல்

எல்லாப்பாடல்களையும் விட மறக்கமுடியா பாடல்.மக்களைப் பெற்ற மகராசியில் பட்டுக்கோட்டையாருடையது.

மணப்பாறை..மாடுகட்டி
மாயவரம் ஏரு பூட்டி
வயக்காட்டை உழுதுபோடு ..செல்லக்கண்ணு
பசும் தழியைப்போட்டு பாடுபடு சின்னக்கண்ணு

ஆத்தூரு கிச்சடி சம்பா
பாத்து வாங்கி விதை விதைச்சு
நாத்தை பிடுங்கி நட்டுப்போடு செல்லக்கண்ணு
தண்ணிய ஏத்தம் பிடுச்சி
எறைச்சுப்போடு சின்னக்கண்ணு

கதிர நல்லா வெளயவச்சு
மருத ஜில்லா..ஆளைவைச்சி
அறுத்துப்போடு களத்துமேட்டில செல்லக்கண்ணு
சும்மா..அடிச்சு தூத்தி
அளந்து போடு சின்னக்கண்ணு

பொதி ஏத்தி வண்டியிலே
பொள்ளாச்சி சந்தயிலே
விருதுநகர் வியாபாரிக்கு செல்லக்கண்ணு
வித்துப்போட்டு பணத்தை எண்ணு சின்னக்கண்ணு

சேத்த பணத்தை சிக்கனமா
செலவு செய்ய பக்குவமா
அம்மா கையிலே கொடுத்துப்போடு செல்லக்கண்ணு
அவங்க..ஆறை..நூறு..ஆக்குவாங்க ..சின்னக்கண்ணு

(பாடல்வரிகள் என் ஞாபகத்திலிருந்து எழுதியவை..ஆங்காங்கே..சில வார்த்தைகள் மாறியிருக்கக்கூடும்)

விவசாயி படத்தில்..மருதகாசி பாடல்...

கடவுள் எனும் முதலாளி..
கண்டெடுத்த தொழிலாளி
விவசாயீ....விவசாயீ

முன்னேற்றபாதையில் மனசை வைச்சி
முழுமூச்சாய் அதற்காக உழைத்து
மண்ணிலே முத்தெடுத்து - பிறர் வாழ
வழங்கும் குணமுடையோன்
விவசாயீ

இனி இது போன்ற பாடல்களை திரைப்படங்களில் பார்க்க முடியுமா?